Contact us at: sooddram@gmail.com

 

பிற்போக்கு நிலையில் இருந்து மீண்டும் முற்போக்கு நிலைக்கு தமிழ் தேசியம் வருமானால் நாங்கள் ஆதரவு தருவோம்

மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் இ. தம்பையா மலையகத்திலுள்ள சிறுவர், சிறுமியர் கொழும்பு நகர்ப்புறங்களில் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்படுவது, துன்புறுத்தப்படுவது மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த இரு சிறுமிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டமைக்கு எதிராகவும் குரல் கொடுத்ததுடன், அது தொடர்பாக நடைபெற்ற வழக்குகளில் முன்னின்று செயற்பட்டவர்.

கேள்வி: உங்களது கட்சியின் செயற்பாடுகள் பற்றி சற்று சுருக்கமாகக் கூறுவீர்களா?

பதில்: 1978 ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இடது என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. புதிய ஜனநாயக கட்சியாக இரண்டாவது மாநாட்டின்போது பெயர் மாற்றப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ஐந்தாவது மாநாட்டில் புதிய ஜனநாயக மார்க்சிய லெனின்ஸிய கட்சியாக மாற்றிக்கொண்டுள்ளது.

எங்களது அரசியல் செயற்பாடுகள் பாராளுமன்றத்தை மட்டும் மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படாமல் பாராளுமன்றத்திற்கு அப்பால் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைகள், அடக்கப்படுகின்ற பெண்கள், சாதி ரீதியாக ஒடுக்கப்படுபவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வெகுஜன போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

கடந்த காலங்களில் நடைபெற்ற பல தேர்தல்களிலும் பங்கெடுத்து வந்திருக்கின்றோம். தேர்தலில் பங்களிப்பு என்பது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். தற்போது எங்களுக்கு வலப்பனை பிரதேச சபையிலே பன்னீர் செல்வம் என்பவர் பிரதேச சபை உறுப்பினராக இருந்து வருகிறார்.

இலங்கையில் தேசிய ஜனநாயக சூழலில் மக்களுடைய உரிமைகளை வென்றெடுத்து, இலங்கையின் சகல இனங்களையும் ஐக்கியப்படுத்தக்கூடிய வகையில் நான்கு தேசிய இனங்களின் தேசிய அபிலாசைகளை உறுதி செய்யக்கூடியவாறான ஒரு அரசியல் தீர்வையும் அதேநேரத்தில் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்கள், பறங்கியர் ஆகிய சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

கேள்வி: போருக்குப் பின்னரான தற்போதைய அரசியல் நிலைமைகளை எப்படிப் பார்க்கிaர்கள்?

பதில்: இராணுவ ரீதியாக புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின் பேரினவாத சிந்தனை வலுவூட்டப்பட்டிருக்கிறது. இலங்கையில் 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி முறியடிக்கப்பட்டபோதும், 1988 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட போதும் ஒருவிதமான சூழல் இருந்தது. தற்போது புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்ட பின்னரும் கூட அது போன்றதொரு நிலைதான் தொடர்கிறது.

தேசிய இனப்பிரச்சினையானது 50, 60 வருடங்களாக நீண்டு செல்கிறது. யுத்தம் முன்னெடுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு பற்றி பேசப்பட்டது. சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்ட போதிலும், அதன் விளைவு எதனையும் தருவதாக இல்லை. பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக எவ்வாறான அணுகுமுறையை கையாள்வது என்ற பிரச்சினைதான் இருக்கின்றது.

கேள்வி: இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ்க்கட்சிகள் பல வேற்றுமைகளுக்கு மத்தியிலும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வருவது பற்றிய உங்கள் பார்வை?

பதில்: தமிழ் தரப்பை பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தனிநாடுதான் என்று கூறி அரசியல் நடத்துபவர்களும் இருக்கிறார்கள். மறு பக்கத்திலே அரசியல் தீர்வு பற்றி பேச்சே இல்லை. எதுவும் கிடைக்கப்போவதில்லை, இருப்பதை தக்கவைத்துக் கொள்வோம் என்று சரணாகதி அரசியல் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த இரு முனைப்புகளுக்கும் இடையில் சாத்தியமற்ற ஒரு தீர்வாக அமையாது என்றிருக்கிறது தனிநாடு தீர்வு. அதேநேரத்தில் சரணாகதி அரசியல் பக்கத்தில் அக்கறை இருக்கிறது. ஐக்கியப்பட்ட இலங்கை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஐக்கியப்பட்ட நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்ய முடியும். சுயநிர்ணய உரிமை என்பதை பிரிவினை என அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது.

கேள்வி: தென்னிலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது?

பதில்: தென்னிலங்கையில் இடதுசாரி மத்தியில் இன்னும் தீர்வு குறித்த அக்கறை இருக்கிறது. அரசாங்கத்துடன் இருக்கும் இடதுசாரிகள் மீதான விமர்சனங்கள் இருந்தாலும், அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை கைவிடவில்லை. ஆகவே முற்றுமுழுதாக அரசியல் தீர்வு தேவையில்லை என்றில்லாமல், அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என அரசுக்குள்ளும் வெளியிலும் காணப்படுகிறது. இந்த சக்திகள் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை கடந்தகால தவறுகளை மறந்து, சிங்கள மக்கள் மத்தியில் எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு தரப்பட வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளினூடாக வேலைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. இலங்கையில் எந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தாலும் அவர் தனியே முடிவெடுக்க முடியும். அரசியல் சக்திகளை அதாவது, சிங்கள மக்கள் மத்தியில் உள்ள தொழிலாளர்கள் விவசாயிகளின் மனதை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். சிங்கள மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம். அவர்கள் சிறிய சக்திகளாக இருப்பினும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆகவே, இந்த நிலைமையை சரியாக புரிந்துகொண்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

கேள்வி: இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் பல வேற்றுமைகளுக்கு மத்தியிலும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வருவது பற்றிய உங்கள் பார்வை?

பதில்: கட்சிகளுக்கிடையில் பொது உடன்பாடு வரவேண்டும். யுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பே அதாவது, மே 18 ஆம் திகதிக்கு முன்னரே இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி வந்தோம். யுத்தம் முடிவடைந்த பின்பு 10 அம்ச கோரிக்கைகளை வைத்து தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். உடனடி மீள்குடியேற்றம், தமிழ் கட்சிகள் பொது உடன்பாட்டுக்கு வந்து செயற்படுவது என்று இருந்தன.

இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த போது திடீரென சுவிற்சர்லாந்தில் தமிழ் கட்சிகள் கூடின. இடதுசாரி கட்சிகளிடமிருந்து அதற்கான பிரதிபலிப்புகள் வந்த போதும், தமிழ் கட்சிகள் மத்தியில் அவ்வாறான பிரதிபலிப்புகள் எதுவும் தெரியவில்லை. சுவிற்சர்லாந்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. எங்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை.

த.தே.கூ. உடன் இதுபற்றி கதைத்தோம். நேரம் ஒதுக்கித் தருவதாக தெரிவித்தார்களே தவிர உடன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் தற்போது தமிழ் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இது வரவேற்கக்கூடிய விடயம். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதாவது வெளிநாட்டு சக்திகளுடைய வற்புறுத்தல் காரணமாகத்தான் பேச விளைகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

வெளிநாட்டு சக்திகளுடைய வற்புறுத்தல்களின் பேரில் தமிழ் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், அதில் தோல்வியைத்தான் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அது நேர்மையாக இருக்க வேண்டுமென்பதே எமது விருப்பமாகும். நாங்கள் இதில் பங்கெடுக்கிறோமா இல்லையா என்பதை விட, தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுக்கின்ற, முன்னெடுக்கின்ற கட்சிகளுக்கு தார்மீக பொறுப்பு இருக்கிறது. தமிழ்க் கட்சிகள் தங்களை சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக எல்லா தமிழ்க் கட்சிகளுமே தமிழ் மக்களுடைய பிரச்சினையில் தவறு இழைத்திருக்கின்றன. அந்தத் தவறுகளை சுய விமர்சனம் செய்து கொண்டு ஒரு பொது உடன்பாட்டு அடிப்படையில் செயற்படுவது அவசியம்.

நாங்களும் தனியாக இல்லாமல். ஒரு பொது உடன்பாட்டு அடிப்படையில் வேலை செய்ய தயாராக உள்ளோம். சந்தேகங்களுக்கு அப்பால் அவ்வாறான கலந்துரையாடல் இருக்க வேண்டுமென விரும்புகிறோம்.

கேள்வி: த.தே.கூட்டமைப்பின் பங்களிப்பு என்பது எவ்வாறு அமைய வேண்டுமென கருதுகிaர்கள்?

பதில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு பத்திரிகை அறிக்கையை விட்டு ஒருவருக்கொருவர் கேள்வி எழுப்புவதைவிட, முதலில் சந்திப்பது நல்ல விடயம். சந்திப்பதற்கு முதல் நிபந்தனைகள் எதனையும் முன்வைக்கக்கூடாதென நினைக்கிறேன். கட்சிகளுக்கிடையில் பொது உடன்பாடு எட்டப்படுமாக இருந்தால், சந்திப்பதற்கு முதல் நிபந்தனைகளை வைக்கக்கூடாது. முதலில் சந்திப்பது அவசியம். பொது உடன்பாடு எட்டப்படுவதற்கான வழிவகைகளை தேடவேண்டும்.

பத்திரிகைகளில் அறிக்கை விடுத்து சண்டையிடுவது, விமர்சனம் செய்வதற்குரிய நேரம் அல்ல இது. கூடிய கவனமெடுத்து எல்லா தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக கூடி சந்திக்காவிட்டாலும், தனித் தனியாக சந்தித்தேனும் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கப்போகிறோம், அதனை எப்படி அடையப் போகிறோம், எங்களிடம் என்னென்ன உபாயம் இருக்கிறது, கூட்டணியாக வரவேண்டுமா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஆனால் அதற்கு அவசரப்பட தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். பொது உடன்பாடு ஏற்பட்டாலே பல விடயங்களில் முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளலாம்.

ஆனால் தேர்தல் வருகின்றபோது தனித்தனியாக போட்டியிடுவதும், கூட்டாக பேசுவதும் அதாவது, பாராளுமன்ற நோக்கங்கள் ஒரு அம்சமாக இருக்கலாமே தவிர பாராளுமன்றத்தை நோக்காகக் கொண்டு, அதை மையப்படுத்தி செயற்படுவது கட்சிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வதாகும்.

கேள்வி: த.தே.கூட்டமைப்பு இன்னமும் ஒருவித மோதல் போக்கை கொண்டிருப்பது போலவும், பாரம்பரிய வாக்கு வங்கிகளை தக்கவைத்துக்கொள்வதற்கான அரசியலை முன் நகர்த்திச் செல்வதாகவும் பேசப்படுகிறது இது குறித்து...?

பதில்: தமிழ் கட்சிகளின் வரலாற்றை எடுத்துப் பார்ப்போமானால், ஆதிக்க போக்கு என்பது அன்றிலிருந்து வந்திருக்கிறது. ஆதிக்கம் மிகுந்த அந்த நிலையிலிருந்து மாற வேண்டும். அடக்கப்படுகின்ற தேசிய இனத்தின் பிரதிநிதிகள் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, தமிழ் மக்களை நாங்கள்தான் ஆள்வோம் என்ற நிலையிலிருந்து, அரசியலை நாங்கள் குத்தகைக்கு எடுத்துவிட்டோம் என்ற நிலைப்பாட்டிலிருந்து பிரச்சினைகளை அணுகுவது மிகவும் தவறானது.

அடக்கப்படுகின்ற ஒரு தேசிய இனத்தின் பிரதிநிதிகள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் கொண்டு வென்றெடுக்க வேண்டியவர்களே தவிர, நாங்கள் மக்களை ஆள்பவர்கள் இல்லை என்ற நிலையிலிருந்து மீண்டு வர வேண்டும்.

அந்த நிலைப்பாட்டில்தான் த.தே.கூ. ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இடதுசாரிக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் முழுதும் தங்களுடைய கையில் குத்தகையாக இருக்கிறது என்று செயற்பட்டதன் காரணமாகத்தான் கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டமாக இருக்கலாம், அகிம்சை போராட்டமாக இருக்கலாம் அது பின்னடைவை நோக்கிச் சென்றது. அந்த நிலைமையிலிருந்து ஒரு படிப்பினை முன்னெடுத்துக்கொண்டுதான் நாங்கள் முன்னுக்கு வர வேண்டியுள்ளது.

ஆகவே நான் நினைக்கிறேன் தமிழ் கட்சிகள் தங்களுடைய கடந்தகால தவறுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்து கொண்டு, அதேநேரத்தில் ஏனைய கட்சிகளுடனும் அவை சிறிய அல்லது பெரிய கட்சியாக இருக்கலாம், முதலில் அரசியலில் அபிப்பிராயத்தை உருவாக்குவதே பெரிய விடயம். ஆகவே, சிறிய கட்சிகளுக்கு கூட பெரிய சாதனை இருக்கிறது. அவற்றை கவனத்தில் கொண்டு ஜனநாயக ரீதியாக செயற்படுகின்றபோது ஜனநாயக நாடுகளில், ஜனநாயக சூழலில் பல அமைப்புகள் வரும். அதையும் கருத்திற்கொண்டு பன்மைத்துவத்துடன் எவ்வாறு நாங்கள் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளுடன் செயற்பட வேண்டுமென விரும்புகின்றோமோ அதே பன்மைத்துவம் தமிழ்க் கட்சிகள் மத்தியிலும் இருக்க வேண்டும்.

தமிழ் கட்சிகளும் இருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால், நாங்கள் எங்களை ஜனநாயகமயப்படுத்திக் கொண்டு ஜனநாயக உரிமைகளுக்காக போராட முடியும். தமிழ் கட்சிகள் அனைத்தும் பொது உடன்பாட்டிற்கு வர வேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்.

முற்போக்காக சொல்லும் இன்னொரு விடயம், கடந்த காலத்தில் தமிழ் தேசியம் மிகவும் பிற்போக்கான இடத்தில்தான் இருந்திருக்கிறது. அது முற்போக்கான நிலையில் செயற்பட்டால், அதனுடன் கைகோர்த்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ் தேசியவாதம் பழமைவாதத்தில் இருந்துதான் கட்டமைக்கப்பட்டது. தமிழ் தேசியம் அதனது முற்போக்கான கூறுகளை தேடியெடுத்து அதாவது, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏனைய தேசிய இனங்களுடன் ஐக்கியம், குறுகிய இனவாதத்தை தவிர்தல், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற சாதி, பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுதல் போன்ற விடயங்களில் தமிழ் தேசிய முற்போக்கான கூறுகளை கொண்டிருக்க வேண்டும் என நாம் பார்க்கிறோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com