Contact us at: sooddram@gmail.com

 

இளவயது கர்ப்பம் தற்போது சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது

கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை குடும்பத் திட்டச் சங்கம் விழிப்புணர்வு நடவடிக்கை

குடும்ப சுகாதாரப் பணியகத்தின் ஆய்வின்படி இலங்கையில் இளம் வயதில் கர்ப்பம் தரிக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு இளவயதில் திருமணங்கள் செய்வதும் ஒரு காரணமாகும். இளவயது கர்ப்பங்கள் அதிகமாக மட்டக்களப்பிலே காணப்படுகின்றன. கடந்த கால போர்ச்சூழலால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும். அரசாங்கத்தினால் அபிவிருத்தி கண்டுவரும் மாவட்டங்களில் இம்மாவட்டம் முதலிடம் வகிக்கின்றது. இம்மாவட்டத்திலுள்ள மக்களின் வறுமையை இல்லாதொழிப்பதற்கு அரசு பெருந்தொகை பணத்தை இவ்வருடம் ஒதுக்கீடு செய்துள்ளது. இங்குள்ள எல்லைப்புறங்களில் வாழும் மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக இங்கு இளவயது கர்ப்பம் பற்றி அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது. எல்லைப்புறங்களில் வாழும் மக்களில் பலர் தங்களது பிள்ளைகளுக்கு இளவயதிலே திருமணம் முடித்து வைக்கின்றனர். இதற்கு வறுமையும் ஓர் காரணமாகும். மேலும் இளவயதில் திருமணங்கள் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அறியாமல் இருக்கின்றனர்.

இதனைத் தடுப்பதற்காகவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், கல்வித் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை குடும்பத்திட்டச் சங்கம் விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களே சரியான வழிநடத்தல், ஆலோசனைகள் வழங்கப்படாத காரணத்தால் தங்கள் எதிர்காலத்தையே இளவயதில் காதல், கல்யாணம் எனச் சென்று பாழாக்கிக் கொள்கின்றனர். இது பெரும் கவலை தரக்கூடிய செயலாகும். கடந்த கால யுத்தத்தின் போது இழப்புகளுக்கு முகம் கொடுத்த சமூகம். இன்று இவ்வாறான செயல்கள் காரணமாக மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது காட்டாத கரிசனையினால் இளவயது திருமணம், கர்ப்பம் என்கின்ற முள்வேலிக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

இளவயதில் கர்ப்பம் தரிப்பதற்கான காரணங்கள்:

மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகல், கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர்கள், தாய். தந்தையற்றவர்கள், தாய் வெளி நாட்டில் தொழில் புரிபவர், வீட் டில் அதிகமாக ஆண்கள் வந்து செல்லல், கையடக்கத் தொலை பேசி பாவித்தல், கட்டுப்பாடற்ற முறையில் ஆண்களுடன் பழகுதல், பெற்றோர் பொறுப்பற்றிருத்தல், வீட்டு அங்கத்தவரிடையே மதுபாவனை மற்றும் போதைவஸ்து பாவனை காணப்படல், பாலியல் நாட்டம் கூடியவராய் இருத்தல், சுற்றுப்புறச் சூழல்.

இது போன்ற காரணிகளே இளவயதில் கர்ப்பம் தரிப்பதற்கான சூழ் நிலைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதாக ஆய்வுகளின்படி தெரியவருகின்றது.

தடுக்கும் வகைகள்

முறையற்ற பாலியல் தொடர்புகளை தவிர்த்தல், இளவயதினரை உன்னிப்பாகக் கவனித்தல், முடிந்தவரை குடும்பத் திட்டம் ஒற்றை நடைமுறைப்படுத்தல், சமுதாய விழுமியங்களை எடுத்துரைத்தல், சமயம் மற்றும் கிராமிய பெரியவர்களின் உதவியை நாடுதல், சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதல், சட்ட ரீதியான நிலைப்பாட்டை விளங்கப்படுத்தல் போதைப்பொருள் பாவனையைத் தவிர்த்தல், சிந்தனைகளை ஆன்மீக ரீதியில் வளப்படுத்தல், கல்வியில் குறிக்கோளை நோக்கி நகர்த்தல், சமூகம், சமயம் சார்ந்த விடயங்களில் விழிப்புணர்வைப் பெற்றிருத்தல் போன்றவற்றை கவனத்தில் எடுப்பதன் மூலம் இளவயது கர்ப்பிணிகளைத் தடுக்க முடியும்.

அத்துடன் பிராந்தியங்களிலுள்ள குடும்ப நல சுகாதாரப் பணிமனைகள், இளவயது கர்ப்பம் தரிக்கும் தாய்மார்கள் குறித்து அவதானிப்புகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பம் தரித்தமைக்கான காரணம். உரியநபர் மற்றும் நபர்களைப் பற்றித் தெளிவாக அறிதல், வன்முறைக் கர்ப்பம் தரித்தல், வைத்திய மற்றும் சட்ட முறைக்குட்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களையும் சுகாதாரப் பணியாளர்கள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் இளவயது திருமணங்கள் மற்றும் இளவயது கர்ப்பங்கள் தொடர்பில் அரசினதும், அரச சார்பற்ற நிறுவனங்களினதும் பார்வை திரும்ப வேண்டும். அதுவும் 13 தொடக்கம் 19வயதுக்குட்பட்டவர்களது இளவயது கர்ப்பம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் வழங்கப்பட்ட வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com