Contact us at: sooddram@gmail.com

 

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம் - பாகம் 4

(கரு.முத்து)

ல்கலைக்கழக மானியக்குழு அனுமதித்திருக்கும் ஊழியர்களின்  எண்ணிக்கையை முதலில் தெரிந்து கொள்வோம்.பலகலைக்கழக மானியக்குழு  விதிகளின் படி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருக்க வேண்டிய ஆசிரியர்கள்  எண்ணிக்கை 657. ஆனால் தற்போது அங்கிருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை  3000 பேர்.மானியக்குழு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1110  பேர்.ஆனால் இங்கு இருக்கும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 9600 பேர்.    ஆக பல்கலைகழகம் நடத்த நிதி மானியம் அளிக்கும் பல்கலைகழக மானியக்குழு  அனுமதித்திருக்கும் எண்ணிக்கை 1767 பேர்தான். ஆனால் இருப்பதோ 12,600  ேர்.அதாவது கிட்டத்தட்ட 9 மடங்கு ஊழியர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு சம்பளம் எங்கிருந்து கொடுப்பது? என்பதில் இருந்துதான் சிக்கல் ஆரம்பித்தது. ஏன் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதானே அவர்களுக்கு வேலை கொடுத்தார்கள்? அந்த பணத்தை வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிடலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.அந்த பணம் யாரிடம் போனது? எப்படி முடங்கியது என்பதில்தானே சிக்கலின் ஆரம்பம் இருக்கிறது.

 ஆட்களை நியமனம் செய்வதில் எம்.ஏ.எம்.மிடம் விதவிதமாக  ஏமாற்றினார்கள் பல்கலைகழகத்தை அதிகாரம் செய்தவர்கள்.இரண்டு பேராசியர்  பணியிடங்களுக்கு அவரிடம் பணத்தை கொடுத்து அனுமதி பெறுவார்களாம்அவர்களுக்கு இரண்டு என்று சென்னையிலிருந்து இங்கு பேக்ஸ் வரும்.அதனை  எடுத்து முன்னால் ஒரு ஒன்றை சேர்த்து பணிரெண்டாக மாற்றி பைலை  உருவாக்கிவிடுவார்களாம்.பத்து புதிய நபர்களை  இவர்களே சேர்த்து அந்த  பணத்தை வாங்கிக் கொண்டார்கள்.எந்த நேரத்தில் எம்.ஏ.எம் முக்கு பணம்  தேவைப்பட்டாலும் அவருக்கு கொடுப்பதற்கு இவர்கள் தயாராக இருந்தார்கள்அவரிடம் காசை கொண்டுபோய் கொடுத்துவிட்டு புதிதாக பத்துபேரை பணி  ியமனம் செய்தார்கள்.அந்தத்துறை, இந்தத்துறை என்றில்லாமல் எல்லாத்  துறைகளிலும் இப்படி ஆட்களை புதிதாக சேர்த்துக் கொன்டே இருந்தார்கள்.

இதனால் தேவையேப்படாத இடங்களில் எல்லாம் ஆட்கள் அதிக அளவில் இருந்தார்கள். ஒரு துறையின் அலுவலகத்தில் புகுந்தால் அங்கு  உட்கார நாற்காலி கூட இல்லாமல் ஆட்கள் நின்று கொண்டிருப்பார்கள்.யாராவது எழுந்தால் அங்கு போய் உட்கார்ந்து கொள்வார்கள்.

யார் யாருக்கு என்ன ரேட்? ஆரம்பத்தில் துப்புரவு தொழிலாளி பணிக்கு இரண்டு  லட்சம், செக்யூரிட்டிக்கு மூன்று லட்சம் என்று வாங்கி, தாங்கள் பாதி எடுத்துக்  கொண்டு மீதி பாதியை எம்.ஏ.எம்முக்கு கொண்டு போய் கொடுத்தார்களாம்.அது  கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கடந்த வருட முடிவில் ஏழு முதல் எட்டு  லட்சங்களாக ஆனது.

 அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள்  ுதலில் ஐந்து லட்சமாக இருந்தது.தற்போது அலுவலக உதவியாளருக்கு பத்து  லட்சமும்,இளநிலை உதவியாளருக்கு 17 லட்சமும் வாங்கப்பட்டதுவிரிவுரையாளர்களுக்கு முதலில் எட்டு லட்சம் ரூபாயாக இருந்தது.கடைசியாக  அத இருபத்தைந்திலிருந்து முப்பது லட்சமாக உயர்த்தப்பட்டது.ஒரு கட்டத்தில்  புதிதாக இனி விரிவுரையாளர்களை நியமிக்கக் கூடாது என்று ஊழியர்கள் நீதிமன்றம்  சென்று தடையானை வாங்கினார்கள்.

என்னடா இது வருமானத்துக்கு வந்த சோதனையாக இருக்கிறதே என்று யோசித்த ஊழல் பேர்வழிகள், விரிவுரையாளர்தானே போடக்கூடாது என்று முடிவெடுத்து அதே சம்பளம் கிடைக்கும்படியாக ஸ்பெசல் இண்ஸ்டெக்டர் என்ற புதிய பதவியை உருவாக்கினார்கள். அவர்களிடம் முப்பது லட்சத்தை வாங்கிக் கொண்டு பணியமர்த்தினார்கள். அப்படி ஒரு பணியிடத்தை அரசாங்கம் தடை செய்து பத்து வருடங்கள் ஆகிறதாம். அதைபற்றி கவலைப்படாமல் இவர்கள் அந்த பணியிடத்தில் கிட்டத்தட்ட 100 பேரை நியமனம் செய்திருக்கிறார்கள்.
முப்பது லட்சத்தை இன்னும் அதிகமாக உயர்த்த என்ன செய்யலாம் என்று ரூம்  ோட்டு யோசித்தவர்கள் மேலும்  இரண்டு புதிய பணியிடங்களை  உருவாக்கினார்கள்.எல்.ஒ மற்றும் எஸ்.ஓ. இந்த இரண்டும் இதுவரை எந்த  பல்கலையிலும் இல்லாத பதவிகள்.எல்.ஓ என்றால் லைசன் ஆபீசர். எஸ்.ஓ  என்றால் ஸ்பெசல் ஆபீசர்.இதில் இந்த எஸ்.ஓ பணி என்பது கூட்டுறவு   சங்கங்களில் தான் இதுவரை இருக்கிறது.ஆனால் இவர்கள் பணத்துக்கு  ஆசைப்பட்டு இப்படி ஒரு பதவியை உருவாக்கினார்கள்.

900 பேர் வரை இப்படி சேர்த்திருக்கிறார்கள். அவர்களின் ஒரு மாத சம்பளம் தலா 40 ஆயிரம் ரூபாய். முப்பதாயித்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் பார்மசிஸ்ட்டுகள் இங்கு 180 பேர் இருக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் எல்லா பார்மசிஸ்ட்டுகளையும் சேர்த்தால் கூட அது 160 பேரை தாண்டாது.

 25லட்சம் முதல் முப்பது லட்சம் வரை பனத்தை வாங்கிக் கொண்டு இத்தனை  ேருக்கு பணிஆனை வழங்கியிருக்கிறார்கள். இத்தனைக்கும் மருத்துவமனையில்  மருந்தகம் கிடையாது. இருந்த ஒரு மருந்தகத்தையும் தனியாருக்கு பலகோடி  ூபாய் வாங்கிக் கொண்டு தாரை வார்த்துவிட்டார்கள்.

கோடிகோடியாக பணத்தை வாங்கித்தருவதால் பதிவாளர் ரத்தினசபாபதியை எழுபது  வயத வரை ஓய்வு கொடுக்காமல் பல்கலை கழகத்தின் பதிவாளராக கடந்த  ஆண்டுவரை பணி நீட்டிப்பு கொடுத்துக் கொண்டே இருந்தாராம் எம்.ஏ.எம்இப்பிரச்னையை சட்டசபை வரை சிதம்பரம் எம்.எல்.ஏ பாலகிருஷணன்  ொண்டுசெல்லவே, கடந்த ஆண்டுதான் ஒருவழியாக அவரை விடுவித்துவிட்டு  தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளாரான மீனாட்சிசுந்தரத்தை பதிவாளராக்கினார்.


ரத்தினசபாபதி அமெரிக்காவில் இருக்கும் மகள் வீட்டுக்கு போய் செட்டிலாகி  ிட்டார்.அவருக்கு முன் வெங்கட்ரங்கன் ஓய்வு  பெற்றுவிட, அவருக்கு பதிலாக  துணைவேந்தரானார் ராமநாதன்.அதிர்ந்துகூட பேசத்தெரியாத அவர், எம்.ஏ.எம்  காலால் இட்ட வேலையை தலையால் செய்வதை மட்டுமே கடைபிடித்து அதன்  விளைவாக, இப்போது ஆளுனரால் சஸ்பெண்ட் ஆகி வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்.
 மீனாட்சிசுந்தரத்துக்கு ஓய்வுபெறும் வயது வந்தவுடன், அவரை கூப்பிட்ட நிர்வாக  அதிகாரி சிவதாஸ்மீனா, "நீங்கள் ராஜினாமா செய்துவிடுங்கள்!" என்று சொல்ல அவர் ராஜினாமா செய்துவிட்டு பழையபடி துறைத் தலைவராக மட்டும் தொடர்கிறார்.

பணியமர்த்தவும்,மாணவர் சேர்க்கைக்காகவும் வாங்கிய பணம் மட்டும்  ஏழாயிரம்கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது என்கிறார்கள் ஊழியர்கள் சங்கத்தின்  பிரதிநிதிகள். அது முழுவதும் அப்படியே எம்.ஏ.எம்மிடம் சென்று சேரவில்லை.  அதில் இடைத்தரகர்களுக்கு பாதித்தொகை போய் விட்டது.சரி கிடைத்த  ீதிப்பணத்தையாவது பல்கலைகழக நிதியில் கொண்டு சேர்த்தார்களா? இல்லை  என்ன செய்தார்கள்?இவ்வளவு பணம் புழங்கிய இடத்தில் ஏன் நிதிப்பற்றாக்குறை  வந்தது?என்பதெல்லாம் நாளை..   

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com