Contact us at: sooddram@gmail.com

 

அரசியல் தீர்வை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழியில் இப்போதாவது முயற்சிக்க வேண்டும்

(ஜீவிதன்)

இணைந்து செயற்பட முன்வரு மாறு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் விடுத்த அழைப்பு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த அறிக்கை சாராம்சத்தில் அந்த அழைப்பை நிராகரிப்பதாகவே உள்ளது. அரங்கத்தின் அழைப்பை நிராகரிப்பது தமிழ் மக்கள் சார்பில் பேசும் அனை த்துக் கட்சிகளும் ஒன்றாகக் கூடி நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டிய தேவையை நிராகரிப்பதற்குச் சமன்.

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய தமிழ்க் காங்கிரஸ் முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை தோல்வியடைந்துவிட்டன என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக அறுபது வருடங்களுக்கு மேலாக இக் கட்சிகள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும் இம் மியளவும் கூட முன்னேற்றம் ஏற்பட வில்லை. இனப் பிரச்சினை இருந்ததிலும் பார்க்கச் சிக்கலான நிலையை அடை ந்ததும் தமிழ் மக்கள் தாங்க முடியாத அளவுக்கு இழப்புகளுக்கும் அழிவுக ளுக்கும் உள்ளாகியதும் தான் இக் கட்சி களின் வழிகாட்டலில் கண்ட பலன்.

ஒரு இனத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தில் அறுபது வருட காலம் குறைவான காலப் பகுதியல்ல. இக் காலத்தில் சிறிதளவாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். முன்னேற்றம் ஏற்படாதது ஒருபுறமிருக்க, பின்னடைவுகளையும் பாதிப்புகளையுமே சந்தித்திருக்கிறோம். இதுவரை காலமும் பின்பற்றிய கொள்கையில் தவறு உண்டு என்ற முடிவுக்கே இதிலிருந்து வர வேண்டியுள்ளது.

இந்த நிலையில், தமிழ் மக்கள் சார்பில் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடிப் பொதுவான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்துச் செயற்பட வேண்டிய தேவையை நிராகரிக்க முடி யாது. இவ்வாறான நடை முறையில் பங்கேற்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. ஏனென்றால் அண்மைக் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப் புகளுக்கும் அழிவுகளுக்கும் மாத்திரமன்றி நல்ல அரசியல் தீர்வொன்று கிடைப்பதற்குத் தடையாகச் செயற்பட்டதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம அளவில் பொறுப் பாளியாகும்.

எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் அரங்கத்தில் இணைவது பற்றிப் பரிசீலிக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறுவது விதண்டா வாதம். கட்சிகள் கூடிப் பேசிப் பொதுவான வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டுமேயொழிய ஏதாவது ஒரு கட்சியின் கொள்கையை மற்றைய எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்த முடியாது. அப்படி வலியுறுத்துவது மேலாதிக்க மனோபாவம்.

அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை என்ன செய்திருக்கின்றன என்றும் இப் பிரச்சினைகளின் தீர்வுக்கு அக் கட்சிகளின் திட்டம் என்ன என்றும் சுரேஷ் கேள்வி எழுப்புகின்றார். இனிமேல் செய்யப்போவது என்ன என்பதைத் தீர்மானிப்பதற்காகவே பல கட்சிகள் சேர்ந்து அரங்கம் உருவாகியது. அந்த நடைமுறையில் பங்குபற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே கேள்விகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் கேட்க முடியும். இதுவரை அவர்கள் எதையும் சாதிக்கவில்லை. பாதிப்பை மாத்திரம் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

பிழையான கொள்கை

இனப் பிரச்சினை நீண்ட காலமாகத் தீர்வின்றியிருந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனி நாட்டுத் தீர்மானத்துக்குப் பின்னரே பாரதூரமான பாதிப்புகள் தமிழ் மக்களுக்கு ஏற்படத் தொடங்கின. ஆயுதப் போராட்டம் வலுவடைந்து புலிகளின் கை மேலோங்கியதற்கும் அதன் விளைவாகத் தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கும் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.

அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்ற அக்கறையுடன் உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணி. முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத் திட்டம் எதுவும் இல்லாமலேயே கூட்டணி உருவாகியது. குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவது போல, கூட்டணி உருவாகிய பின்னரே கொள்கை பற்றிச் சிந்தித்தார்கள். தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியுமே அதில் பிரதான கட்சிகள். தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாகச் சமஷ்டியை வலியுறுத்தி வந்தது. தமிழ்க் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகச் சமஷ்டியை நிராகரித்து வந்தது. எனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கையாகச் சமஷ்டியை முன்வைப்பது சாத்தியமில்லை. சமரச ஏற்பாடாகத் தனிநாடு என்று முடிவு செய்தார்கள். பிந்திய காலங்களில் கூட்டணித் தலைவர்கள் அவ்வப்போது தனிநாட்டு நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செயற்பட்டமை தனிநாடு சமரச முடிவேயொழிய உளப்பூர்வமான தீர்மானமல்ல என்பதற்குச் சான்றாகின்றது.

தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய தலைவர்கள் அது பெரிய அலையாக எழுந்து தங்களையே மூழ்கடித்துவிடும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அந்த அலை எழுவதற்கான அவகாசத்தையும் இத் தலைவர்களே கொடுத்தார்கள்.

1983 ஜுலை மாதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மன்னாரில் கூடி, பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஜே. ஆர். நீடித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் பதவி விலகி இடைத்தேர்தலுக்கு வழிவகுப்பதெனத் தீர்மானித்தது. 1977 ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் இயல்பாகக் கலைய வேண்டிய திகதியில் இராஜினாமா செய்வதெனத் தீர்மானித்தார்கள். ஆனால் அரசாங்கம் ஆறாவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியதும் அத் திருத்தத்தின் கீழ் பதவிகளைத் துறப்பதெனக் கூறித் தியாகிகள் எனப் பெயரெடுத்தார்கள்.

ஆறாவது திருத்தத்தின் கீழ் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறியதால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத் தலைமை புலிகளுக்குக் கைமாறியது. இந்தத் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

அந்த நேரத்தில் கூட்டணித் தலைவர்கள் அந்த முடிவை எடுக்காமல் தங்கள் பதவிகளை முறைப்படியாக இராஜினாமா செய்து இடைத் தேர்தலுக்கு முகங்கொடுத்திருந்தால் புலிகளின் கை ஓங்கியிருக்க முடியாது. இப்போது ஆறாவது திருத்தம் இருக்கையிலேயே பாராளுமன்றத்தில் பதவி வகிப்பது சரியென்றால் அப்போதும் அதைச் செய்திருக்கலாம்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தவறுகளுள் தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றியதும் ஆறாவது திருத்தத்தின் கீழ் பதவிகளைத் துறந்து நாட்டிலிருந்து வெளியேறியதும் பாரதூரமானவை. இத் தவறுகளால் தமிழ் மக்கள் அனுபவித்த இழப்புகளும் அழிவுகளும் சொல்லி முடியாதவை.

பிறர் மீது பழி

இனப் பிரச்சினை தீராமலிருப்பதற்கும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தங்களுக்கும் சிங்களத் தலைவர்களும் அரசாங்கங்களுமே காரணம் என்று கூறித் தப் பித்துக்கொள்வது தமிழ்த் தலை வர்களுக்கு வழக்கமாகிவிட்டது. நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் தமிழ்த் தலைவர்களே இவற் றுக்கெல்லாம் பிரதான காரணம் என்ற உண்மை புரியும்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்துவதும் பிரச் சினைகளைத் தீர்ப்பதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளைப் பின்பற்று வதும் நல்ல தலைமையின் லட்ச ணங்கள். இந்த இரண்டு விடயங்களிலும் தமிழ்த் தலைவர்கள் தவறு விட்டிருக்கின்றார்கள். வரலாற்றில் வெகு தூரம் போனால் பல உதாரணங்களைக் கூறலாம். இரண்டு அண்மைக்கால உதாரணங்களைப் பார்ப்போம்.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் அரசியலமைப்பைத் தயாரித்த வேளையில் மு. திருச்செல்வத்துக்கூடாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பியது. தமிழரசுக் கட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் முக்கியமான சரத்துகளை அரசியலமைப்பில் உள்ளடக்கலாம் என்பதே அச்செய்தி. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அதை நிராகரித்துவிட்டார்.

அரசாங்கத்தின் இக் கோரிக்கைக்கு எஸ். ஜே. வி. செல்வநாயகம் இணங்கியிருந்தால் தமிழ் மக்களின் அரசியலில் அது ஒரு சாதகமான திருப்புமுனையாக அமைந்திருக்கும். பிற்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு முடிந்திருக்கும். இது சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தாத தவறு.

பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் சமஷ்டித் தன்மை கொண்ட நியாயமான தீர்வு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் கூடுதலான அதிகாரங்களை வலியுறுத்தி இத் தீர்வை நிராகரித்தன. இது நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வை வலியுறுத்திய தவறு.

தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளாதவர்கள் ஒருபோதும் முன்னேறப் போவதில்லை. தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் இது பொருந்தும். நடைமுறைச் சாத்தியமான வழியில் அரசியல் தீர்வை அடைவதற்கான வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்குத் தமிழ்த் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய தேவை இப்போது எழுந்திருக்கின்றது. தமிழினத்தின் விமோசனத்தில் அக்கறை உள்ளவர்கள் இத் தேவையைப் புரிந்துகொண்டு செயற்பட முன்வர வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com