Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது அவசியம்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த் தைகள் ஸ்தம்பிதம் அடைந்திருப்பதற்கான முழுப் பொறுப் பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு பத்திரி கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். பேச்சு வார்த்தைகளுக்கு அலரி மாளிகையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இதனை கவனத்திற்கு எடுத்துக் கொள் ளாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வீணாக அரசைக் குற்றம் சாட்டுவது அர்த்தம் அற்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் நினைவு தின நிகழ்வில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தீர்வுப் பேச்சுக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமைக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

திரு. சம்பந்தனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுக்கள் தொடர்பாக அரசைக் குற்றஞ்சாட்டுவது அநீதியானது என்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வராமல் இழுத்தடிப்புச் செய்து கொண்டு திரு. சம்பந்தன் பொது இடங்களில் இவ்விதம் குற்றஞ்சாட்டுவது நியாயமானதல்ல என்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக் குழு என்பது எல்லோரினதும் நம்பிக்கைக் குரியது. இதனைப் புரிந்து அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அங்கத்தவர்களும் நடந்து கொள்வது அவசியமாகும். இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பாராளுமன்ற தெரிவு க்குழு என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக சொத்தல்ல. அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பயப் படுவதற்கான அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எமது கதவுகள் என்றும் பேச்சுவார்த்தைகளுக்கு திறந்து இருக்கின்றன. பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருவதன் மூலம் ஸ்தம்பித்துள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வரவேண்டும். அவ்விதம் செய்யாமல் காலம் கடத்தி நேரத்தை வீணாக்கி அரசாங்கத்தின் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இந்த யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு காலை வந்தால் கூட பேச்சு வார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக இருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வது அவசியம். யதார்த்தமாக அவர்கள் சிந்தித்து செயற்பட்டால் எந்தவொரு பிரச்சினைக்கும் இலகுவில் சுமூகத் தீர்வொன்றை ஏற்படுத்த முடியும்.

உதாரணமாக கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 100 இளம் தமிழ் பெண்களை இராணுவத்தினர் சமீபத்தில் இராணுவ வீராங்கனை களாக சேர்த்துக் கொண்டார்கள். அவர்கள் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டியில் நாம் யுத்தத்தின் போதும் யுத்தத்திற்கு முன்னரும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து இருக்கிறோம் என்று தெரிவித்தனர்,

அன்று நீங்கள் கிளிநொச்சிப் பிரதேசத்தில் நிம்மதியாக வாழ முடிந் ததா? என்று அந்த ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்கள், எமக்கு சராசரி வயது 20 முதல் 25 ஆகும். நாம் கிளிநொச்சி மாவட்டத்திலேயே பிறந்து பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எமக்கு நினைவு இருக்கும் காலம் வரையில் நாம் யுத்தத்தினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளோம். எத்தனையோ சந்தர்ப்பங்களில் எங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தது எமக்கு நினைவு இருக்கிறது.

எல்.ரி.ரி.ஈ யினால் நாங்களும் எமது பெற்றோரும் பல்வேறு துன்பங்களை அனுபவித்தோம். எமது இரத்த உறவுகளை அவர்கள் பலவந்தமாக தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டு அவர்களை யுத்தமுனைக்கு அனுப்பினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் எங்கள் கிராமங்களுக்கு திரும்பவே இல்லை.

இதனால் நாம் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கா விட்டாலும் எல்.ரி.ரி.ஈ யை மனதார வெறுத்தோம். எல்.ரி.ரி.ஈ யுத்தத்தில் தோல்வியடைந்தவுடன் அவர்கள் அதிகாரத்தில் இருந்த போது எல்.ரி.ரி.ஈ க்கு அடங்கி நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எல்.ரி.ரி.ஈ யின் அச்சம் இன்றி தீர்த்து வைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டதென்று நாம் பெரு மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால் எங்கள் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பினர் அரசாங்கத்துடன் முரண்பாடுடனான போக்கை கடைப் பிடித்து தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்காமல் இருப்பது குறித்து நாம் வேதனைப் பட்டு அவர்களுக்கான ஆதரவை நிறுத் திக் கொண்டு இப்போது இராணுவத்தில் சேர்ந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று இந்த தமிழ் இராணுவ வீராங் கனைகள் தெரிவித்தார்கள்.

இதே நிலையிலேயே வட பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்படுத்துவதில் அதிக ஆர்வம் இருக்கிறது. அவர்கள் யுத்த த்தை வெறுக்கிறார்கள். அவர்கள் சமாதானத்தையும் அமைதியான வாழ்க்கையும் விரும்புகிறார்கள்.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உடன டியாக தங்கள் போக்கை மாற்றி அரசாங்கத்துடன் நல்லிணக்க ப்பாட்டை ஏற்படுத்தி பாராளுமன்ற தெரிவுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வது அவசியம் ஆகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com