Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் மக்கள் ஆதரவை திரட்டுகின்றன

பிரதான அரசியல் கட்சிகள் தங்களுக்கென தொலைக்காட்சி சேவைகளை நடத்துகின்றன

கடந்தவாரம் இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் உலகின் இரண்டாவது பெரிய ஊடக சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான ரூபட் மேடோச் கூட ஒரு தொலைக்காட்சி சாம்ராஜ்யத்தை நடத்துவது அவ்வளவு இலகுவான செயலல்ல என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதையும் தொலைக்காட்சி சேவை முட்டாள்களின் விளையாட்டுத் திடல் அல்ல என்றும் மிகவும் சாதுர்யமாக அவர் தெரிவித்திருந்த கருத்தையும் ஞாபகப்படுத்தினோம். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு அதிகமாக தமிழ்நாட்டின் அரசியலை ஆட்டிப்படைத்த வல்லமை தொலைக்காட்சி நிலையங்களின் கையிலேயே இருந்தது என்ற கூற்றை ஆதரித்து சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது தமிழ்நாட்டில் 21 வெவ்வேறு தொலைக்காட்சி சேவைகள் செயற்படுகின்றன. இவற்றில் அனேகமாக 75 சதவீதமானவை செய்திகளையும் தொலைக்காட்சி நாடகங்களையும் திரைப்படங்களையும் ஒளிபரப்புகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி சேவைகளில் சன் டிவி வலையமைப்பே உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபல்யம் பெற்ற அமைப்பாகும். சன் டிவி வலையமைப்பின் கீழ் சுமார் 10 வெவ்வேறு தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்பாகின்றன.

இந்த தொலைக்காட்சி நிலையங்களின் பெயர்களை பட்டியல்படுத்துவது பொருத்தமாக இருக்கும். கப்டன் தொலைக்காட்சி சேவை பிரபல திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்துக்கு சொந்தமானது.

பொதிகை தொலைக்காட்சி சேவை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமானது. ஜெயா டி.வி. தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு சொந்தமானது. ஜெயா டி.வி. வலையமைப்பின் கீழ் பல தொலைக்காட்சி நிலையங்கள் செயற்படுகின்றன. கலைஞர் டி.வி. முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையாகும்.

மக்கள் டி.வி. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் குடும்பத்திற்கு சொந்தமானது. மெகா டி.வி. முன்னாள் இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் தனபாலு குடும்பத்திற்கு சொந்தமானது.

இவற்றைவிட, பொலிமர் தொலைக்காட்சி, ராஜ் டி.வி., ஸ்டார் விஜய், வசந்த் டி.வி., i தமிழ் டி.வி. ஆகியவற்றுடன் சன் மியுசிக் டி.வி., கே டி.வி ஆகிய தொலைக்காட்சி சேவைகளும் இருக்கின்றன.

செய்திகளை மாத்திரம் ஒளிபரப்பு செய்வதற்காக புதிய தலைமுறை, தந்தி டி.வி., சன் நியூஸ் டி.வி., கலைஞர் செய்திகள், கப்டன் நியூஸ், லோட்டஸ் நியூஸ், சத்தியம் போன்ற தொலைக்காட்சி நிலையங்கள் செயற்படுகின்றன. ஹாஸ்ய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆதித்திய, சிரிப்பொலி டி.வி. ஆகியன ஒளிபரப்புகின்றன.

இவற்றைவிட சிறுவர்களுக்காக 10 தொலைக்காட்சி சேவைகளும் தமிழ்நாட்டில் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்தப் பின்னணியை முதலில் தெரிந்து கொண்ட பின்னர் நாம் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி சேவைகள் எவ்விதம் அரசியலின் மீது தனது செல்வாக்கை கையாள்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அரசியல் ரீதியில் மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு சக்திவாய்ந்த தொலைக்காட்சி சேவைகளாக சன் தொலைக்காட்சி சேவையும், கலைஞர் தொலைக்காட்சி சேவையும் முன்னணியில் திகழ்கின்றன.

இவ்விரு தொலைக்காட்சி நிறுவனங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து பிரசாரம் செய்கின்றன. கடந்த 3 வாரங்களாக இவ்விரு தொலைக்காட்சி சேவைகளும் இந்திய தேர்தல் சட்டங்களை துச்சமாக மதித்து 24 மணி நேரமும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி அல்லது அக்கட்சியின் எதிர்காலத் தலைவர் மு.கா. ஸ்டாலின் ஆகிய இருவரின் உரைகளை 24 மணி நேரமும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டே இருக்கின்றன. இவை இந்திய காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கு மாறாக ஜெயா டி.வியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரைகள் கடந்த 10 முதல் 15 நாட்களாக 24 மணிநேரமும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படுகின்றன. ஜெயலலிதா இந்தத் தடவை காங்கிரஸ் கட்சியையோ அதற்கு எதிரான பாரதிய ஜனதா கட்சியையோ ஆதரிக்காமல் மூன்றாவது அணியுடன் இணைந்து தமிழ்நாட்டில் அதிக ஆசனங்களைப் பெற்று இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கும் ஆசையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதே வேளையில் விஜயகாந்தின் கப்டன் டி.வியும் ஏனைய சிறிய தமிழ் கட்சிகளும் தேசிய காங்கிரஸின் பிரதம வேட்பாளராக போட்டியிடும் ராகுல் காந்தியை தோற்கடித்து பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடியை வெற்றியடையச் செய்வதற்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் சமீபத்தில் தமிழ்நாட்டின் சினிமா ரசிகர்களின் பேராதரவைப் பெற்று விளங்கும் நடிகர் ரஜனிகாந்த், நரேந்திர மோடியை சந்தித்து உரையாடியதை அடுத்து தமிழ்நாட்டில் நரேந்திர மோடிக்கு இருந்த ஆதரவு மேலும் பெருக்கெடுத்திருக்கிறதென்று அங்குள்ள அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இந்த கட்டுரையை நேயர்கள் வாசிக்கும் போது தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்திருக்கும். இம்மாதம் 24ம் திகதியன்று வாக்கெடுப்பு இடம்பெற்ற போதிலும் 16ஆவது லோக்சபாவுக்கான தேர்தல் முடிவுகள் எதிர்வரும் மே மாதம் 16ம் திகதியன்றே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இந்தியப் பாராளுமன்றமான லோக்சபாவுக்கான 16ஆவது தடவையாக நடைபெறவுள்ள தேர்தலில் 543 தொகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இந்தத் தேர்தல் கட்டங்கட்டமாக ஏப்ரல் மாதம் 7ம் திகதி முதல் மே மாதம் 12ம் திகதி வரை நடைபெற இருக்கிறது. அதற்கு பின்னர் 16ம் திகதியன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 30இற்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த தேர்தல் காலத்தில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் கூடுதலான பணத்தை விளம்பரங்கள் மூலம் வருமானத்தை சம்பாதித்து வருகின்றன.

2011ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ்நாடு அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக தொலைக்காட்சி பெட்டிகளை அன்பளிப்பு செய்து அவர்களின் வாக்குகளை பறிக்க எத்தனித்த போதிலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அன்றைய அரசாங்கம் தொலைக்காட்சி பெட்டிகளை அனைவருக்கும் வழங்காமல் ஒரு குறிப்பிட்ட சிறு தொகை மக்களுக்கே அன்பளிப்பு செய்தது. அந்த தொலைக்காட்சி பெட்டிகளும் தரக்குறைவான தொலைக்காட்சிப் பெட்டிகள் என்று அவற்றை பெற்றுக் கொண்டவர்கள் இப்போது அங்கலாய்க்கின்றனர்.http://www.thinakaran.lk/Vaaramanjari/2014/04/27/f-3.jpg

சன் டி.வியின் உரிமையாளர் காலஞ்சென்ற முரசொலி மாறன் மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் தங்கள் பேனையைப் பயன்படுத்தி வெற்றிகரமான முறையில் பத்திரிகைகளையும் நடத்தி அதன் மூலம் தங்கள் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேராதரவை திரட்டி வந்தார்கள். இன்று கூட தமிழ்நாட்டில் உள்ள பல திராவிடக் கட்சிகள் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பெருக்குவதற்கு பயன்படுத்துகின்றன.

50ம் ஆண்டு தசாப்தத்தில் முரசொலி மாறனும், கலைஞர் கருணாநிதியும் திரைப்படங்களுக்கு எழுதிய உணர்வுபூர்வமான வசனங்கள் திராவிடக் கட்சி துளிர்விடுவதற்கு உதவியாக அமைந்தது. இவற்றின் மூலமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கைப் பெருக்கும் ஒரு முன்னணி திரைப்பட நடிகராக எம்.ஜி.ராமச்சந்திரன் உருவாக்கப்பட்டார்.

சன் தொலைக்காட்சி வலையமைப்பு 1993ம் ஆண்டில் முரசொலி மாறனின் மூத்த மகனான கலாநிதி மாறனினால் ஆரம்பிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரங்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த ஆயுதமாக அமைந்தது. அன்று எவரும் எதிர்பாராத வகையில் சுப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்ற ரஜனிகாந்த் சன் தொலைக்காட்சியில் தோன்றி தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம் ஊழல்களில் மூழ்கியிருக்கும் ஜெயலலிதாவின் அரசாங்கத்தை வெளியேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

சன் தொலைக்காட்சி சேவை ரஜனிகாந்தின் இந்தக் கருத்தை நாளொன்றுக்கு பல தடவைகள் தேர்தல் சம்பிரதாயங்களை தூக்கி எறிந்துவிட்டு ஒளிபரப்பியது. இதனால், இத்தேர்தலில் ஜெயலலிதாவின் கட்சி தோல்வியடைந்து திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி பீடத்தில் ஏறியது. 2010ம் ஆண்டில் நிதி நெருக்கடி நிலையினால் ரஜனிகாந்தின் திரைப்படங்களை தயாரிப்பதற்கு கஷ்ட நிலை ஏற்பட்ட போது கலாநிதி மாறனின் சன் பிக்ஷர்ஸ் நிறுவனம் ரஜனிகாந்தின் படங்களை தயாரித்து ரஜனிகாந்துக்கு உதவி செய்தது.

இதையடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் செல்வாக்கை முறியடிக்க வேண்டுமாயின் சன் டி.வியின் அளவுக்கு மக்கள் அபிமானத்தைப் பெற்ற ஒரு தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஜெயலலிதா 1999ம் ஆண்டில் ஜெயா தொலைக்காட்சியை ஆரம்பித்தார். அதையடுத்து இவ்விரு கட்சிகளுக்கும் நடுவில் நடுநிலையில் செயற்படுவதற்காக இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கு உதவும் முகமாக கீழ் மட்டத்தில் இருந்து அரசியல் அதிகாரத்தை பெருக்குவதற்காக ஸ்டார் நியூஸ் வலையமைப்புடன் இணைந்து விஜய் டி.வி. ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கு பின்னர் 2010ம் ஆண்டில் நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கையை பரப்புவதற்காக கப்டன் தொலைக்காட்சியை ஆரம்பித்தார். இவ்விதம் தொலைக்காட்சி சேவைகள் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயித்தன. இந்தத் தடவை தேர்தலில் தொலைக்காட்சிகளின் செல்வாக்கு எவ்விதம் அமைந்திருக்கிறது என்பதை மே மாதம் 16ம் திகதி நாம் அறிந்து கொள்ளலாம்.

(எஸ். தில்லைநாதன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com