Contact us at: sooddram@gmail.com

 

கேரள, தமிழக தேர்தல் - ஒரு பார்வை

பேரவைகளுக்கான தேர்தல்க ளில் வாக்களித்துள்ளார்கள். இவர்களு டன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் யூனியன் பிர தேச சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். இரு வாரங் களுக்கே நடைபெற்றது என்ற போதிலும் அவ்விரு வாரங்களும் மிகவும் விறுவிறுப் பான தேர்தல் பிரச்சரம் இரு மாநிலங் களிலும் நடைபெற்றதைப் பார்த்தோம். இரு மாநிலங்களிலும் நான் ஒருசில நாட் கள் பிரச்சார கூட்டங்களில் பங்கேற் றேன். தேர்தல் பிரச்சாரம் குறித்தும் பல் வேறுபட்ட தேர்தல் கூட்டணிகள், அவற் றின் வாய்ப்புகள் குறித்தும் ஒருசில கருத் துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்.

பிரதானமான பிரச்சனைகள்

நாட்டைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வும் ஆட்சியாளர்களின் லஞ்ச ஊழலும் இரு மாநிலங்களில் நடை பெற்ற பிரச்சாரத்தின்போதும் பிரதான பிரச்சனைகளாக மக்களின் முன் வைக்கப்பட்டன. நகர்ப்புறமாக இருந்தா லும் சரி அல்லது கிராமப்பகுதிகளாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களி லும், மக்கள் இவ்விரு பிரச்சனைகள் குறித்தும் இவை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் கவலைப்பட்டார்கள். கேரளாவில், விலை வாசி உயர்வுப் பிரச்சனை, பொது விநி யோக முறையோடு நேரடியாக இணைக் கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வராத குடும்பத்தைச் சேர்ந்த அனை வருக்கும் அரிசி கிலோ 2 ரூபாய் வீதம் அளித்திடக்கூடிய வகையில் இடது ஜன நாயக முன்னணி அரசாங்கம் அத்திட்டத் தை விரிவாக்கியது. மாநில அரசாங்கம் தம் வசம் உள்ள அரிசி மற்றும் அத்தியாவ சியப் பொருள்களை மக்கள் வாங்கக் கூடிய விலைகளில், நியாய விலைக் கடைகள், மாவேலி ஸ்டோர்கள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் விநியோ கிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட் டுள்ள மக்கள் பெரிதும் பாராட்டி வர வேற்றார்கள். இதற்கு நேர்மாறாக, மத்தி யில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலை மையிலான அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதையும் எடுக்காதது மக்கள் மத்தியில் வருத்தத்தையும் ஆத்திரத்தையும் அளித்தது.

உயர்மட்ட அளவில் நடைபெற்றுள்ள லஞ்ச ஊழல்கள் கேரள மக்கள் மத்தியில் கடுமையாக எதிரொலித்தன. சமீபத்தில், முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த, ஆர். பாலகிருஷ்ண பிள்ளை, சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது கீழமை நீதிமன்றம் அளித்திருந்த தண்டனைத் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இவர் முன்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற மேல் முறை யீட்டில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, கீழமை நீதிமன் றத்தின் தீர்ப்பே சரியானது என்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிறைக்கு அனுப்பப் பட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவ ராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், நீதிமன்றத்தில், பாலகிருஷ்ணபிள்ளை மீது தொடுத்த மனு மீதான விசாரணை யில்தான் இவ்வாறு அவருக்கு லஞ்ச ஊழ லுக்கான தண்டனை அளிக்கப்பட்டுள் ளது. ஊழலுக்கு எதிரான இடது ஜன நாயக முன்னணியின் உறுதியான நிலைப் பாட்டை இது அழுத்தந் திருத்தமாகத் தெரிவிக்கிறது. ஐ.மு.கூட்டணி அரசாங் கத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்றும் சமீபகாலங்களில் அடுக்கடுக்காக வெளி வந்துள்ள பல்வேறு ஊழல் வழக்குகள் மக்கள் மத்தியில் இந்த அரசின் மீதான சித்திரத்தை சின்னாபின்னமாக்கிவிட் டன. இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, இடது ஜன நாயக முன்னணி அரசாங்கம் லஞ்ச ஊழல் மிகுந்தது என்று கூறிய குற்றச் சாட்டை, மக்கள் பொருட்படுத்தவே இல் லை. காங்கிரஸ் ஆதரவாளர்கள்கூட இத னைப் பெரிதுபடுத்தவில்லை. ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பதன் பொருள், லஞ்சலாவண் யம் மிக்க ஓர் அரசாங்கத்தை, தற்போது மத்தியில் உள்ளது போன்று லஞ்சத்தில் ஊறித்திளைக்கும் அரசாங்கத்தை மீண் டும் ஆட்சியில் அமர்த்துவதே என்கிற இடது ஜனநாயக முன்னணியின் பிரச்சா ரம் மக்களிடம் வலுவாகச் சென்றடைந்தது.

உயர்மட்ட அளவில் ஊழலுக்கு எதி ராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடுங் கோபம், ஊழலற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வலுவான பெருவிருப்பம், நிச்சயமாக இடது ஜனநாயக முன்ன ணிக்கு ஆதரவாக வேலை செய்தது. முத லமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் கூட் டங்களில் மக்கள் பெரும் திரளாக பங்கேற் றது இதனை அங்கீகரிப்பதாக அமைந்தது.

தேர்தல் பிரச்சாரம் மற்றொரு குறிப் பிடத்தக்க அம்சத்தையும் வெளிப்படுத்தி யது. இதனை இடது ஜனநாயக முன் னணிக்கு எதிராகச் செயல்பட்டுவரும் ஊடகங்களாலேயே கூட மறைக்க முடியவில்லை. ஆட்சியில் இருப்பவர் களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பொதுவாக இருந்திடும் கசப்புணர்வு, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக இல்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

இடது ஜனநாயக முன்னணியின் சாதனை

அடுத்து, கேரளத்தில் வளர்ச்சிப் பணிகள் இல்லை என்பன போன்ற பிரச் சனைகள் எழுப்பப்பட்டன.
காங்கிரஸ் தலைமையும் ஐக்கிய ஜனநாயகக் கூட் டணியும்தான் கேரளாவில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கியதாகவும், அதனை இடதுஜனநாயக முன்னணி தொடர்ந்து மேற்கொள்ளத் தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் கூறினார் கள். மத்திய அரசு அளித்த நிதிகளையும், திட்டங்களையும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் சுமத்தினார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் கேரளம் முத லீடுகளைக் கவர்ந்திடவும், வளர்ச்சியை உத்தரவாதப் படுத்திடவும் தவறிவிட்டது என்று குறை கூறினார்கள். இதற்கு இடது சாரிகளின் பத்தாம்பசலித்தனமான சித் தாந்தமே காரணம் என்றும் அவர்கள் குறிப் பிட்டார்கள். ‘‘வளர்ச்சிக்கான அடிப்படை கள் மாறியிருக்கின்றன என்பதை இடது சாரிகள் அங்கீகரிக்க மறுத்தார்கள்’’ என் றும், ‘‘சாமானியர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை’’ என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இதன் பொருள் என்ன? காங்கிரஸ் கட் சியையும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத் தையும் பொறுத்தவரை, ‘‘வளர்ச்சிக் கான அடிப்படைகள் மாறியிருக்கின் றன’’ என்பதன் பொருள், நவீன தாராள மய, சந்தைப் பொருளாதாரக் கொள்கை களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதேயாகும். மத்திய அர சின் நாசகரமான விவசாயக் கொள்கை கள்தான் விவசாயிகளின் அவல நிலைக்கும், அவர்கள் கேரளாவில் தற்கொலைகளை மேற்கொள்ளத் தள்ளி யதற்கும் காரணங்களாக இருந்தன. உலகச் சந்தையுடன் விவசாயத்தை இணைத்ததும், அவர்களுக்கு அளித்து வந்த மானியங்களை இல்லாது ஒழித் ததும்தான் இவர்களின் வளர்ச்சிப் பாதையின் பகுதிகளாகும். இவர்களது நவீன தாராளமய அணுகுமுறைக் கண் ணோட்டத்தின்படி, கேரள அரசாங்கம் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங் களுக்குப் புத்துயிர் அளித்ததும், அவற்றை லாபகரமானதாக மாற்றியதும் வெறுக்கப்பட வேண்டியவை களாகும். உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரி வினருக்கும் விரிவாக்கப்பட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்கள், பொது விநி யோக முறையை அனைவருக்குமான தாக மாற்றுவதற்கு மேற்கொண்ட நட வடிக்கைகள், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல சமூகப் பாது காப்பு உதவிகளை உத்தரவாதப்படுத்தி யமை போன்றவை பிரதமரின் பார்வை யில், ‘‘சாமானியர்களின் தேவைக ளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்கள் இல்லை’’ என்பதாகும். ஆனால் இவை தான் கேரள அரசு மீது மக்களுக்குக் கசப்புணர்வு ஏற்படாமல் இருந்ததற்குக் காரணங்களா கும்.

மத்தியில் ஐ.மு.கூட்டணி அரசாங் கம் கடைப்பிடிக்கும் நவீன தாராளமய அணுகுமுறைக்குச் சவால் விடக் கூடிய வகையில் மாற்று வளர்ச்சிப் பாதையை இடது ஜனநாயக முன்னணி யின் கொள்கை முன்வைத்தது. அதைத் தான் பல விமர்சகர்களும், ஆராய்ச்சி யாளர்களும் கண்டித்தார்கள், கண்ணீர் விட்டார்கள். காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியாளர்கள் கடைப்பிடிப்பதைப் போன்று, கேரள அரசும் பெருநிறுவனங் களுக்கு சலுகைசார் முதலாளித்துவ பாதையைப் பின்பற்ற வேண்டும், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட அனு மதித்திட வேண்டும், பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் மற் றும் அதிகாரவர்க்கத்தினர் இடையே யான கள்ளத் தொடர்பை, கயமைத் தொடர்பை மேம்படுத்திட வேண்டும் என்பதே அவர்களது விருப்பங்களாகும்.

இடது ஜனநாயக முன்னணி அர சாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய ஜனநாயக முன் னணி, சாதிய மற்றும் வகுப்புவாத அமைப்புகளின் ஆதரவைப் பெற முடிவு செய்தது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கேரளாவில் பண மும், மதுவும் ஆறாக ஓடியதையும் பார்க்க முடிந்தது. பிரச்சாரம் முடிவுற்ற சமயத்தில், எதிரிகள் திட்டமிட்டு உருவாக்கிய துர்ப்பிரச்சாரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புகளைப் பொடிப் பொடி யாக்கி, இடது ஜனநாயக முன்னணி மிக வும் நம்பிக்கையுடன் முன்னேறியதைப் பார்க்க முடிந்தது.

தமிழ்நாட்டின் நிலைமைகள்

தமிழ்நாட்டிலும் கூட, லஞ்ச ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இரண்டும் இரு முக்கிய பிரச்சனை களைாக முன்னுக்கு வந்தன.
ஆயினும் இங்கே லஞ்ச ஊழல் என்னும் பிரச் சனை என்பது பிரம்மாண்டமான அள வில் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் நடைபெற்ற ஊழல் களிலேயே மிகப்பெரிய ஊழலை மாநிலத்தை ஆளும் திமுகவினர் புரிந்துள்ளனர் என்பதும், அது தொடர்பாக மேற்கொள் ளப் பட்டுள்ள கிரிமினல் வழக்கில் அக்கட்சியின் சார்பில் மத்தியில் ஆட்சி யில் இருந்த அமைச்சரே பிரதானமாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறார் என்ப தும் மக்கள் மத்தியில் கொண்டு செல் லப்பட்டது. நாட்டில் உயர் மட்ட அள வில் நடைபெற்றுள்ள ஊழல்களுடன் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டார்கள். முதல் வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் - திரைப்படத் துறை, தொலைக் காட்சி அலைவரிசைகள், பத்திரிகை கள், கேபிள் டி.வி. விநியோகம், ரியல் எஸ்டேட், விமானக் கம்பெனிகள், ஓட் டல்கள் என அனைத்துத் துறைகளி லும் - ஆதிக்கம் செலுத்துவது ஜன நாயக அமைப்பின் மீதான கொடூரமான தாக்குதலாக மக்களால் பார்க்கப்பட்டன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா, இப்பிரச்சனையைத் தன்னு டைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் கொண்டு சென்றார். மக்கள் மத்தியில் இது பெரும் வரவேற் பைப் பெற்றது.

கடும் விலைவாசி உயர்வு, மிகவும் விரிவான அளவில் இருந்த மின் வெட்டு, திமுக-வினர் மஃபியா கும்ப லுடன் வைத்திருந்த தகாத தொடர்பு ஆகிய பிரச்சனைகளும் மக்களைத் திமுக அரசாங்கத்திற்கு எதிராக அணி திரட்டியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட் டணியும் கூட அருவருப்பான ஒன்றா கவே அமைந்திருந்தது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய கோஷ் டிச் சண்டைகளும், மக்கள் மத்தியில் திமுக குறித்து வெளிப்படையாகவே அதன் தலைவர்கள் பலர் வெளிப்படுத் திய கருத்துக்களும் நிலைமைகளை அவ்வாறு ஆக்கியிருந்தன.

தமிழ்நாடு, நவீன தாராளமயக் கொள் கைகளின் முழுமையான விளைவு களை அனுபவித்த மாநிலமாகும். சமீப ஆண்டுகளில் வேறெந்தவொரு மாநில மும் தேர்தலில் இந்த அளவிற்கு சட்ட விரோதமாகச் சேர்த்த கோடிக்கணக் கான ரூபாய் பணத்தை வாரியிறைத்த தில்லை. திருமங்கலத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் அனுப வத்தை அடுத்து, சென்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது என்பது மிகவும் விரிவான முறையில் நடைபெற்றிருந்தது. தேர்தல் ஆணையம் சட்டவிரோத பணப் புழக் கத்தைத் தடுத்திட சில நடவடிக்கை களை மேற்கொண்டது. தேர்தலுக்கு முன் நடைபெற்ற பல சோதனைகளில் சுமார் 50 கோடி ரூபாய் வரை ரொக்கமாக வும், பல்வேறு பொருட்களாகவும் கைப் பற்றப்பட்டன. திருச்சியில் ஒரு ஆம்னி பஸ்ஸின் மேல் பகுதியிலிருந்து மட்டும் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் கைப்பற் றப்பட்டது. ஆயினும் இவை அனைத் தும் ஆட்சியாளர்களால் வாரியிறைக்கப் பட்ட பல்லாயிரம் கோடி ரூபாயில் ஒரு சிறு துளிதான். நகர்ப் புறங்களில் வாக் காளர்களுக்கு 500 ரூபாயிலிருந்து ஆயி ரம் ரூபாய் வரைக்கும், கிராமப்புறங்களில் 500 ரூபாய் வரைக்கும் கோடிக்கணக் கான ரூபாய்கள் வாரியிறைக்கப்பட் டிருக்கின்றன.

ஆயினும், பிரச்சாரத்தின்போது மக்க ளின் மனநிலை எப்படி இருந்தது என் பதை நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. இந்த முறை ஆட்சியாளர்கள் எவ்வள வுதான் கோடி கோடியாக கொட்டி யிருந்த போதிலும் அதனால் தேர்தல் முடிவைத் தீர்மானிக்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம், நாட் டில் உள்ள மாநிலக் கட்சிகளில் முதல் அதிகாரபூர்வமான மாநிலக் கட்சியாக விளங்கியது. சமூக நீதி மேடையிலி ருந்து உதித்த வெகுஜன தளத்தையும் ஸ்தாபனக் கட்டமைப்பையும் மிகவும் வலுவாகக் கொண்டிருந்த ஒரு கட்சி யாக திமுக இருந்தது. மாநில சுயாட்சி மற்றும் மத்திய - மாநில உறவுகளுக்குக் குரல் கொடுத்த கட்சிகளில் முன் னோடியாக விளங்கிய ஒன்று. அத்த கைய பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி யாக விளங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்றக் கழக மாக மாறி, சலுகைசார் முதலாளித்துவத் தின் மூலம் கொள்ளையடித்த பணத் தைத் தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சி யைத் தக்க வைத்துக்கொள்ள முயல் வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாப மாக இருக்கிறது.

திமுக இத்தேர்தலில் தூக்கி எறியப் பட்டால், அந்த முடிவு மிகவும் பொருத்த மானதே ஆகும். ஊழலில் அதன் கூட் டாளியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் இதேபோன்றதொரு மோசமான முடி வையே எதிர்கொள்ளவிருக்கிறது.

தமிழில்: ச.வீரமணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com