Contact us at: sooddram@gmail.com

 

என்ன நடக்கிறது காஷ்மீரில்?

(பாரதிதம்பி)

பாரமுல்லா மாவட்டத் தைச் சேர்ந்த 14 வயது வாமிக் ஃபாருக் குக்கு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்கள் என்றால் அவ்வளவு பிரியம். அறிவியல் பாடங்களில் அவன்தான் பள்ளியில் முதல் மதிப்பெண். ஸ்கூலில் இருந்து வீடு திரும்பியதும் நீல நிற யூனிஃபார்மைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர்களுடன் விளையாடப் போனான். தெருவோர வியாபாரியான ஃபாரூக்கின் அப்பா வீட்டில் இல்லை. ஃபாரூக்கின் அம்மா மைசூன் வீட்டில் இரவு உணவு தயாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெரும் சத்தம் வெளியே கேட்டது. மைசூனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்தது, அது துப்பாக்கிச் சூடு என்று. பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தார். அங்கே ஃபாரூக், தலையில் பாய்ந்த குண்டுடன் ரத்தம் வழிய இறந்துகிடந்தான். ஒரே மகன் ஃபாரூக் அவர்களை விட்டுப் போய் விட்டான். இப்போது இந்திய ராணுவத்தை எதிர்த் துப் போராடி காயம்பட்டவர்களுக்காக அமைக்கப் பட்டு இருக்கும் ரத்ததான முகாமில் அமர்ந்திருக்கிறார் மைசூன்.

"காஷ்மீரிகள் எதற்குச் சுதந்திரம் கேட்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை. என் செல்ல மகன் ஃபாரூக் இறந்த பிறகு எனக்கு எல் லாம் தெளிவாகப் புரிகிறது. எங்களுக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல; சுதந்திரம்!" என்கிறார் மைசூன். இவர் மட்டும் அல்ல; எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லாத சாதாரண காஷ்மீர் பெண் கள் இன்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். ராணுவத்தின் துப்பாக்கிகளை எதிர்த்து 15 வயதுச் சிறுவன் கல் எறிகிறான். ஒரு முஸ்லிம் பெண் கை யில் கற்களைப் பொறுக்கி இளைஞர்களுக்குத் தரு கிறார். காஷ்மீரின் போராட்ட வரலாற்றில் இத்த கைய காட்சிகள் புத்தம் புதியவை!

பற்றி எரியும் காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த 60 நாட்களில் 53 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆனாலும், காஷ்மீரிகளின் போராட்டம் தொடர்கிறது. "இத்தனை நாட்கள் இயக்கங்கள் துப்பாக்கிகளால் சுட்டபோது 'அவற்றை பாகிஸ்தான் தருகிறது' என்றார்கள். இப் போது அந்த மக்கள் கற்களைக்கொண்டு போராடு கின்றனர். கற்களையுமா பாகிஸ்தான் தருகிறது?" என்று காட்டமாகக் கேட்கிறார் காஷ்மீர் பிரச் னையில் தொடர்ந்து அக்கறை காட்டி வரும் பேராசிரியர் கிலானி. ஐந்து லட்சம் ராணுவத் துருப்புகள், பல்லாயிரக்கணக்கான துணை ராணு வப் படைகள், உள்ளூர் போலீஸ் என காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவத்தால் நிரப்பப் பட்டு இருக்கிறது. ஏன்... என்ன நடக்கிறது காஷ் மீரில்? அதற்கு காஷ்மீரின் வரலாறு கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும்.

காஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்னையோ, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான இடம்பிடிக்கும் போட்டியோ அல்ல; அதன் வேர் இந்தியப் பிரிவினையில் இருந்து தொடங்குகிறது. காஷ்மீரில் பெரும்பகுதி முஸ்லிம் மக்கள் இருந்தபோதிலும் சுதந்திரத்தின்போது ஹரிசிங் என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார். அவர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்தார். அந்த நிலையில், பாகிஸ்தானின் பஸ்தூன் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது படை எடுத்தனர். அதைச் சமாளிக்க முடியாத ஹரிசிங், நேருவுடன் ஒப்பந்தம் போட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார். இப்படித்தான் காஷ் மீர் இந்தியாவுக்கு வந்தது. பின்னர் படிப்படியான நிகழ்வுகளின் காரணமாக அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த இணைப் பில் மிக முக்கியமான அம்சம் என்பது 'காஷ்மீர மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என்பது தான். ஆனால், இன்று வரை அப்படி ஓர் ஓட்டெ டுப்பு நடத்தப்படவில்லை. நேருவும் அதன் பின் வந்த யாருமே அந்த ஓட்டெடுப்பு நடத்த துணியவே இல்லை. காஷ் மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றி 'சுதந்திர காஷ்மீர்' கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள். 50 ஆண்டு கள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980-களின் பிற்பகுதியில் போராட்டம் ஆயுத வடி வம் எடுத்தது. காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ப தாலும், அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும் தந்திர மாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ் தான். அதன்பிறகு போராட்டம், தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது. அந்த அழகிய பள்ளத்தாக்கு படிப்படியாக ரத்தப் பிரதேசம் ஆன கதை இது தான்.

காஷ்மீருக்கு நேரடியாகச் சென்று வந்தவரும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளருமான கோ.சுகுமாரனிடம் பேசியபோது, "இந்தியாவின் உச்சியில் இருக்கும் காஷ்மீரின் மேல் பகுதியை 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' என்று இந்தியா சொல்கிறது. கீழ்ப் பகுதியை 'இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர்' என பாகிஸ்தான் சொல்கிறது. 'ஆனால், உண்மையில் இரு நாடுகளும் சேர்ந்து எங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன' என்பதே பூர்வீக காஷ் மீரிகளின் முழக்கம். பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லிம் கள் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்பவில்லை. இரு தரப்பும் முஸ்லிம்கள்தான் என்றாலும் அடிப் படையிலேயே வேறுபாடு இருக்கிறது. பாகிஸ்தானின் முஸ்லிம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந் தவர்கள். காஷ்மீரின் முஸ்லிம்கள் 'சூஃபி' வகையைச் சேர்ந்தவர்கள். தங்களைத் தனித்த தேசிய இனம் என வகைப்படுத்தும் காஷ்மீரிகள் 'சுதந்திர காஷ்மீர்' கேட்கின்றனர். இதை இந்தியாவோ, பாகிஸ்தானோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் காஷ்மீரி களைப் பிரதிநிதிகளாகக்கூட அழைப்பது இல்லை. ஆனால், இரு தேசங்களுக்கும் இடையிலான போரில் இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகள் கொல் லப்பட்டு இருக்கின்றனர். காஷ்மீரின் பல பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் விளக்கு ஏற்றக் கூடாது. அங்கு பயன்படுத்தப்படும் செல்போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. (ஏனெனில், எஸ்.எம்.எஸ் தகவல்களைக் கண்காணிக்க முடியாது). எந்த நேரத்திலும், யார் வீட்டிலும் நுழைந்து சோத னையிடும் அதிகாரம் ராணுவத்துக்கு உண்டு. சித்ரவதையால் கொல்லப்பட்ட உடல்கள் வீதிகளில் திடீர் திடீரென வீசப்படும். எல்லைக்கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால், பாஸ்போர்ட்டும் விசாவும் வாங்க வேண்டும். அங்கு துப்பாக்கிச் சத்தம் கேட்காத நாள் என ஒருநாள்கூட இல்லை!" என்கிறார்.

தற்போதைய பிரச்னையின் தொடக்கம் எது? காஷ்மீருக்கு நேரடியாகச் சென்று வந்தவரும் அதைப் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருபவருமான பேராசிரியர் அ.மார்க்ஸிடம் பேசினோம். "கடந்த ஏப்ரல் மாதம் மச்சில் என்ற ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை தினம் 500 ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இந்திய ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வைத்துக் கொல்லப்பட்டனர். 'அவர்கள் தீவிரவாதிகள்' என வழக்கம்போல ராணுவம் அறிவித்தது. ஆனால், அது அப் பட்டமான கொலை என்பதும், தங்களின் பதவி உயர்வுக்காக ராணுவத்தினர் அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றதும் மிக விரைவில் ஆதாரத்துடன் அம்பலமானது. காஷ்மீர் முழுவதும் இது மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இளைஞர்கள் முன்னணியில் இருந்து ஆக்ரோஷத்துடன் போராடினார்கள். ஆனால், ஆயுதப் போராட்டமாகவோ, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதாகவோ இல்லை. போராட்டம், தன்னெழுச்சியான தெருச் சண்டையாக இருந்தது. இளைஞர்கள் திரண்டு நின்று, ஆயுதம் தாங்கிய படை வீரர்கள் மீது கற் களை வீசித் தாக்கினார்கள். அவர்கள் மீது துணை ராணுவப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட் டில், கடந்த 60 நாட்களில் மட்டும் 52 பேர் கொல் லப்பட்டு இருக்கின்றனர். அதில் சிறுவர்களும் அடக்கம். இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் தலைகளில் குடங்களுடனும், கைகளில் கற்களுடனும் சாலைகளில் திரள்கின்றனர். காயம்பட்டு மருத்துவமனைகளில் இருப்போருக்கு ரத்த தானம் அளிக்க மக்களே முகாம்கள் அமைத்துள்ளனர். போராடுபவர்களின் உணவுக்கு பெரிய அளவில் சமூக உணவுக்கூடங்களை அமைத்துள்ளனர். காஷ்மீர் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்தது இல்லை.

விவரம் அறிந்த வயதில் இருந்து ராணுவக் கெடுபிடி, கடும் அடக்குமுறை, மனித உரிமை மீறல்களுக்கு மத்தியில் வளர்ந்தவர்கள் அவர்கள். வாழ்வின் பாதி நாட்களை ஊரடங்கு வாழ்வில் கழித்தவர்கள். தற்போதைய ஆக்ரோஷமான எதிர்ப்புக்கு இதுதான் பின்னணி. ஆனால், அரசு இதை இந்தக் கோணத்தில் அணுகத் தயாராக இல்லை. 'வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது, லஷ்கர்-இ-தொய்பா பின்னணியில் உள்ளது' என்று சொல்லிக்கொண்டு இருப்பது பிரச் னையைத் தீர்க்காது. அங்கு நடப்பது அரசியல் போராட்டம். முதலில் இதைப் புரிந்துகொள்ளவேண் டும்.

தற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்கள் எந்தத் திசையில் செல்லும் என யாராலும் கணிக்க முடியவில்லை. யார் சொல்லியும் அதை நிறுத்தமுடி யாது. ஏனெனில், அது யார் சொல்லியும் தொடங் கியது அல்ல; இந்திய அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களே மக்களுக்காக மக்களைக் கொண்டு நடத்தும் போராட்டத்தை எப்படி அடக்குவது? ஒரே வழி, அவர்களின் அரசியல் கோரிக்கையைத் தீர்ப்பதுதான்!" என்கிறார் மார்க்ஸ்.

அந்த அழகிய பள்ளத்தாக்கின் அமைதி எப்படி யேனும் மீட்கப்பட வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசை!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com