Contact us at: sooddram@gmail.com

 

மைண்ட் வாய்ஸோடு மைக் பிடித்த வடிவேலு!

கடந்த மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வனவாசம் அனுபவித்த வடிவேலு மீண்டும் 'தெனாலிராமன்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி. வடிவேலு படமே வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலைப் பார்த்த சினிமா புள்ளிகளை எல்லாம் கடந்த 1-ம் தேதி 'தெனாலிராமன்இசையை வெளியிட்டு ஏப்ரல் ஃபூல் ஆக்கினார் வடிவேலு.

வழக்கமாக இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவுக்கு ஹீரோக்கள்தான் லேட்டாக வந்து நிகழ்ச்சி நடத்துபவர்களைக் கடுப்பேற்றுவார்கள். இந்த விழாவில் விதிவிலக்காக கதாநாயகி மீனாட்சி தீக்ஷிதா லேட்டாக வந்து நிறைய பேருக்கு பீப்பி ஊதும் ரேஞ்சுக்கு பிபி எகிறவைத்தார். இனி ஆடியோ ஃபங்ஷன் ஸ்டார்ட்...

''ஏன் இப்படி... உனக்கு இது தேவையா பேசாம காமெடி பண்ணிட்டு இருக்க வேண்டியது தானே...’ னு நீங்க மனசுல நினைக்கறது என் காதுல நல்லா கேட்குது'' என்று மைன்ட் வாய்ஸ் பீடிகையோடு மைக் பிடித்தார், வடிவேலு.

 ''உண்மையிலேயே மனோபாலா சொன்னது மாதிரி நான் ரெண்டு வருஷம் சினிமாவிலே இருந்து ஓய்வெடுத்தது சந்தோஷமாத்தான் இருந்துச்சு. என்னென்னமோ நடந்து போச்சு. காமெடித்தானே செஞ்சேன்... அதையெல்லாம் காமெடியா எடுத்துக்க வேண்டியதுதான். நான் முன்னாடி செய்த காமெடியத்தான் இப்போ எல்லோரும் வெளியில செஞ்சிகிட்டு இருக்காங்க. நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன்.

தமிழ்நாட்ல இருக்குற எல்லா வீட்டு ரேஷன் கார்டுல என் பேர் இல்லை. மத்தபடி அவங்க வீட்டுல நானும் ஒரு குடும்ப உறுப்பினர்தான். தெலுங்கு, மலையாள சினிமாவுல நடிக்கக் கூப்பிட்டாங்க. 'தமிழ்நாட்ல வடிவேலுவுக்கு சான்ஸ் இல்லை. அதான் வெளிமாநிலத்துக்கு நடிக்க ஓடிப் போயிட்டான்...’னு கிளப்பிவிடுவாங்க. அதனால போகலை. அப்படியும்மீறி சிலபேர் தமிழ் படத்துல நடிக்க அழைச்சாங்க. அப்படி ஏதாவது நடந்துடக் கூடாதுனு சிலபேர் வாடகைக்கு சைக்கிள் எடுத்துட்டுப் போயி தடுப்புக் கட்டை போட்டாய்ங்க.

அதுக்கப்புறம் கோடம்பாக்கத்துலயே நிறையபேர் சின்னச்சின்ன வேஷத்துல நடிக்கறதுக்குக் கூப்பிட்டாங்க... வேண்டாம்னு மறுத்திட்டேன். ரெண்டு வருஷம் இடைவெளி விட்டாச்சு. இனிமே மறுபடி நடிக்கவரும்போது 'கிங்’கா என்ட்ரி கொடுக்கணும்னு நினைச்சேன். அப்போதான் யுவராஜ் கதை சொல்ல வந்தார். 'முதல்ல நான் நடிக்கறதுக்கு ஒ.கே-வானு தயாரிப்பாளர் கல்பாத்தி சார்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டு வா’னு சொன்னேன். 'அவருதான் அனுப்பி வெச்சாருனு சொன்னார். அப்படியே ஷாக்காயிட்டேன். இப்போ சொல்றேன்... 'தெனாலிராமன்படத்துல நடிக்கறதுக்கு ஒரு பைசாகூட சம்பளம் வேண்டாம். நிறைய பேர் கல்பாத்தி சாரை தேடிப்போய் 'வடிவேலு நடிச்சா உங்க கதி அதோ கதிதான் கதறினாங்க.’

'அதுசரி வடிவேலு என்ன குத்தம் செஞ்சார்என்று அவங்களிடம் திருப்பி கேட்டு இருக்கார். அந்த மனசு யாருக்குங்க வரும்? என்னைநம்பி கோடிக்கணக்கா செலவு செஞ்சு பிரம்மாண்டமா செட் போட்டிருக்கார். படத்துல என்னோட நடிக்கறதுக்கு ஹீரோயினை தேடும்போதுதான் பிரச்னை உண்டாச்சு. ஒவ்வொரு ஹீரோயினா செலக்ட் செய்து ஃப்ளைட்ல டிக்கெட் போட்டு அழைச்சு வந்தாங்க. இங்கே இருக்குறவங்க மெசேஜ் கொடுத்து திரும்பி ஊருக்கு ஏகப்பட்ட பொண்ணுங்கள அனுப்பிக்கிட்டே இருந்தாங்க. கடைசியா இதோ இந்த பொண்ணு மீனாட்சி வந்துச்சு. இப்போதான் ஒரிஜினல் வடிவேலுவைப் பார்க்குது. எல்லாரும் நல்லா பாருங்க. என்னை அந்தப் பொண்ணோட சேர்த்து பார்த்தா தக்காளி மேல தார் ஊத்தின மாதிரியில்ல இருக்கு.. 'தெனாலிராமன்படம் பிரமாதமா வந்திருக்கு. கிணறு வெட்ட வெட்ட ஊத்துல இருந்து குபுகுபுன்னு தண்ணி  வர்ற மாதிரி  புதுசுபுதுசா காமெடி பொத்துக்கிட்டு வந்திருக்கு'' என்று உற்சாகமாகப் பேசி முடித்தார்.

வடிவேலுவுக்கு
சினிமாவில் இந்த மூன்று வருட இடைவெளி ஏன்...? சின்ன ப்ளாஷ் பேக்!

'எந்தக் கப்பலுக்கு கேப்டன்?'

விஜயகாந்த் நடித்த 'தர்மபுரிபடத்தில் வடிவேலு நடிக்க ஆசைப்பட்டார் இயக்குனர் பேரரசு. படத்தில் விஜயகாந்தை அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு வசனத்தை எழுதி வடிவேலுவை பேசச் சொன்னார். கடுப்பான வடிவேலு மறுத்துவிட்டார். அன்றுமுதல் ஆரம்பித்தது மதுரை மண்ணின் மைந்தர்களுக்குள் பனிப்போர். வடிவேலு ஆபீஸ் அருகில் வசித்துவந்த விஜயகாந்த் உறவினர் ஒருவர் திடீரென்று இறந்துவிட, தே.மு.தி.க தொண்டர்கள் கூட்டம் வடிவேலு ஆபீஸை ஆக்ரமித்தது. அப்போது வெளியில் வந்த வடிவேலு விசாரிக்க 'நாங்க கேப்டன் ஆளுங்க...’ என்று சொல்ல... 'அப்படியா எந்தக் கப்பலுக்கு கேப்டன்என்று வடிவேலு எகத்தாளமாய் கேட்க நிலவரம் கலவரமானது.

தி.மு.க ஆதரவு பிரசாரம்

சாலிக்கிராமத்தில் அடிக்கடி வடிவேலு வீடு தாக்கப்பட, பாதுகாப்புக்காக அடைக்கலம்தேடி அலைந்தார்.
அப்போது சட்டமன்ற தேர்தலும் வர, வடிவேலுவை தி.மு.க. பக்கம் அலேக்காக லபக்கிக் கொண்டார் அழகிரி. 'விஜயகாந்தை மட்டும்தாம் தாக்கி பேசுவேன்...’ என்கிற நிபந்தனையோடு தி.மு.க ஆதரவு பிரச்சாரத்தில் இறங்கினார். 'மானைப்போல் மானம் என்றாய்... நடையில் மதயானை நீயே என்றாய்... வேங்கைப்போல் வீரம் என்றாய்... அறிவில் உயர்வாகச் சொல்லிக் கொண்டாய்... மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்...’ என்று எம்.ஜி.ஆர் பாடலைப்பாடி விஜயகாந்தை கிண்டலடித்தார்.

கண்டு கொள்ளாத தி.மு.க.

சட்டமன்ற தேர்தல் முடிவில் ஜெ முதல்வராக, விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக கப்சிப் ஆனார் வடிவேலு. தமிழ்சினிமாவில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய போனவர்கள் மறைமுகமாக மிரட்டப்பட்டனர். எந்த தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாரோ அந்தக் கட்சியே அவரை உதாசீனப்படுத்தியது உச்சக்கட்ட கொடுமை. அதாவது ஒருபக்கம் ஸ்டாலின் மகன் உதயநிதி, ஏகப்பட்ட படங்களைத் தயாரித்தும் அந்தப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை வடிவேலுவுக்குத் தரவில்லை. அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் படங்களிலும், மு.க.தமிழரசு மகன் அருள்நிதி தயாரித்து நடிக்கும் படங்களிலும் வடிவேலுவுக்கு நோ சான்ஸ். நொந்து நூடுல்ஸானர். ஆனால் அப்படி நடித்திருந்தால் அது அவருக்கு மேலும் தி.மு.க-காரன் முத்திரைதான் விழுந்திருக்கும் என்பது வேறு விஷயம்.

போயஸ்
கார்டன் போட்ட கறார் உத்தரவு!

கடந்த 3 வருடங்களாக தமிழ் சினிமா, கைப்பிள்ளையைக் கண்டு கொள்ளவில்லை. சென்னைக்கும், மதுரைக்கும் விமானத்தில் சீசன் டிக்கெட் கொண்டு அடிக்கடி பறந்தார். தினசரி ரெமி மார்ட்டின் ப்ளஸ் எம்.ஜி.ஆர் பாடல்களோடு கழித்தார். ஜெயலலிதா அரசு சினிமா நூற்றாண்டு விழா நடத்தியபோது அதில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தை போயஸ் தோட்டத்துக்கு தூது விட்டார் வடிவேலு. கடுப்பான ஜெயலலிதா, வடிவேலுவுக்கு உடனடியாக நோ சொன்னர். அதுமட்டுமல்ல சினிமாவில் பெரிய லிஸ்ட் கொடுத்து இவர்கள் எல்லாம் விழாவுக்கு வரவேக்கூடாது என்று போயஸ் கார்டன் கறார் உத்தரவு போட்டது.

கிருஷ்ண
தேவராயர் பிரச்னை...

இயக்குனர் சிம்புதேவன் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசிஇரண்டாம் பாகம் எடுக்க அணுகினார். 'நோசொல்லி அணுப்பியவர் இப்போது அதேமாதிரி சரித்திரப் படமான 'தெனாலிராமன்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கிருஷ்ண தேவராயர் வேஷத்தில் வடிவேலு நடிப்பதை சில தெலுங்குகாரர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். சமீபத்தில் ஒரு நிருபர் 'நீங்கள் கிருஷ்ண தேவராயர் வேஷத்தில் நடிக்கிறார்களா?’ என்று கேள்வி கேட்க 'ஒரு மன்னன் வேஷத்தில் நடிக்கிறேன் அவ்வளவுதான்...’ என்று சாமார்த்தியமாக பதில் சொல்லி இருக்கிறார் வடிவேலு.

சூடுகண்ட வடிவேலு பூனை...

தெனாலிராமன் கதை ஒன்று உண்டு ஒருமுறை தெனாலி, தனது வீட்டுக்குவந்த பூனைக்குச் சுடச்சுட பால் கொண்டுவந்து வைத்தார்.
ஆவலோடு அருந்திய பூனை சூடு கண்டு பதறி ஓடியது. அதன்பின் ஆறிய பாலை கண்டால்கூட பூனை அலறித் துடித்து ஒடியது. இப்போது வடிவேலு நிலைமையும் அதுதான். ஏற்கெனவே அரசியலில் சூடு கண்டுவிட்ட வடிவேலு, இப்போது சாதாரணமாக அரசியல்வாதியை நேரில் பார்த்தால்கூட அலறிக்கொண்டு அந்த இடத்தை விட்டே எஸ்கேப் ஆகிவிடுகிறார்!

(திருவாரூர் குணா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com