Contact us at: sooddram@gmail.com

 

இந்திய அரசியல் சாசனத்தை மதித்து அறிஞர் அண்ணா 1963ல் சுதந்திர திராவிட நாட்டு கோரிக்கையை கைவிட்டார்

1949ஆம் ஆண்டு சி.என்.அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகம் சினிமாவைப் பயன்படுத்தி 1967இல் தமிழ்நாட்டில் அவரை முதலமைச்சராக்கியது

உலகில் இரண்டாவது பெரிய ஊடக சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான ரூபட் மேர்டோச் கூட ஒரு தொலைக்காட்சி சாம்ராஜ்யத்தை நடத்துவது அவ்வளவு இலகுவான செயலல்ல என்பதை ஏற்றுக் கொள்வார். தொலைக்காட்சி சேவை முட்டாள்களின் விளையாட்டுத் திடல் அல்ல என்பதனாலேயே அவர் அவ்விதம் சிந்தித்திருக்கட்டும். இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலை கடந்த இரண்டு தசாப்தங்களாக தொலைக்காட்சி நிலையங்களே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி சேவை அறிமுகம் செய்வதற்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் சினிமாவை பயன்படுத்தியது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டபராசக்திஎன்ற தமிழ் படத்திற்கு வசன கர்த்தாவாக இருந்த கலைஞர் கருணாநிதி தனது அரசியல் கருத்துக்களை அழகிய வசனங்களாக எழுதி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்களின் பேராதரவை பெற்றுக் கொடுத்தார். அதற்கு முன்னர் அறிஞர் அண்ணாதுரைவேலைக்காரிஎன்ற படத்திற்கு கதை வசனம் எழுதி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

ஈரோடு வெங்கட் ராமசாமி என்ற பெயருடைய ஈ.வே.ரா. பெரியாரின் பாசறையில் அரசியலில் பலர் இணைந்து கொண்டார்கள். தென்னிந்தியாவில் திராவிட நாடு என்ற சுதந்திரம் படைத்த ஒரு நாட்டை உருவாக்கும் அவரது யோசனைக்கு பேராதரவை அளித்தனர்.

ஈ.வே.ரா. பெரியாரே திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்த ஈ.வே.ரா. பெரியார் இந்தியாவில் இடம்பெற்ற சாதி, குல, பால்நிலை பேதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் எண்ணத்துடன் தனது 19 ஆவது வயதில் நாகம்மை என்ற பெண்ணை மணம் முடித்தார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து 5 மாதங்களிலேயே இறந்துவிட்டது. பின்னர் 1948ம் ஆண்டில் இவர் மணியம்மை என்ற பெண்ணை இரண்டாவது தாரமாக மணம் முடித்தார்.

ஈ.வே.ரா. பெரியார் மரணித்த பின்னர் 1973 முதல் மணியம்மை தனது கணவரின் திராவிட கழக இலட்சியத்தை பிரசாரம் செய்து கொண்டிருந்தார். திராவிட கழகம் 1944ம் ஆண்டில் பிளவுபட்டு இரண்டாகப் பிரிந்தது. ஒரு குழுவுக்கு தலைமை தாங்கிய சி.என்.அண்ணாதுரை, 1949ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். அதையடுத்து ஈ.வே.ரா. பெரியார் தொடர்ந்தும் தனது சுய மரியாதை இயக்கத்தை சுதந்திர திராவிட நாடு என்ற பெயரில் மேற்கொண்டு வந்தார்.

யுனெஸ்கோ ஸ்தாபனம் பெரியாரை ஒரு புது யுகத்தின் தீர்க்கதரிசி என்று கெளரவித்தது. இவர் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தையாக தென்கிழக்கு ஆசியாவில் விளங்கும் ஒரு சொக்ரட்டீஸ் என்றும் யுனெஸ்கோ ஸ்தாபனம் பாராட்டியது.

அறியாமை, மூட நம்பிக்கை, யதார்த்தமற்ற சம்பிரதாயங்கள் போன்றவற்றை ஒழித்துக்கட்டும் ஒரு எதிரியாகவும் ஈ.வே.ரா.பெரியார் விளங்கினார் என்று யுனெஸ்கோ ஸ்தாபனம் பாராட்டவும் தயங்கவில்லை.

1949ல் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் பெரியாரின் நாத்திகக் கொள்கையை கடைப்பிடிக்கின்றது என்று அன்று தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க அரச பதவிகளையும் அரசியல் அதிகாரத்தையும் பெற்றிருந்த பிராமணர்கள் பிரசாரம் செய்து தி.மு.கவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை விதித்தார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களின் தமிழ்மொழி மீதான பற்றுதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அறிஞர் அண்ணா அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார். 1960ம் ஆண்டு தசாப்தத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்கள் ஹிந்தி மொழியை அரச கரும மொழியாக கடைப்பிடிக்க வேண்டுமென்ற விடுத்த உத்தரவை திராவிட முன்னேற்றக் கழகம் பகிரங்கமாக எதிர்த்து மொழிப்பற்றுள்ள தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை தன் பக்கம் திருப்பியது.

இந்தி மொழியை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஹிந்தி அரக்கி என்று கூறி மொழித்துவேசத்தை கிளப்பிவிட்டது. இதனால் சுதந்திரம் பெற்றது முதல் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பை தன்வசம் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் படுதோல்வி அடைவதற்கு அடித்தளமாக அமைந்தது. அன்று தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக இருந்த மிஞ்சூர் கனகசபாபதிப்பிள்ளை பக்தவத்சலம் ஆவார்.

1976ம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலாவது முதலமைச்சர் பதவியை அறிஞர் சி.என்.அண்ணாதுரை ஏற்றுக் கொண்டார். அவரது பதவிக் காலத்திலேயே சென்னையில் இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக உள்ளூராட்சி அமைச்சர் எம்.திருச்செல்வம் கியு.சி. கலந்து கொண்டார். சி.என். அண்ணாதுறை நடுத்தர வயது குடும்பத்தில் இருந்து வந்த ஓர் அரசியல்வாதி. சிறந்த பேச்சாளரும் தனது கருத்துக்களை வலுவாக எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளராகவும் விளங்கினார். அவரது எழுத்தாக்கத்தின் மூலம் மேடையேற்றப்பட்ட மேடை நாடகங்கள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன. இந்தப் பெரியவரே திராவிட முன்னேற்றக்கழகத்தை திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தினார்.

இவர் எத்தனையோ அரசியல் சஞ்சிகைகளில் ஆசிரியராகவும் பின்னர் ஈ.வே.ரா.பெரியாரின் சிஷ்யனாகவும் விளங்கினார். அறிஞர் அண்ணாதுரையும் சுதந்திரமான திராவிட நாட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வந்த போதிலும் 1963ம் ஆண்டின் இந்திய, சீன எல்லை யுத்தத்தை அடுத்து இந்தியாவின் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் இந்திய அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டுமென்பதற்காகவும் அறிஞர் அண்ணாதுரை தனது சுதந்திர திராவிட நாட்டு கோரிக்கையை கைவிட்டார்.

1965ம் ஆண்டில் சென்னையில் நடந்த இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மூலம் தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்ட அறிஞர் அண்ணாதுறையின் கட்சி 1967ம் ஆண்டு தமிழ்நாட்டு மாநில சட்டசபைத் தேர்தலில் அதிகக்கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியை பெற்றுக் கொண்டது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் 1969ம் ஆண்டில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணாதுரை புற்றுநோயினால் மரணித்தார்.

அவரது இறுதிக் கிரியைகளில் என்றுமில்லாதவாறு பெருமளவு மக்கள் கண்ணீர் மல்க கலந்து கொண்டார்கள். இதையடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த முதலமைச்சராக கலைஞர் மு.கருணாநிதி பதவியேற்றார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கணக்கு விபரங்களை அறிவிக்குமாறு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியதை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்ப்பதற்கு நீண்டகாலமாக ஒன்றாக ஒற்றுமையுடன் செயற்பட்ட இவ்விரு இணைபிரியாத நண்பர்கள் பிரிந்துவிட்டனர். அதையடுத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1972ம் ஆண்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இன்னுமொரு அரசியல் கட்சியை ஆரம்பித்து, கலைஞர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடித்து முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். 1977ம் ஆண்டு ஜூன் 30ம் திகதியன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன், 1987ம் ஆண்டு மரணமடையும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். எம்.ஜி.ராமச்சந்திரனின் மறைவை அடுத்து அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் 1988ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் மாநில அரசாங்கம் 24 நாட்களுக்கு மாத்திரமே நிலைத்திருந்தது.

ராஜீவ்காந்தியின் அரசாங்கம் அரசியல் சாசனத்தை ஆதாரம்காட்டி அவரது அரசாங்கத்தை சட்டபூர்வமாக கலைத்துவிட்டது. 1989ம் ஆண்டில் நடந்த தமிழ்நாட்டு மாநில சட்டசபைத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தமிழ்நாட்டில் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண் முதலமைச்சர் என்ற அந்தஸ்தை தனதாக்கிக் கொண்டார்.

தமிழ்நாட்டின் கடந்தகால அரசியல் பின்னணியை இதுவரையில் ஓரளவு எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டின் இன்றைய அரசியலில் தொலைக்காட்சி நிலையங்கள் எந்தளவு செல்வாக்கை கொண்டுள்ளன என்பதை அடுத்த வாரம் விரிவாக ஆராயலாம் என்று நினைக்கிறேன். (தொடரும்)

(எஸ். தில்லைநாதன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com