Contact us at: sooddram@gmail.com

 

நெகிழ வைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி

இல்லாதவர்களுக்கு விலை இல்லை... ஏழைகளுக்கோ பாதி விலை..!

(ஜெ.பாரதி)

'ப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!’ என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள் சிலர். அந்த வரிசையில் இடம்பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் சுஜாதா - நாகராஜ் தம்பதி! வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு அருகே ஹோட்டல் வைத்திருக்கும் இந்த தம்பதி... மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் என்று பலருக்கும் தினம்தோறும் இலவசமாகவே உணவைத் தந்துவருகிறார்கள். இதுமட்டுமா... குறைவான வருமானத்தை ஈட்டும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு... பாதி விலைதான்!

தம்பதியிடம் பேச்சு கொடுத்தால்... வார்த்தைக்கு வார்த்தை பொங்கி வழிகிறது நேசம்!

''30 வருஷத்துக்கு முன்ன 'ஹோட்டல் ஏலகிரி’ங்கற பேர்ல இந்த சைவ உணவகத்தை இங்க ஆரம்பிச்சோம். ஜோலார்பேட்டை பெரிய ரயில்வே ஜங்ஷனா இருக்கறதால... வெவ்வேறு ஊர்கள்ல இருந்தும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள்னு பராமரிக்க முடியாத நிலையில இருக்கறவங்களை இங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டுட்டுப் போயிடுவாங்க. இப்படி வர்றவங்கெல்லாம் சாப்பாட்டுக்காக அலையற அலைச்சல்... கொடுமையிலும் கொடுமை! அதேபோல, ஹோட்டலுக்கு வந்துட்டாலும்... பண வசதி இல்லாத பலரும் அரை வயிறு, கால் வயிறுனு சாப்பிட்டுட்டு எழுந்து போறதைப் பார்க்கறப்ப வருத்தமா இருக்கும்.

இதெல்லாம் எங்களை ரொம்ப நாளா உறுத்திட்டே இருக்கவே... மனசுக்குள்ள ஒரு தீர்மானத்துக்கு வந்தோம். காலை 8 மணி முதல் 11 மணி வரை முதியவர்கள் 100 பேருக்கு இலவச உணவு, அதிக வருமானம் இல்லாத துப்புரவுத் தொழிலாளர்கள், கோயில் பூசாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் இவங்களுக்கெல்லாம் பாதி விலையில் உணவுனு முடிவு பண்ணி, உடனடியா செயல்படுத்தவும் ஆரம்பிச்சோம். அதேபோல, சீருடை, புத்தகப்பையோட வர்ற மாணவர்களுக்கும் பாதி விலையிலயே கொடுத்தோம். இவங்கள்லாம் வயிறார சாப்பிட்டு எழுந்து போறத பார்க்கும்போதே... மனசுக்கு சந்தோஷமா இருக்கும்'' என்று சொல்லும் சுஜாதா தம்பதி, தினமும் குறைந்தது 20 - 30 மாணவர்களுக்கு பேனா அல்லது பென்சில்... ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பால் என்று வழங்கிவருகிறார்கள்.

''பொதுவா, மனநிலை பாதிக்கப்பட்டவங்க... பலசரக்குக்கடை, துணிக்கடை, மருந்துக்கடைகளைக் கடந்து போறப்ப... நிக்க மாட்டாங்க. ஆனா, டீக்கடை, ஹோட்டல்னு பார்த்துட்டா... நின்னுடுவாங்க. சுயநினைவு இல்லைனாலும், சாப்பாட்டோட தேவை அவங்களுக்கு நல்லாவே தெரியுறதுதான் காரணம். ஆனா, அதை பூர்த்தி செய்துக்கற வழிதான் தெரியாது. அதனால, தினமும் காலையில சாப்பாட்டை பார்சல் பண்ணி எடுத்துட்டு போய், ரயில்வே ஜங்ஷனுக்குள்ள இப்படிப்பட்ட ஆளுங்கள தேடித்தேடி கொடுத்துவிட்டு வருவேன்'' என்று நாகராஜ் சொன்னபோது, வியப்பில் விழிகள் அசையவில்லை நமக்கு.

''சொந்த ஊர் ஏலகிரி மலை. சிறு வயதிலிருந்தே ஹோட்டல்ல வேலை செய்துட்டிருந்த அனுபவத்துலதான் இந்த ஹோட்டலையே ஆரம்பிச்சேன். எங்களுக்கு மூணு குழந்தைங்க... ஸ்கூல்ல எட்டாவது, ஆறாவது, நாலாவது படிக்கிறாங்க. இதுவரைக்கும் எங்களுக்குனு சொந்த வீடு இல்லை, வங்கியில் எந்த சேமிப்பும் இல்லை. சுஜாதாவோட காதுல கால் சவரன் நகையும், மூக்குத்தியும்தான் போட்டிருக்காங்க. இதை எல்லாம் பார்த்து... உறவுக்காரங்க, ஊர்க்காரங்க பலரும் 'ஏமாளி’, 'பொழைக்கத் தெரியாதவங்க’னு சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் காது கொடுக்கவே மாட்டோம். பணத்தை சேர்க்கறதுல கிடைக்குற சந்தோஷத்தைவிட, பலரை பசியாத்துறதுல உள்ள ஆத்ம திருப்தி... அவங்களுக்கெல்லாம் தெரியாதே'' என்ற நாகராஜ்,

''சுஜாதா எனக்கு மனைவியா வாய்ச்சது... என்னோட வரம். அவங்களும் எல்லாரையும்போல இருந்திருந்தா... எனக்கு இது சாத்தியமாகியிருக்காது. என் அலைவரிசையிலயே அவங்களும் இருக்கறதாலதான்... 25 வருஷமா என்னால இந்தப் பயணத்தைத் தொடர முடியுது'' என்று நிறுத்த, புன்னகையுடன் தொடர்ந்தார் சுஜாதா.

''இந்தத் தொழில்ல வர்ற லாபத்துல தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, மீதியை சேவைக்காக செலவு செய்றோம். எங்ககிட்ட இப்போ 15 பேர் வேலை செய்றாங்க. அவங்களுக்கெல்லாம் சம்பளம் போக, தினமும் 4,000 ரூபாய் வரும். இதுல சலுகைகள், இலவசங்கள்னு செலவழிச்சது போக... 750 ரூபாய் மிச்சமாகும். இது எங்க குடும்பத்துக்குப் போதுமானதா இருக்கு. இந்த 750 ரூபாயையும்கூட ஓட்டல்ல இருந்து எடுக்கக்கூடாது... ஏதாச்சும் வேலைக்கு போகணும்'னு தீர்மானிச்சுருக்கேன். அதனால, வி.ஏ.ஓ தேர்வுக்குப் படிச்சுட்டிருக்கேன். எனக்கு வேலை கிடைச்சுட்டா... என் சம்பளமே குடும்பச் செலவைப் பார்த்துக்க போதுமானதா இருக்குமே. அதுக்குப் பிறகு, இந்த ஹோட்டலை முழுக்க முழுக்க சேவைக்காகவே நடத்த ஆரம்பிச்சுடுவோம்'' என்ற சுஜாதா, கையில் அட்சயபாத்திரத்துடன் நிற்பது போலிருந்தது நம் கண்களுக்கு!

''இப்படி நாங்க சேவை செய்றது தெரிஞ்சு, நாங்களும் உதவி செய்றோம்னு பலரும் வர்றாங்க. ஆனா, எங்க சொந்த உழைப்பால மட்டுமே இதை செய்யணும்னு நினைக்கிறோம். அதனால, அப்படி வந்த உதவிகளையெல்லாம் அன்போட மறுத்துட்டோம். எங்களால முடிஞ்சவரை தொடர்வோம். அதுக்கான உடல் பலத்தையும், ஆரோக்கியமான மனதையும் மட்டும் ஆண்டவன் கொடுத்தா போதும்!'' என்று வைராக்கியத்தோடு நாகராஜ் சொல்ல, தலையசைத்து ஆமோதிக்கிறார் சுஜாதா!


''தினமும் வயிறு நிறையுதுக்கா!''

ருகிலேயே ரயில்வே ஜங்ஷன் இருப்பதால்... ஆட்டோ டிரைவர்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் என்று காலை ஐந்து மணி முதலே பரபரப்புதான். சவாரியை முடித்துவிட்டு ஹோட்டலில் நுழைந்து சாப்பிட உட்கார்ந்திருந்த ஆட்டோ டிரைவர் சங்கரிடம் பேச்சுக் கொடுத்தபோது... ''காலையில சவாரிக்கு போனா... அது முடியறதுக்கு பத்தரை ஆகிடும். அதுவரைக்கும் சாப்பிட முடியாது. சவாரி முடிச்சுட்டு வர்றப்ப காலை சாப்பாடு பல ஹோட்டல்கள்ல தீர்ந்துருக்கும். அப்படியே கிடைச்சாலும் ரேட் அதிகமா இருக்கும். ஆனா, இங்க வந்தா... கட்டாயம் வயிறார சாப்பிடலாம். மத்த ஹோட்டல்ல நாற்பது ரூபாய்க்கு சாப்பிடுற சாப்பாட்டை... அதே தரம் மாறாம இங்க இருபது ரூபாய்க்கு எங்களுக்காக கொடுப்பாரு நாகராஜ் அண்ணன். கையில காசில்லன்னாகூட... சாப்பாடு போட்டுதான் அனுப்புவார்'' என்றார் பெருமிதத்துடன்!

சுகுமார், மணி... இருவரும் அரசாங்க பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். ''காலையில அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்கு போயிடுவாங்கக்கா. அதனால என்னிக்காவதுதான் காலை சாப்பாடே சாப்பிடுவோம். ஆனா, இந்த அண்ணன் ஹோட்டலுக்கு வர ஆரம்பிச்சதுல இருந்து... தினமும் வயிறு நிறைஞ்சுருதுக்கா. நாலு இட்லி, அஞ்சு ரூபாய்னு கொடுக்கறதால... இப்போலாம் வீட்டுல சாப்பிடறதே இல்ல. மதிய சாப்பாட்டை ஸ்கூல்ல சாப்பிட்டுப்போம். நைட் மட்டும்தான் அம்மா சமைப்பாங்கக்கா'’ என்றனர்.

(நன்றி: விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com