Contact us at: sooddram@gmail.com

 

கிளிநொச்சி

இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது

மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக வடக்கு கிழக்கில் நிலவிய யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்து விட்டன. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்வதற்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத் துவதற்குமான நடவடிக்கைகளை அரசாங்கம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முக்கிய பங்கை வகிக்கும் அரசாங்க அதிபர்களில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனும் ஒருவர்.

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான கிளிநொச்சி மாவட் டத்திற்குப் பொறுப்பாகவும் அராசங்கத்தின் பிரதிநிதியாகவும் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி வருகிறார். பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இருந்த அவரை நாம் தொடர்பு கொண்டபோது மிகவும் கனிவான குரலில் மாலை வேளையில் தொடர்பு கொள்ளுங்கள் என்றார். குறிப்பிட்ட நேரத்தில் தொடர்பு கொண்ட போது எதுவித மறுதலிப்பும் இல்லாமல் விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றம், வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, மின்சாரம், போக்குவரத்து, நீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகிறது.

கண்டாவளை, கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த பிரதேசம் கிளிநொச்சி மாவட்டமாகும். இம் மாவட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் 6ஆம் திகதி ஆரம்பமான மீள்குடியேற்றப் பணிகள் ஓரளவுக்கு முற்றுப்பெற்றுள்ளது என்றே கூறவேண்டும்.

இதுவரை 31553 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 195 பேர் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கண்டாவளை, கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு குறைந்தளவு தொகுதி மக்களே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பளைப் பகுதி யுத்தத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இன்னும் முழுமையடையாததால் மக்களை மீளக்குடியமர்த்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த மாத இறுதிக்குள் அப்பணிகள் முழுமையடையும்.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தமது உறவினர் வீடுகளிலும், பெரும் எண்ணிக்கையானோர் நிவாரணக் கிராமங்களிலும் தங்கியிருந்தனர். அவர்களில் உறவினர் வீடுகளில் தங்கியிருப்போரில் பலர் தொடர்ந்து உறவினர் வீடுகளிலேயே தங்கியிருக்கின்றனர். நிவாரணக் கிராமங்களிலும் முகாம்களிலும் வாழ்ந்து வந்தவர்கள் தற்போது அவர்களது சொந்த கிராமங்களில் மீளக்குடியமர்ந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இவ்வாறு மீளக் குடியமரும் குடும்பத்திற்கு உடனடி உதவியாக 5000 ரூபா வீதம் வழங்கப்படுகிறது. உலர் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தேவையான உதவிகளும் ஆறு மாத காலத்திற்கு தேவையான உணவுப் பொதியும் வழங்கப்படுகிறது.

த்தம் காரணமாக ஒரு பகுதி சேதமடைந்த வீடுகளை புனர் நிர்மாணம் செய்யவும் முழுமையாக வீடுகள் சேதமடைந்திருப்பின் அவசரத் தேவையாக அரசாங்கத்தினால் 20 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. அரசாங்கத்தின் விசேட நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மேலும் 25 ஆயிரம் ரூபாவை அந்த மக்கள் பெறக்கூடியதாக இருக்கிறது.

கடந்த நவம்பரில் வந்தவர்களில் பலர் தமது குடும்பப் பொருளாதாரத்திற்காக விவசாயத்தை மேற்கொண்டனர். மேட்டு நிலப் பயிர்ச்செய்கை காலபோகத்திற்கு பிந்திய பயிராக நெல் பயிரிடப்பட்டது. பூநகரியில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டு நெல் அறுவடை செய்து மக்கள் பயனடைந்திருக்கின்றனர். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக் குளத்திலிருந்து 4500 ஏக்கர் நிலத்திற்கு தேவையான நீர் பாய்ச்சப்பட்டது. மேலும் அக்கராயன் குளத்திலிருந்து 1200 ஏக்கருக்குத் தேவையான நீர் பாய்ச்சப்பட்டது. ஒரு பகுதியில் நெல் அறுவடை செய்யும் அதேவேளை இன்னொரு பகுதியில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அரசாங்கத்தால் வேறு பல உதவிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஏக்கர் நிலத்தை பண்படுத்த 4 ஆயிரம் ரூபா நிதி உதவியும், உர மானியமும், விதைகள், இலவசமாகவும், உழவு இயந்திரம், மருந்து, மற்றும் தெளிகருவிகள் விவசாய அமைப்புகளுக்கூடாக வழங்கப்பட்டன.

மேட்டு நிலப் பயிர்களாக வெங்காயம், காய்கறி மற்றும் தானிய வகைகள் பயரிடப்பட்டன. அவை அனைத்தும் அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனாதிபதியின் விசேட செயலணியின் அனுமதியைப் பெற்றுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன. மக்கள் சுயதொழிலின் மூலம் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் சுயதொழில் முயற்சிகளுக்கான பயிற்சிகள், மற்றும் வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பசுமாடு, ஆடு, கோழி, முயல் போன்ற கால்நடை வளர்ப்புக்கள், மேசன், வாகனம் பழுது பார்த்தல், தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் பெண்களுக்கு தையல், கைப்பணிப் பொருட்களைத் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை தொழிற் பயிற்சி அதிகார சபை மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்களின் தொழில் தன்மைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற விதத்தில் பத்தாயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ருபா வரையிலான கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இக் கடனுதவிகள் அரச வங்கிகள் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படுகிறது. பெரியளவில் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு தேவையான கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்திறகு தேவையான பல கருத்திட்டங்களை அராசங்கம் முன்னெடுத்து வருகிறது.

வீடமைப்பைப் பொறுத்தவரையில் போரினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இரண்டு விதமாக வகைப்படுத்தி அவற்றுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. முழுமையாக சேதமடைந்த நிலையில் 30 ஆயிரம் வீடுகள் இருப்பது மதிப்பீடுகளின் மூலம் தெரிய வருகிறது. இதில் 4 ஆயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார அமைச்சின் ஊடாக இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் 600 வீடுகளையும் ஐக்கிய நாடுகளின் கபிடான் நிறுவனம் ஆயிரம் வீடுகளையும் நிர்மாணித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வீதிகளின் புனரமைப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை காலமும் மின்சாரத்தை காணாத பல கிராமங்களுக்கு புதிதாக மின் இணைப்புக்கள் வழங்கப்படுகின்றன.

அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக மின் இணைப்பு கிடைக்கவில்லை. எனினும் காலக் கிரமத்தில் அப்பகுதி மக்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டு விடும்.

போரினால் தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகி சிறந்த முறையில் இயங்கி வருகிறது. மாவட்டத்தில் உள்ள 101 பாடசாலைகளில் 90க்கு மேற்பட்ட பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பாடசாலைகளுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com