Contact us at: sooddram@gmail.com

 

சுப்பர் பக்இந்தியாவை குறிவைத்து ஏவப்பட்ட ஆயுதமா?

(வாசுகி சிவகுமார்)

சுப்பர் பக்’ (Super Bug) என்றவுடன், இது ஏதோ கணனியுடன் தொடர்புபட்ட சொல்லோ என்று பலர் எண்ணக்கூடும். ஆனால் இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசை களை அடிக்கடி பார்ப்பவர்களுக்கு அது மிகவும் பரிச்சயமான வார்த்தை. சில காலமாக, இந்தியாவை உலுக்கி வரும் ஒரு பற்றீரியாவின் பெயர்தான் அது.

இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ ஆராய்ச்சி இதழான லன்செட்டில்சுப்பர் பக்பற்றி வெளியாகியிருக்கும் கட்டுரைதான் சமீபகால பரபரப்பு களுக்கெல்லாம் காரணமானது. எந்த நோயெதிர்ப்பு மருந்துக்கும் (Antibiotics) கட்டுப்படாத நியூடெல்லி மெதெல்லோ பீட்டா லக்டமேஸ் - 1 எனும் மரபணுவைக் கொண்ட பற்றீரியாக்கள் இந்திய மருத்துவ மனைகளில் பரவுவதாக, லன் செட் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது. 31 ஆராய்ச்சியாளர்கள் இக்கட்டுரைக்கு பங்களிப்புச் செய்திருந்தனர். அவர்களில் 16 பேர், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றுபவர்கள்.

எந்த நோயெதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாத பற்றீரியாக்கள் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பரவிவருவதாக இச்சஞ்சிகை தெரிவித்துள்ளது.

ஈகோலி போன்ற பற்றீரியாக்களிலேயே எந்தவொரு நோயெதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாத NDM – 1 என்ற மரபணு காணப்படுகிறது. ஈ-கோலி என்ற பற்றீரியா மனிதர்களில் சிறுநீர்க் குழாய்களிலும் நுரையீரலிலும் தொற்றினை ஏற்படுத்தக் கூடியவை. இந்த பற்றீரியாக்களில் காணப்படும் NDM – 1 எனும் மரபணுக்கள், மிகச் சக்திவாய்ந்த நோயெதிர் மருந்துப் பொருட்களைக் கூட அழிக்கவல்ல நொதியச் செயற்பாடுகளைக் கொண்டவை.

எனினும் சுப்பர் பக்குகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதற்தடவையல்ல.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, எந்தவிதமான நோயெதிர்ப்பு மருந்தும் பலனளிக்காத போது மிகவும் சக்தி வாய்ந்த கார்பபீனீம்ஸ் எனும் நோயெதிர் மருந்துப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நோயெதிர் மருந்துப் பொருட்களில் அதிசக்தி வாய்ந்தவையாக இவை கருதப்படுகின்றன.

இங்கிலாந்தில் 37 பேருக்கு சுப்பர் பக் கிருமித் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவ்வாறு இனம்காணப்பட்டவர்களில் 17 பேர், மருத்துவ சிகிச்சைகளுக்காக, இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சென்று திரும்பியவர்கள். அதிலும் குறிப்பாக அழகுச் சீரமைப்பு சிகிச்சைகளுக்காக இந்நாடுகளுக்கு மருத்துவ பயணத்தை மேற்கொண்டவர்கள். சரி 17 பேர்தான் இந்தியாவுக்கு மருத்துவப் பயணத்தை மேற்கொண்டவர்கள் என்றால் ஏனையோருக்கு எவ்வாறு தொற்றியது? பொதுவாக, நோயெதிர்ப்பு மருந்துப் பொருட்களுக்குக் கட்டுப்படாத கிருமிகள் உருவாகுவதற்கு, நோயெதிர்ப்பு மருந்துப் பொருட்கள் அளவுக்கதிகமா பாவிப்பதே காரணம். இதனால் தான் மருந்துச் சிட்டை இல்லாமல் வரும் எவருக்கும் நோயெதிர்ப்பு மருந்துப் பொருட்களை (Antibiotics) வழங்கக்கூடாதென்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அவ்வாறில்லை. மருத்துவரின் மருந்துச் சீட்டை இன்றியே, மருந்துக் கடைகளில் நோயெதிர்ப்பு மருந்து வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.

மருந்து ஆலோசனை இன்றி இவ்வாறான நோயெதிர்ப்பு மருந்து பொருட்கள் அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படுவது, அம்மருந்துப் பொருட்களுக்கு இசைவாக்கமுடைய கிருமிகள் தோன்றுவதற்கே வழிவகுக்கும்.

இந்தியாவில் நோயெதிர்ப்பு மருந்துப் பொருட்கள் அளவுக்கதிகமாகப் பாவிக்கப்படுகின்றன என்பதை இந்திய மருத்துவத்துறை ஏற்றுக்கொண்டே வந்திருக்கின்றது.

லன்செட்மருத்துவ சஞ்சிகையின்சுப்பர் பக்பற்றிய கட்டுரையின், இறுதியில் இந்திய மருத்துவமனைகளில் இக்கிருமிகள் கட்டுப்பாடின்றிப் பெருகுவதால், இந்தியாவுக்கான மருத்துவப் பயணங்களை பிரித்தானியர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

இக்கட்டுரைக்கான ஆய்வை மேற்கொண்ட 16 ஆசிரியர்களில் சென்னைப் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் பிரிவைச் சேர்ந்த கார்த்திகேயன் குமாரசாமியும் ஒருவர். ஆரம்பத்தில் தான் மிகவும் குழப்பமடைந்த நிலையில் இருப்பதாகவும் இது குறித்துக் கருத்து எதனையும் கூற முடியாதெனவும் மறுத்த அவர், பின்னர் இக்கட்டுரையின் கடைசிப் பந்தி தனக்கு உடன்பாடானதல்ல எனக் கூறியிருக்கிறார். சுப்பர் பக் குறித்த ஆய்வுப் பணிகளில் தான் ஈடுபட்டிருக்க, திமொறி வோல்ஷ் கட்டுரையை செம்மைப் படுத்தினார். எனக்குக் காட்டப்பட்ட கட்டுரையில் இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலாக்களை மேற்கொள்ள வேண்டாமெனக் கூறும், இந்தியாவுக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வாசகங்கள் எவையும் இருக்கவில்லை என்றும் அவை நன்கு திட்டமிடப்பட்டு பின்னர் இணைக்கப்பட்டிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இவ்வாய்வில் ஈடுபட்ட மற்றொரு இந்தியரான பத்மா கிருஷ்ணன், நோயாளர்களின் நன்மையைக் கருத்திற் கொண்டே இவ்வாய்வுகள் மேற்கொள்ளப் பட்டதாகக் கூறுகிறார்.

நியூடெல்லி மெதெல்லோ பீட்டா - லக்டமேஸ் - 1 என இந்த சுப்பர் பக்குக்கு பெயரிடப்பட்டதிலும் பிரச்சினை எழுந்துள்ளது. இது உண்மையில் இந்தியாவில் உருவான கிருமியல்ல என்கின்றார்கள் ஆய்வாளர்கள். காரணம், சுப்பர் பக் பற்றிய எச்சரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் 2009ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதியே முதன் முதலில் விடுத்தது. அப்போது இந்தியாவைப் பற்றி அது எதுவும் கூறவில்லை. கிரேக்கம், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் சுப்பர் பக் எனும் கிருமி பரவிவருவதால் அந்நாடுகளுக்குச் செல்வது குறித்து அவதானமாக இருக்கும்படி பிரிட்டிஷ் அரசாங்கம் அப்போது அறிவித்திருந்தது.

ஆனால், லன்செட்டின் கட்டுரையின் பிரகாரம், 2009ஆம் ஆண்டில் புதுடெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவீடிஷ் பிரஜையொருவரிடமே சுப்பர் பக் முதன் முதலில் இனம் காணப் பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுப்பர் பக் கிருமித் தொற்றுக்குள்ளான பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் உயிரிழந்திருக்கிறார். இந்நோய்க் கிருமியின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

மிகவும் சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு மருந்துகள் (Antibiotics) வழங்கப்பட்டும் இவர் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார்.

நோயெதிர்ப்பு மருந்துப் பொருட்களுக்குக் கட்டுப்படாத கிருமிகள் தோன்றுவது. இதுவே முதல் தடவை அல்ல. எயிட்ஸ் நோய்க் கிருமிகள் கூட மருந்துகள் எவற்றுக்கும் கட்டுப்படாதவை. இதற்கு முன்னரும் சுப்பர் பக் பற்றிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் அவை இந்த அளவில் பெரிதுபடுத்தப்படவில்லை. லன்செட் என்னும் மருத்துவ ஆய்வுச் சஞ்சிகையில் சுப்பர் பக் பற்றி வெளியான கட்டுரையின் இறுதியில் இந்தியாவுக்கான மருத்துவச் சுற்றுலாவைத் தவிர்த்துக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது குறித்த ஆய்வில் ஈடுபட்ட இந்திய ஆய்வாளர்களுக்குத் தெரியாமலேயே இவ்வரிகள் கட்டுரையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பது இந்தியாவின் மருத்துவச் சுற்றுலாவைத் திட்டமிட்டே வீழ்த்தும் சதி என்று இந்திய அரசு குற்றம் சாட்டியிருக்கின்றது.

மேற்படி ஆய்வுக்கு மருத்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களே நிதியுதவியளித்துள்ள நிலையிலும் நோயெதிர்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமிகள் பல இருக்கின்ற நிலையிலும் இத்தியாவுக்கான மருத்துவ சுற்றுலாவைத் தவிர்க்குமாறு லன்செட் சஞ்சிகை அறிவுறுத்தியிருப்பது இந்தியா வின் மருத்துவச் சுற்றுலாவை திட்டமிட்டு களங்கப்படுத்தும் நடவடிக்கை என்று இந்திய அமைச்சர்கள் பலர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டினரின் மருத்துவச் சுற்றுலாக்களால் இந்தியாவுக்கு வருடாந்தம் 5000 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கின்றது. 2012 ஆம் ஆண்டாகும் போது இது 2.4 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமருன் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு அதனுடனான வர்த்தக உறவுகளை மேலும் விரிவாக்குவது பற்றிக் கலந்துரையாடிவிட்டுச் சென்ற சில நாட்களில் பிரிட்டனில் இருந்து வெளியாகும் இச் சஞ்சிகை இந்தியாவுக்கான மருத்துவச் சுற்றுலாக்களைத் தவிர்க்கும்படி கட்டுரை வெளியிட்டிருப்பதும் கவனத்திற் கொள்ள வேண்டியவை.

எது எப்பிடியிருப்பினும் உலகில் சுப்பர் பக் எனும் கிருமி வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பரவுகையைக் கட்டுப்படுத்துவது பற்றிச் சிந்திப்பதே சாலச் சிறந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com