Contact us at: sooddram@gmail.com

 

மனித குல இருப்பையே கேள்விக்குறியாக்கும் முதலாளித்துவம்

(பிரகாஷ் காரத்)

லாபத்தை மட்டுமே நோக்க மாகக் கொண்டு இயங்கும் முத லாளித்துவத்தால் மனித குலத் தின் இருப்பே கேள்விக்குறி யாகியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.

கோழிக்கோட்டில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டையொட்டி மார்ச் 2 ஆம் தேதி முதல் கருத்தரங் கங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் நிறைவாக கோழிக்கோடு நகர்மன்றத் தில் நடந்த கருத்தரங்கில்சோசலிசத் தின் வருங்காலம்என்ற தலைப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார். கருத்தரங்கத் திற்கு கேரள மாநில செயற்குழு உறுப் பினரும், மாநிலத்தின் முன்னாள் நிதி யமைச்சருமான தாமஸ் ஐசக் தலைமை யேற்றார். இந்தியாவுக்கான கியூபத் தூதர் அபெலார்டோ கியூட்டோ சோசா மற்றும் சிஐடியுவின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தபன் சென் ஆகியோரும் உரையாற்றினர்.

பிரகாஷ் காரத் பேசியதன் விபரம் வரு மாற :

மூலதனத்தை உந்துசக்தியாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவம் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் அது பிரதி பலிக்கிறது. இதனால் வரும் நாட்களில் சோசலிசத்தை அடைவதென்பது வெகு தொலைவில் இல்லை. கூடியவிரை விலேயே அடைய முடியும். அதே வேளை யில் அது 21வது நூற்றாண்டு சோசலிச மாக இருக்கும். 20ஆம் நூற்றாண்டு சோசலிசத்தை விட வேறுபட்டு நிற்கும். 20வது நூற்றாண்டு சோசலிசத்தின் நல்ல அம்சங்களை அப்படியே எடுத்துக் கொள்ளும். மோசமானவற்றைத் தூக்கி எறிந்துவிடும்.

சோவியத் யூனியனில் நடந்த உலகின் முதல் சோசலிசப் புரட்சி சாதிக்க முடி யாது என்று நினைக்கப்பட்ட பல்வேறு பணிகளை நடத்திக் காட்டியது. எக்கச் சக்கமாக வேலையில்லாமல் இருந்தவர் களின் துயரைத் துடைத்தது. வேலை யின்மை ஒழிந்தது. அனைவருக்கும் கல்வி என்பது நனவானது. அனை வருக்குமான சுகாதார நலன் மற்றும் பெண்களுக்கு சம உரிமைகள் போன்ற பல்வேறு சாதனைகள் படைக்கப்பட் டன. இந்த சாதனைகள் உலகம் முழு வதும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஏகாதி பத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாடுகளில் இந்த அம்சங்களை நடைமுறைப்படுத்தின.

சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, இறுதியாக முதலாளித்துவம் வென்றுவிட்டது; சோச லிசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது என்று பல முதலாளித்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். இருபது ஆண்டுகளுக்குப்பிறகு, அதே நிபுணர் கள் முதலாளித்துவத்தின் வருங்காலம் பற்றியக் கவலையுடன் அமர்ந்திருக் கிறார்கள். ஆளும் முதலாளித்துவ வர்க் கத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகப் பொருளாதார மன்றத்தின் கூட் டம் அண்மையில் நடந்தது. அதில் முத லாளித்துவத்தின் வருங்காலம் மற்றும் முதலாளித்துவத்தை நீடித்திருக்கச் செய்ய இயலுமா ஆகிய இரண்டையும் பற்றித்தான் பேசினார்கள். 1990களின் இறுதிப்பகுதியிலேயே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தெளிவாகக்கூறியது, ஏகாதிபத்திய உலகமயமாக்கல் திட்டம் நிலைத்திருக்காது என்று. அப்போது இக்கருத்தை மற்றவர்கள் குறை கூறினர். ஆனால் மூலதனத்தால் இயக்கப்படும் உலகமயமாக்கலை நீண்ட நாளைக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என் பதை உலகமே அங்கீகரித்துள்ளது.

உலகமயமாக்கலின் விளைவால் கடுமையான ஏற்றத்தாழ்வு உருவாகியுள் ளது. நாட்டின் செல்வத்தில் 40 சதவிகி தத்தை ஒரு சதவிகித மக்கள் கட்டுப் படுத்துகிறார்கள். அதேவேளையில், பன்முகத்தன்மை கொண்ட வறுமை யால் உலகில் உள்ள 200 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் சந்திக் கும் எந்த அடிப்படைப் பிரச்சனைக்கும் இது தீர்வைத் தராது. மறுபுறத்தில், லாபத்தை நோக்கமாகக் கொண்டு இயற்கையையும், ஆதாரங்களையும் சுரண்டும் போக்கால், மனித குலத்தின் இருப்பையே இது கேள்விக்குறியாக்குகிறது.

வளர்ந்த நாடுகளில் உள்ள முத லாளித்துவவாதிகள் தங்கள் சொந்த நாட் டின் மக்களைச் சுரண்டுவதை தீவிரப் படுத்தியிருக்கிறார்கள். நலத்திட்டங் களில் ஏராளமான வெட்டுகள் விழு கின்றன. மேலும் வளரும் நாடுகளின் மீது சுமையை ஏற்றுகிறார்கள். ஜனநாயக நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த நாடுகளில், தங்களை யார் ஆள வேண்டும் என்பதை பெரு வங்கிகள் தான் தீர்மானிக்கின்றன. பொருளாதார நெருக்கடியைச் சத்தித்து வரும் ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. 1930களில் ஏற் பட்ட பெருமந்தத்தின்போது ஹிட்லரின் நாசிசம் பாசிசமாக வளர்ச்சியடைந்தது.

இந்தக் கொடுமையான முதலாளித் துவத்திற்கு சோசலிசம்தான் ஒரே மாற்று என்றாலும், லெனின் கூறியதுபோல, வலு வான அரசியல் இயக்கம் வளராமல் அல் லது அமைப்புக்கு எதிராக மக்களைத் திரட்டாமல் சோசலிசத்தை அடைய முடியாது. தற்போது நடைபெற்று வரும் வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம் போராட்டம் மற்றும் நலத்திட்டங்களை வெட்டுவதற்கு எதிராக ஐரோப்பிய நாடு களில் நடந்து வரும் போராட்டங்கள் முத லாளித்துவத்திற்கு எதிரான அரசியல் இயக்கம் உருவாவதற்கான அறிகுறி களைக் காட்டுகின்றன. இந்தப் போராட் டங்கள் வருங்காலத்தில் அதிகரிக்கப் போகின்றன.

தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், உழைக்கும் வர்க்கம் தனது புரட்சிகரப் பாத்திரத்தை இழந்துவிட்டது என்கிறார் கள். தொழில்மயமாகியுள்ள நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக் கை குறைந்தாலும் அந்த எண்ணிக்கை யை சீனா போன்ற நாடுகளுக்கு மாற்றி விட்டனர். தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ளதால் வேலையின் தன்மை மாறியிருந்தாலும் உழைக்கும் வர்க்கம் பெரிதாகியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தின் பாத்திரத்தை ஒருபோதும் குறைக்கவில்லை. சொல் லப் போனால், உலகம் முழுவதும் எதிர்ப் பலைகள் அதிகரித்திருக்கின்றன.

தொழிலாளர்-விவசாயி கூட்டணி மற்றும் அதற்கு உழைக்கும் வர்க்கம் தலைமைப் பொறுப்பேற்பது போன்றவை இக்காலத்தில் கூடுதல் பொருத்தமான தாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் விவசாயிகள் புரட்சிகர சக்திகளாக மாறிவருகிறார்கள். உழைக்கும் வர்க்கத்தில் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் இருப்ப தால் அவர்களின் பங்கும் முக்கியமான தாகும். வளர்ந்த முதலாளித்துவ நாடு களில் இந்த எண்ணிக்கை 60 சத விகிதமாகும். இன்றைய தினம் உபரி மதிப் பை உருவாக்குவதில் மலிவான விலை யில் பெண்களை சுரண்டுவது முக்கிய மான இடத்தைப் பிடிக்கிறது.

லத்தீன் அமெரிக்க அனுபவத்தைப் பொறுத்தவரை, அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நாடுகள் நவீன-தாராள மயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடின. மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்திய அரசுகளை அங்கு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்கள். அதில் சில நாடுகள் சோசலிசத்தை நோக்கி முன்னேறி வரு கின்றன. கொடூரமான முதலாளித்துவத் திற்கு மாற்று சாத்தியம்தான். 21ஆம் நூற்றாண்டிற்கான மேம்பட்ட சோச லிசம்தான் அந்த மாற்றாகும்.

இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com