Contact us at: sooddram@gmail.com

 

மாறி வரும் உலக பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப இந்நாட்டை நாம் மாற்றியமைக்க வேண்டும்

புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்

நேர்கண்டவர் :  பி. வீரசிங்கம்

கேள்வி : புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு என்ற புதியதொரு அமைச்சைப் பொறுப்பேற்றிருக்கிaர்கள். அமைச்சின் நடவடிக்கைகள், எதிர்கால செயற்திட்டங்கள் பற்றி கூறுவீர்களா?

பதில் : இந்தப் புதிய அமைச்சு பொறுப்பை ஏற்று ஐந்து மாதங்கள் ஆகின்றன. முதல் மூன்று அமைச்சுக்களில் இருந்த பிரிவுகளை ஒன்றாக இணைத்து இந்த அமைச்சு உருவாக்கப் பட்டிருக்கிறது. பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் இருந்த ஒரு பிரிவும், நிதி அமைச்சுக்கு கீழ் இருந்த ஒரு பிரிவும், வடக்கு கிழக்கு யுத்தத்தில் முகங்கொடுத்தவர்களுக்கான புனர்வாழ்வு நஷ்ட ஈடு, இறந்தவர்களுக்குரிய கொடுப்பனவுகள், சிறைச்சாலைகளை மறு சீரமைத்தல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய மற்றுமொரு பிரிவுமாக மிகவும் முக்கியமானதொரு அமைச்சாக இது விளங்குகின்றது.

சிறைச்சாலைகள் திணைக்களம், ரெயில்வே திணைக்களம் மற்றும் நில அளவைத் திணைக்களம் ஆகியன மிகவும் பழைமை வாய்ந்தனவாகும். பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றிய பின் ஆரம்பிக்கப்பட்டவை. அவர்களின் தேவைகளுக்காகவே இவற்றை உருவாக்கினர்.

மலைநாட்டிலிருந்து தேயிலையைக் கொண்டு வருவதற்காக ரயில்வே திணைக்களத்தை உருவாக்கினார்கள். காணிகளைப் பகிர நில அளவைத் திணைக்களத்தை உருவாக்கினார்கள். மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதற்காக சிறைச்சாலையை உருவாக்கினார்கள். இவை இதுவரை காலமும் மறுசீரமைக்கப்படாமலே இருந்து வருகிறது. அதனால்தான் ஜனாதிபதி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சாக இதனை மாற்றினார்.

சிறைச்சாலைகள் கண்காணிப்பு பராமரித்தல் என்பது முக்கியமான திணைக்களம் சமூகத்தை மையமாகக் கொண்ட நல்வழிப்படுத்தும் ஒரு நிலையமாக சிறைச்சாலைகளை மாற்றியமைக்க வேண்டும்.

கேள்வி : யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட 12 ஆயிரம் பேரில் இதுவரை எத்தனை பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்?

பதில் : இதுவரை மூவாயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிள்ளைகள், வயோதிபர், அங்கவீனர்கள், பெண்கள் என கணிசமானோரை விடுதலை செய்துள்ளோம். இவ்வாறு விடுதலையான பெண்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் பயிற்சிபெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. யுத்தத்தின் போது புலிகள் இயக்கத்தில் இருந்து யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்ட 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறன. அவர்களைப் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது. எஞ்சியிருக்கும் ஏனையோர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

கேள்வி : அண்மையில் வடபகுதிக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்த்துவிட்டு திரும்பியிருந்தீர்கள்....

பதில் : யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவைகளை நடத்தினோம். அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காண்பதே இதன் நோக்கமாகும். பிரச்சினைகளை மேலோட்டமாக பார்க்காமல் நேரில் ஆராய்ந்தோம். அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள். கணவன்மாரை இழந்த இளம் பெண்கள், சிறையில் இருப்போர், பிள்ளைகளுடன் இருக்கும் இளம் பெண்கள் என பலதரப்பட்டோர் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். மறைந்திருக்கும் பிரச்சினைகளை நடமாடும் சேவையின் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

இதற்காக ஒரு வேலைத் திட்டமொன்று தயாரித்து அமைச்சரவையில் சமர்ப்பித்து அதற்கான நிதியையும் பெற்று தொழில் வாய்ப்பு, வீடுகளை புனரமைத்தல் போன்ற வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகளை புதிதாக குழுவொன்றை அமைத்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சிறைச்சாலைகளில் பாரிய இடநெருக்கடி நிலவுகிறது. 11,000 பேர் இருக்க வேண்டிய சிறையில் 30,000 பேர் இருக்கிறார்கள். இது பாரிய பிரச்சினையாகும். இதனால் இன்னும் பல பிரச்சினைகள். ஒழுங்கு, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடிவெடுத்துள்ளோம். 30,000 பேரில் 40 வீதமானோர் விளக்கமறியலில் இருக்கிறார்கள். சில இடங்களில் விளக்கமறியல் கைதிகளும், சிறைக் கைதிகளும் ஒரே இடத்தில் இருக்கின்றனர். பெண்கள் வேறாகவும், பிள்ளைகள் வேறாகவும் இருக்கின்றனர். களுத்துறையில் பெண்களுக்கென தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 40 வீதமானோர் போதைப் பொருள் பாவனை குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்ட மூலமொன்றை சமர்ப்பித்துள்ளோம். சிறிது காலத்திற்கு தண்டனை அனுபவிப்பவர்கள், முதல் தடவையாக தண்டனை பெறுபவர்கள், விளக்கமறியல் கைதிகள் ஆகியோர் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளை விட பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தீர்ப்பு இல்லாமல் குற்றவாளிகளாக காணப்படாமல் இருந்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கும் வரையில் எவரும் குற்றவாளிகள் அல்ல. அவர்களும் குற்றவாளிகள் போல இருக்கிறார்கள். இதனால் அந்த நிலையை மாற்றி புதிய கொள்கையொன்றை அமுல்படுத்த வேண்டும். மக்களின் செயற்பாடுகளில் மாற்றம் வேண்டும். திணைக்கள உயரதிகாரிகள், உத்தியோகத்தர்களின் எண்ணங்களில் மாற்றம் வேண்டும். அவர்களின் நலன்களிலும் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.

செப்டம்பரில் சிறைச் சாலைகள் தினம் அனுஷ்டிக்கப் படவுள்ளது. ஒரு வாரகாலத்திற்கு பல்வேறு நிகழ்ச் சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

கேள்வி : கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பற்றி கூறுவீர்களா?

பதில் : 1943 ஆம் ஆண்டு இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கட்சியின் அனைத்து மாநாடும் கட்சியின் யாப்புக்கமையவே நடத்தப்பட்டு வருகிறது. எமது அரசியல் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் முடிவுகளை நாம் எடுத்திருக்கிறோம்.

1950 ஆம் ஆண்டு மாத்தறையில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முன்னணியொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க ஐ. தே. கட்சி உறுப்பினராக இருந்தார். ஐ. தே. கட்சிக்குள் பிளவு ஏற்படும் என நாம் கூறியிருந்தோம். பண்டாரநாயக்க வேறு கட்சியை ஆரம்பிப்பார் என எவரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஏகாதிபத்திய த்திற்கு எதிராக ஒரு குழுவும் ஆதரவாக இன்னொரு குழுவுமாக இருந்தார்கள்.

எனவே கட்சிகளுக்கிடையில் முன்னணி யொன்றை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தோம். சமசமாஜக் கட்சி எந்தவித இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை. எனினும் அதில் நாம் வெற்றிபெற்றோம்.

கட்சியின் 5 ஆவது மாநாட்டில் 1955இல் (Way forward) எதிர்கால வழி எனும் பொருளாதார வேலைத்திட்டத்தை முன்வைத்தோம். அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக எஸ். ஏ. விக்கிரமசிங்க இருந்தார். அவருடன் பருத்தித்துறையைச் சேர்ந்த பீ. கந்தையா மற்றும் ஹக்மன பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் குமாரசிறி ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டதுதான் Way forward திட்டம் முதன் முனையாக முன்வைக்கப்பட்ட இது போன்றதொரு திட்டம் இதுவரையிலும் எவரும் முன்வைக்கவில்லை.

9ஆவது மாநாடு 1975இல் நடைபெற்றது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்கால கட்டத்தில் புலிகள் உருவாகவில்லை. ஆனால் நாம் அப்போதே இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பதாகவும் அதற்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். கட்சி ஸ்தாபிக்கப்பட்ட போதே பிராந்திய பொருளாதார மற்றும் பிரதேச சபை நிருவாகம், சுய நிர்வாகக் கோரிக்கையை முன்வைத்திருந்தோம். இன்று அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசப்படுகிறது. பிரிவினைக் கோரிக்கை முன்வைக்கப்படும் போதே பிரச்சினை இருப்பதை சுட்டிக்காட்டினோம். 1995 இல் நடந்த மாநாட்டின் போது சோவியத் வீழ்ச்சியடைந்து இடதுசாரிகள் ஒரு பின்னடைவை எதிர்நோக்கிய காலப் பகுதியில் இது ஒரு தற்காலிக பின்னடைவு எனவும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்திருந்தோம். இப்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளோம்.

நாம் இந்த மாநாட்டை நடத்தும் இவ்வேளையில் நாட்டில் பயங்கரவாதம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. நடந்த 19 மாநாடுகளில் பாதி யுத்த காலப் பகுதியில் தான் நடந்திருக்கிறது. உலகம் மாறுபட்டிருக்கும் நிலையில் இம்மாநாடு நடைபெறுகிறது. தனியொரு வல்லரசாக இருந்த நிலை மாறி இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் எனப் பல வல்லரசுகள் உருவாகியுள்ளன. ஆசியா பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கிறது. 50 வருடங்களுக்கு பின் முதல் தடவையாக இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆசியாவைப் பொறுத்தவரையில் இந்தியா, ஜப்பான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பலம் வாய்ந்த நாடுகளாக மாறியுள்ளன.

கேள்வி : இம்முறை நடைபெறவுள்ள மாநாட்டில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் பற்றி கூறுவீர்களா?

பதில் : கடந்த நான்கு வருடங்களில் எமது நாட்டிற்குள் ஏற்பட்ட வேறுபாடுகள், முகங்கொடுத்த சவால்கள், பெற்ற வெற்றிகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது. முழுப் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எரிபொருள், நிதி நெருக்கடி, உணவு ஆகிய மூன்று விடயங்களுக்கு உலகம் முகங்கொடுத்து கொண்டிருந்தது. எனினும் 2006ம் ஆண்டு நூற்றுக்கு ஏழு சதவீதமும் 2007 இல் 6.8 சதவீதமும், 2008இல் 6 சதவீதமும் யுத்தத்துக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை நாம் எட்டினோம். 2009இல் உலகப் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை அடைந்து கொண்டிருந்த வேளையில் 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்தோம்.

1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறை யிலிருந்து வந்தது. கடந்த இரண்டு வருடங் களுக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நாம் அந்த கொள்கையிலிருந்து தூர விலகிச் சென்று செயற்பட்டதால்தான் எம்மால் இந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கக் கூடியதாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் பல்வேறு சவால்களை வெற்றி கொண்டுள்ளோம். இன்னும் பல சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் தற்போது நாட்டை ஒன்றாக்கியுள்ளோம். அது போதாது. மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும். மக்களை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மொழி, மத, கலாசார, பண்பாட்டு பிரச்சினைகளுக்கு நாம் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன் மூலமே இனங்களை ஒன்றுபடுத்த முடியும்.

நாட்டை ஐக்கியப்படுத்தி சமூகத்தை ஐக்கியப்படுத்தாவிட்டால் அதைச் சரியாகப் பேணமுடியாது. அதனால் எமது கட்சி மாநாட்டில் நாம் முக்கியமாக அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசவுள்ளோம் தமிழ் முஸ்லிம் மக்களை அதற்குள் இணைத்து இவ்வாறானதொரு செயற்பாட்டுக்கு நாம் முன்வரவேண்டும்.

அடுத்ததாக எம்முன் உள்ள சவால்தான் அரசியலமைப்பு திருத்தமாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் கடந்த 30 வருடங்களாக ஒரே அரசியலமைப்பின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போது புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்க வேண்டியதொரு காலம் உதயமாகியிருக்கிறது. அதனால் எமது கவனத்தை அதன் பக்கம் திருப்ப இருக்கிறோம்.

1978ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பை கொண்டு வந்தவர் ஜே. ஆர். ஜயவர்த்தன. அந்த திறந்த பொருளாதார முறை இன்று தோல்வியடைந்திருக்கிறது. அதனால் எமக்குப் பொருத்தமான, உசிதமான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம்முன்னால் உள்ளது.

கேள்வி : தற்போதைய தேர்தல் முறையில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென கருதுகிaர்கள்?

பதில் : புதிய தேர்தல் முறையொன்றை உருவாக்க வேண்டியிருக்கிறது. தற்போதுள்ள தேர்தல் முறையின் மூலம் வன்முறைகளை நிறுத்த முடியாது. 30 வருட காலமாக யுத்தத்திற்கு முகங்கொடுத்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் சிக்குண்டிருந்த அப்பாவி மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும். வீதிகளை திருத்துவது, ரயில் பாதையமைப்பது இவையெல்லாம் தேவைதான். ஆனால் அதற்கு முன் அந்த மக்களின் பொருளாதாரத் தேவைகளையும் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்து கொடுக்க வேண்டும். காணிப் பிரச்சினை, நீர் விநியோகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அரச சேவை இன்று ஊழல் நிறைந்ததாகவும், சோம்பேறித்தனம் கொண்டதாகவும் மாறியிருக்கிறது. இவற்றைத் திருத்த வேண்டும். கடந்த நான்கு வருடங்களில் அரச சேவைகளை சீர்படுத்துவது என்றதொரு திட்டம் ஜனாதிபதியிடம் இருந்தது. இன்றைய முறையாக அதனை மறுசீரமைக்க வேண்டும். நமது நாட்டின் பொருளாதார நிலையானது, 60 வருடங்களுக்கு முன்பிருந்தது போன்றதல்ல. அன்று தேயிலை, தென்னை, இறப்பர் போன்றன மட்டுமே இருந்தன. தற்போது அது முழுமையாக மாறியுள்ளது. நாம் இன்னமும் வெளிநாடுகளிலேயே தங்கியிருக்கிறோம். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலாத்துறை, ஆடைத்தொழிற் துறைகளை குறிப்பிடலாம். உலகத்தில் நிலவும் நெருக்கடிகள் எம்மையும் தாக்கலாம். எமது பொருளாதாரம் மிகவும் குறுகியது. எங்களது பொருளாதாரத்தின் அளவு 32 பில்லியன். முழு உலக பொருளாதாரத்தின் அளவு 60000 ஆகும். நாம் 32/60000த்தில் இருக்கிறோம். பெரியதொரு சமுத்திரத்தில் சிறிய தீவாக நாம் இருக்கிறோம். உலகில் மாற்றம் ஏற்படும் போது இது பாரிய தாக்கத்தை எம்மில் ஏற்படுத்தும்.

உணவு நெருக்கடியை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எடுத்துக்காட்ட வேண்டும் 32 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச ரீதியில் நல்லதொரு நிலை ஏற்பட்டிருக்கிறது. நாட்டை ஐக்கியப்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையின பிரச்சினை, அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை, நாட்டை நிர்வகிக்கும் பிரச்சினை, சீரான நிர்வாகம் ஆகிய பிரச்சினைகளை தனியொரு அரசால் அல்லது தனிக்கட்சியால் மட்டும் செய்ய முடியாது. அனைத்துக் கட்சிகளும் ஆராய்ந்து பேசி கூடி முடிவெடுக்க வேண்டும். இந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம். இதனையே மாநாட்டில் முன்வைக்க இருக்கிறோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com