Contact us at: sooddram@gmail.com

 

இந்திய மீனவர்களே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறல்

தங்கம், போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபாடு; இந்திய கடலோர காவற் படையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவது மட்டுமல்ல இலங்கை மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் இந்திய மீனவர்கள் சேதப்படுத்துகின்றனர். இந்திய மீனவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாலேயே அவர்களை இலங்கை கைது செய்கின்றதென இந்திய கடலோர காவல்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய மீனவர்கள் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி செல்வதால் இலங்கை கடலோர காவல் படைக்கும் நமது மீனவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதற்கு இந்திய கடலோர காவல்படை பொறுப்பேற்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் இந்திய கடலோர காவல்படை பிரதிப் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர் களுக்கு கடலில் முப்படை பாதுகாப்பு வழங்கக் கோரி, வழக்கறிஞர் எஸ். எம். ஆனந்தமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்திய கடல் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் மத்திய அமைச்சரவைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதிகள் எஸ். மணிக் குமார், ஜி. சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்திய கடலோர காவல் படையின் துணை இயக்குநர் ஜெனரல் கே. ஆர். நாட்டியாலின் பதில் மனுவை உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி. ஆர். சுவாமிநாதன் தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது,

இந்திய கடல் எல்லையில் மீன் வளம் குறைந்ததால் நமது மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்க தொடங்கினர். இலங்கை போர் முடிவுக்கு வந்த நிலையில் இந்திய மீனவர்கள் தங்கம். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர். எந்தெந்த வகையில் மீன்பிடிக்கக் கூடாதோ அந்த வகைகளை மீன் பிடிக்க பயன்படுத்துகின்றனர். இலங்கை மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துகின்றனர். இந்திய மீனவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால், அவர்களை இலங்கை கைது செய்கிறது.

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக 2014 ஜனவரி முதல் தற்போதுவரை இந்தியாவைச் ஹேர்ந்த 185 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 937 மீவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இது தவிர ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான மீனவர்கள் இலங்கையால் எச்சரித்து அனுப்பப்படுகின்றனர். இது தொடர்பாக இந்திய தூதரகத்துக்கு இலங்கை தகவல் கொடுத்து வருகிறது. இலங்கை கடல் எல்லையில் அத்து மீறலில் ஈடுபட்ட படகு களின் பதிவு எண்களை இலங்கை தெரி வித்துள்ளது. அந்த படகுகளின் உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம்.

சென்னை, தூத்துக்குடி, மண்டபம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சர்வதேச எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது என்றும், ஆபத்தில் சிக்கினால் உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இந்திய கடல் எல்லையில் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதாக இதுவரை கடலோர காவல் படைக்கு எந்த புகாரும் வரவில்லை.

எல்லை தாண்டும் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை எடுக்க முடியாது. எச்சரிக்கை செய்ய மட்டுமே முடியும். பாக். நீரிணை மற்றும் மன்னார் வளை குடா கடல் பரப்பு 160 கடல் மைல் தூரம் உள்ளது. இதன் காரணமாக, இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டுவதை இந்திய கடலோர காவல் படையால் தடுக்க முடியவில்லை.

இந்த மனுவில் மனுதாரர் பட்டிய லிட்டுள்ள தாக்குதல் சம்பவங்கள் அனைத் தும், இலங்கை கடல் எல்லையில் நடைபெற்றவை. இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்குகின்றனர் என்பது தவறானது.

எல்லை தாண்டி செல்வதால் இலங்கை கடலோர காவல் படைக்கும் இந்திய மீனவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது.

இதற்கு இந்திய கடலோர காவல்படை பொறுப்பேற்க முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனு மீதான அடுத்த விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத் தனர். (தி ஹிந்து)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com