Contact us at: sooddram@gmail.com

 

அந்தோ தமிழ்நாடே!

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? (பாகம் 1)

பத்மநாபா கொலை

அது செவ்வாய்க்கிழமை ஜுன் மாதம் 19ஆம் திகதி 1990ஆம் வருடம், நேரம் மாலை 06.15 மணி. வெள்ளை அம்பாசடர் கார் TNA3157, 3ஆம் தெரு, A5 பவர் அபார்ட்மெண்ட், ஜக்கரியா காலனி, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரியின் வாசலில் நுழைந்து, உள்ளே வந்து நின்றது. ஒருவர் மட்டும் ஒட்டுனர் ஆசனத்தில் அமர்ந்தி ருக்க, நால்வர் இறங்கினர். அவர்கள் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் இருந் தன. இருவர் காருக்கு வெளியே காவலுக்கு நிற்பது போல் நின்றனர். மற்ற இருவர் A5 அபார்ட் மெண்டை நோக்கி மாடியேறினர்.

அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி ரவை மழையோடு பயங்கர வெடிச்சத்தமும் கேட்டது. கீழே நின்ற இருவரும் தங்கள் கைகளிலிருந்த துப்பாக் கிகளால் கண்டதையும் சுட்டனர். வெடி குண்டுக ளையும் பல திசைகளில் வீசினர். ஒரே சத்தம்... அலறல்... கலவரம்... களேபரம்... நால் வரும் அதே காரில் ஏறிப் பறந்துவிட்டனர். விளைவு?

மொத்தம் 14 இலங்கையர், 2 சென்னைவாசிகள் கொல்லப்பட்டனர். 22 பேர் துப்பாக்கி, வெடிகுண்டு களால் காயப்பட்டனர். 164 துப்பாக்கி ரவைகள் படுக்கையறை, ஹால், வீட்டிற்கு வெளியே, சாலைப் பகுதி, ஆகிய பகுதிகளிலிருந்து பொறுக் கியெடுக்கப்பட்டன. பல இடங்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்தன.

வெற்றிகரமாக இக் கொலைத் தாக்குதலை முடித்துக்கொண்ட குழு திருச்சி நோக்கி பயண மாயிற்று. வெள்ளைக் கார், திருச்சியில் வசித்த இலங்கை கடத்தல்காரனான சந்தான கிருஷ்ண னுக்குச் சொந்தமானது. 10 நாட்களுக்கு முன்பு அதில் சென்னை வந்த கொலைவெறிக் கூட்டத்தில் - சிவராஜன், டேவிட், டேனியல், திலீப், ரவி, சாந் தன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் வடபழனியில் உள்ள ஜெயபாலசிங்கம் வீட்டில் தங்கினர்.

சுமார் 09.30 மணியளவில், வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு அருகில் காரை நிறுத்தி, காரின் இலக்கத் தகடுகளை மாற்றிக்கொண்டிருந்த இவர் களை, வீதி சோதனையில் சென்ற ஓட்டேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிட்டிபாபுவும், காசிநாதனும் விசாரித்தபோது, அவர்களோடு தக ராறு செய்ததோடு, சிட்டிபாபுவையும் தாக்கினர். அவர் ஓட்டேரி காவல் நிலையத்தில், குற்றம் இலக்கம் 136/90 பிரிவு 341/342 ஐ யின் கீழ் புகார் பதிவு செய்திருந்தார்.

இது இப்படியிருக்க, EPRLF எனும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணியின் தலைவர் பத்ம நாபா மற்றும் 13 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானது பற்றி, அப்போதைய உள்துறைச் செயலர் திரு, ஆர்.நாகராஜன் அவர்கள், இக்கொ லையைச் செய்தது யார் எனக் கூறாமல், 'இந்தக் கொலைக்கும், பிரபாகரன் தலைமையிலான விடுத லைப்புலிகள் இயக்கத்திற் கும் தொடர்பு இல்லை' என்று சொற்ப அவகாசத்தில் அறிக்கை விட்டார்! இது பலரையும் வியப்படையச் செய்தது. எப்படி இவ்வளவு விரைவாக அரசு நற் சாட்சிப் பத்திரம் கொடுக்கிறது என்று சிந்தித்தனர்.

இரு நாட்களுக்குப் பின் பத்திரிகைகள், விடுத லைப்புலிகள் மாருதி காரில AK47 துப்பாக்கிக ளுடன் வந்ததாகவும், பின்பு அதே காரில் தஞ்சாவூரில் உள்ள பிள்ளையார் திடலுக்குச் சென்று விசைப் படகு மூலம் யாழ்ப்பாணம் தப்பிச் சென்ற தாகவும் செய்தி வெளியிட்டதானது முதல்வர் கருணாநிதிக்கு பெருத்த அவமானமாக இருந்தது.

ஏற்கனவே தமிழகத்தில் திமுக அரசின் ஆதரவால் ஈழப்போரா ளிகளின் துப்பாக்கிக் கலாச்சாரம் பெருத்துவிட்டது என்று பலரும் அலறிய நிலை இருந்தது. அதோடு, நாகராஜன் அவர்கள் கொலை யாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், அவர்களைத் தப்பிச் செல்ல விடுமாறும் காவல்து றைக்கு அறிவித்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு பதிவு செயப்பட்டது.

வெள்ளை அம்பாசிடர் கார் தனது பயணத்தைத் தொடர்ந்தது. இரவு 01.30 மணியளவில் அது விழுப்புரம் ரெயில்வே கடவையில் நின்றது. பின் னால் வந்த மாருதி வேன் TN 01 7969 ஐ நிறுத்தி, ஓட்டுநர் சிறிநிவாசனை வெள்ளைக் காருக்குள் இழுத்துச் சென்றனர். உள்ளே தோமஸ் சார்ல்ஸும், அவரது தாயாரும் இருந்தனர்.

அவர்களைப் பின் ஆசனத்தில் உட்கார வைத்து, துப்பாக்கி தாங்கிய இரு விடுதலைப் புலிகள் அருகில் அமர்ந்தனர். ஒரு போராளி வாகனத்தை ஓட்டினார். வெள்ளைக் கார் பின்தொடர்ந்தது. மூன்று கிலோ மீட்டர் தாண்டி யதும் அந்த மூவரையும் நடு வீதியில் இறக்கி விட்டுவிட்டு, காவல்துறையில் புகார் செய்யக்கூடாது எனப் பயமுறுத்தி அவர்கள் சென்றனர். சார்ல்ஸ் சென்னை நகரில் குற்றம் இலக்கம் 977/90 பிரிவு 341, 347, 392, 397, 506 (22), ஐ P3 பிரிவு 27 ஆயு தம் பாவித்தல் பேரில் குற்றப்பதிவு செய்தார்.

தங்களைக் கடத்திய ஒருவருக்கு இடது கண் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்தான் ஒற்றைக்கண் சிவராசன் என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அழைக்கப்பட்டு, பெங்களுரில் துப்பாக்கி மோதலில் இறந்தவர்.

திருச்சி சென்ற அவர்கள் வெள்ளைக் காரை ஒப்படைத்துவிட்டு, அன்று மாலையே தஞ்சை மாவ ட்டம் மல்லிப் பட்டினம் அருகிலுள்ள சுப்பையா பிள்ளை தோப்பிற்கு மாருதி வேனிலேயே சென்று, 21ஆம் திகதி பகல் 03.30 மணியளவில் யாழ்ப்பா ணத்திலிருந்து வந்த விடுதலைப் புலிகளின் விசை ப்படகில், 20 நிமிடங்களில் யாழ்ப்பாணக் கரையை அடைந்தார்கள்.

அது வரை தமிழகத்தில் எப்பகுதியிலும் வீதித் தடுப்போ, சோதனையோ போடவில்லை. பத்மநாபா உடலிலும், வீட்டிலும், வீதியிலும் சிந்திய துப்பாக்கி ரவைகளும், 21ஆம் திகதி மே மாதம் 1991இல் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ்காந்தியின் உடலில் இருந்த ரவைகளும் ஒரே இனம். ஆம்! இந்த இரு கொலைகளைச் சேர்ந்தவர்களும் ஒரே இனம்தான். பத்மநாபா கொலையில் சம்பந்தப்பட்ட ஆறு பேர் ராஜீவ் கொலையிலும் இருந்தனர்.

போராளி குழுக்களின் பிறப்பு

1970ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சிறிமா பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அலிகர் பல்கலைக் கழகப் பட்டதாரி அல்ஹாஜ் பதீயுத்தீன் மஹ்மூது அவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தரப்படுத்துதல் என்ற ஒரு முறையைக் கொண்டு வந்தார்.

அதாவது, பல்கலைக்கழக புகுமுக வகுப்பில், அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் பல்கலைக் கழக அனுமதியைக் கொடுத்தால், யாழ்ப்பாணத்து தமிழ் மாணவர்களே பெரும்பான்மையான இடங்க ளைப் பிடித்து விடுகின்றனர். அவர்கள் கற்ற குடும் பங்களிலிருந்து வருகின்றனர். நாட்டின் ஏனைய பகுதி கல்லாத குடும்பங்களிலிருந்து புதிய தலை முறைப் பட்டதாரிகள் உருவாகுவது சிரமமா கவே இருக்கிறது என்று கூறி, மற்ற மாவட்ட மாணவர்களுக்கான வெட் டுப்புள்ளியைக் (கட் ஆப்) குறைத்தார்.

இதனை, பெரும் பான்மையினருக்கான ஒருவிதமான இடஒது க்கீடு எனலாம். சிங்கள, முஸ்லிம், மற்ற பகுதி தமிழ் மாணவர்கள் இதனை வரவேற்றனர். யாழ்ப்பாணத்து மாண வர்கள் எதிர்த்தனர். அர சுக்கும், கல்வி அமைச்சருக்கும் எதிராக மாண வர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கல்வியமைச்சர் ஒரு முஸ்லிம் என்பதால், தமிழ் மாணவர்களுக்கி டையில் முஸ்லிம் எதிர்ப்பு - வெறுப்புணர்வு உருவா யிற்று.

‘தமிழ் மாணவர் பேரவை’ என்ற எதிர்ப்பு அமைப்பு சத்தியசீலன் என்ற மாணவர் தலை மையில் உருவாயிற்று. நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், பொன்னுதுரை சிவகு மாரன், பத்மநாபா (ஆம்! அவரேதான் கோடம் பாக்கத்தில் கொல்லப்பட்டவர்), 18 வயது வேலுப்பிள்ளை பிரபாகரன் (ஆம்! அவரேதான் கோடம்பாக்கத்தில் பத்மநாபாவைக் கொன்ற இயக்கத்தின் தலைவர்) ஆகியோர் இருந்தனர். ஈழத்துப் போராளி குழுக்களின் நதிமூலம் இங்குதான் உருவாகிறது.

1972ஆம் ஆண்டு செட்டி தம்பலசிங்கம் என்பவர் பிரபாகரனோடு சேர்ந்து, Tamil New Tigers- புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை உருவாக்கி, அதன் தலைவரானார். அந்த நாட் களில் நடராஜ தங்கதுரை, குட்டிமணி என்ற செல்வராஜ யோகசந்திரன் ஆகியோர், இந்த TNT அமைப்பினரோடு ஆயுதப் போராட்டம் பற்றி விவாதிக்கவும், அவ்வழியில் பயணிக்கவும் துவங்கினர்.

1971ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக JVP எனும் இடதுசாரி சிங்கள இளைஞர் அமைப்பான மக் கள் விடுதலை முன்னணி நடத்தியது போன்ற ஆயுதக் கிளர்ச்சியை நாமும் நடத்த வேண்டும் என்பது அவர் களது குறிக்கோள்.

அதன் துவக்கமாக அரசு ஆதரவு தமிழ் அரசியலாளர்களைத் தாக்கவும், கொல்லவும், காவல் துறை யினரையும், அரசு அதிகாரிகளையும் வெடிகுண்டு மூலம் தீர்த்துக்கட்டவும் தீர்மானித்தனர் - துணிந் தனர் - இறங்கினர். யாழ்ப் பாண மேயர் அல்பிரட் துரையப்பா. அவரைக் கொ ல்லும் முயற்சி துவங்கியது.

ஜனவரி 3-9,1974இல், யாழ்ப்பாணத்தில் குழப்பத் தில் முடிந்த மூன்றாவது உலக தமிழ் ஆராய்சி மாநாடு இந்த இளைஞர் களை ஆத்திரமடையச் செய்தது. மேயர் அல்பிரட் துரையப்பா தான் தமிழ் மாநாட்டில் நடந்த அனர்த் தங்களுக்குக் காரணம் என்று கூறி, அவரது வீட்டின் மீதும், காரின் மீதும் வெடி குண்டுகளை வீசினர். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

1974ஆம் வருடம் ஜ_ன் 05ஆம் திகதி காவல்துறை சிவகுமாரனைப் பிடிக்கும் தருவாயில் அவர் சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்டார். முதன் முத லாக சயனைடு அருந்தி எதிரியிடம் பிடிபடாது உயிர் நீக்கும் கலாச்சாரம் உருவா யிற்று. இப்போது புதிய தமிழ் புலிகளின் தலைவராக பிரபாகரன் பொறுப் பேற்றார்.

27 ஜ_லை 1975 அன்று மேயர் துரையப்பா - பொன் னாலையிலுள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தபோது, நேருக்கு நேராக நின்று, சிறிய கைத்துப்பாக்கியால் பிரபாகரன் அவரைக் கொ ன்றார். பிரபாகரன் செய்த முதல் கொலை இதுவே. வழிபாட்டுத் தலங்களிலும் கொலை செய்யலாம் என்று இதன் மூலம் அவர் வழி காட்டினார்.

1976ஆம் ஆண்டு மே 05ஆம் திகதி பிரபாகரன் தனது அமைப்பிற்கு, (LTTE) தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்தார்.

இந்தியா - இந்திரா தந்த ஆயுதப் பயிற்சி

இக்காலத்தில், இந்தியா வில் பதவியில் இருந்த இந் திரா காந்தி அம்மையார், சிறிமா பண்டார நாயக்கா வோடு நல்ல நட்புறவு கொ ண்டிருந்தார். நெஹ்ருவும், திரு. சாலமன் பண்டாரநா யக்காவும் லண்டன் ஒக்ஸ் போர்ட் பல்கலைக் கழகத் தில் ஒன்றாகப் படித்த நண் பர்கள். அந்த சினேகம் இரு குடும்பத்தாரிடமும் தொடர்ந் தது.

அதன் விளைவுதான் 1974 இல் குடியுரிமை இல்லாத 5 இலட்சம் இந்திய தோட்டத் தொழிலாளர்கள் அனைவ ரையும் இந்திய ஏற்க வேண் டுமென இலங்கை முரண்டு பிடித்தபோது, பாதித் தொகையை ஏற்பதாகக் கூறி, அத்தோடு கச்சத்தீவையும் அவர்களுக்குக் கொடுத்தார்.

1977 மார்ச்சில் இந்திரா அரசு தோற்றது. இலங்கை யில் 1977 ஜ_லையில் சிறிமாவோ அரசு தோற்று, ஜெ.ஆர். ஜெயவர்த்தனவின் அரசு வந்தது.1980இல் இந்திரா மீண்டும் பதவிக்கு வந்த பின், இலங்கை - இந்திய உறவு பாதித்தது. ஜெயவர்த்தனவை மேற்குல கின் கைப்பாவை என்று ரஷ்யா சார்பு இந்திரா வர் ணித்தார். அவருக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார்.

பாலஸ்தீன போராளிகள் தீவிரமாக செயல்பட்ட காலம் அது. வட இலங்கை யிலும் பல தமிழ்ப் போராளிகள் குழுக்கள் உருவாகி இருந்தன.

அவர்கள் பாலஸ் தீன குழுக்களிடம் ஆயுதப் பயிற்சி பெற ஆரம்பித்தனர்.

இலங்கை அரசுக்கு எதி ராக தமிழ் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியை இந்திரா தரலானார். முதல் குழு உத்தரகண்டின் சக்ரதா இராணுவ முகாமில் பயிற்சி பெற்றது. இரண் டாவது குழுவில் விடுதலைப் புலிகளின் உளவுத் தலைவர் சண்முகலிங்கம் சிவ சங்கர் என்ற பொட்டு அம்மான் ஹிமாச்சல் பிரதேசத்தில் பயிற்சி பெற்றார். இந்த இரண்டு இடங்களுக்கும் பிரபாகரன் நேரில் சென்று பயிற்சியை அவதானி த்தார்.

பின்பு பயிற்சி முகாம்கள் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டு, விடுதலைப்புலிகள் உட்பட பல போராளிகள் எட்டு பிரிவுகளாகப் பயிற்சி பெற்றனர்.

முன்னாள் இராணுவ அதிகாரிகளே பயிற்சியாளர்கள்.

துப்பாக்கி சுடுவது, நீச்சல், படகு ஓட்டுதல், இயந்திர துப்பாக்கி பாவித்தல், வாக னங்களை ஓட்டுதல், கெரில்லா யுத்த முறைகள், உடற்பயிற்சி அனைத்தையும் பயிற்றுவித்தனர்.

இன்றைய ஈழ ஆதரவு தமிழ்நாட்டு அரசி யல்வாதிகள், காங்கிரஸ் கட்சி ஈழ மக்களுக்கு துரோகம் செய்தது என்று ஒப்பாரி வைக்கும் வேளையில், இலங்கையிலுள்ள தீவிர சிங்கள ஈர்ப்பு அரசியல்வாதிகள், முப்பதாண்டு தமிழ் தீவிரவாதத்திற்கு, இலங்கையில் விடுதலைப்பு லிகளால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், சொத்து இழப்பு என்பனவற்றுக்கு இந்தியாதான் காரணகர்த்தா... இந்தியா துரோகி... ஆகவே இந்தியாவிடம் நட்டஈடு கேட்க வேண்டுமென்று கனல் கக்குகிறார்கள். மத்தளத்திற்கு இருபுறமும் இடி.

(தொடரும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com