Contact us at: sooddram@gmail.com

 

சவுதியில் செத்து மடியும் தமிழர்கள்!

ஆக்ஷனில் இறங்கிய ஜூ.வி.

 

''சார், நான் ஆத்தூரில் இருந்து பேசுறேன். என் வீட்டுக்காரர் பேரு தங்கவேலு. நாலு வருஷத்துக்கு முன்னால சவுதிக்கு வேலைக்குப் போனார். அங்க சொன்னபடி சம்பளம் தரலை. அங்கிருந்து திரும்பி வரவும் முடியலை. ஏதோ ஆபத்துல மாட்டிக்கிட்டார். ரகசியமா போன் செஞ்சு 'இனி நான் உங்களைப் பார்க்க முடியாது’னு சொல்லி அழுறார். நான் இரண்டு குழந்தைகளை வச்சுக்கிட்டு கஷ்டப்படுறேன். என்ன செய்றதுன்னே தெரியலை. நீங்கதான் உதவி செய்யணும்'' என்று, நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66802929) போன் செய்து அழுதது அந்தப் பெண் குரல். 

பரபரவென காரியத்தில் இறங்கினோம். குரலுக்குச் சொந்தமான மகாலட்சுமியிடம் பேசி, சவுதியில் இருக்கும் தங்கவேலு பற்றிய தகவல்களைத் திரட்டினோம். அடுத்த கட்டமாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா மாநகரின் தமிழ்ச் சங்க உறுப்பினர் விஜயனைத் தொடர்புகொண்டு தங்கவேலுவின் நிலைமையைப் பற்றிச் சொன்னோம்.

ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் பெரும்உதவியால், போன உயிர் திரும்பியதுபோல் தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார் தங்கவேலு. சவுதியில் அவர் பட்டபாடு சொல்லி மாளாது. அவரைப் பத்திரமாகத் திருப்பிக் கொண்டுவந்து அவருடைய வீட்டில் சேர்க்கும் வரை, மனைவி மக்களை மீண்டும் பார்ப்போம் என்ற நம்பிக்கையே இல்லை அவருக்கு.

தங்கவேலுவை அவரது வீட்டில் சந்தித்தோம். ''சார் என்னுடைய சொந்த ஊர் ஆத்தூர் பக்கத்தில் இருக்கிற கல்பாகனூர். எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். என் மனைவி மகாலட்சுமி. எங்களுக்கு ஒரு பையன். ஒரு பொண்ணு. எனக்கு சொந்தமான மூணு ஏக்கர் பூமியில் விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தேன். குடும்பச் சூழ்நிலை காரணமா அந்த பூமியும் கைமாறிப் போச்சு. ஆடு,மாடு மேய்ச்சுகிட்டு இருந்தேன். அப்போ சவுதியில் இருந்து வந்த எங்க தூரத்துச் சொந்தக்காரர் சேகர், 'இங்கு ஆடு மேய்ப்பதுபோல சவுதியில் ஆடு மேய்ச்சா கை நிறைய சம்பளம் தருவாங்க. 30 ஆடு, 30 பேரிச்சை மரம், 2 சொட்டுநீர் தெளிப்பான்... இதைப் பார்த்துக்கிட்டா போதும். மாசம் 700 ரியால் தருவாங்க. இந்தியக் கணக்குல மாசம் 9,000 வரும்’னு சொன்னார்.

அதை நம்பி 45 ஆயிரம் செலவுசெஞ்சு விசா எடுத்து, 35 ஆயிரம் விமான டிக்கெட் எடுத்து சவுதிக்குப் போனேன். அங்கு வாதிதிவாவாஸ் என்ற பாலைவனப் பகுதியில் ஷாக்முத்ராக் என்பவர்கிட்ட சேகர் என்னை ஒப்படைச்சார். அவர், '100 ஆடுகள், 6 ஒட்டகங்கள், 647 பேரிச்சை மரங்கள், 5 சுழற்சி சொட்டு நீர் தெளிப்பான்களைப் பார்த்துக்கணும். சம்பளம் அப்புறமா சொல்றேன்என்றார்.

அஞ்சு மாசம் கழிச்சு, 'மாசம் 600 ரியால் சம்பளம். சாப்பாட்டுக்கு 250 ரியால், போனுக்கு 50 ரியால் பிடித்தது போக, 300 ரியால் கொடுப்போம். வருஷம் ஒரு முறை அடையாள அட்டை வாங்க 600 ரியால் செலவாகும். அதை உன் சம்பளத்தில்தான் பிடிப்போம்’னு சொன்னார். அதாவது, இந்தியக் கணக்குல மாசம் 3,500 சம்பளம். வருஷத்துக்கு ஒரு தடவை 7,000 பிடிச்சுக்குவோம்னு சொன்னாங்க.

இதை சேகரிடம் சொல்லி அழுதேன். 'சவுதியில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. பேசாம போய் வேலையைப் பாரு’னு சொல்லிட்டாரு. நாலு வருஷம் வேலை பார்த்தும் வீட்டுக்குப் பணம் அனுப்ப முடியலை. கூடுதலா சம்பளம் கேட்டதுக்கு, என்னை அடிச்சு பாஸ்போர்ட்டையும் அடையாள அட்டையையும் பறிச்சுகிட்டு துரத்திட்டாங்க. திக்குத் தெரியாத பாலைவனத்துல சோறு தண்ணி இல்லாம தவிச்சேன். வெளியில அடையாள அட்டை இல்லாம திரிஞ்சா, போலீஸ் பிடிச்சு ஜெயிலில் போட்டுடும்.

தாங்க முடியாத மனவேதனையில் என் மனைவிக்கு போன் செய்து அழுதேன். அதன்பிறகுதான் என் மனைவி 'ஜூ.வி’-க்கு போன் செஞ்சு அழுதிருக்கு. அதையடுத்து, ஜெத்தா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த விஜயன், நான் இருந்த வனாந்தர காட்டுக்கு வந்தாரு. போலீஸிடம் என்னைக் கூட்டிப்போனாரு. என் பொண்டாட்டி புள்ளைய பாக்க உதவி செஞ்சாரு. என்னைப்போல ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழவும் முடியாம, திரும்பி வரவும் முடியாம, அங்க அவதிப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் மீட்டு தாயகம் திரும்ப தமிழக அரசு உதவி செய்யணும்'' என்றார்.

அவரது மனைவி மகாலட்சுமி, ''என் வீட்டுக்காரரைக் காப்பாத்திக் கொடுத்த விகடனுக்குக் கோடான கோடி நன்றி'' என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா தமிழ் சங்கத்தின் உறுப்பினர் விஜயனிடம் பேசினோம். ''சவுதியில் மலையாளிகளுக்கு அடுத்தபடியாக தமிழர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள மலையாள எம்.பி-க்கள் இ.அகமது, வயலார் ரவி போன்றவர்கள் வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தி, அடிக்கடி சவுதியில் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். அதனால், மலையாளிகளுக்கு சவுதியில் சின்னப் பிரச்னை ஏற்பட்டாலும், உடனே இந்தியத் தூதரகம் மூலம் தீர்க்கப்படுகிறது. ஆனால், ஒருமுறைகூட தமிழ் எம்.பி-கள் சவுதி தமிழ்ச் சங்கத்துக்கு வந்தது இல்லை. ஜெத்தா மாநகரில் 250 தமிழர்கள் நாடு திரும்பிவர முடியாமலும் தங்குவதற்குகூட இடம் இல்லாமலும் பாலைவனத்தில் கந்ரா பாலத்தின் அடியில் பசியும் பட்டினியுமாகப் பரிதவித்தபடி இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் படும் கஷ்டங்களை யாராலும் பார்த்து சகித்துக்கொள்ள முடியாது. சவுதியில் கடுமையான சட்டங்கள் இருப்பதால், தமிழ்ச் சங்கத்தால் மட்டுமே அவர்களை மீட்டு அனுப்ப முடியாது. இந்தியத் தூதரகம் இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். தமிழக அரசும் தமிழ் எம்.பி-களும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால்தான், அவர்களை மீட்க முடியும்'' என்றார்.

போகிற இடமெல்லாம் தமிழனுக்கு இத்தனை காயங்களா? ஒருவேளை தமிழனாக இருப்பதே தவறா?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: தே.சிலம்பரசன்

 'வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன் நான்!’

'வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன் நான்என்று தன்னுடைய சூட்கேஸில் கொட்டை எழுத்தில் எழுதி தமிழகம் முழுக்கப் பிரசாரம்செய்து வரும் கடலூரை சேர்ந்த சேரன், ''நானும் சவுதியில் டைலரிங் வேலைக்காக என்று அழைத்துச் செல்லப்பட்டு, ஆடுகளும் ஒட்டகங்களும் மேய்த்து பல கொடுமைகளை அனுபவித்தவன். அங்குள்ள மலையாளிகளுக்கு மலையாள சங்கங்கள் மிகுந்த உதவிகளை செய்கிறது. ஆனால் தமிழர்களுக்கு யாரும் உதவி செய்வது இல்லை. பல தமிழர்கள் இதுபோன்ற சம்பவங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு அங்கேயே பைத்தியமாகத் திரிகிறார்கள். சிலர் அங்கேயே இறந்தும் போகிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் சவுதியில் சித்ரவதைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழக அரசு மீண்டுக் கொண்டுவர வேண்டும்'' என்றார்.

 

சவுதியா அரேபியால்லாம் ஒரு நாடுன்னு அங்க வேலைக்கு போறாங்க பார . அதுக்கு nrega ஸ்கீம்ல மாசம் 8 ஆயிரம் ரூபா சம்பாதிச்சா அது எவ்வளவோ மேல . சவுதியா அரேபியா ஒரு பிச்சைக்கார நாடு - அவங்களுக்கு இருக்கற என்னை வளத்துக்கு அதி பிச்சைக்கார நாடுதான் ஒரு 10,000 பேர் கொண்ட ஷேக் கும்பல் எல்லா வளத்தையும் அபகரிச்சு குபேர வாழ்க்கை வாழறாங்க மற்ற 2 கோடி அரேபியர்கள் அரசாங்கம் போடற எலும்பு துண்ட நம்பி வாழறாங்க. ஷேக் கும்பல் இஸ்லாம் பெற சொல்லி மக்களை அடிமையா வச்சுருக்காங்க அவங்க மாளிகைல கொக்கயின்லேந்த , ஷாம்பன் வரை எல்லாம் கிடைக்கும். ஒவ்வொரு சேக்கும் 10 பொண்களை கண்ணாலம் கட்டிக்குவான் மற்ற சாதாரண அரேபியர்களுக்கு பெண்ணோ கிடைக்காது. ஷேக் கும்பல வியாழக்கிழமை ஆச்சுன்னா கார எடுத்துகிட்டு பெய்ரூட்டுக்கு போயிருவாங்க அங்க காபர , கஞ்சா, சூதாட்டம் இப்படி இஸ்லாமுக்கு விரோதமான எல்லா காரியத்தையும் பண்ணிட்டு மற்றவங்களுக்கு உபதேசம் பண்ணி இஸ்லாமுக்கு பாதுகாவலாரா காட்டிப்பாங்க. ஊர்ல விவசாயம் பாருங்க நம்ப நாட்ல எவ்வளவோ வேலையிருக்கு போகறதா இருந்தா மேனேஜ்மென்ட் , டெக்னிக்கல் லெவெல்ல பேரம் பேசி கான்ட்ராக்ட் போட்டு , கறந்து அப்புறமா போங்க…..

இது போன்ற ஏழைகளை அன்று ஏமாத்தி இலங்கைக்கு அனுப்பி பல கங்காணிகள் வயிறு வளர்த்தாங்க….. இன்று புரோக்கர்கள் என்ற பெயரில் பலர் நம்ம நாட்டு வேலையில்லா இளசுகளை சவுதிக்கு அனுப்பி பலிவாங்குராங் . நம்ம நாட்டிலே ஏழையா விவசாயியா இருக்கலாம் எதுக்கு அதுவும் சவுதிக்கு ஆடு மாடு மேய்க்க போணும்

Karthik Srinivasan

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com