Contact us at: sooddram@gmail.com

 

விடுதலைப் புலிகள் தமிழக மீனவரை கொலை செய்த கதை! சென்சிடிவ் விக்கிலீக்ஸ் கேபிள்!

தமிழகத்தில் இலங்கை தமிழர் விவகாரத்தை வைத்து, தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் அரசியல் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் விநோதமான ஒரு சிக்கல். இந்த நேரத்தில் பார்த்து விக்கிலீக்ஸின் சென்சிட்டிவ்வான கேபிள் ஒன்று வெளியாகியுள்ளது. தி.மு.க.வுக்கும், அதன் தலைவர் கருணாநிதிக்கும் சங்கடமான விவகாரம் இது.தமிழக மீனவர்களை கடத்தி படுகொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் என்று தமிழக சட்டசபையில் முதல்வராக இருந்தபோது கருணாநிதி அறிவித்தது ஆச்சரியமானதுஎன்று அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்திருக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. இந்த விவகாரம், 2007-ம் ஆண்டில் நடந்தது. அந்த ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12 மீனவர்கள் கடத்தப்பட்டனர். இந்த மீனவர்களை கடத்தியதும் படுகொலை செய்ததும் இலங்கை கடற்படை அல்ல, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தான் என்று அப்போது சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியிருந்தார். அப்போது, அவர்தான் முதல்வர். இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது.


கருணாநிதியின் இந்தக் கூற்றை, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பதிவு செய்து டில்லி, கொல்கத்தா, மும்பை, கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கும், வாஷிங்டனுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. இதில் ஏதும் ரகசியம் கிடையாது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, சட்டசபையில் பகிரங்கமாக செய்த அறிவிப்புதான் அது.
அமெரிக்க தூதரகம் அனுப்பி வைத்த அந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் தற்போது பகிரங்கப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க தூதராக ஆவணம் சொல்வது என்ன?
“(2007-ம் ஆண்டு) மார்ச் 29ம் தேதியன்று தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சுட்டுக் கொன்றனர் (இலங்கை கடற்படை அல்ல) என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வாயடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் இந்தக் குற்றச்சாட்டு உறுதியானால், தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு மீண்டும் குறைய வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே, 1991-ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலையின் பின் விடுதலைப் புலிகளின் ஆதரவு தமிழகத்தில் பாதிப்புக்குள்ளானது.
தமிழக மீனவர் படுகொலைக்கு புலிகளே பொறுப்புஎன்று ஆளும் தி.மு.க. கூறியிருப்பதன் மூலம், அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை அக்கட்சி மேற்கொள்ளக் கூடும். இதன்
மூலம் காங்கிரஸ் கட்சியுடனான தி.மு.க. உறவு வலுப்படும்.

ஏப்ரல் 27-ம் தேதியன்று தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தமது அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில், விடுதலை புலிகளின் கடற்படை பிரிவான கடல் புலிகள், மார்ச் 29-ம் தேதியன்று 5 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்திருந்தார்.

அவரது அறிக்கையில், ஏப்ரல் 11-ம் தேதியன்று இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட 6 கடற்புலிகளை விசாரித்தபோது, மீனவர்களை படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு இலங்கைப் பகுதியில் புலிகளின் கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கும்போது மீனவர்களை கொன்றதாக கடற்புலிகள் கூறியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 12 மீனவர்கள் (11 தமிழக மீனவர்கள், ஒருவர் கேரளா மீனவர்) மார்ச் 4-ம் தேதி முதல் காணாமல் போயினர். அவர்களும் புலிகளின் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முகர்ஜி கூறியுள்ளார்.

ஏப்ரல் 28-ம் தேதி முதல்வர் கருணாநிதி சட்டசபையில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

மீனவர் படுகொலைக்கு இலங்கை கடற்படைதான் காரணம் என்று தொடக்கத்தில் நாம் கருதிக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்ற அதிர்ச்சியான தகவலை வருத்தத்தோடு தெரிவிக்கிறேன். மேலும் கடத்தப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு மூலமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்என முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் உறுதியளித்தார்.

அதற்கு முந்தைய நாள் சட்டசபையில் பேசிய கருணாநிதி, “நாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்களுக்கு இங்கே (தமிழகத்தில்) இடம் இல்லை. அவர்கள் இங்கே எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர்களது குறிக்கோளும் நோக்கமும் வேறுபட்டதாக இருக்கிறதுஎன்று கூறியிருந்தார்.

மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்கள், தி.மு.க., மற்றும் அதன் தலைவர் கருணாநிதி பற்றியது. அமெரிக்க கேபிளில் பிற விஷயங்களும் உள்ளன. இதோ, அந்த விபரங்கள்:

தமிழக காங்கிரஸ் கட்சி, தடை செய்யப்பட்ட (விடுதலைப் புலிகள்) இயக்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்ய கோரியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மத்திய அரசுடன் ஆலோசிப்பார்.

(தமிழகத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ஜூலை 2002 முதல் பிப்ரவரி 2004 வரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மாநில அரசு பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டது) என்று விரிகிறது அந்த அமெரிக்க தூதரகத்தின் ஆவணம்.
இவற்றை
தவிர, தி ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம் ஒன்றையும் அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை, டில்லியில்தான் முடிவெடுக்கப்பட வேண்டுமே தவிர சென்னையில் அல்லஎன்பதை வலியுறுத்துகிறது அந்த தலையங்கம்.

அதே நேரத்தில், கருணாநிதிக்கு சாதகமான ஒரு வாக்கியமும் அமெரிக்க கேபிளில் உள்ளது.இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் தி.மு.க., இலங்கைக்குநேரடியாகஇந்திய அரசு ராணுவ உதவி அளிப்பதை ஆதரிக்காதுஎன்பதே அமெரிக்க தூதரக ஆவணம் பதிவு செய்துள்ள கருணாநிதிக்கு சாதகமான வாக்கியம்.

இந்த இடத்தில், முக்கியமான ஒரு விஷயத்தை இணைத்துப் பார்ப்பது அவசியம்.

மேலேயுள்ள கேபிள் அனுப்பி வைக்கப்பட்ட அதே காலப்பகுதியில்தான், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை ஒவ்வொன்றாக, நடுக் கடலில் வைத்து அழித்தது இலங்கை கடற்படை. விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அடையாளம் காட்டியது, சாட்சாத் அமெரிக்காதான்.

(விறுவிறுப்பு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com