Contact us at: sooddram@gmail.com

 

ஆரம்பத்தில் வரவேற்றல் அதன் பின் வசைபாடல் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்

நாட்டுப்புற சொல்லாடலில் 'நாய் பார்க்கும் வேலையை நாய் பார்க்கவேண்டும் கழுதை பார்க்கும் வேலையை கழுதை பார்க்கவேண்டும்' என்று சொல்வர். நாயின் செயல் காவல் காத்தல், குரைத்தல் உச்சகட்டம் ஊளையிடல். கழுதையின் வேலை பொதி சுமத்தல், அவலமாய் கத்தல் உச்சகட்டம் உதைத்தல்.

மாகாணசபையை காத்தல் அதன் செயற்பாட்டிற்கு இடையூறானவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றல் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் பத்திரிக்கை முதல் பக்கத்து நாட்டு தொலைகாட்சி உட்பட வருவோர் எல்லார் முன்பும் ஒப்பாரி ஊளையிடல், இதுவே இத்தனை நாளாய் வட மாகாணசபையில் நடந்தவை.

இங்கு நான் கௌரவ மாகாணசபை உறுப்பினர்களை நாயுடன் ஒப்பிட்டு மலினப் படுத்தியதாக தவறான புரிதல் கொள்ளவேண்டாம். நாய் தனக்கு உணவளித்த எஜமானை காவல் காத்து நன்றிமறவாது தினமும் வாலாட்டும் எதையோ பார்த்து ஊளையிடும் .

ஆனால் கௌரவ மாகாண சபையினரோ தமக்கு வாக்களித்த மக்களுக்கு அடுத்த தேர்தல் வரை எதுவும் செய்யாமல் தம்மை பார்க்க வருபவர்களைக்கூட வாகனத்தில் இருந்தபடியே கதைத்து பின் கைகாட்டிச்செல்வார்கள். இங்கு மலினமானவர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான்.

பாராளுமன்றம் சென்றவர்களோ அன்று மாலை சக்தி டி வி யிலும் அடுத்தநாள் உதயன் பத்திரிகையிலும் வரவேண்டும் என்ற ஒரே நோக்கில் மக்களின் பிரச்சனைகள் பற்றி பாராளுமன்றில் அவலக்குரல் எழுப்புவதும், தீர்வு பற்றி பேசுவோம் வாருங்கள் என்று அரசு அழைத்தால் பல கட்சி தெரிவுக்குழுவில் பேசமாட்டோம், ஒண்டிக்கு ஒண்டி வந்தால் மட்டுமே பேசுவோம் என்று சண்டித்தனம் பண்ணுவதும், பின் அனைத்து கட்சி உறுப்பினர்களுடனும் ஜனாதிபதியின் இராப்போசனத்தில் கலந்து மகிழ்வதும் தான் இதுவரை நாம் பார்த்த தா. தே. கூ பிரதிநிதிகளின் பாராளுமன்ற செயல்பாடு.

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன் நான் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களை கழுதையுடன் ஒப்பிட்டு மலினப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளவேண்டாம். பாரத்தை சுமக்கும் கழுதை தன்மேல் ஏற்றிய சுமையை எஜமான் பயன்பெறும் இடத்தில் சேர்ப்பிப்பதை தன் கடமையாய் செய்கிறது. தன்னை பராமரிப்பவனுக்காக பாரம் சுமக்கிறது.

ஆனால் தமக்கு பதவி தந்த மக்களின் அவலத்தை தாமும் தீர்க்காமல் மாற்று தமிழ் கட்சியினர் கொண்டுவரும் நலவாழ்வு திட்டங்களையும் விமர்சித்து உதாசீனம் செய்து தம்நலன் மட்டும் பேணும் தா தே கூ பாராளுமன்ற பிரதிநிதிகளை பார்க்கும் நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் மலினமானவர் யார் என்று.

புதிய அரசு வரவேண்டும் அதனூடாக எம்மக்களின் அவலங்கள் தீர்க்கப்படவேண்டும் என்று கூறித்தான் மிஸ்டர் மைத்திரியை ஆதரிக்க சொன்னார்கள். ஏற்கனவே மகிந்தவை மண்கவ்வ செய்யவேண்டும் என்று முடிவெடுத்திருந்த மக்கள் என்ற பனம் பழத்தின் மேல் காகமாக அமர்ந்து மிஸ்டர் மைத்திரி வென்றபின் நாம் சொல்லித்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்று உரிமை கொண்டாடினார்கள் தேசிய சபையில் உறவும் கொண்டார்கள்.

நாம் நினைத்த மாற்றம் வந்துவிட்டது நம் நண்பன் அணித்தலைவர்( பிரதமர்) ஆகிவிட்டார், சந்திரிகா அம்பயர் ஆகிவிட்டா, டக்ளஸ் தேவானந்தாவை மந்திரி சபையில் இருந்து அவுட்டாக்கிவிட்டோம் இனி நடப்பவை எல்லாம் நன்மை என வரவேற்று ஆர்ப்பரித்தனர்.

வாழை, தோரணம், மேளதாளம், மாலை, மரியாதையை மட்டுமே செய்யவில்லை மற்றப்படி வாழ்த்தி வரவேற்றனர். புதிய ஆட்சிக்கு நல்வரவு கூறினர். நடந்தவை எல்லாம் நன்றாகவே நடந்ததாக மக்களும் நம்பினர். இனி நம் வாழ்வில் விடியல் என நம்பியவர்களுக்கு முதலில் இடி ஓசை கேட்டத, பின் சரவெடிகள் வெடிக்க தொடங்கின.

தனக்கு கிடைக்காது என தெரிந்ததால் மத்தியில் மந்திரி பதவியை ஏற்க கூடாது என முந்திரி கோட்டைபோல் கூறிவந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் சுதந்திரதின வைபவத்தில் சம்மந்தரும், சுமந்திரனும் போனதால் கண்டன இடி ஓசையை எழுப்ப ஆனந்தி, சிற்றம்பலம், சிவகரன் சரவெடி கொளுத்தினர். சம்மந்தர் துரோகியானார் சுமந்திரன் கொடும்பவியானார். புதிய பாதையில் பயணிக்க முயன்றவர்களின் புகைப் படங்கள் தெருப்புழுதியில் போட்டு மிதிக்கப்பட்டன பின் எரிக்கப்பட்டன.

இணக்க அரசியல் செய்யப்போகிறோம் என்று சொன்ன முதல்வரே பிள்ளையார் சுழி போட்டு முரண்பாட்டுக்கான முதல்பந்தை சபையில் பிரேரணை பந்தாக போட்டார். அதில் பிரதமரை இயன்றவரை விமர்சித்தார். மத்தியில் மட்டுமல்ல கூட்டமைப்புக்குள்ளும் அணிகள் பிரிந்தன. நெருப்பில் நெய் வார்க்கும் பணி தந்தி டி வி யின் பேட்டியில் முதல்வர் பொய்யர், நான் எம் பி க்களுடன் மட்டுமே பேசுவேன் என பிரதமர் சொன்னதால் செய்து முடிக்கப்பட்டது.

அடலேறுகளான வடக்கின் சிறிதரனும், கிழக்கின் அரியனேந்திரனும் பிரதமருக்கு எதிரான போர்ப் பறைகள் ஆனார்கள். பிரதமர் கூட்டமைப்பை உடைக்க பார்க்கிறார் , நம்மிடையே பிளவை ஏற்படுத்த முயலும் ரணில் ஒரு நரி, பலிக்காது அவரது தந்திர சதி என சிறிதரனும் அரியனேந்திரனும் பேசித்திரிகிறார்கள்.

இதற்கிடையில் ஜனாதிபதி வந்தார் அவருக்கு மாலையிட்டு வரவேற்ற முதல்வர் பிரதமர் பக்கம் மரியாதைக்காக கூட பார்க்கவில்லை கை குலுக்கவில்லை. ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயத்தை தீர்க்க முயலவில்லை. ஜனாதிபதி சென்ற இடமெல்லாம் பிரதமரும், முதல்வரும் சென்றனர் ஆனால் ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. இணக்க அரசியல் செய்யப்போவதாக கூறியவரே எம் மக்கள் நலனுக்காகாகவேனும் இணங்கிப்போகவில்லை

இதன் பின் மீண்டும் வந்த பிரதமரின் வடக்கு விஜயம் திட்டமிட்டபடி நடந்தேறியது. வருத்தக்கார எம் பி மார் இருவரை தவிர அனைவரும் ஆஜர். முதல்வரை அழைக்காத பிரதமரை சந்திக்க மாட்டேன் என சிறிதரன் மட்டும் மிஸ்ஸிங். ஒட்டுமொத்த மாகாணசபை உறுப்பினர்களும் மாயமானாய் மறைந்து போய்விட்டார்கள். வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் கொண்டு போனதுபோல் வடக்கின் வினைதீர்க்க மாகாணசபைக்கு என கொழும்பில் இருந்து கூட்டிவரப்பட்ட வெள்ளாட்டின் மானம் காக்க உள்ளூர் செம்மறிகளும் சேர்ந்தே கலந்து கொள்ளாமல் போய்விட்டன.

(முன்னே செல்வதின் பின்தொடர்வது செம்மறி ஆட்டின் செயல் இது ஒரு அடையாள குறியீடுமட்டுமே தவிர யாரையும் மலினப்படுத்துவதல்ல. மீண்டும் தெரிவிப்பது நான் தீர்மானிப்பது நீங்கள்)

இங்கு தான் நான் ஆரம்பத்தில் கூறிய நாட்டுப்புற சொல்லாடலை மீட் டுப்பார்க்க வேண்டும். அதிகரப்பரவலுக்காக போராடுகிறோம். அதை பகிர வேண்டியது மத்திய அரசு பெறவேண்டியது மாகாண அரசு. வந்தவர் மத்தியின் பிரதமர், வராதவர் மாகாண முதல்வர். அங்கு பேசப்பட்ட விடயம் மாகாண நிரலில் இருப்பவை. ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகள், விதவைகள் மறுவாழ்வு, ஆதரவற்றோர் புனர்வாழ்வு, உள்ளூர் தொழில் வாய்ப்புக்கள் என பல மாகாண நிரல் விடயங்களை எடுத்தியம்ப கௌரவ வட மாகாண சபையின் ஒரு உறுப்பினர்கூட இருக்கவில்லை.

வழமை போல் த. தே. கூ. அமைப்பின் கோவில் மேளம் சுரேஸ் பிரேமச்சந்திரன், தான் மீண்டும் மீண்டும் அசைபோடும் கோத்தா முகாம் புராணத்தை மென்று துப்பினார். மாகாணசபை பிரதிநிதி செய்ய வேண்டியதை பாராளுமன்ற பிரதி நிதி செய்து அது செய்யவேண்டியதை இது செய்தது போலானது. 

அழைப்பு வராவிட்டாலும் அனுமதி கிடைக்கா விட்டாலும் பிரித்தானியா பிரதமர் வந்த போது வாகனத்தின் பின்னால் ஓடி பிரேரணை கொடுத்த அனந்தியை கூட அங்கு காணவில்லை.

ஐ நா வில் பல நாட்டு பிரதி நிதிகளுடன் கலந்துரையாடி ஆவன செய்யச்சென்ற எம் பி க்கள் செய்யவேண்டியதை மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை உண்மையில் நடந்தவை பற்றி அறிந்த அனந்திக்கு ஐ நா வில் என்ன வேலை ? இது செய்யவேண்டியதை அது செய்தது.

ஆக மொத்தத்தில் தம்வேலையை விட்டு அடுத்தவர் விடயத்தில் மூக்கை நுழைப்பதில் விண்ணாதி விண்ணர்கள். தம் கருமமே கண்ணாய் கொள்ளாதவர்கள். அடுத்தவர்மேல் குறை கூறுவதும் குறை காண்பதுமே கொள்கையாய் கொண்டவர்கள். தம் குறை ஒருபோதும் களையாதவர்கள். வீம்பினால் வீணாகும் மக்கள் நலப்பணிகள் பற்றி எண்ணிப்பர்க்காதவர்கள்.

பிச்சைக்காரன் புண்போல் பிரச்சனைகள் இருக்கும் வரை தான் இவர்களால் அரசியல் பிழைப்பு நடத்த முடியும் எனவே தீர்வை தள்ளிப்போட திடீர் வதந்திகளை கிளப்பி விடுவார்கள். அவை சுனாமி போல் வாக்களர்களை அள்ளிச்சென்று இவர்களிற்கு வாக்களிக்க செய்யும். காலா காலமாய் நடப்பது இதுதான்.

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களே. நீதிமானாய் கம்பன்கழக நாயகனாய் இருந்த உங்களை அரசியலுக்கு கொண்டுவந்த கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா போன்றவர்கள் தற்போது மாற்றத்தை ஏற்படுத்த விளைகிறார்கள். நீண்ட கால தவறுகளை திருத்த முயல்கிறார்கள். தவறவிட்ட சந்தர்ப்பங்களை மீண்டும் விடக்கூடாது என்கிறார்கள். தன் கொடும்பாவிகள் வீதி தோறும் எரிந்தாலும் சம்மந்தர் ஐயா வழிநடக்கும் சுமந்திரன் போல் நீங்களும் செயல்பட வேண்டும் என்பதே உங்களுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் விருப்பு வாக்களித்த அப்பாவி மக்களின் ஆசை.

ஏனென்றல் இன்றைய உலக ஒழுங்கில் இரட்டை கோபுரதாக்குதலின் பின் விடுதலை போரட்டம் எல்லாம் தீவிரவாதமாக அடையாளப்படுத்தபட்டு அழித்தல் தொடர்கிறது. எம் இனத்திற்கு ஒரு முள்ளிவாய்க்கால் போதும். எனவே உங்களை சூழ்நிலை கைதியாக வைத்திருக்கும் சிவாஜி, அனந்தி, சிவகரன், சுரேஸ், சிறிதரன் போன்ற சிலுசிலுப்பைகள் போடும் சத்தத்தை கவனத்தில் கொள்ளது அவற்றை ஒதுக்கிவிட்டு மென்மையாய் வேகும் பலகாரங்களின் பக்கம் உங்கள் பார்வையை செலுத்துங்கள்.

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி வாய்ப்புக்காய் வெட்டி வீராப்பு பேசுவது தான் இவர்களின் வக்கற்ற அரசியல். ஆனால் நீங்கள் அதி உயர் பீடமான உயர் நீதி மன்றத்தை அலங்கரித்தவர். அரசியல் சாக்கடை சேற்றை உங்கள் மீதே வாரி இறைக்காமல் நீங்கள் மீண்டு வர மீதமிருக்கும் மாகாணசபை முதல்வர் காலத்தில் உங்களை யார் சீண்டினாலும் பொறுமை காருங்கள். செங்கோல் உடைக்கும் சிங்கங்களை தண்டியுங்கள்.

நீங்கள் மக்களின் முதல்வர். மாகாணசபையின் ஐந்து வருடமும் நீங்கள் பதவியில் இருப்பீர்கள் அதை மாற்ற எந்த சிலுசிலுப்பைகள் முயன்றாலும் முடியவே முடியாது. பலகாரங்கள் உங்களை கைவிட மாட்டார்கள். பிரதமர் முதல் யாரால் சீண்டப்பட்டாலும் சினம் அடக்குங்கள். உங்களை ஆபத்பாந்தவனாய், அனாதரச்சகனாய் நம்பிய மக்களுக்கு நீங்கள் பெற்று கொடுக்கும் தீர்வு உங்கள் நாமத்தை நலிந்த மக்களின் மனதில் நிலைத்து வாழவைக்கும்.

உங்களுக்கு தரப்பட்ட ஆட்சி காலத்துள் பொறுமையுடன் அதேவேளை துணிவுடன் செயல்பட்டு சுயநலவாதிகள் உங்கள் செயல்ப்பாட்டை விமர்சித்தாலும் தூற்றினாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் பணியை செவ்வனே செய்து முடித்து காரியமாற்றிய கர்மவீரனாய் மக்கள் முதல்வர் என்ற பெயருடன் செயல்ப்படுங்கள்.

மாகாண அதிகார பகிர்விற்கு ஜனாதிபதியுடன் மட்டுமல்ல பிரதமருடனும் பேதமையின்றி பழகுங்கள். பகிஸ்கரிப்பு பலன்தராது. பரஸ்பர விட்டுக்கொடுப்புத்தான் மாற்றத்தை கொண்டுவரும். பொது நன்மைக்காக பொறுப்பு மேற்கொண்டு தலைவனாய் ஆட்சிபுரிபவர் எல்லோரும் விரும்பும்படி ஆட்சி செய்வது நல்லது. ஆனால் தேவையற்ற இடையூறு செய்யும் சிலரை விட்டு விலகுவது தவிர்க்கமுடியாதது.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com