Contact us at: sooddram@gmail.com

 

போபால் படுகொலை: தரும் படிப்பினை

(இ.பொன்முடி)

1984 டிசம்பர் 2ஆம் தேதி இரவு மத் தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நக ரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான யூனி யன் கார்பைடு கம்பெனியிலிருந்து பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுத்தப் பட்டு வரும் விஷவாயுவானமீத்தைல் ஐசோ சயனைட்டேங்க் வெடித்து காற்றில் கலந்த சில நிமிடத்தில் மக்கள் மூச்சுத்திணறி விழித்தவுடன் விழிபிதுங்கி செத்தார்கள். திசை தெரியாமல் தப்பியோட முயன்றவர்கள் மிதிபட்டு செத்தார்கள். பிணத்தோடு பிண மாக குற்றுயிரும் குலைஉயிருமாக கிடந்தவர் கள் நாய்களால் கடிக்கப்பட்டும், கழுகுகளால் கொத்தப்பட்டும் மெல்ல மெல்ல துடிதுடித்துச் செத்தார்கள். அன்று தன் கண்முன்னே மூச் சுத்திணறிய பிள்ளைகளை பார்த்த பெற் றோர்கள் சிலர் இன்னும் மனநோயிலிருந்து மீளவில்லை. பல குழந்தைகள் அனாதையாகி விட்டனர். இந்த விபத்தால் 23 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 3 லட்சம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர்.

நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த கொடூரமான விபத்து சம் பந்தமாக ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் மக் களவையில் விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது கார்ப்பரேட் நிறுவனம் செய்த மனித இனப்படுகொலை என்றும், இந்த விபத்து சம்பந்தமான வழக்கில் முக்கிய நபரான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆண்டர்சன் தப்பிய தற்கு ராஜீவ் காந்தி அரசு அனுமதித்துள்ளது என்று குற்றம் சுமத்தினார். இந்த விபத்து நடந்தபோது மத்தியப்பிரதேச முதல்வராக இருந்த அர்ஜூன் சிங், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஆண்டர்சனை ஜாமீ னில் விடவேண்டும் என்று வற்புறுத்தியதால் விடுதலை செய்து விமானத்தில் ஏற்றி அனுப் பியதாகவும் கூறினார். 91 வயதான ஆண் டர்சன் நியூயார்க் புறநகர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சுகமாகவும், சொகு சாகவும் வாழ்ந்து வருகிறார்.

இது விபத்தல்ல, படுகொலை!

இந்த நிகழ்வை பத்திரிகைகளும்போபால் விபத்து’, ‘போபால் துயரம்என்று விவ ரிக்கின்றனர். உண்மையில் அது ஒரு படு கொலை. மீத்தைல் ஐசோ சயனைட் என்ற நச்சுவாயுவிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் யூனியன் கார்பைடின் அபாயகரமான தொழில்நுட்பம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டி ருந்தது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் போபாலில் இந்த உற்பத்தியை செய்வதற்கு யூனியன் கார்பைடு கம்பெனி தேர்வு செய்தது. 1975இல் மத்திய அரசு மீத்தைல் ஐசோ சயனைட் என்ற விஷவாயுவை பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்க உரிமம் வழங்கியதுடன், ஆராய்ச்சி என்ற பெயரில் இரசாயன பரிசோதனை நடத்துவதற்கும் அனுமதியளித்தது.

தொற்றுநோய்களுக்கான மருத்துவமனை கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகள், அபாயகரமான ஆலைகள் போன்றவற்றை ஊருக்கு தொலைவில்தான் அமைக்க வேண் டும் என்பது பொது விதி. ஆயினும் யூனியன் கார்பைடு கம்பெனி கேட்டுக்கொண்டபடி போபால் நகரில் இக்கம்பெனியை அமைத் துக்கொள்ள மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு அனுமதியளித்தது. நச்சுவாயுக்கள், இரசாயன பொருட்களை கையாளும் இக்கம்பெனி நிர்வாகம் கம்பெனியில் விபத்து நேர்ந்தால் செய்து கொள்ள வேண்டிய தற்காப்பு ஏற்பாடு கள் என்ன என்பதை சுற்று வட்டார மக்களுக்கு விளக்க வேண்டும் என்ற விதியையும் பின் பற்றவில்லை. 1981 முதல் 7 முறை நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டு தீக்காயம் அடைந்திருக் கிறார்கள். சிலர் இறந்திருக்கிறார்கள். இந்த உண்மையை யூனியன் கார்பைடு நிர்வாகமும் மத்திய அரசும் மறைத்து வந்தன. 1982ல் யூனியன் கார்பைடு ஆலையை பார்வையிட்ட அமெரிக்க வல்லுநர்கள் குழு 30 அபாயங் களை பட்டியலிட்டு அவற்றை உடனே சரி செய்யா விடில் ஆலையில் பேரழிவு நடக்கும் என்று நிர்வாகத்தை எச்சரித்திருந்தது. போபா லை சேர்ந்த பத்திரிகையாளர் ஜோஸ்வானிஎரிமலையின் உச்சியில் போபால்என்று பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதி யிருந்தார்.

லாபத்தை அதிகப்படுத்த உற் பத்திச் செலவை குறைப்பது என்று முடிவு செய்து விஷவாயுவான மீத்தைல் ஐசோ சயனைட் வாயு கிடங்கை கண்காணிக்கும் வல்லுநர் களையும், தொழிலாளர்களையும் ஆட் குறைப்பு செய்தது யூனியன் கார்பைடு நிர் வாகம். குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப் படாவிட்டால் சயனைடு கிடங்கு வெடித்து வாயு வெளியேறும் என்று தெரிந்தும் மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக குளிரூட் டும் இயந்திரத்தை நிறுத்தினர். இந்த சூழ் நிலையில்தான் 1984 டிசம்பர் 2 நள்ளிரவு வாயு வெடித்து, கசிந்து கோரப்படுகொலை நடந்தது.

இந்த விபத்தை பார்வையிட வந்த யூனி யன் கார்பைடு கம்பெனியின் தலைவர் ஆண் டர்சனை போபாலில் கைது செய்தனர். உட னடியாக மத்தியப் பிரதேச முதலமைச்சராக இருந்த அர்ஜூன் சிங் தலையிட்டு ஆண்டர் சனை ஜாமீனில் விடுவிக்கச் செய்து முதல மைச்சர் பயன்படுத்தக்கூடிய தனி விமானத் தில் தில்லிக்கு அனுப்பினார். தில்லியில் அயல்துறை அமைச்சக அதிகாரிகள் ஆண் டர்சனை சந்தித்து கைது செய்ததற்கு மன் னிப்பு கேட்டு விட்டு விமானத்தில் அனுப்பி னார்கள். ஆண்டர்சனை பாதுகாப்பாக அனுப் பிவைக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டதால் பாதுகாப்பாக திருப் பியனுப்புகிறோம் என்று அன்றைய வெளி யுறவு செயலாளர் ரங்கோத்ரா பத்திரிகைக்கு பேட்டியளித்தார். ஆனால் இந்த வழக்கை கையாண்ட சிபிஐ அதிகாரி லால் 1984இல் யூனியன் கார்பைடு தலைவர் வந்து போன தற்கு எவ்வித ஆவணச்சான்றும் இல்லை என்கிறார். உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம், அன்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு இதுபற்றியெல்லாம் தெரியாது என்றார்.

இந்த படுகொலை சம்பந்தமாக விசாரித்து சொல்வதற்காக போபால் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு 26 ஆண்டுகளுக்குப்பிறகு 2010 ஜூனில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்த விபத்து யூனியன் கார்பைடு நிர்வாகமோ அதன் அதிகாரிகளோ தெரிந்தே அனுமதித்த விபரீதம் அல்ல. எதிர்பாராமல் நடந்துவிட்ட சாலை விபத்துக்கு ஒப்பான இன்னொரு விபத்து என்று தீர்ப்பு கூறி, கம்பெனியின் பங்கு தாரரான கேசவ் மகேந்திராவுக்கும், சில அதிகாரிகளுக்கும் 2 ஆண்டுகள் மட்டும் சிறைத்தண்டனை வழங்கி ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் அன்று மாலை ஜாமீனில் விடுதலை செய்துவிட்டனர்.

போபால் நீதிமன்றம் முதல் உச்சநீதி மன்றம் வரை பல்கிவாலா, நாரிமன் உட்பட பல பிரபல வழக்கறிஞர்கள் பட்டாளத்தையே இறக்கிவிட்டது யூனியன் கார்பைடு நிர்வாகம். இந்த விபத்தில் பலியான மக்கள் சார்பாக தான் மட்டுமே வழக்கு நடத்துவேன் என்று சிறப்பாக சட்டமியற்றிக்கொண்ட மத்திய அரசு சிபிஐ மூலம் ஒரே ஒரு உள்ளூர் வழக் கறிஞரை மட்டுமே அமைத்துக் கொண்டு வழக்கை நடத்தியது. இறந்து போனவர் களின் உடலில், மக்களின் உடல்களில் சயனைடு உள்ளிட்ட 21 வகையான நச்சுப் பொருள் இருந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அந்த ஆலைக்குள் நடந்த சோதனை என்ன என்பது சிபிஐக்கு தெரியாது என்கின்றனர்.

பாஜக முக்கிய தலைவர்களுள் ஒருவ ரான அருண் ஜெட்லி, யூனியன் கார்பைடு கம்பெனியின் வழக்கறிஞராக செயல்பட்டவர். யூனியன் கார்பைடு கம்பெனி தலைவர் ஆண் டர்சனுக்கு எதிரான வழக்கை சாதாரண விபத்து வழக்காக மாற்ற சிபிஐ மூலம் மனுத்தாக்கல் செய்தது வாஜ்பாய் அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யூனியன் கார்பைடு கம்பெனி அதிகாரியான கேசவ் மஹேந்திரா வுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கவும் வாஜ் பாய் அரசு பரிந்துரை செய்தது.

வியட்நாமில் மக்களை எரித்துக்கொல் லக்கூடிய ஈஃம் என்ற பாஸ்பரஸ் குண்டு களையும், காடுகளை எரித்து பொட்டல் காடாக்குவதற்கானஏஜெண்ட் ஆரஞ்ச்என்ற நச்சு ரசாயனத்தையும் அமெரிக்கா வுக்கு தயாரித்து கொடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டவ் கெமிக் கல்ஸ் 2001ஆம் ஆண்டில் யூனியன் கார்பைடு கம்பெனியை விலைக்கு வாங்கிவிட்டது. இந்தியாவில் உள்ள யூனியன் கார்பைடு கம் பெனிகளை விலைக்கு வாங்கும்பணியை செய்துமுடிக்கடவ்கெமிக்கல்ஸ் நிறுவனத் தின் வழக்கறிஞராக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்அபிஷேக் சிங்விசெயல்பட்டு வருகிறார்.

2009ல் போபாலுக்கு சென்ற மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஆலையின் மண்ணை அள்ளி கையில் எடுத்து என்ன நடந்துவிட்டது, நான் செத்தா போய்விட்டேன் என்றார். போபால் விபத்துகள் நடக்கலாம். அதனால் நாடு முன்னேறாமல் இருக்க முடியுமா? என்று தன்னை சந்திக்க வந்த போபால் மக்களிடம் கேட்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். மேலும் பிரதமர் வேற்று கிரகவாசி போல, போபால் வழக்கில் என்ன நடந்தது என்று 10 நாளில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அரசாங் கம் கூடுதல் நிவாரணம் வழங்கும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார்.

மெக்சிகோ வளைகுடா பகுதியில் சமீபத் தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு பாதிக்கப் பட்டதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலிய எண் ணெய் நிறுவனத்திடமிருந்து அமெரிக்கா 20 ஆயிரம் கோடியை நஷ்டஈடாக பெற்றுள்ளது. இந்த அனுபவத்தை கவனத்தில் கொண்டு மத்திய அரசுடவ்கெமிக்கல்ஸ் நிறுவனத் திடமிருந்து நஷ்ட ஈடு பெற்று போபாலில் மரணமடைந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

(கட்டுரையாளர், சிஐடியு மாநிலக்குழு
உறுப்பினர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com