Contact us at: sooddram@gmail.com

 

தமிழக அரசியல் சக்திகளின் அக்கறைகளுக்கும் புதுடில்லியின் தீர்மானங்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை

(வீரகத்தி தனபாலசிங்கம், பிரதம ஆசிரியர், தினக்குரல )

இன நெருக்கடியில் இருக்கக் கூடிய சர்வதேச பரிமாணத்தை அரசாங்கம் முற்றுமுழுதாக அலட்சியம் செய்வதும் அரசாங்கம் மீதான சர்வ தேச நெருக்குதல்களை மாத்திரம் முற்றுமுழுதாக அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியல் சக்திகள் அவற்றின் தந்திரோபாயங்க ளையும் அணுகுமுறைக ளையும் வகுத்துக்கொள்ள முயற்சிப்பதும் சம அள வுக்கு அவரவருக்குக் கெடுதியானது. சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுவந்த எந்தவோர் ஆட்சியாள ருமே இனங்களுக்கிடை யிலான முரண்பாடுகளைத் தணிப்பதற்கோ, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற் கான குறைந்தபட்ச அக் கறையைத்தானும் காட்டு வதற்கோ கடந்த காலங் களில் முயற்சித்ததில்லை.

அரசசார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகரும், மட்டக்களப்பிலிருந்து வெளி வந்த விடிவானம், தினக்கதிர் பத்திரிகைகளின் நிறுவனருமான மனோ இராசசிங்கம் அவர் களின் நினைவு தினத்தை முன் னிட்டு நடத்தப்பட்ட நினைவு தினக் கூட்டத்தில் 'இலங்கை நெருக்கடியில் சர்வதேசத் தலையீடுகளும் தமிழர் அரசியலின் எதிர்காலமும்' என்ற தலைப்பில் நினைவு பேருரை நிகழ்த்திய தனபாலசிங்கம் இதனைத் தெரிவித்தார். இந்நினைவுப் பேருரை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

(கடந்த வாரத் தொடர்)

ஆனால், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவி னால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்தி யாவின் செயல் தமிழக அரசியல் சக்தி களினால் இலங்கை தொடர்பான புது டில்லியின் கொள்கையில் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலைவரமொன்று தோன்ற ஆரம்பித்திருக்கிறது என்ற தோற்றப்பாட் டைக் கொடுக்கப்பார்க்கிறது. ஆனால், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டியேற்பட்ட சூழ்நிலைக ளின் இயங்கியல் பற்றி விரிவாக ஆராய் ந்தால் உண்மை நிலைவரத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.

இது விடயத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பிலான தமிழக அர சியல் சக்திகளின் அக்கறைகளுக்கும் புது டில்லியின் தீர்மானங்களுக்கும் இடையில் இருக்கக் கூடிய தொடர்பின்மையை சரித்திர நிகழ்வொன்றுடன் தொடர்புபடுத்திக் காட்டுவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமான தாக இருக்கும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கொழும்பு அரசாங்கத் தின் அனுசரணையுடன் கட்டவிழ்த்துவிடப் பட்ட முதலாவது இனவாத வன்முறைக்குப் பிறகு 1958 ஜூன் 22ஆம் திகதி தமிழக மெங்கும் அண்ணா தலைமையில் 'இல ங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்புத் தினம்' திராவிட முன்னேற்றக் கழகத்தினால் அனுஷ்டிக்கப்பட்டது. தி. மு. க. வினர் தங்களது கூட்டத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தனர். அன்று அண்ணாதான் தி. மு. க. வின் தலைவராக இருந்தார்.

புதுடில்லியிலும் சென்னையிலும் அன்று காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. அதற்குப் பின்னரான காலகட்டத்தில் சென்னையில் காங்கிரஸ் ஆட்சி இல்லாமற் போய் திராவிட இயக்கக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்ற போதிலும் கூட நிலைமைகளில் மாற்றம் ஏற்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிலிருந்த சென்னை தான் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகமிழைத்தது என்றால் அண்ணாவின் தம்பிகளின் ஆட்சிகளில் சென்னையினால் என்ன வித்தியாசமாகவா செயற்பட முடிந்திருக்கிறது?

கடந்த வாரத்தைய ஜெனீவா தீர்மானத்தை ஆதரப்பதற்கு முன்னதாக இந்தியாவினால் வெளிக்காட்டப்பட்டிருக்கக்கூடிய தடுமாற்றங்கள் இலங்கை நெருக்கடியைப் பொறுத்தவரை புதுடில்லி கடைப்பிடித்து வந்த தூரநோக்கற்ற கொள்கைகளின் விளைவானவையேயாகும். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் எந்த ஒரு நாட்டின் பெயரைப் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டுக் கொண்டுவரப்படக் கூடிய தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பதே இந்தியாவின் கொள்கை என்று கூறப்பட்டது.

அத்தகைய உறுதியான கொள்கையொன் றையும் மீறி தமிழக மக்களினதும் அர சியல் கட்சிகளினதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தது போன்று காட்டிக்கொண்டு மன்மோகன் சிங் அரசாங்கம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டி யேற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் அந்த அரசாங்கத்தின் இருப்புக்கு அச்சு றுத்தலைத் தோற்றுவிக்கக் கூடியதாக உள் நாட்டு அரசியல் நிலைவரங்கள் மாறிய மையேயாகும்.

உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் தான் மன்மோகன் சிங் அரசாங்கத்தை இத்தடவை இலங்கை அரசாங்கத்தை காப் பாற்றும் உறுதியான நிலைப்பாட்டிலிருந்து சிறிது இடறவைத்தது. அதைப் புரிந்து கொண்ட முறையிலேயே ஜெனீவா வாக்கெடுப்புக்கு பின்னதாக தென்னிலங்கை பிரதான அரசியல் சக்திகளின் இந்தியா பற்றிய விமர்சனங்கள் அமைவதை காணக் கூடியதாக இருக்கிறது. தங்களது விரல் எவ்வளவுக்கு வீங்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் தகுதிக்கும் செல்வாக் கிற்கும் பொருத்தமில்லாத அளவிற்கு பெரிதாக பேசுகின்ற அல்லது வேண்டுமென்றே பேசவைக்கப்படுகின்ற சிங்கள கடும் போக்கு அரசியல் கட்சிகள் சிலவற்றின் கருத்துக்களை இது விடயத்தில் பொருட்படுத் தத் தேவையில்லை. அவ்வாறு பேசாவிட்டால் அவர்களுக்கு அரசியலில் இடமிருக்காது.

இலங்கைக்கு சந்தர்ப்பவசமாக ஒரு அநியாயம் செய்யவேண்டி ஏற்பட்டுவிட்டதே என்ற உணர்வின் அடிப்படையிலேயே இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புகளை கடந்த சில நாட்களாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழகத்தின் பிரதான திராவிட இயக்கக் கட்சிகள் குறிப் பாக கருணாநிதியின் தி. மு. க. வும் ஜெய லலிதாவின் ஆளும் அண்ணா தி. மு. க. வும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று ஒருமித்த குரலில் வலியுறுத்தியதைப் பற்றி பெரிதாக நம் மவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஏற்பட்டிக்குப் போட்டியாக வக்கிரத்தனமாக விடுத்துவருகின்ற அறிக்கைகள் எந்த அளவுக்கு ஆரோ க்கியமற்ற உணர்வுகளின் அடிப்படையில் அவர்கள் எமது பிரச்சினையை அணுகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலையைப் புரிந்துகொள்ளாமல் தமிழகத்தின் உணர்வுப் பிரதிப்பலிப்புகள் குறித்து இனிமேலும் நாம் அதீத நம்பிக் கையை வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது. ஜெனீவா விவகாரத்திலான ஒரு இடறுபாடு தமிழ் மக்களுக்கு வீணான நம்பிக்கைகளை மீண்டும் ஏற்ப டுத்துவதற்கு எமது தமிழ் அரசியல் சக்திகளினால் பயன்படுத்தப்படக் கூடாது.

எனது இந்தக் கருத்துக்களை இலங்கைத் தமிழர்களின் கஷ்டங்கள் தீர வேண்டுமென் பதற்காக இதயசுத்தியுடன் குரல்கொடுக்கின்ற தமிழகத்தில் இருக்கக்கூடிய சந்தர்ப்பவாத நோக்கற்ற, நேர்மையான அரசியல் சக்தி களினதும் தமிழக மக்களினதும் உணர் வுகளை அவமதிப்பதாக எந்தவிதத்திலும் அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே உணர்ச்சி பரபரப்புகளினால் அள்ளுப்பட்டு போகாமல் இருக்க இனி மேலாவது கற்றுக்கொள்வோம்.

தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் முன்னெப்போதையும் விட சிங்கள பெளத்த பேரினவாத உணர்வலைகள் கூடுதலான அளவுக்கு ஆக்கிரமித்து நிற்கும் தூரதிஷ்டவசமான நிலைவரம் இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களில் எந்தவொரு நியாயபூர்வமான பிரச்சினை தொடர்பிலும் முன்னென்றுமில்லாத அலட்சியப் போக்கை சிங்கள மக்கள் வளர்த்துக்கொள்வதற்கு வழிவகுத்திருக்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளில் ஆரோக்கியமானவற்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையைக் கோரும் தீர்மானம் என்னதான் ஜெனீ வாவில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அரசாங்கம் எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களுக்குப் பணிந்து எந்தவிதத்திலும் நடைமுறைப்படுத்துவதற்குத் தயாரில்லை என்பது வெளிப்படையானது. சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளை மேலும் விரோதித்துக்கொள்ளக்கூடாது என்ற அபிப்பிராயம் கொண்ட அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நெகிழ்ச்சித்தன்மையான அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருந்தாலும் கூட அவர்களினால் பெரியளவுக்கு நிகழ்வுப் போக்குகளில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகளும் அவதானிப்புகளும் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட விதி மீறல்கள் தொடர்பிலும் அது விடயத்தில் அரசாங்கத்துக்கு இருக்கின்ற பொறுப்புடைமை தொடர்பிலும் அரசாங்கம் முன்கூட்டியே எடுத்திருந்த நிலைப்பாடுகளை எல்லை வரையறைகளை எந்தவிதத்திலுமே மீறிவிடக்கூடாது என்பதில் ஆணையாளர்கள் பிரத்தியேகமான அக்கறையுடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண வேண்டுமென்றும் அரசாங்கத்தைக் கேட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மறு புறத்திலே நல்லிணக்க ஆணைக்குழுவின் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் நிராகரித்து அறிக்கை விடுத்த பிரதான தமிழ் அரசியல் அணி அதே ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ஜெனீவாத் தீர்மானத்தை வரவேற்றிருப்பதையும் காண்கிறோம்.

இலங்கையில் இடம்பெறுகின்ற நிகழ்வுப் போக்குகள் தொடர்பில் அளிக்கப்பட கூடிய விளக்கங்களும் வியாக்கியானங்களும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறவில்லையென்ற உண்மை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

போர் மூண்டதற்கான அடிப்படை காரணிகள் போரின் முடிவுடன் இல்லாமற் போய்விடவில்லை. போருக்குப் பின்னரான கால கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண் டிருக்கிறோமே தவிர முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுவிட்ட காலகட்டத்தில் அல்ல. தேசிய இனப் பிரச்சினையை 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையில் தற்போது பார்க்கவும் கூடாது. கடந்த மூன்று தசாப்தங்களில் அந்தப் பிரச்சினைக்கு புதிய பரிமாணங்கள் சேர்ந்து புதிய சிக்கலான தன்மைகளையும் ஏற்படுத்தியி ருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்த புதிய அணுகுமுறைகளையே நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

சிங்கள மக்கள் தமிழ் மக்களின் பிர ச்சினைகளை விளங்கிக் கொள்ளக் கூடி யதாக, அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்ளக்கூடியதாக அவர்களின் நம்பிக் கையை வென்றெடுப்பதற்கு அவர்கள் மத்தியில் இருக்கக் கூடிய நியாய சிந்தை படைத்த வர்களுடனும் முற்போக்கு சக்திகளுடனும் தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற கருத்தை முன்வைப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை முழுமையாக ஏற்றுக்கொள் ளக்கூடிய அல்லது புரிந்துகொள்ளக் கூடிய முற்போக்கு சக்திகள் இன்று சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்றனவா? அவ்வாறு இருந்தாலும் கூட அவர் களினால் அரசியல் செயற்பாடுகளில் எந்தளவு தூரத்திற்கு சிங்கள சமு தாயத்தின் அடி மட்டத்திற் குச் சென்ற செயற்படக் கூடி யதாக இருக்கிறது" சிங்கள மக்கள் மத்தியில் முற்போக்கு சக்திகளை வளர்த்தெடுக்கும் பணியை தமிழ் அரசியல் சக்திகளாக செய்ய வேண்டும்?

இந்நிலையில் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். எமது இன நெருக்கடியில் இருக்கக் கூடிய சர்வதேச பரிமாணத்தை அரசாங்கம் முற்றுமுழுதாக அலட்சியம் செய்வதும் அரசாங்கம் மீதான சர்வதேச நெருக்குதல்களை மாத்திரம் முற்றுமுழுதாக அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசி யல் சக்திகள் அவற்றின் தந்திரோ பாயங்களையும் அணுகுமுறைகளையும் வகுத்துக்கொள்ள முயற்சிப்பதும் சம அளவுக்கு அவரவருக்குக் கெடுதியானது.

வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்க வேண்டும். ஆனால் நாமெல்லோரும் இதுவரையான வரலாற்றிலிருந்து படிக்கக் கூடியதாக இருக்கும் பாடம் எவருமே வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்க முயற்சிப்பதில்லை என்பதேயாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com