Contact us at: sooddram@gmail.com

 

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம் - பாகம் 5

(கரு.முத்து)

ஏழாயிரம் கோடியில் எம்.ஏ.எம்.முக்கு வந்தது எவ்வளவு என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். ஆனால் அவரோ ‘‘என்னிடம் யாரும் எந்த பணமும் தரவில்லை’’ என்று முன்பு ஒருமுறை நம்மிடம் ஒரே போடாக போட்டு எல்லாவற்றையும் மறுத்து விட்டார். ஆனால் புரோக்கர்கள் அவரிடம் கொண்டுபோய் பணம் கொட்டிய தகவல்கள் லாரி லாரியாய் ஏற்றலாம் போல அவ்வளவு கதை சொல்வார்கள். வேலைக்கு பணம் வாங்கிய அவர், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்ற கவலையெல்லாம் படவில்லை. சம்பளம் கொடுப்பது பல்கலையின் கடமை நமக்கென்ன வந்தது என்று கல்லாவை இருக மூடிக்கொண்டார். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மூலமும் மற்ற வகைகள் மூலமும்  எவ்வளவு  வருமானம் வருகிறதோ அதற்கும் செலவு வைக்க ஆரம்பித்தார்.

தேவையே இல்லாமல் புதிய புதிய கட்டிடங்களை கட்ட உத்தரவிட்டார். கட்டிடம் கட்டுவதற்கு என்ன அவசியம்? கட்டுமான நிறுவனம் அவருடையை செட்டிநாடு பில்டர்ஸ்  ிறுவனம். ஆவுடையார்கோவில் திருப்பணி போல எந்த நாளிலும் அவரது நிறுவனம் அங்கே கட்டிடம் கட்டி பல்கலைக்கழகத்தின் நிதியை அபேஸ் செய்து கொண்டது. பல்கலைக்கழகத்தின் நிதியை இன்னும் எப்படி லாவகமாக தங்கள் நிறுவனத்துக்கு திருப்பலாம் என்று யோசித்துப் பார்த்தார் எம்.ஏ.எம். அவராக யோசிப்பாரா இல்லை அவரது அடிவருடிகள் யோசனை சொல்வார்களா என்று தெரியவில்லை.

ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியை வைத்து ஒரு திட்டம் போட்டார்கள். அது சுயநிதி மருத்துவக் கல்லூரி. மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து அதிலிருந்துதான் கல்லூரியை நடத்த வேண்டும். அப்படி கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அதுதவிர ஒரு சீட்டுக்கு நாற்பது லட்ச ரூபாய் அளவுக்கு நன்கொடையும் வாங்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் வைத்து மருத்துவக் கல்லூரியை நடத்தாமல் அதை அப்படியே கல்லாவுக்குள் கொண்டு போய் பூட்டியவர் தனது மதுராகோட்ஸ் ஆலைக்கும், செட்டிநாடு சிமெண்ட்ஸ் ஆலைக்கும் அதனை முதலீடு செய்தார். நஷ்டத்தில் இயங்கிய அந்த ஆலைகள் இந்த முதலீட்டால் மெல்ல மெல்ல லாபத்திற்கு திரும்பியது. மருத்துவக்கல்லூரியின் ஒட்டுமொத்த செலவுகளையும் பல்கலைக்கழகத்தின் தலையில் கட்டினார்.

மருத்துவக் கல்லூரியின் மருத்துவர், செவிலியர் ஊதியங்கள், மாணவர்களின் படிப்பிற்காக அங்கு இயங்கும் மருத்துவமனையின் அத்தனை செலவினங்களும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து எடுத்து செலவிடப்பட்டது. அதனால் தேவையே இல்லாமல் பல கோடி ரூபாய்கள் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் செலவு பிடித்தத . இப்படி செலவுகளை செய்ததோடு மட்டும் விட்டு விடவில்லை. பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து இரண்டாயிரம் கோடி ரூபாயை மருத்துவக் கல்லூரிக்காக ஒதுக்கி எடுத்துக் கொண்டார்களாம். அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக நிதி தேய்ந்து வந்த பல்கலைக்கழகம் அதற்குபிறகு ஒட்டுமொத்தமாக திண்டாட ஆரம்பித்தது.

ஏற்கனவே அதிகப்படியான ஊழியர்களால் மாதம் 40 கோடி ரூபாய் அளவுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருந்தது. அதனால் கையிருப்பு எல்லாம் மெல்ல கரைந்து கொண்டே வந்தது. அந்த நேரத்தில் கை கொடுத்தது தொலைதூர கல்வி மையம். அங்கு வந்த வருமானம் முழுவதையும் சம்பளம் போடுவதற்காக எடுத்துக் கொண்டார்கள். அதனால் அங்கு 15000 ரூபாயாக இருந்த பி.எட் படிப்புக்கான கட்டணம்  ென்ற ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அந்த படிப்பிற்கு ஐநூறு பேருக்குத்தான் அனுமதி என்று சொல்லப்பட்ட நிலையில் பல ஆயிரம் பேர்வரை சேர்க்கப்பட்டார்கள். ஆனாலும் நிதி போதவில்லை. ஊழியர்களின் சேமநலநிதி, ஓய்வு ஊதிய நிதி என்று எல்லா நிதியிலிருந்தும் எடுத்து சம்பளம் போட்டார்கள். அப்படியும் போதவில்லை. இந்த நிலைமை எம்.ஏ.எம்.மின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு வந்து ஒருவாரம் தங்கி ஆய்வு நடத்தினார்.

மேற்கண்ட எல்லா விஷயங்களும் அவருக்கு முழுமையாக தெரிய வந்தது. இனிமேல் பல்கலைக்கழகம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் தாங்கள் எடுத்துச் சென்ற பல்லாயிரம் கோடி ரூபாயை திரும்ப பல்கலைபஙகழக நிதியில் சேர்த்தாலே போதும் என்று அவருக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் முன்புபோல் அவர்கள் இப்போது கல்விச்சேவையா செய்கிறார்கள். கல்வி வணிகம்தானே செய்கிறார்கள். அதனால் ஊழியர்கள் தலையில் கை வைக்க முடிவெடுத்தார். இருப்பதில் பாதிப்பேரை வெளியில் அனுப்பினாலோ அல்லது எல்லோருக்கும் இப்போது வாங்குவதில் பாதிச் சம்பளமாக குறைத்தாலோதான் அடுத்தடுத்த மாதத்தில் சம்பளம் போடமுடியும், தொடர்ந்து பல்கலைக்கழகத்தை நடத்தவும் முடியும் என்று சொல்லி துணைவேந்தரை அதை செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

துணைவேந்தர் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து இதைப் பேசப்போய்த்தான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. போராட்டங்களில் இறங்கினார்கள். அரசு இதில் தலையிட வேண்டும் என்று ஊழியர்கள் விரும்பினார்கள். அதனால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு தணிக்கைக்குழுவை அனுப்பி விசாரிக்க சொன்னது மாநில அரசு. அவர்கள் கொடுத்த விசாரணை அறிக்கையில் எம்.ஏ.எம்.முக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரங்கள் தான் நிதி மோசடிக்களுக்கு காரணம் என்பதை  ிளக்கப்பட்டது. அதன் விளைவாக முதலில் சிறப்பு நிர்வாக அதிகாரியாக சிவதாஸ்மீனா நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சிவதாஸ்மீனாவின் வேகமான நடவடிக்கைகளின் விளைவாக பல்கலையை அரசு ஏற்கும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இனி அரசு எடுக்கும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாக அண்ணாமலை பல்கலைக்கழகம் நிமிரும் என்று அதன் மாணவர்களான லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள்.

குறிப்பு; கடந்த ஐந்தாண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தள்ளாட்டங்களையும், அங்கு நடந்துவரும் குழப்பங்களையும் கோல்மால்களையும் நமது ஜூனியர்விகடன் மட்டுமே தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வந்தது. இப்போது அரசு ஏற்கும் முடிவுக்கு வந்ததற்கு ஜூனியர் விகடனும் ஒரு முக்கிய காரணம் என்று கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக் தனிப்பட்ட முறையில் விகடனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com