Contact us at: sooddram@gmail.com

 

அமைச்சர் பதவியிலும் பார்க்க நக்சலைட் உறவுக்கு முன்னுரிமை

இந்தியாவின் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி அண்மையில் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகினார். வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியும் இடதுசாரி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மமதா பானர்ஜியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியதுடன் பிரதமர் மன்மோகன் சிங் மமதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தன.

மேற்கு வங்காளத்திலுள்ள லால்கார் நகரில் ஓகஸ்ட் 9ந் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையே கண்டனத்துக்கு உள்ளாகியது. மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திலேயே லால்கார் அமைந்துள்ளது. லால்கார் கூட்டம் அரசியல் சார்பற்றது என்று மமதா கூறுகின்ற போதிலும் அது அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டம் என்பதில் சந்தேகமில்லை.

மமதாவின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியும் மாவோயிஸ்டுகளும் கூட்டாக அக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்திய அரசாங்கம் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் நிலையில் மத்திய கபினற் அமைச்சர் மாவோயிஸ்டுகளுடன் கூட்டாகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதைச் சாதாரண விடயமாகக் கருத முடியாது. அக்கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசிய பேச்சு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பகிரங்கமாக விமர்சிப்பதாக உள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் போலி என்கவுண்டர் மூலம் அஸாத் கொல்லப்பட்டதைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

அஸாத் மவோயிஸ்டுகளின் பிரதான தலைவர்களில் ஒருவர். அண்மையில் அவர் ஆந்திராவில் ஒரு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அது ஒரு போலி என்கவுண்டர் என்று மாவோயிஸ்டுகள் குற்றஞ்சாட்டினார்கள். லால்கார் கூட்டத்தில் மமதாவும் அதே குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கின்றார்.

நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவுக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்துடன் செயற்படும் இவர்களுடைய தாக்குதலுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு மாநிலத்தில் பாதுகாப்புத் தரப்பினர் உட்படப் பலர் பலியாகிக் கொண்டிருக் கின்றனர். மாவோயிஸ்டுகள் இந்தியாவின் முதல்தர எதிரிகள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கின்றார். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான படை நடவடிக்கை உள்துறை அமை ச்சர் சிதம்பரத்தின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக் கப்படுகின்றது. இந்த நிலையில் மமதாவின் லால்கார் பேச்சு இந்திய அரசியல் வட்டா ரங்களில் புயலைக் கிளப் பியிருப்பது இயல்பானதே.

என்கவுண்டரில் அஸாத் கொல்லப்பட்டதைக் கண்டித்து மமதா பானர்ஜி பேசியிருப்பது அரசாங்கத்துக்குத் தர்மசங்கடமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் போலி என் கவுண்டர் மூலம் ஷொரா புதீன் ஷெய்க்கைக் கொலை செய்ததாக அம் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்டி ருக்கின்றார். இப்போது அஸாத்தின் மரணம் தொடர்பாக மத்திய கபினற் அமைச்சர் மமதா பானர்ஜி அதே குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகின்றது. கபினற் அமைச்சர் சுமத்தும் குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளாமல், அமித் ஷாவுக்கு எதிராக விசாரணை நடத்தியது போல அஸாத்தின் மரணம் தொடர்பாகவும் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் விசா ரணைக்கு அரசாங்கம் உத்தரவிட வேண் டும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் கேட்கின்றனர்.

கபினற் அமைச்சருக்குரிய கூட்டுப் பொறுப்புக்கு முரணாக மாவோயிஸ்டுகளுக்குச் சார்பான முறையில் மமதா பானர்ஜி ஏன் பேசுகின்றார் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. இதற்கு விடை காண வேண் டுமானால் மமதாவுக்கும் மாவோயிஸ்டுகளுக் கும் இடையிலான உறவு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

மேற்கு வங்காள ஆட்சியைக் கம்யூனிஸ் டுகளிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பது மமதா பானர்ஜியின் நீண்ட காலக் கனவு. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முயன்றும் அது சாத்தியமாகாத நிலையில் மாவோயிஸ்டுகளுடன் கூட்டுச் சேர்ந்தார். விஜியி (ணிaoist) என்ற பெயரில் இயங்கும் மாவோயிஸ்டுகள் மேற்கு வங்காளத்தில் ஆட்சி புரியும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கருத்து முரண்பாடு காரணமாகப் பிரிந்து சென்றவர்கள். மேற்கு வங்காள அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதில் மமதா பானர்ஜியைப் போல அவர்களும் குறியாக இருக்கின்றனர். இந்தப்பொது இலக்கின்அடிப்படையில் இவர்களுக்கிடையே உறவு ஏற்பட்டது.

மாவோயிஸ்டுகளின் உதவியுடன் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அரசாங்கத்தை நிலைகுலைய வைப்பதில் மமதா கணிசமான வெற்றி ஈட்டியுள்ளார். சிங்கூரிலும் நந்திகிராமிலும் மமதாவின் தலைமையில் நடைபெற்றநிலச் சுவீகரிப்புக்கு எதிரானபோராட்டத்துடன் ஆரம்பித்த இந்த நடைமுறை இன்று வரை தொடர்கின்றது.

மேற்கு வங்காளத்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மமதா அடைந்து வரும் வெற்றிகளுக்கு அவரது கொள்கை மற்றும் தனிப்பட்ட செல்வாக்கிலும் பார்க்க மாவோயிஸ்டுகளின் பயங்கரவாதம் பிரதான காரணம் எனலாம். இந்த நேரத்தில் மாவோயிஸ்டுகளைத் தன்னிடமிருந்து அந்நியப்படுத்துவது மேற்கு வங்காள ஆட்சி என்ற தனது இலக்கை அடைவதற்குக் குந்தகமாக அமைந்துவிடும் என்று அவர் கருதுவதில் உண்மை உண்டு.

அரசாங்கத்தின் படை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதிருப்பதை ஆட்சேபித்து மாவோயிஸ்டுகள் அண்மையில் மமதா பானர்ஜிக்குக் கடிதம் அனுப்பியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

மேற்கு வங்காள மாநில அரசியலே மமதாவின் பிரதான இலக்கு. மாநில அதிகாரத்துக்குத் தேவையான விதத்திலேயே தேசிய அரசியலை அவர் பயன்படுத்துகின்றார். மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மாவோயிஸ்டுகளின் உதவி அவசியம் என்பது அவரது நம்பிக்கை. மாவோயிஸ்டுகளுக்குச் சார்பாகப் பேசுவதற்காக அரசாங்கம் தனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மாவோயிஸ்டுகளுக்கும் தனக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவும் என்று மமதா பானர்ஜி கருதுகின்றார் போல் தெரிகின்றது.

(கேவியெஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com