Contact us at: sooddram@gmail.com

 

வடபகுதி மக்களின் வாழ்வை அரசாங்கம் வளமாக்கி வருகின்றது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் முழுக் கவனமும் இப்போது வடமாகாணத்தின் மீது திரும்பியிருக்கிறது. வட மாகாணத்தின் உட்கட்டமைப்பு பணிகளை கூடிய விரைவில் பூர்த்தி செய்யும் பணி விரைவில் முடிவடையவுள்ளது. யுத்தத் தினால் இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களை மீண்டும் வடபகுதி யிலுள்ள அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் பணி யும் முற்றாக முடிவடையும் கட்டத்தை இன்று அடைந்துள்ளது. இன் னும் 2,000 பேர் மாத்திரமே அங்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இராணுவத்தினரும் அரச சார்பற்ற சர்வதேச அமைப்புகளும் சமூக அமை ப்புக்களும் இப்போது, வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியையும் தீவிரப்படுத்தி இருப்பது மகிழ்ச் சிக்குரிய விடயமாகும். இந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்தியா, சீனா, பிரிட்டன் போன்ற பல நாடுகள் பெருமளவில் நிதியுதவியை வழங்கி அரசாங் கத்தின் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை அளித்து வருகின்றன. இவ்விதம் மக்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையை நிம்மதியாக மேற் கொள்வதற்குரிய சகல வசதிகளையும் அரசாங்கம் இப்போது செய்து கொடுத்த வண்ணம் இருக்கிறது.

இதுபற்றி கருத்து வெளியிட்ட மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர் னாண்டோ, தற்போது தமது அமைச்சு, உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய புள்ளிவிபரங்களை சேகரித்து வருகின்றது என்றும், அதையடுத்து அவர்கள் மீள்குடியேற்றப்படும் பிரதேசங்களுக்கு ஏற் புடைய வகையில் வாழ்வாதார உதவிகள் செய்து கொடுக்கப்படும் என்று கூறினார்.

நாலாவது ஈழ யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மட்டுமன்றி, 1985 ஆம் ஆண்டு முதல் யுத்தத்தின் தாக் கத்தினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக் கணக்கான தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களும் இன்று வறுமைக் கோட்டிற்கு கீழ் துன்பத்தை அனுபவித்து வருவதாகவும், அவர்களுக்கும் வாழ்வாதாரங்கள் செய்து கொடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த மக்களுக்கு விவசாயம், கடற்றொழில், பருவகால பயிர் செய்கை, குடிசைக் கைத்தொழில் போன்றவற்றில் வாழ்வாதாரங்கள் செய்து கொடுப்பதுடன், இங்குள்ள விவசாய பெருமக்களுக்கு உதவுமுகமாக நீர்ப்பாசனத்திற்கான குளங்கள், மற்றும் நீர்ப்பாசனத்திற்கான பாரிய கிணறுகளையும் திருத்துவதற்கு இப்போது நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது.

யுத்தத்தினாலும், வடபகுதியில் கடந்த பல்லாண்டு காலமாக நிலவி வந்த பதற்ற நிலை காரணமாகவும், யாழ்ப்பாண போதனா ஆஸ்பத்திரி வேலைகள் யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் ஸ்தம்பித நிலை அடை ந்திருந்த போதிலும், இப்போது ஜப்பானின் சர்வதேச கூட்டுத்தாபன அமைப்பான ஜெயிக்காவிடமிருந்து 2,877 மில்லியன் ரூபாவை பெற்று, வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீண்டும் யாழ்ப்பாண போதனா ஆஸ்பத்திரியை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுகின்றன.

வட மாகாணத்தின் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, வடக்கு, கிழக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை முன்னேற்று வதற்காக 86 மில்லியன் டொலர் செலவில் ஐந்தாண்டு திட்டம் ஒன்றை இப்போது, நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இவையனைத் தும் உரிய காலத்தில் அமுலாக்கப்படும் போது, சிவப்பு மண்ணை உடைய இலங்கையின் வடபகுதி மீண்டும் ஒரு பொன்விளையும் பூமியாக மட்டுமன்றி, இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு பிரதான கேந்திர ஸ்தானமாக மாறிவிடும் என்று நாம் நம்பிக்கை கொள்ளலாம்.

அரசாங்கம் எடுத்து வரும் இத்தகைய நல்ல நடவடிக்கைகள் காரணமாக இப்போது யாழ்ப்பாணத்து விவசாய பெருமக்கள் 1970 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் வடபகுதி மக்களின் விவசாயம் தழைத்தோங்கி வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழ ங்கு, மிளகாய், வெங்காயம் போன்றவற்றை தென்னிலங்கைக்கு அனு ப்பி வைத்து, பெருமளவு லாபம் திரட்டி வந்தது போன்ற இன்னு மொரு வளமான எதிர்காலம் இப்போது உதயமாகி வருகிறது.

1970 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு அப்பிள், திராட்சை போன்றவற்றின் இறக்குமதி முற்றாக தடைசெய்யப்பட்டிரு ந்தது. அன்று, இந்நாட்டு மக்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திலிரு ந்து அறுவடை செய்த திராட்சைப் பழங்களையே உண்டு மகிழ் ந்தார்கள்.

வடபகுதி மக்களின் வளமான பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து, பொறாமைப்பட்ட 1977 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தன தலைமையில் பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், வடபகுதியின் பொருளாதாரத்தை சீர்குலைத்து சின்னாபின்னப்படுத் துவதற்காக கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கை என்ற போர் வையின் கீழ், இலங்கைக்கு சகல உணவுப் பொருட்களையும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் ஒரு கொடுங்கோல் ஆட் சியை ஏற்படுத்தி, வடபகுதி மக்களை வேதனைக்குட்படுத்தியது.

அவ்விதம், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் கொடுமையினா லும், பயங்கரவாதத்தினால் ஏற்பட்ட துன்பங்களினாலும் துவண்டு போய் இருந்த தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இன்றைய அரசாங்கம், பொரு¡ளதார ரீதியிலும் மற்றெல்லா விதத்திலும் ஒரு புதிய யுகத்தை இன்று தோற்றுவித்துள்ளது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com