Contact us at: sooddram@gmail.com

 

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? (பாகம் 2)

1983 இனக்கலவரம் - கொழும்பு எரிந்தது

இக்காலகட்டத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் ஆதரவு இருந்ததால், ஈழப் போராளிகள் தமிழகத்தில் சாதாரணமாக உலாவினர். அனைத்து இயக்கங்களும் படிப்படியாக சென்னையில் அலுவலகங்களைத் திறந்தனர். இதில் விடுதலைப்புலிகள், இலக்கம் 27, கற்பகம் அவனியு, மந்தவெளி, ராஜ அண்ணாமலைபுரம், சென்னை என்ற இடத்தில் இருந்தனர். அவர்களின் தொலைபேசி இலக்கம் 847687 என்பதாகும். மே 25,1982ஆம் ஆண்டு சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனும், PLOTE - 'புளொட்' எனும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் தலைவரான உமா மகேஷ்வரனும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டபோது, பிரபாகரன் கைது செய்யப்பட்டார். இலங்கை அரசு பிரபாகரன் தலைக்கு 5 இலட்சம் அறிவித்து அவரைத் தேடியது.

நீதிமன்றம் அவரை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என தமிழகத்தில் பலத்த கூக்குரல் எழுந்தது. கலைஞர் கருணாநிதியும் முதல்வர் எம். ஜீ.ஆரும் அதையே விரும்பினார்கள். இவ்வாறு, ஈழப் போராளிகளுக்கான ஆதரவு வட்டம் ஏற்கனவே இருந்தது. அது 1983 கலவரத்துக்குப் பின் தீவிரமடைந்தது.

ஜ_லை 23ஆம் திகதி 1983இல், 13 இராணுவ வீரர்கள் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலால், திருநெல்வேலி - யாழ்ப்பாணத்தில் உயிரிழந்தனர். இது கொழும்பிலும், ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தமிழர்கள் மீதான கட்டுக்கடங்காத வன்முறையை அவிழ்த்துவிட்டது. உயிர்ச்சேதம், உடைமைச் சேதம் பெரிய அளவில் இருந்தன.

பாதிக்கப்பட்ட மக்கள் கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு தொகையானோர் தமிழகத்திற்கு விமானம் மூலமும், படகுகளிலும் சென்றனர். பல அரசியல் தலைவர்களும் சென்றனர்.

ஆதரவு அலை அளவிட முடியாத அளவில் இருந்தது. கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில், பல தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுள் பிரபலமானவர்கள் குட்டிமணியும், தங்கராசாவும். இந்த இருவர் மீதான அனுதாப அலை தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. குட்டிமணி டீ ஸ்டால், குட்டிமணி முடி திருத்தகம் என்று சில தொழிலகங்கள் பெயர் மாற்றம் பெற்றன. புதிதாகவும் தோன்றின. பிரபாகரன் பிரபலம் இல்லாத காலம் அது.

கலவரத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசு யாழ்ப்பாண வளைகுடாவில் பேராளிகளின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியதும், அத்தனை பேராளித் தலைவர்களும், முக்கிய உறுப்பினர்களும் தமழிகத்தின் பல பகுதிகளிலும் குடிபுகுந்தனர். பிரபாகரன் மதுரையின் மாசி வீதிகளில் நடமாடித் திரிந்தார். தமிழக அரசியல் தலைவர்களான முதல்வர் எம்.ஜீ.ஆரும், கருணாநிதியும் இன கலவரத்திற்கு எதிராகவும் போராளிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர்.

எம்.ஜீ.ஆரின் பொருளாதார உதவி

1984இல் எம்.ஜீ.ஆரும், கலைஞர் கருணாநிதியும் போராளிக் குழுக்களைத் தங்கள் செல்வாக்கிற்கு உட்பட்ட மாதிரி ஓர் அணியில் திரட்ட முயன்று அழைப்பு விடுத்தனர். பிரபாகரன் இரு தலைவர்களின் கீழும் வர விரும்பவில்லை. ஆனால், கருணாநிதி அழைத்த கூட்டத்திற்கு வேறு மூன்று விடுதலைப் புலிகள் சென்ற படம் பத்திரிகையில் வெளியானதைக் கண்ட எம்.ஜீ.ஆர். தன் கூட்டத்தை சலிப்புடன் இரத்து செய்தார். சென்னையிலிருந்த ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தை தனது இல்லத்தில் சந்திக்கும்படி கேட்டார். பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம், சங்கர் ஆகியோர் முதல் நாள் அவரைச் சந்தித்தனர். அடுத்த நாள் மீண்டும் பிரபாகரனோடு அவர்கள் எம்.ஜீ.ஆரைச் சந்தித்தனர். தங்கள் போராட்டத்தைப் பற்றி விவரித்து, தங்களுக்கு பொருளாதார உதவி செய்யும்படி பாலசிங்கம் கேட்க, எம்.ஜீ.ஆர். உடனேயே "எவ்வளவு?" என்றார்.

சங்கர் இரு விரல்களைக் காட்டி மெதுவாக இரண்டு என்று முனங்கினார். "நாளைக்கு வாருங்கள்" என்றார் எம்.ஜீ.ஆர். "அடடா... உடனே சரி சொல்லிவிட்டாரே...? கொஞ்சம் கூடுதலாகக் கேட்டிருக்கலாமோ...?" என வருந்தினர்.

அடுத்த நாள் இரவு எம்.ஜீ.ஆர். வீட்டிற்குச் சென்றபோது அவர் தனது உதவியாளருக்கு வீட்டின் கீழ்ப்பகுதிக்கு அழைத்துச் சென்று 10 பெட்டிகளை அவர்களிடம் கொடுக்கும்படி மலையாளத்தில் பணித்தார். கீழே சென்ற குழு வியப்பில் மூர்ச்சையடையாத குறை. கேட்டது என்னவோ இரண்டு இலட்சம். தந்ததோ இரண்டு கோடி. தடுமாறிய பாலசிங்கம், "இவ்வளவு பணத்தை எடுத்துச் செல்வது சிரமம்... காவல்துறை பிரச்சினை வரலாம்" என்று கூற, காவல்துறை துணையோடு அவர்களை எம். ஜீ.ஆர். மாம்பலத்திற்கு அனுப்பி வைத்தார். பின்பு ஒரு கட்டத்தில் நான்கு கோடி ரூபாய் கொடுத்தார். இதனைப் பிரபாகரன் கூறுகையில், "இந்தப் பண உதவியும், எம்.ஜீ.ஆரின் நல்லாசியும்தான் எங்களை முதன்மைப் போராளிக் குழுவாக உருவாக்கியது" என்றார்.

கருணாநிதியுடன் உறவு

எம்.ஜீ.ஆர். இறக்கும் வரை அவர் கூடவே இருந்த விடுதலைப் புலிகள், கருணாநிதி மீண்டும் அரசுப் பொறுப்பை ஏற்றதும் அவரோடு ஒட்டினர். அவரும் அதனைப் பெரிதும் விரும்பினார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் பெரிய அளவில் வளர்ந்துவிட்டனர். பல தாக்குதல் களில் ஈடுபட்டனர். இராணுவத்தின ரோடு நேரடியாக மோதினர். பல சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளைக் கொன்றனர். அப்பாவி சிங்கள, முஸ்லிம் பொதுமக்களையும் தாக்கினர். பௌத்த விகாரைக ளையும் முஸ்லிம் மஸ்ஜீத்களையும் தாக்கினர். ஒரு பயங்கரவாதக் குழு என்ற முத்திரை அவர்களுக்கு குத்தப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் ஈழப் போராளி குழுக்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது. அவர்கள் தமிழக மக்களுக்கு எதிராக பல சிறு சிறு குற்றங்களில் ஈடுபடலாயினர். அவர்களது அடாவடித்தனங்களை தி.மு.க. அரசு கண்டும் காணாதது போல் கண்மூடிக் கொண்டது. சில வேளைகளில் அவர்களின் வழக்கறிஞர்கள் போல் அதனை நியா யப்படுத்தவும் செய்தது. கருணாநிதி விடுதலைப்புலிகளை தனது தத்துப்பிள்ளைகளாகவே எடுத்துக்கொண்டார்.

வேடிக்கையான ஒரு செய்தியைச் சொல்கிறேன்...தமிழக கடலோர மாவட்டங்களின் எஜமான்கள் போல் விடுதலைப்புலிகள் செயல்பட்டனர். பாக்கு நீரிணைப்பகுதி அவர்களுக்கு எழுதிக் கொடுத்தது போல் இருந்தது. சண்டைக்குத் தேவையான பொருட்கள், பெட்ரோல், மருந்து, உணவு போன்றவை திருச்சியில் கொள்முதல் செய்யப்பட்டு, தஞ்சை மாவட்டங்களின் துறைகள் மூலம் யாழ்ப்பாணம் கொண்டு செல்வர். 1990இல் இரண்டு மாருதி ஜீப்புக்களையும் கடத்திச் சென்றனர். அக்காலத்தில் இலங்கை மீனவர்கள் அப்பகுதியில் கடலுக்குச் செல்வதில்லை. தமிழக மீனவர்கள் விடுதலைப்புலிகளின் கடத்தல்களுக்கு இடைஞ்சலாக இருந்தனர். ஆகவே தமிழக மீனவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். அவர்களை விரட்டினர் - சிறைப்பிடித்து பின்பு எச்சரித்து அனுப்பினர். தொழில் பாதிக்கப்பட்ட தமழிக மீனவர்கள் அரசிடம் முறையிட்டனர். பலனில்லை. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்டுகள் அரசைச் சாடினர். சட்டசபைகளில் பேசினர். "விடுதலைப் புலிகள் அரசின் செல்லப்பிள்ளைகளாக இருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டு, விளக்கும்படி பணித்தனர்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டபிள்யு.ஆர்.வரதராஜன் சட்டசபையில் காரசாரமாகப் பேசினார். நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடமும் முறைப்பாடு சென்றது. 08 மே 1990இல், முதல்வர் கருணாநிதி சட்டசபையில் ஆற்றிய உரையில், போராளிகளிடம் பிரிவை உண்டாக்கிய RAW என்ற அரசின் உளவுத்துறை - மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் சிண்டு பிடிக்கும் வேலையாக இதுபோன்ற பொய்ச் செய்திகளைத் தருகிறது என்றார். பிரதமருக்கும் எழுதினார்.

பிரதமர் வி.பி.சிங் அவர்கள், மே 11இல் தனது கடிதத்தில் முதல்வரின் இக்கூற்றை மறுத்தார். நாடாளுமன்றத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் இதுபற்றி வினா தொடுத்தனர். சூடு பொறுக்க முடியாத கருணாநிதி, காவல்துறை அறிக்கையின் பேரில், வெளியுலக த்திற்குத் தெரிவது போல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சில நடவடிக கைகள் எடுத்தது பிரபாகரனைக் கவலையடையச் செய்தது.

தங்கள் வழக்கமான செயல்பாடுகளுக்குத் தடை இருக்காது என்ற உறுதிமொழியை முதல்வரிடம் பெறும்படி, பேபி சுப்பிரமணியத்திற்கு அவர் பணிக்க, அவர் முதல்வரைச் சந்தித்தார். முதல்வர் தான் நெடுமாறன், நகைமுகன் போன்றவர்களின் பிரச்சார செயல்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானப்படுத்தினார். இந் உறவு நீண்ட புராணம்.

மேலும், உளவுத்துறை இணையறி க்கை ஆ-63 யின் படி திரு. வைகோ அவர்களுடன் முதல்வரைச் சந்தித்த சாந்தன், காயப்பட்டு சிகிச்சைக்காக தமிழகம் வரும் தங்கள் போராளிகளுக்கு இடை யூறு இல்லாது இருக்கும்படி - உதவும்படி உத்தரவாதம் கேட்டார்.

ஜ_ன் 13-14 திகதிகளில் திருச்சியின் பல இடங்களில் விடுதலைப்புலிகளை காவல்துறை கைது செய்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், வைகோவிற்கு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும்படி டிக்சனிடம் சொல்ல, அவர் வைகோவிடம் தெரிவித்தார். சாந்தனும் வைகோவிடம் இதுபற்றிப் பேசினார். ஜுன் 17ஆம் திகதி டெல்லிக்குப் பயணமாகியிருந்த கருணாநிதி, திருச்சியில் நடந்தது, தான் அறியாது நடந்தவை என்றும், தனது வருதத்தை பிரபாகரனுக்குத் தெரிவிக்கும்படியும் வைகோவிடம் கூறினார். அது டிக்சனுக்குத் தெரி விக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் வி.பி.சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரமோ, பயிற்சி முகாமோ இல்லை என்றும், விடுதலைப் புலிகள் சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்படவில்லை என்றும் கூறினர். அக்கூட்டத்தில் திரு. வாஜ் பாய் அவர்களும் இருந்தார்.

விடுதலைப் புலிகள் தினசரி சட்டம் ஒழுங்கை மீறிய சம்பவங்கள் நிறைய உண்டு. ஒன்றை இங்கு கூறலாம். ஜ_ன் 03ஆம் திகதி 199இல் தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் மூன்று படகுகள், ஆயுதங்கள் - வெடி பொருட்கள் ஏற்றி கடலில் பயணித்த வேளையில், கடலோரக் காவல்படை அவர்களைத் தடுத்தது. சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். புலிகள் சீறினார்கள். துப்பாக்கியால் துவம்சம் செய்வோம் எனப் பயமுறுத்தினர். ஆயுதமில்லாத சுங்க அதிகாரிகள் பயந்தனர். புலிகள் வென்றனர். வெற்றிப்பயணம் தொடர்ந்தது.

அடுத்த இரண்டு நாட்களில் - அதாவது கருணாநிதி டெல்லியில் இருக்கையில், ஜ_ன் 19ஆம் திகதி வெள்ளை அம்பாசிடர் வTMA 3157இல், 3ஆம் தெரு, A5 பவர் அபார்ட்மெண்ட், ஜக்கரியா காலனி, கோடம்பாக்கத்தில் நுழைந்த விடுதலைப் புலிகள், பத்மநாபா என்ற EPRLF போராளிக் குழுவின் தலைவனையும், 13 பேரையும் சுட்டுக் கொன்று, தப்பிச் சென்றனர்.

ஜுலை 22ஆம் திகதி சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது திரு. வாஜ் பாய் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "முதல்வர், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள்... ஆனால் அவர்களிடம் ஆயுதம் இல்லை என்று கூறினார்" என்று வருத்தத்துடன் சொன்னார்.

கலைஞர் அதனை மறுத்து, "ஆயுததாரிகள் இல்லை என்று நான் சொல்லவில்லை... ஒரு சில ஆயுததாரிகள் உண்டு என்றும், பயிற்சி முகாம் இல்லை என்றும் சொன்னேன்... ஆனால் பத்மநாபாவின் கொலை நடந்துவிட்டது" என்றார். திமுக அரசு காங்கிரஸ், அதிமுக வற்புறுத்தலால் ஜனவரி 30ஆம் திகதி 1991இல் சந்திரசேகர் அரசால் கலைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இந்த அளவிற்குச் செல்வார்கள் என்று கலைஞர் எதிர்பார்க்கவில்லை. அதன் விளைவு, தன்னை எப்படிப் பாதிக்கும் என்று அவர் அறியாதவர் அல்ல.

பிரபாகரனுக்கும் அது புரியாததும் அல்ல. ஆனால், ஒரு சில மாதங்களில் இந்த கொந்தளிப்பு அடங்கிவிடும் என்று நினைத்து அவர் செயல்பட்டார். வெற்றிகரமாக இக்கொலையை முடித்த அவர், அடுத்த கட்டத்திற்கான காய்களை நகர்த்தத் துவங்கினார்.

ராஜீவ் காந்தியின் கொலையைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட nஜயின் கமி'ன், பத்மநாபா கொலையில் சம்பந்தப்பட்டவர்களே அங்கும் இருந்ததால், பத்மநாபா கொலை விபரங்களையும் விசாரித்தது. அதன்படி, 17.01.1997ல் அக்கமிஷன் முன் ஆஜரான கருணாநிதி, "மற்ற அரசியல் கட்சிகள் விடுதலைப் புலிகளை ஆதரித்தது போல்தான் நானும் ஆதரித்தேன்... ஆனால் பத்மநாபா கொலைக்குப் பின் எனது ஆதரவை நான் விலக்கிக் கொண்டேன்..." என்றார்.

நம்புகிறீர்களா???

(அடுத்து: ராஜீவ் காந்தியைக் கொன்றது எப்படி? ஏன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com