Contact us at: sooddram@gmail.com

 

பண்டைய புத்தளம் - யாழ்ப்பாணம் கரையோரப் பாதை மூடப்படக் கூடாது

(எம். ஐ. எம். அப்துல் லத்தீப்)

மக்களுக்கான போக்குவரத்து மார்க்கங்கள் இலகுபடுத்தப்படல் வேண்டும். எனினும் இருந்த மார்க்கங்களையும் வேறு சில காரணங்களுக்காக ஆங்கிலேயர் மூடிவிட்டு மக்களைப் பிடறியைச் சுற்றி வருமாப்போல அலைக்கழிய வைத்தது அபத்தமானது. எனினும் இவ்வரசாங்கம் மீண்டும் இலகு பாதையைத் திறந்துவிட்டது. எனினும் அம்மக்களின் மகிழ்ச்சியை நீடிக்க விடாது வேறு சில சக்திகள் மீண்டும் அவ்விலகுப் பாதையை நீதிமன்றத்தின் மூலம் மூடிவிட நடவடிக்கை எடுப்பது கவலை தருவதாகும்.

ஆம், பீடிகையை விடுத்து விடயத்துக்கு வருவோம். புத்தளத்திலிருந்து கரையோரமாக வட மாகாணத்தின் முருங்கன் வழியாக மன்னாரையும், அதே வழியின் உயிலங்குளம் சந்தி வழியாக யாழ்ப்பாணம் பூனகரி வரையும் புராதன காலம் முதல் நீண்டு சென்ற கரையோரப் பாதையானது, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1902ம் ஆண்டில் கால ஓய ஆற்றுக்கும், மோதரகம் ஆற்றுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை வனவிலங்குகளுக்கான புகலரணாக சட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தியது முதல் புத்தளம் - மன்னார் - யாழ்ப்பாணம் கரையோரப் போக்குவரத்தும், இம்மக்களுக்கிடையிலான சமய, கலாசார, வர்த்தகத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அன்று முதல் இம்மக்கள் தமது போக்குவரத்துத் தொடர்புகளை புத்தளமிருந்து அனுராதபுரம், மதவாச்சி வழியாக மன்னாரையும், மதவாச்சி, வவுனியா வழியாக யாழ்ப்பாணத்தையும் நெடுந்தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

முக்கியமாக வடபுலத்தின் மன்னார் மற்றும் முசலி பிரதேச முஸ்லிம்கள் 1990இல் புலிகளால் ஒட்டு மொத்தமாக விரட்டப்பட்ட போது கடல் வழியாக கல்பிட்டி நகரையும் மதவாச்சி, அநுராதபுரம் வழியாக புத்தளம் நகரையும் அடைய அம்மக்கள் பட்ட துன்பம் ஏடுகளில் வடிக்க முடியாத துன்பம் கொண்டது. அக்காலப் பகுதியில் மூடப்பட்ட கரையோரப் பாதை பாவனையிலிருந்திருப்பின் இத்துன்பம் நேர்ந்திராது.

எனவேதான் இம்மக்களின் மீள் குடியமர்வு நிகழும் போதாவது மூடப்பட்ட கரையோரப் பாதையைத் திறந்துவிடல் வேண்டும் என்று அன்று முதல் பல்வேறு மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கும் வகையில் இப்பாதை இன்னும் ஒரு மாத காலத்தில் திறக்கப்படும் எனக் கடந்த 2009 டிசம்பர் 26இல் கல்பிட்டி ஆலங்குடா மகா நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இவ் வாக்குறுதிப்படி 2010 ஜனவரி 24ந் திகதி அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ அவர்களால் நூற்றுக்கணக் கான வாகனத் தொடரணி மூலம் கரையோரப் பாதை உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. எனினும் இம்மகிழ்ச்சி ஆக நான்கு மாதமே நீடித்த நிலையில் இப்பாதை திறப்புக்கு சில குழுவினர் எதிர் நடவடிக்கை எடுப்பது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியானது, புத்தளம் நகரிலிருந்து வடக்கே தொடரும் போது அது மன்னார் வீதி என்றும் யாழ்ப்பாண வீதி என்றுமே அன்று முதல் இன்று வரை அழைக்கப்பட்டு வருகின்றது. என்றாலும் 1902ம் ஆண்டு முதல் வில்பற்று சரணாலயம் உருவாக்கப்பட்ட பின்னர் அப்பாதை புத்தளமிருந்து 20 கி. மீ. தூரத்திலுள்ள காலஓய ஆற்றின் கரையிலுள்ள இலவன்குளம் வரை நிறுத்தப்பட்டு விட்டாலும் பாதையின் பெயர் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் வீதியாகவே இருந்து வருகிறது.

தவிர புத்தளம் நகரில் இப்பாதையருகில் நில ஆதனங்களையுடையோரின் பழைய சீட்டு ஆவணங்களிலும் இப்பாதை யாழ்ப்பாண வீதி என்று குறிப்பிடப் பட்டுள்ளதை காண முடிகின்றது.

இதுபோல நூறாண்டுகளுக்கு முன்னர் பிரேங்மோடர் என்ற ஆங்கில ஆய்வாளரால் வெளியிடப்பட்ட ‘கெஸட்டீர் ஒப் த புத்தளம் டிஸ்ட்ரிக்ட்’ என்ற நூலிலும் இப்புகலரணுக்கு வெளியிலும், உட்புறத்திலும் இப்பாதைக்குச் சமீபமான ஸ்தலங்கள் பற்றி விபரிக்கும் போது அவ்விடங்கள் ‘....... யாழ்ப்பாணக் கரையோரப் பாதைக்கருகில்....’ என்ற வாசகத்தையே குறிப்பிடுகின்றார். அவரும் தனது ஆய்வுக்குச் சான்றாக கல்பிட்டியின் புதல்வரும் ஆரம்பகால சிவில் சேவை அதிகாரியும், சிறந்த ஆய்வாளருமான சைமன் காசிச்செட்டியின் தரவுகளையும் தனது குறிப்புகளில் இணைத்தே எழுதியுள்ளார். உதாரணமாக, அந்நூலிலிருந்து வில்பற்று சரணாலயம் அமைந்துள்ள பொம்பரப்பி பிரதேசத்தில் யாழ்ப்பாண வீதியையடுத்துள்ள இலவன்குளம், இலந்தைவட்டான், பூக்குளம், பொம்பரிப்பு ஆகிய கிராம விபரங்களைப் பார்ப்போம்.

இலவன்குளம் : புத்தளம் நகரிலிருந்து யாழ்ப்பாண வீதியில் உள்ள உப்பாறுக்கு மேலால் 18.75 மைல் கல்லில் அமைந்துள்ளது. 18வது மைலில் இலவன் குளம் ஆறு என அழைக்கப்படும் சிற்றாறு ஓடுகிறது. இரண்டு குளங்கள், வயல் நிலங்கள், ஏராளமான கால்நடைகள் உள்ளன. முஸ்லிம் கிராமம், கத்தோலிக்க கோயிலும் உள்ளது (பக்கம் 24) (இது புகலரணின் தெற்கு எல்லைக் கிராமம். காலஓய ஆற்றங் கரையில் அமைந்துள்ளது.)

இலந்தை வட்டான் : இலந்தை மரங்கள் ஏராளமாகக் காணப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. புத்தளம் இருந்து யாழ்ப்பாணப் பாதையூடாக 21வது மைல்கல்லில் இவ்விடம் அமைந்துள்ளது. பாதையோரம் புராதன அழிவுகள் காணப்படுகின்றன. ஒரு சிறிய குளமும் பயிரிடப்படும் வயல்களும் காணப்படுகின்றன. (பக்கம் 39)

பூக்குளம் :

புத்தளம் நகரிலிருந்து 44 மைல் தூரத்தில் யாழ்ப்பாண வீதியிலிருந்து 1.5 மைல் மேற்கே மோதரகம் ஆற்றங்கரையிலுள்ளது. இக்கிராமம் புத்தளம் மாவட்டத்தின் வடக்கு எல்லை. குதிரை மலை ஐந்து மைல் தெற்கில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு முத்துக்குளிப்பு நடைபெற்றது. மீன் பிடித்தொழில் உள்ளது. சிறிய குளமும் நிறைந்த வயல்களும் காணப்படுகின்றன. (பக்கம் 145 - 146)

பொம்பரிப்பு : இது ஒரு சிறிய கிராமம், பொம்பரிப்புப் பகுதியின் தலைமையூர். பரந்த சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது. புத்தளத்துக்கு 31 மைல் வடக்கே சி. ஐ. (1881)ன் படி புத்தளத்தில் இருந்து 24.50 மைல்களுக்கு அப்பால் கரையோர யாழ்ப்பாண வீதியில் அமைந்துள்ளது. இதன் செழிப்பான மண் வளம் காரணமாகப் பொற்சமவெளி (கோல்டன் ப்ளெய்ன்ஸ்) என்ற அர்த்தத்தில் பொம்பரிப்பு அல்லது பொம்பரப்பி என்ற பெயர் வந்தது. (பக்கம் 143)

இதுவரை புத்தளம் - யாழ்ப்பாணம் கரையோர வீதி பற்றிய கெஸட்டீர் ஒப் த புத்தளம் டிஸ்ட்ரிக்ட் தந்துள்ள விபரங்களைப் பார்த்தோம். இனி ‘கோகில சந்தேச’ என்னும் சிங்கள இலக்கியம் கூறுவதைப் பார்ப்போம்.

‘............. கி. பி. 1450ல் தனது வளர்ப்புப் புத்திரனும், சேனாதிபதியுமான சபுமால் குமாரய (சென்பகப் பெருமாள்) என்பானைக் கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு பெரும்படையுடன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற அனுப்பினான். ‘கோகில சந்தேச’ என்ற நூலில் இப்படை நகர்த்தல் கோட்டையிலிருந்து மேற்குக் கரையோரமாக புத்தளம் - பூநகரி கரைப் பாதை வழியேதான் நிகழ்ந்தது.......’ எனக் கூறுவதாக ‘ஈழத்தவர் வரலாறு’ நூல் (பக்கம் 84) விபரிக்கின்றது.

புத்தளம் - யாழ்ப்பாணக் கரையோரப் புராதன பாதை பற்றிய மேலதிகத் தகவல்களை கெஸட்டீர் ஒப் த ஜப்னா டிஸ்ட்ரிக்ட், மன்னார் டிஸ்ட்ரிக்ட் முதலான நூல்களிலும் பெறக்கூடியதாக இருக்கும் என்பது எமது நம்பிக்கை.

வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக சுமார் 108 வருடங்களின் முன் வில்பற்று சரணாலயம் உருவாக்கப்பட முன்னரான இப்பிரதேசம் ‘பொற்சமவெளி என்றும் பொற்றானியத்தின் பூமி என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்பகுதி நெற்றானியம் இந்தியாவுக்கும் ஏற்றுமதியாகின. ‘பட்டினப் பாலை’யிலே வரும்... தென் கடல் முத்தும்... ஈழத்துணவும்... என்னும் சொற்கள் மன்னார், சிலாபத்துறைக் கடல்களிலே பெறப்பட்ட முத்துக்களையும், பெரும்பரப்புச் சமவெளியிலே பெறப்பட்ட நெற்றானியங்களும் தமிழகத் துறைமுகத்தையடைந்தமையைக் குறிக்கும். இப்பிரதேசம் அதன் முன்னைய நிலைமைகளைக் கொண்டு இன்றும் பொம்பரிப்புப் (பொன்பரப்புப்) பற்று என்றே உத்தியோகப் பூர்வமாக அழைக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன குளமான வாவல் குளம் பற்றி மேற்சொல்லிய நூல் விபரிக்கையில் ‘பொன்பரப்பி முழுவதுக்குமான நீர்ப்பாசன வசதியுள்ள பிரதான குளமாகவே இது காணப்பட்டது என்கிறது. இதன் கட்டு மூன்று மைல் நீளமானது. இதற்கான நீர் கண்டி டிஸ்ட்றிக்கிலிருந்து ஒரு ஆற்றின் மூலமாகக் கிடைத்து வந்திருக்கிறது. காசிச் செட்டி முதலியார் கணிப்பின்படி இக்குளம் சீரமைக்கப்பட்டால் மகா பருவத்தில் (பெரும்போகம்) 22500 புசல் அல்லது 15,000 புசல் நெல்லும், யால பருவத்தில் (சிறுபோகம்) 7500 புசல் நெல்லும் விளைவிக்கலாம். 1832ம் ஆண்டில் செய்யப்பட்ட கணிப்பின்படி 5360 பவுன் 01 சிலின் 03 பென்ஸ் செலவாகியிருக்கிறது. இக்குளத்தங் கரையில் சிறாம்பிக்கல்லு என அழைக்கப்படும் அழிவுகள் காணப்படுகின்றன. (நிர்வாக அறிக்கை 1868, (பக்கம் 201)

குதிரை மலை முத்து வியாபாரம் : பொன்பரப்பியின் கடலோரத்தில் கல்பன்டைன் (கல்பிட்டி) என்ற இடத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குன்று குதிரைமலை. (மன்னார் கரைப் பகுதி) ‘.... எட்டாம் நூற்றாண்டளவில் அரேபியாவிலிருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் இம் மலையைச் சூழ குடியிருப்புகளை அமைத்திருந்தார்கள். மன்னாரிலும், மாதோட்டையிலும் வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் முஸ்லிம் தோழர்கள் இதன் கரையோரத்தில் அறுவடையான ஏராளமான முத்துக்களை வாங்கியிருக்கின்றார்கள். இதற்கு அடையாளமாக ஏராளமான பழைய சிப்பி ஓடுகள் கடற்கரையில் காணப்படுகின்றன. இம்மலையின் வட திசையில் ஓலையால் வேயப்பட்ட சிறிய இஸ்லாமி வணக்கத்தலம் காணப்படுகின்றது. (சிலோன் கெஸட்டீர் பி.பி. 142-3) .... (பக்கம் 80)

இவ்விடத்தில் கல்பிட்டி குறிஞ்சிப்பிட்டிக் கிராமம் தந்த மர்ஹும் அசனார் மரைக்கார் செய்கு இஸ்மாயில் புலவர் பாடிய ‘கூரான பார்முகம் குதிரைமலைச் சேர்ந்து...’ என்னும் குதிரை மலைக்கான கப்பல் பயணத் தொடர்பாடலும், புத்தளம் கரைத்தீவு வரகவி மர்ஹ¥ம் செய்கு அலாவுதீன் புலவர் குடும்ப சகிதம் யாழ்ப்பாண வீதி வழியாக மேற்கொண்ட குதிரை மலைக்கான ‘குதிரை மலையின் காரணம் காணலாம் வா...’ என்னும் நூறு வருடங்கள் முந்திய இரண்டு புலவர்களின் பாடல் தொகுதிகளும் இங்கு நினைவு கூறத்தக்கன.

இம்மலைப் பகுதியில் அழிவுற்ற அரண்மனையின் அடையாளங்களும் புராதன பண்ட பாத்திரங்களும் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் இப்பகுதியில் அரசாண்டதாகக் கூறப்படும் அமேசன் அல்லியரசாணியுடைய அரண்மனையாக இவ்வழிவு கருதப்படுகின்றது. மகா பாரதத்தில் வரும் ஒரு கதாநாயகனுடன் இவ்வரசி இணைத்துக் கூறப்படுவதும் உண்டு. (பக்கம் 80) (இக்கதாநாயகன் பாண்டவருள் ஒருவனான அர்ச்சுனன் என நம்பப்படுகின்றது.)

பொம்பரிப்பு : இது புத்தளத்தின் ஒரு பிரதேசமாகும். கிழக்கில் நுவரகலாவையும், தெமல பற்றுவும், மேற்கில் கல்ப்பண்டைன் குடாவும், வடக்கில் மோதரகம் ஆறும் எல்லைகளாகும். மன்னார் மாவாட்டத்திலிருந்து மோதரகம் ஆறு இப்பிரிவை வேறுபடுத்துகின்றது. இது 23 மைல் நீளமுடையதாகவும் எட்டு தொடக்கம் 10 மைல் வரை அகலமானதாகவும் (252 சதுர மைல் பரப்பு) உள்ளது. 35 கிராமங்களில் 498 பேர் வாழ்கின்றனர்.

பாவல்ல குளம் என்ற ஒரு பெரிய குளம் காணப்படுவதோடு, பெரிய கட்டடங்களின் அழிவுகளும் காணப்படுகின்றன. இதன் மூலம் இப்பகுதி ஒரு காலத்தில் சனப்பெருக்கம் நிறைந்ததாகவும், செழிப்பானதாகவும், நெல்விளையும் பூமியாகவும் இருந்திருக்கலாம். தற்போது பெரும் பகுதி அடர்ந்த காடாகவும் தரிசு நிலமாகவும் காணப்படுகின்றது. மேலும் நெய், தேன், தேன் மெழுகு, மான்கொம்பு என்பன கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கப்டன் போர்ப்ஸ் என்பவர் 1826ம் ஆண்டு குருணாகலையிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த போது, ஆற்றுக்குக் குறுக்காக மகாசேன மன்னனால் 1500 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கற்பாலத்தின் அழிவுகளைக் கண்டுபிடித்தார்....’ (பக்கம் 142) அதுபோல காலஓய, மல்வத்துஓய கரைகளில் தூர்ந்துபோன புராதன அணைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனவே மேற்சொல்லப்பட்ட தரவுகள் யாவும் 1902ம் ஆண்டில் பொம்பரப்பி பிரதேசம் வில்பற்று வனவிலங்குச் சரணாலயமாக மாற்றப்படுவதற்கு முன்னர் பெறப்பட்டவையாகவே இருக்க வேண்டும். இப்படியாக சிங்கள இனத்தின் முதல் விவசாயம் மேற்கொள்ளப்படட மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பொம்பரப்பிப் பிரதேசம், ஆங்கிலே யரால் சரணாலயமாக மாற்றப்பட்டதால் மன்னார், யாழ்ப்பாணத்துக்கான கரையோர இலகுப் போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் திறக்கப்பட்ட கரையோரப் பாதை எக்காரணம் கொண்டும் மீண்டும் மூடப்பட அனுமதிக்க முடியாது.

வனவிலங்குகளின் பாதுகாப்புக் கருதி இந்நடவடிக்கை எனில் இலவன்குளம் - மறிச்சிக்கட்டி வரையான யாழ்ப்பாண வீதியின் பகுதியை கடற்கரையையடுத்துப் புதிதாக அமைத்துத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.

இதேவேளை கடந்த நான்காம் திகதியிட்ட தினகரன் நாளேட்டின் (பக்கம் 15) அறிவித்தலில் ‘வில்பத்துத் தேசிய சரணாலயத்தை மேலும் அபிவிருத்தி செய்ய நடிக்கை என்னும் தலைப்பில் வந்த செய்தியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்து முகமாக சுற்றுலா விடுதிகள் அமைக்கவும் 180 கி. மீ. வீதிப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனத் தெரிவிக்க்பபட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com