Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை

வரலாற்றின் வழித்தடத்தில்

(டி.கே.ரங்கராஜன் எம்.பி.,)

இலங்கைக்கு இதுவரை மூன்று முறை சென்று வந்துள்ளேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற் பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சென்று வந்தேன். அடுத்து கொழும்பில் நடைபெற்ற மேதின விழா ஒன்றில் பங்கேற்க கட்சியின் சார்பில் சென்று வந்தேன். தற்போது, இந்திய நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் கட்சி யின் சார்பில் பிரதிநிதியாக இடம் பெற்று சென்று வந்தேன். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கி 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர் என்பது துயரம் மிகுந்த ஒரு வர லாறாகும். 1983ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்தப் போர் நீடித்தது. இதன் காரணமாக ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. சொந்த நாட்டிலேயே நிலை குலைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு பகுதி என்றால், உலகம் முழுவதும் அகதிகளாகச் சென்று வாழ்க்கையை கழித்து வருகின்றனர் ஒரு பகுதித் தமி ழர்கள்.

இலங்கையின் இன்றைய அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழலை புரிந்துகொள்ள வரலாற்றின் வழித்தடத் தில் சென்று கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது அவசியமாகும்.

இலங்கையில் பெரும்பான்மையின ராக சிங்கள மக்கள், அந்நாட்டின் பூர்வ குடிகளான தமிழ் மக்கள், இந்தியாவி லிருந்து தோட்டத் தொழிலுக்காக அழைத் துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் மக்கள் என பல பிரிவு களாக உள்ளனர்.

சிங்கள மக்கள் இந்தியாவின் கலிங் கப்பகுதியிலிருந்து அந்நாட்டிற்கு குடி யேறியவர்கள் என்று வரலாறு கூறுகிறது. இலங்கையில் காலத்தால் முந்தைய வர லாற்று நூலாக கருதப்படும் மகா வம் சத்தின்படி கி.மு.6ஆம் நூற்றாண்டில் இந்த இடப்பெயர்வு நடைபெற்றுள்ளது. அதற்கு முன்னர் இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர் இலங்கையில் வாழ்ந்ததாகவும் அரசமைத்ததாகவும் மகா வம்ச குறிப்புகள் கூறுகின்றன.

எனினும், மகா வம்சத்தின் வரலாறு சிங்கள மக்கள் பற்றி மட்டுமே பேசுகிறது. இலங்கையின் வட பகுதியில் நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் அரசுகள் இருந்து வந்துள்ளன. அரசு ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், வர்த்தக ரீதியாக வும் தமிழ்நாட்டுடன் இலங்கை வடக்கு-கிழக்கு பகுதிக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.

யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூலை எழுதிய செ.ராஜநாயகம் முதலியார், கிறிஸ் துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே யாழ்ப்பாணப் பகுதியில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடும் என்று கூறுகிறார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகு தியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப் பட்டுள்ளன. கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதனின் கல்லறையும் கண்ட றியப்பட்டுள்ளது. அங்கு கண்டறியப்பட்ட மட்பாண்டங்கள், மனித எலும்பு எச்சங் கள், சங்ககாலந் தொட்டு நாகரீகமடைந்த மக்கள் யாழ்ப்பாணம் பகுதியில் வாழ்ந் ததை உறுதி செய்கின்றன.

சங்ககால புலவர்களில் ஒருவர் யாழ். பகுதியைச் சேர்ந்தவர். சமய ரீதியாக சைவ சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்த வர்கள் இந்தப் பகுதி மக்கள். அதே போன்று தமிழ் மொழியையும் தங்கள் உயி ரென நேசிப்பவர்கள். பரந்துபட்ட அறி வுக்கு சொந்தக்காரர்கள். சமய இலக் கியத்திற்கு மட்டுமின்றி முற்போக்கு இலக்கியத்திற்கும் வளமையான பங் களிப்பை செய்தவர்கள் இந்தப்பகுதி தமிழ் மக்கள்.

இலங்கையில் போர்ச்சுக்கீசியர்கள் முதலில் காலடி எடுத்து வைத்தனர். இலங்கையின் பெரும் பகுதியைக் கைப் பற்றி போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி நடத் தினர். டச்சுக்காரர்களும் இங்கு வந்துள் ளனர். எனினும் ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்த இலங்கையையும் கைப்பற்றி 133 வருடம் ஆட்சி செய்துள்ளனர்.

1948ஆம் ஆண்டு இலங்கை விடு தலை பெற்றது.

சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இணைந்து விடுதலைக்காக போராடி யுள்ளனர். லண்டனில் படித்து நாடு திரும் பிய இலங்கை கம்யூனிஸ்ட்டான பீட்டர் ஹன்மன், இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவும், வளரவும் பேருதவி செய்துள்ளார். இலங்கையில் தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது குறிப் பிடத்தக்கது. எனினும் இந்தியாவைப் போன்று மிகப்பெரும் அளவில் பரவலாக பேரbழுச்சியுடன் விடுதலைப்போராட் டம் அங்கு நடைபெறவில்லை. இந்திய விடுதலையைத் தொடர்ந்து இலங்கை விடுதலை இலகுவாக அமைந்தது.

இலங்கைத் தமிழர்கள் இரண்டு பிரி வாகக் கருதப்படுகின்றனர். அந்நாட்டில் வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கை வம்சாவளித் தமிழர் கள், மற்றொரு பிரிவினர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மத்தி யப் பகுதியில் உருவாக்கப்பட்ட தேயிலை, ரப்பர், காபி தோட்டங்களில் வேலை செய்ய தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள். அங்கு ஏற்பட்ட தேவை மட்டுமின்றி தமிழகத்தில் ஏற் பட்ட பஞ்சங்களும் இந்த இடப்பெயர் வுக்கு காரணமாக இருந்துள்ளது. மகா கவி பாரதி, பிஜூ தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களை எண்ணி கண்ணீர்விட்ட நிலைதான் இலங் கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்களின் நிலையும். இவர்கள் இன்றும் இலங்கை மத்தியப்பகுதியில் உள்ள பெருந்தோட்டப்பகுதியில் வாழ்ந்து வரு கின்றனர். அரசின் புள்ளி விவரங்களில் இவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அர சின் உயர் பொறுப்புகளில் 92 சதவீதம் அளவிற்கு தமிழர்களே இருந்துள்ளனர். தொழில், வர்த்தகம் போன்ற துறை களிலும் உயர்ந்தோங்கி இருந்துள்ளனர். அந்நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் சிறு சிறு மோதல்கள் எழுந் துள்ளன. 1952-லேயே இன ரீதியான மோதல்கள் வெடித்துள்ளன. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்கிற சட்டமும், 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடி யரசு தொடர்பான அரசியல் சட்டங்களும், பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதில் பின்பற்றப்பட்ட பாரபட்சமும் மோதலை தீவிரப்படுத்தியது.

தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஜனநாயக ரீதியில், அமைதி வழியில் தீர்வு காண மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆட்சி யைத் தக்கவைத்துக் கொள்ள மக்களை பிளவுபடுத்தும் வகையில் தொடர்ச்சி யாக வந்த பெரும்பான்மை பகுதி அர சியல் தலைவர்கள் இன வெறிக்கு தூபம் போட்டனர்.

இந்தப் பின்னணியில் ஆயுதமேந்திய போராளிக்குழுக்கள் தோன்றின. 1983க் குப் பின்னர் பல வருடங்களாக நடந்த ஆயுத மோதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அகதிக ளாக மாற்றப்பட்டுள்ளனர். சொத்து சுகங் களை இழந்துள்ளனர்.

இலங்கை இன மோதல் என்பது இந் தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தாக் கத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வந்துள் ளது, இந்தப் பின்னணியில் 1987ஆம் ஆண்டு ஏற்பட்ட ராஜீவ்-ஜெயவர்த் தனே உடன்பாடு எல்டிடிஇ மற்றும் இலங்கை அரசினால் பின்பற்றப்பட வில்லை. இந்த உடன்பாட்டில் பல சாத கமான அம்சங்கள், அதிகாரப் பரவலுக் கான ஏற்பாடுகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது.

2001ம் ஆண்டில் நார்வே முன்முயற்சி யுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. தொடர்ச்சியான ஆயுத மோதலின் விளை வாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறு திக்கட்டப் போரும் பல்லாயிரக்கணக் கான அப்பாவி தமிழ் மக்கள் உயிரிழப்பும் நிகழ்ந்தன. இலங்கையின் வரலாற்றில் ஆற்றமுடியாத ரணமாக அது உள்ளது.

(தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com