Contact us at: sooddram@gmail.com

 

காஷ்மீர், பாகிஸ்தானில் பேய் மழை - கோர வெள்ளம்

இயற்கையின் விபரீத சமிக்ஞைகளை புரிந்துகொள்வோமா?

இயற்கை அனர்த்தங்கள் எனப்படுபவை, நிச்சயமாக நடக்குமென எதிர்வுகூறப்பட முடியாதவை. அவ்வாறு எதிர்வுகூறப்பட்டாலும், அவற்றால் ஏற்படும் தாக்கத்தை ஒருபோதும் துல்லியமாக எதிர்வுகூற முடியாது.

சனத்தொகை அதிகமாக இருக்கின்ற நாடுகளாக இருப்பதாலோ என்னவோ ஆசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவும் சீனாவும் அதிகளவில் இயற்கை அனர்த்தங்களின் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

ஒன்றில் வரட்சி ஏற்படுகிறது. அல்லது பூகம்பம் ஏற்படுகிறது. இல்லையேல் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கும் அதைத் தொடர்ந்து ஏற்படும் மண் சரிவும் மக்களைப் பல வழிகளில் பாதிக்கின்றன. அத்தகையதோர் நிலைதான் கடந்தவாரம் ஆசியாவிலே ஏற்பட்டது.

சீனாவின் வடமேற்குப் பகுதி, பாகிஸ்தானின் சில பகுதிகள் மற்றும் இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் ஆகிய பகுதிகளிலே கடந்தவாரம் தொடர் மழை பெய்தது. அம்மழையையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் மண் சரிவும் ஏற்பட்டன. சீனாவின் பைலோங் நதி உடைப்பெடுத்து பெருக்கெடுத்தது. அதனால் அந் நதியின் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு மைல் நீளமான ஏரியும் பெருக்கெடுத்தது.

இதனால் நீரும், சேறும் பாறைகளும் அலையலையாய் நகர்ப்பகுதிகளை நோக்கி அடித்துச் செல்லப்பட்டன.

கடந்த தசாப்தத்தில் சீனாவில் நிகழ்ந்த மிகவும் மோசமான வெள்ள அனர்த்தமாக இவ்வனர்த்தம் தான் என்கிறார்கள் சீன அதிகாரிகள்.

இத்தகையதோர் நிலைமையைத் தான் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் காணப்படுகிறது. அவை மட்டுமன்றி, சீன எல்லையில் இருக்கும் வடகொரியாவின் நகரான சினுஸ்கியிலும் ஏறத்தாழ 10,000 பொதுமக்கள் பாதுகாப்பு தேடி வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் மட்டும் ஏறத்தாழ 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவிக்கிறது. அத்துடன் அங்கே மட்டும் 1500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ள அனர்த்தமாக இது கருதப்படுகிறது. இதற்கு முன்னர் வெள்ளச் சேதம் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. அண்மைக் காலங்களில் நிகழ்ந்த மிகப் பெரும் இயற்கை அனர்த்தங்களான 2004 இன் சுனாமி, 2005 இன் காஷ்மீர் பூகம்பம், 2010 இன் ஹெயிட்டி பூகம்பம் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கையை விட இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் எனவும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

இமாலய எல்லைப் பகுதியில், இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் லடாக் அமைந்துள்ளது. அப்பிராந்தியத்தின்லேபள்ளத்தாக்கை ஒட்டிய பகுதிகள் இத் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே லடாக் பகுதியில் பெருமழை பொழிவது அரிது. இங்கு கோர மழையும் வெள்ளமும் ஏற்பட்டிருப்பது இயற்கை விடுத்திருக்கும் கடுமையான முன் எச்சரிக்கை என்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தாலும் மண் சரிவாலும் இப்பகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற மக்கள் சேற்றுக்குள் புதையுண்டு போயிருப்பர் என்ற ஊகமும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிப்பின் தீவிரம் முற்றாகக் குறைந்துவிடாத நிலை காணப்படுவதால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் தெளிவின்றியே காணப்படுகின்றன.

இந்த அனர்த்தம், திபெத்திய பீட பூமியை ஒட்டிய பகுதியிலே நடந்திருப்பதால், இந்தியச் சுற்றுலாத்துறையில் பின்னடைவொன்று காணப்படுமென எதிர்வு கூறப்படுகிறது. அத்துடன் இறந்த பொதுமக்களுள்ளும் பாதிக்கப்பட்டவர்களுள்ளும் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காஷ்மீர் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 180 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அனர்த்த அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 1.4 மில்லியன் ஏக்கர் பயிர்கள் நாசமாகியுள்ளன. மக்கள் தமது உடமைகளையும் உறவுகளையும் இழந்து அநாதரவாக்கப் பட்டுள்ளார்கள். உணவுப் பற்றாக்குறையும் நிலவுகிறது. இவையெல்லாம் நீண்ட காலநோக்கிலே பல பின்விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளும் போது, இந்த இயற்கை அனர்த்தங்களையெல்லாம் இயற்கை தரும் அபாய எச்சரிக்கைகளாகவே கருத வேண்டும். அப்போது தான், இனிமேல் அப்பகுதிகளில் நிகழவிருக்கும் அபாயங்களையாவது தவிர்க்க முடியும்.

இந்த அனர்த்தம் நிகழ்ந்த பகுதிகள் யாவுமே வடவரைக் கோளத்தில் அமைந்துள்ளவையாகும். ஆதலால் இந்த அனர்த்தத்தின் பின்னணியில் காலநிலை மாற்றம் இருக்குமோ என்ற ஊகமும் தெரிவிக்கப்படுகிறது.

நதிகள் ஒழுங்காக தூர்வாரப்பட்டு அவை பெருக்கெடுக்கும் போது வெள்ள அனர்த்தம் நிகழாமல் தடுப்பதற்கான வடிகாலமைப்பு முறைகள் செவ்வனே மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல, நிலச் சரிவுகளில் இருந்து பகுதிகளைப் பாதுகாக்கக் கூடிய நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவை யாவும் இந்த அனர்த்தப் பாதிப்புகள் தணிந்து நிலமை வழமைக்குத் திரும்பிய பின்னரே மேற்கொள்ளப்படலாம். ஆயினும் தற்போதிலிருந்தே அவதானிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான நிவாரணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப் பட்டு அவர்கள் விரைவில் தம் பழைய வாழ்வுக்குச் செல்ல வழி செய்யப்பட வேண்டும்.

இங்கு பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்களே. அதிகார வர்க்கத்தின் எல்லைப் பிரச்சினைகளால் இம்மக்கள் பாதிக்கப்படக்கூடாது. ஆனால், காஷ்மீரின் தொடர் வன்முறைகள் திரும்பத் திரும்ப ஊரடங்குச் சட்டத்தின் அமுலாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பக்கம் வெள்ள அனர்த்தம், உணவுப் பஞ்சம், குடிநீர்த் தட்டுப்பாடு, இன்னொரு பக்கமோ தொடர் ஊரடங்குச் சட்ட அமுலாக்கமும் தடை உத்தரவுகளும்... இவற்றிற்கிடையில் நசிபட்டுத் தவிக்கும் காஷ்மீரின் சாதாரண பொதுமக்களின் நிலையை எண்ணிப் பார்க்கவே தர்மசங்கடமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, அப்பகுதிகளில் மேலும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கோர மழையும் வெள்ளமும் இயற்கை விடுக்கும் அபாய எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நமது வாழ்க்கை முறையை இயற்கையை பாதிக்காத வகையில் மாற்றிக் கொண்டால் எதிர்கால இயற்கை சீற்றங்களை நாடுகளால் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த எச்சரிக்கை சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு மட்டும் உரியதல்ல. முழு உலகத்துக்குமானது. கடந்த வாரம் கிaன்லாந்தில் இருந்து அமெரிக்காவின் மன்ஹட்டன் நகரைவிட நான்கு மடங்கு பெரிய ஐஸ் பாறை உடைந்து பிரிந்து கடலில் மிதக்க ஆரம்பித்திருப்பது, உலகின் வெப்பம் அதிகரித்திருப்பதையே காட்டியிருக்கிறது.

வெள்ளம் வந்த பின்னர் அணை கட்டுவதில்தான் நாம் சமர்த்தர்கள். அப்படித்தான் நாம் முகாமைத்துவம் செய்யப் பழகி இருக்கிறோம். மனிதன் இனிமேல் மேற்கொள்ள வேண்டியது வருமுன் காக்கும் நடவடிக்கைகளைத்தான்.

டெங்கு நோயை எடுத்துக் கொள்வோம். இது ஒன்றும் புதிய நோய் அல்ல. ஆனால் 150 பேரை இலங்கையில் பலிகொண்ட பின்னரேயே மக்கள் மத்தியிலும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளைக் கண்டதும் அவற்றை குப்பைத் தொட்டிகளாகக் கருதி குப்பைகளை நீரில் கொட்டுவது எமது பழக்கம். குப்பைகளை எரிக்க வேண்டும் அல்லது புதைக்க வேண்டும் என்பது ஐம்பது வருடங்களாக பாடசாலைகளில் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தச் சிறு விஷயத்தைக்கூட மக்கள் ஒழுங்காக பின்பற்றாத தனாலேயே இன்று டெங்கு காய்ச்சலில் நாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே இயற்கை தந்திருக்கும் பசுமைக்கு பங்கம் ஏற்படாமல் நடந்து கொண்டாலேயே போதும்!

(சாரதா மனோகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com