Contact us at: sooddram@gmail.com

 

தமிழகம் வந்து கதறும் தமிழீழ மீனவர்கள்!

உரிமைக்கு உதவவில்லை.. உயிருக்கு உதவுங்கள்!

''உரிமை கேட்டுப் போராடியபோதுதான் உதவவில்லை. உயிர் வாழ்வதற்காகவாவது உதவுங்கள்'' என்ற வேண்டுகோளுடன் தமிழக மண்ணில் கால் பதித்து இருக்கிறார்கள், நம் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழ் மீனவர்கள்! ஈழத் தமிழ்ப் போராட்டத்தில், உயிர்களையும் உடைமைகளையும் மட்டுமின்றி, தங்கள் குலத் தொழில்களையும் இழந்து நிற்கின்றனர் இலங்கைத் தமிழ் மீனவர்கள். அதில் ஒன்றுதான் மீன்பிடித் தொழில்!

கடல் தொழிலையே நம்பி இருந்த இந்த வடபகுதித் தமிழர்களை இலங்கை அரசு பாதுகாப்பு என்ற பெயரில், கடலில் படகு ஓட்டத்தடை விதித்தது. இதனால், 1980-களில் மீன்பிடித் தொழிலில் நவீனத்தைப் புகுத்திய இலங்கைத் தமிழ் மீனவர்கள், முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மீன்பிடித் தொழிலில் கற்றுக் குட்டிகளாகிவிட்டனர். போர் முடிவுக்கு வந்த நிலையில், தங்கள் குலத் தொழில்களில் மீண்டும் ஈடுபட இலங்கை மீனவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி தந்திருக்கிறது ராஜபக்ஷே அரசு. மீன் பிடிக்க அனுமதி கிடைத்தாலும், தமிழக மீனவர்களால் தங்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருக்கும் வழிவகை குறித்து ஆலோசிக்க இலங்கைத் தமிழ் மீனவர் குழு ஒன்று, கடந்த 17-ம் தேதி ராமேஸ்வரம் வந்தது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க யாழ்ப்பாணம், வடமராச்சி, வன்னி, மன்னார் பகுதிகளைச் சேர்ந்த மீனவ அமைப்பு களின் நிர்வாகிகள், பேசாலை பங்குத் தந்தை புஷ்பராஜ், இலங்கை மீன் துறை இணை இயக்குநர் லால் டிசில்வா மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட 21 பேர் வந்தனர்.

ராமேஸ்வரம் தீவு மீனவர்களால் வரவேற்கப்பட்ட இவர்கள், மறுநாள் காலை பாம்பன், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகங்களுக்கு சென்று, அங்கு இருந்த நம் மீனவர்களின் படகுகளைப் பார்த்து வியந்ததுடன், மீன்பிடி முறைகளையும் கேட்டனர். அன்று மாலை தங்கச்சிமடத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு முன், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட 'நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு' நிர்வாகி களான விவேகானந்தன், யு.அருளானந்தம் ஆகியோரிடம் பேசினோம்.

''83-ம் ஆண்டில் இருந்தே இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே மீன் பிடிப்பதில் பிரச்னைகள் உள்ளன. அங்கே போர் முடிவுக்கு வந்த நிலையில், இனி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவை, இந்தப் பிரச்னையில் இரு நாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை எட்ட வேண்டும். மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாத திட்டத்தால் அரசுகளால் ஏதும் செய்ய முடியாது. தற்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் நம்மால் பாதிக்கப்படாமல் இருக்கவும், நமது மீனவர்களும் பாதிக்கப்படாத வகையிலும் இருக்க இந்தப் பேச்சுவார்த்தை வழி வகுக்கும்!'' என்றனர்.

கலந்தாய்வுக் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய இலங்கை மீனவர் குழுத் தலைவர் சூரியகுமரன், ''பரஸ்பரமாக மீன் பிடித்த நமக்குள் கால மாற்றமும், தொழில் மாற்றமும் பிரச்னைகளை ஏற்படுத்தி விட்டன!

உங்கள் பகுதியில் இருக்கும் ஆயிரம் படகுகளைப் பார்த்து எங்களுக்கு வருத்தமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இப்போதே இங்கு மீன் வளம் நீர்த்துவிட்டது. இனி எதிர்கால சந்ததிகளின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற நிலையில் நீங்கள் எங்கள் பிரதேசத்துக்குள் மீன் பிடிக்க வருகிறீர்கள். நீங்கள் வரும் டிராலர்கள் எங்கள் மக்களின் சிறு வலைகளை நாசப்படுத்துகிறது. எங்கள் கரையில் இருந்து பார்த்தால், உங்கள் டிராலர்களின் வெளிச்சம் தெரியும் அளவுக்கு எல்லை தாண்டி வருகிறீர்கள். மீன் வளத்தை அழிக்கும் தங்கூசி (நைலான்) வலைகளைப் பயன்படுத்தித் தொழில் செய்கிறீர்கள். இதனால் எங்கள் பிரதேசமும் மீன் இல்லாப் பிரதேசமாக மாறிவிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. ஏற்கெனவே, எல்லாம் இழந்து தவித்து எஞ்சி இருக்கும் மக்களின் வாழ்க்கைக்கு ஊறு ஏற்படுத்த வேண்டாம் என முறையிடவே வந்துள்ளோம். எங்கள் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள். எல்லை தாண்டி வந்தாலும் எங்கள் கட்டுப்பாட்டை மீறாதீர்கள்!'' என தாங்கள் வந்த நோக்கத்தை விவரித்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே.போஸ், அந்தோணி ஆகியோர், ''குறைந்த கடல் பரப்பைக்கொண்ட நாங்கள் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாதது. மீனுக்கும் மீனவனுக்கும் எல்லைகள் கிடையாது. எங்களை நவீன மீன் பிடிப்புக்குத் தள்ளியது எங்கள் அரசுதான். அதன்படி ஆண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே நாங்கள் தொழில் செய்கிறோம். இதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆண்டு முழுவதும் உயிர் வாழ்கின்றன. அதனால்தான் 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய இந்தத் தொழில் இப்போது 50 லட்சம் வரை உயர்ந்துவிட்டது. இந்த நிலையில், உடனடியாக எங்கள் தொழிலை மாற்றச் சொல்லி முறையிடுவது ஏற்கக்கூடியதாக இல்லை. ஆனாலும், உங்கள் கஷ்டங்களையும் நாங்கள் புரிந்துகொண்டு, காலப்போக்கில் எங்கள் மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்வோம்'' என உறுதியளித்தனர்.

(நன்றி: ஆனந்தவிகடன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com