Contact us at: sooddram@gmail.com

 

நிபுணர்குழுவின் நியாயமற்ற அறிக்கையை உலக நாடுகள் ஆதரிக்கப் போவதில்லை

தன்னுடைய சக்திவாய்ந்த கதிர்களினால் மக்களின் வாழ்க்கை யில் ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும் எங்கள் நாட்டின் உதய சூரியனை எந்தவொரு சந்திரனினாலும் மறைத்துவிட முடியாது என்ற யதார்த்தத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பில் உயர் பதவி வகிக்கும் ஒரு சிலர் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் மிகவும் கொடிய பயங்கரவாத இயக்கத்தை அடிபணிய வைத்து, இந்நாட்டு மக்களுக்கு மீண்டும் சமாதானத்தையும், அமைதியை யும் ஏற்படுத்தி அவர்களின் நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கு வடிவமைத்துக் கொடுத்த ஒரு பெரும் தேசத்தலைவரான ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு ஆதாரமற்ற போலியான யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஜனாதிபதிக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் உலக அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் சதிமுயற்சி களுக்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் உட்பட உலக நாடுகள் ஆதரவையோ, அங்கீகாரத்தையோ வழங்கப் போவதில்லை. இந்த அறிக்கையை வெளியிடுவேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

ஈராக்கிலும், ஏனைய மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் போலி கார ணங்களை முன்வைத்து யுத்தத்தை ஆரம்பித்து பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொது மக்களின் உயிர்களை பலிகொண்ட அமெரிக்க மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அரசாங்கத் தலை வர்கள் அன்று யுத்த குற்றங்களை இழைக்கவில்லையா என்று நாம் கேள்வி எழுப்புகிறோம்.

அவை பலம் வாய்ந்த நாடுகள் என் பதால், மெளனம் சாதித்து அமைதியாக இருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஏன்? இலங்கை மீது இவ்விதம் ஓரவஞ்சகக் கொள்கையை கடைப்பிடிக்கிறார் என்று நாம் கேட்க விரும்புகிறோம்.

இலங்கையில் பயங்கரவாத யுத்தம் 30 ஆண்டு காலமாக நடைபெற்றது. இந்த யுத்தத்தின் போது, எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளினால் பல்லா யிரக்கணக்கான தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களையும், நாட்டுக்காக போர் முனைக்கு சென்று பயங்கரவாதம் என்ற கொடிய அரக்க னிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்கு போராடிய ஆயிரக்கணக் கான ஆயுதப்படை வீரர்களும் கொல்லப்பட்டதை நாம் மறந்து விடலாகாது.

இந்நாட்டு மக்கள் அனைவரும் எந்நேரத்தில், எவ்விடத்தில் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல் ஏற்படும் என்று, அன்று நாளாந்தம் பீதியில் இருந்தார்கள். பாடசாலைக்கு செல்லும் பிள் ளைகள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை ஏக்கத்துடன் இருந் தார்கள். தங்கள் கணவன்மார்களும், சகோதர, சகோதரிகளும் வேலைக்கு சென்று பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்று பெண்கள் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருந்த ஒரு காலமும் எங்கள் நாட்டில் அன்று இருந்தது.

இந்த பீதிகளை பூண்டோடு ஒழித்துக் கட்டி, மீண்டும் இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன, மத, குல, பிரதேச பேதமின்றி நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக் கொடுத்த இந்நாட்டு தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இந்த விசேட நிபுணர்குழுவின் அறிக்கையின் மூலம் தீங்கிழைப் பதற்கு மேற் கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கு, இந்நாட்டு மக்கள் அனைவரும் இன்று ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை காண்பிப் பதற்கு முன்வந்துள்ளார்கள்.

30 வருட காலம் நடைபெற்ற இந்த யுத்தத்தை வாரக் கணக்கில் கணக்கிட்டால், இந்த யுத்தம் 1560 வாரங்களுக்கு நடந்திருக்கிறது. இந்த 1560 வாரங்களாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் ஏற்பட்ட பொருள் அழிவு, உயிர் அழிவு பற்றி சிறிதேனும் சிந்திக் கவோ, பொருட்படுத்தவோ விரும்பாத ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத் தின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், யுத்தம் நடைபெற்ற இறுதி இரண்டு வாரங்களின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்களை பற்றி மாத்திரம் விசாரணை நடத்துவதற்கு முன்வந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

இந்த இரண்டு வாரங்களின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கும், காயமடைந்தமைக்கும் அடித்தளத்தை அமைத்தவர்கள் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை சார்ந்தவர்களே ஆவர். எய்தவன் இருக்கும் போது, அம்பின் மீது ஆத்திரமடைவதைப் போன்ற செயல் திட்டத்தில் இன்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் நடந்து கொள்வது உண்மையிலேயே மனவேதனையை அளிக்கிறது.

யுத்தம் முடிவடைந்தவுடன் இலங்கைக்கு வந்து எல்லாம் இனிதாக முடிவடைந்துவிட்டது என்று எங்கள் நாட்டு மக்களுக்கு விடை கொடுத்து சென்ற நாள் முதல், எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களின் அழுத்தங் களுக்கு அடிபணிந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் இவ்விதம் இலங்கைக்கு துரோகம் இழைக்கும் இந்த விசேட நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இது விடயத்தில் நாம் ஒரு விசயத்தை அனைவருக்கும் ஞாபகப் படுத்துவது அவசியமாகும். எமது ஆயுதப்படையினர் எக்கார ணம் கொண்டும் இந்த இரண்டு வாரங்களின் போது, மக்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே இல்லை. எல்.ரி.ரி.ஈ இயக்கத்தைச் சேர்ந்தவர்களே தங்கள் பிடியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு தப்பியோடியவர்களின் முதுகுப்பகுதியில் துப்பாக்கி வேட்டுக்களை மேற்கொண்டதற்கான போதியளவு ஆதாரங்கள் இப்போது கிடைத்திருக்கிறது.

இது பான் கீ மூனின் தனிப்பட்ட முறையிலான பழிவாங்கும் நட வடிக்கையாகவே நாம் கருதுகிறோம். இந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பொறுப்பல்ல. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இலங்கைக்கு எக்காரணம் கொண்டும் தீங்கிழைக்காது என்று நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கலாம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com