Contact us at: sooddram@gmail.com

 

வட மாகாணசபைத் தேர்தல் நடந்தால் தான் உண்மை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வட மாகாண சபைக்கான தேர்தலை அடுத்த செப்டெம்பர் மாதம் நடத்துவதாக ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். கடந்த வார இறுதியில் வெலிஒயாவில் விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பகிர்ந்தளிக்கும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருக்கிறார்.

ஆனால் வட மாகாண சபை தேர்தல் விடயத்தில் அரசாங்கம் இது கால வரை காட்டிய அச்சத்தை பார்க்கும் போது உண்மையிலேயே அரசாங்கம் செபடெம்பர்; மாதத்தில் அத் தேர்தலை நடத்துமா என்பது இன்னமும் சந்தேகமாகவே இருக்கிறது.

இந்த தேர்தலை இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்த முதலாவது முறை இதுவல்ல. கடந்த வருடம் ஜுலை மாதம் 11ஆம் திகதி வெளியாகிய இந்து பத்திரிகை இதழுக்காக அவர் வழங்கிய பேட்டியின் போது தான் அவர் அதனை முதன் முதலாக கூறியிருந்தார்.

சிலவேளை ஜனாதிபதி கடந்த வருடம் இந்தக் கருத்தை அவ்வளவு பாரதூரத் தன்மையோடு வெளியிட்டு இருக்க மாட்டார். அவர் இந்திய பத்திரிகைகளுக்கு பேட்டி வழங்கும் போது இந்திய தலைவர்களை திருப்திப்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறுவதுண்டு.

13ஆவது அரசியலமைப்புக்கு அப்பாலும் செல்வேன் என்று அவர் இந்திய ஊடகங்களுக்கு பலமுறை கூறியிருப்பது உதாரணமாகும். அதேபோல் தான் அவர் கடந்த வருடம் வட மாகாண சபை தேர்தலைப் பற்றியும் கருத்து வெளிட்டு இருக்கக் வேண்டும்.

13ஆவது அரசியலமைப்புக்கு அப்பாலும் செல்வேன் என்று கூறும் போது அதற்கு அப்பால் செல்வது ஒருபுறம் இருக்க 13ஆவது அரசியலமைப்பையாவது பூரணமாக நிறைவேற்றும் நோக்கம் அவரிடம் இருந்ததாக தெரியவில்லை என்பது இப்போது தெட்டத் தெளிவான விடயம். அதேபோல் கடந்த வருடம் வட மாகாண சபைத் தேர்தலைப் பற்றிக்; குறிப்பிடும் போதும் அவர் அதைப் பற்றி பெரிதாக சிந்தித்து இருக்க மாட்டார்.

அப்போது அவர் அந்த விடயத்தில் 'சீரியசாக' இருந்திருந்தால் அவரது தம்பிமார்களான அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அதன் பின்னர் 13ஆவது அரசியலமைப்பை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கருத்தை பரப்ப முற்பட்டு இருக்க மாட்டார்கள்.

இந்திய தலைவர்கள் அவர்களின் தலையீட்டில் சட்டமாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்பின் கீழ் மாகாண சபைகள் இயங்கி வருவதை விரும்புவார்கள் என்றே ஊகிக்க முடிகிறது. இந்த வகையில் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக கூறினாலும் உண்மையிலேயே வட மாகண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறினாலும் ஜனாதிபதி கடந்த வருடம் வெளியிட்ட அக்கருத்து வெகு தூரம் சென்றுவட்டது.

அதனை இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா போன்ற நாடுகளும் பிடித்துக் கொண்டன. அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக அமைந்த கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையலும் இந்த தேர்தல் விவகாரம் இடம் பிடித்துக் கொண்டது.

'2013ஆம் ஆண்டு செப்டெடம்பர் மாதம் வட மாகாணத்தின் மாகாண சபைக்காக தேர்தல்களை நடத்துவதென்ற இலங்கை அரசாங்கத்தின் அறிவித்தலை பாராட்டுவதோடு...' என்று இவ்வருடம் ஜெனீவா பிரேரணையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையின் இறுதிவரைவில் இந்திய அரசாங்கம் வெகுவாக தமது செல்வாக்கை செலுத்தியிருப்பதாக கூறப்பட்டது. எனவே இந்தியாவின் தலையீட்டினாலேயே வட மாகாண சபைக்கான தேர்தல் பிரேரணையில் இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது என்று ஊகிக்க முடிகிறது.

ஏவ்வாறாயினும் வட மாகாண சபைக்கான தேர்தலை இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடத்துவது என்ற விடயம் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலைப்பாடாகிவிட்டது. அது இப்போது வெறுமனே இலங்கையின் உள் விவகாரம் மட்டும் அல்ல.

வட மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பரில் நடத்துவதாக ஜனாதிபதி வெலிஒயாவில் வைத்து கடந்த வார இறுதியில் கூறியதன் பின்னரும் அவரது அரசாங்கத்தற்குள்ளருந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் விமல் வீரவன்ச அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒருவராவார்.

வழமையாக ஜனாதிபதி உண்மையிலேயே எதையாவது விரும்பினால் இந்த அரசாங்கத்தில் எவரும் அதனை எதிர்க்கப் போவதில்லை. மாறாக தாம் விரும்பாவிட்டாலும் அரசாங்கத்தில் எல்லோரும் ஜனாதிபதியின் கருத்தை வரவேற்பார்கள். நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை எதிர்த்த அரசாங்கத்திலுள்ள எல்லோரும் ஜனாதிபதி ராஜபக்ஷ அவ்வாட்சி முறையை நீடிக்க முற்பட்ட போது புதுப்புது வாதங்களை முன்வைத்து ஜனாதிபதியின் நிலைப்பாட்டை ஆதரித்தமையும் சூதாட்ட சட்டத்தை பிக்குகளின் கட்சியான ஜாதிக்க ஹெல உருமயவும் கூட ஆதரித்தமையும் இதற்கு உதாரணமாகும்.

வேண்டும் என்றால் சில விடயங்களில் சில அமைச்சர்கள் ஜனாதிபதியின் கருத்துக்கு மாறான கருத்துக்களை பகிரங்கமாக கூறலாம். அவ்வளவு தான். கசினோ விளையாட்டு சம்பந்தமாக தற்போது ஹெல உருமய போன்ற கட்சிகள் கருத்து வெளியிட்டு வருவதையும் மின் கட்டண உயர்வை வீரரவன்ச மற்றும் வாசுதேவ நாணாயக்கார போன்றவர்கள் எதிர்ப்பதையும் அவ்வாறு தான் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் வாக்களிப்பு என்ற நிலைக்கு வந்தால் அவர்கள் எவரும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்வதில்லை.

ஆனால் விமல் வீரவன்ச வட மாகாண சபைத் தேர்தலை எதிர்ப்பதை அந்த அடிப்படையில் பொய்யான எதிர்ப்பு என்றே கூற முடியாது. ஏனெனில் அதில் வேறு திட்டங்களும் இருக்கலாம். வீரவன்சவை போல் வேறு சில அமைச்சர்களையும் இவ்வாறே இந்த தேர்தலுக்கு எதிராக குரல் எழுப்பச் செய்து ஹலால் இலட்சினைக்குப் போல் நாட்டில் அத் தேர்தலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை முடுக்கி விட்டு அவற்றை காரணமாக காட்டி தேர்தலை நடத்தாமல் இருக்கவும் வாய்ப்பு இல்லாமல் இல்லை.

ஜாதிக்க ஹெல உருமய இதற்கு முன்னர் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு இருந்தது. பிரதீபய என்ற பெயரில் லங்காதீப பத்திரிகைக்கு பத்தியொன்றை எழுதி வரும் அக்கட்சியின் மூத்த தலைவரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில 2011 ஆண்டு ஜூன் 30ஆம் திகதிய பத்திரிகைக்கு எழுதிய பத்தியில் இவ்வாறு கூறியிருந்தார்.

'ஏனைய மாகணங்களில் மாகாண சபைகள நிறுவப்பட்டுள்ளதால் வட மாகாண சபையை நிறுவுவதை எவரும் எதிர்க்க முடியாது. எனவே வட மாகாண சபையை நிறுவுவதை மட்டுமன்றி அதற்கான தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

'அரசாங்கத்திற்கு சாதகமான நிலைமை உருவாகும் வரை வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று அரசாங்கத்தில் சில அமைச்சர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் அதனை ஏற்கவில்லை.

'தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபையை வெற்றி கொள்வதில் நன்மையும் இருக்கிறது. இப்போது அக்கட்சி வெறுமனே அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டுதான் அரசியலை நடத்துகிறது. ஆனால் அவர்கள் வெற்றி பெற்றால் கொழும்பில் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு தாம் இது வரை தேவை என்று கூறியவற்றை நிறைவேற்றுவதில் உள்ள கஷ்டத்தை அவர்கள் உணர்வார்கள்.

அவர்கள் வட மாகாண சபையை பொறுப்பேற்றால் அவர்களது விமர்சனங்களும் நின்றுவிடும். ஆதன் பின்னர் அவர்கள் மக்களின் விமர்சனங்களையும் வெளிநாட்டு நெருக்குதல்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும்'
ஆனால் இவ்வாறு கூறிய ஹெல உருமய நாளை வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் அவர்கள் இனவாத விடங்களில் மற்றவர்களை விஞ்ச பெரும் ஆர்வத்தை காட்டுபவர்கள்.

அரசாங்கம் உண்மையிலேயே வட மாகாண சபை தேர்தலை நடத்தும் அறிகுறிகள் தான் தெரியவிருக்கினறன என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான அனுர குமார திஸாநாயக்க கூறியிருக்கிறார். துமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களின் அதிகரிப்பு, தமிழ ஊடகங்கள் மீதான் தாக்குதல்கள், ஜனாதிபதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டமை மற்றும் அவர் வட பகுதி உருளை கிழங்கு விவசாயிகளை சந்தித்தமை ஆகியவை தேர்தல் வருகிறது என்பதை கோடிட்டு காட்டுவதாக அவர் கூறுகிறார்.

இருந்த போதிலும் பதவிக்கு வந்தது முதல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி; அதிகார பரவலாக்கல் விடயத்தில் காட்டிய அசிரத்தையை கவனத்தில் கொள்ளும் போது  இந்த அரசாங்கம் அதிகார பரவலாக்கலுக்கு சாதகமான வட மாகாண சபைத் தேர்தலை நடத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com