Contact us at: sooddram@gmail.com

 

கனடா நஷனல் போஸ்ட் ஆசிரியர் குழாம்

அகதிகளை மறுவரையறை செய்தல்

வார இறுதியில்சண் பத்திரிகை தொடர்களில் குறிப்பிடப்பட்ட  அரசாங்க இரகசிய அறிக்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கருத்துப்படி ஏற்கனவே கனடாவில் அகதி அந்தஸ்தினைப் பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா தமிழர்களில் சுமார் முக்கால் பாகம் பேர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கு பார்வையிடவோ அல்லது விடுமுறையைக் கழிக்கவோ சென்று வருகிறார்கள். இது அவர்கள் சொந்த நாட்டில் அடக்குமுறைக்கும் மரணத்துக்கும் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கும் கோரிக்கைகளில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த இரகசிய அறிக்கையானது, அரசாங்க கோப்புகளில் இருந்து  வரிசை  முறையின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 50 அகதி விண்ணப்கங்களின்  விடய  ஆய்வுகளின்  சேகரிப்பாக மாறியிருக்கிறது. அது ஒரு சிறிய மாதிரி அளவு மட்டுமே, இந்த 50 தனி நபர்களும் கனடாவில் வாழும் மிகப் பெரிய தமிழ்ச் சமூகத்தின் ஏக பிதிநிதிகள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த முடிவுகள் கவலையளிக்கின்றன: தெரிவு செய்யப்பட்ட 50 விண்ணப்பங்களில் 31 பேருக்கு புகலிடம் வழங்கப் பட்டுள்ளது இவர்களில்22 பேர் திரும்பவும் ஸ்ரீலங்காவிற்கு பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இநத விண்ணப்பதாரிகள் ஸ்ரீலங்காவிற்கு போய்வருவது பாதுகாப்பானது என்று கருதுவார்களேயானால் அவர்கள் இங்கே புகலிடம் பெறுவதற்காக பொய்யான வாதங்களை வழங்கியிருக்கிறார்கள்.

பல வருடங்களாகக் தமிழ் குடியேற்றக்காரர்களினால் கனடா மென்மையான அணுகு முறையைக் கடைப்பிடிக்கும் நாடு என மதிக்கப் படுகிறது. இதுதான் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகள் 2009ல் ஸ்ரீலங்கா இராணுவத்தால் தோற்கடிக்கப் பட்டபின் மறுபடி குழுக்களாக ஒன்றிணைந்து எழுந்து வர ஏற்ற இடமாக கனடாவை தேடிவர முக்கிய காரணம். தமிழ் குடியேற்றறக்காரர்களினால் நிரம்பிய படகு ஒன்று இம்மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகத்துக்கு வந்துள்ளது,அநேகமாக இந்த மாதிரி வரும கடைசிப் படகல்ல இது.

முன்னாள் ஸ்ரீலங்காவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் மாட்டின் கொலகொட்போஸ்ட்பத்திரிகையில் எழுதியிருப்பது: 1989 க்கும் 2004க்கும் இடைப்பட்ட காலத்தில் கனடா 37,000 க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது.”இது மற்ற எல்லா இனத்தவர்களையும் விட மிகவும் அதிகமாகும். உலகிலேயே மற்ற நாடுகள் வழங்கியுள்ளதிலும் இது 50மூ அதிகம். திரு. கொலகொட் மேலும் குறிப்பிட்டிருப்பது,அகதிகளின் மிக அதிகமான வருகை 2000 த்தின் ஆரமபங்களிலேயே ஏற்பட்டது. “ஒரு வருடத்தில் மட்டும் அகதி கோரிக்கை நிலுவையிலுள்ள 8600 பேர்கள் ஒட்டவாவிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகராலயத்தில் ஸ்ரீலங்கா போய் பார்த்து விட்டு வருவதற்காக பிரயாணப் பத்திரம் கோரி விண்ணப்பம் செய்திருந்தார்கள்.

சமீபத்தில் 2008 ல் கனடா 3வீதத்திற்கான குறைவான தமிழ் அகதிக் கோரிக்கைகளையே நிராகரித்தது. இதேவேளை மற்றைய நாடுகளில் சராசரியாக 50வீத அகதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டன. இன்னும் குடியேற்றம் மற்றும் அகதிகளுக்கான சபை 2006ம் ஆண்டு தனது விசாரணையின் போது குறிப்பிட்டிருப்பது 100 தமிழ் அகதிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டு அவர்கள் பலவந்தமாக ஸ்ரீலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் கூட ஸ்ரீலங்கா அதிகாரிகளாலோ இராணுவத்தாலோ கொடுமைப் படுத்தப்படவில்லை.

கனடாவின் அகதிகள் ஒழுங்கு முறையில் பாரிய பழுது பார்ப்பு தேவை என நாங்கள் இந்தக் கட்டத்தில் பலமுறை இங்கு விவாதித்துள்ளோம். அநேகமான கனடியர்க்குஅகதிஎன்கிற வார்த்தையின் அர்த்தம் யாராவது தங்கள் சொந்த நாட்டில் உண்மையான அடக்குமுறைக்குப் பயந்து தப்பியோடி கனடாவுக்கு வருகிறவர்கள், என்பதே. ஆனால் இன்னமும் எங்கள் முறை பொருளாதார முன்னேற்றம் மற்றும் குடும்ப ஒன்றிணைப்பு வேண்டிய குடியேற்றவாசிகள்,  ாதாரண குடியேற்ற அமைப்புக்குள் தவளைப் பாய்ச்சலாகப் பாய்ந்து ஒட்டிக்கொள்ளும் முறையாகவே இருக்கிறது. இது முறையான அகதிகளுக்கும் நேர்மையான குடியேற்றக்காரருக்கும் கெடுதலாக மாறிவிட்டது, அவர்கள் உரிமை நம்பிக்கை என்பனவற்றை கைவிட்டு சோகமான கட்டுக்கதைகளை கண்டுபிடிக்கிறார்கள். வெகு சமீபம்வரை இதைப்பற்றிக் கலந்தாய்வு செய்வது தீணடத் தகாத ஒன்றாக இருந்தது. விசேடமாக ஜீன் கிறிட்டியன், மற்றும் போல் மாட்டீன் ஆகியோரின் அரசாங்கத்தின் கீழ். குடியேற்றக் கொள்கைகள் பற்றி அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்ட போது, அவர்கள் வெட்கமின்றி தங்களை பரிந்து செயலாற்றுபவர்களாக விளம்பரப் படுத்திக் கொண்டார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் திரு.மாட்டீனை அமெரிக்க புலனாய்வுச் சேவையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்திய ஒரு குழவினைச் சேர்ந்த நிதி சேகரிப்பாளர் ஒருவரை சந்தித்தற்காக கண்டித்த போது லிபரல் கட்சி விமர்சகர்கள் எதிர்கட்சியினரின் கண்டனம் இனப் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளதாகத் தெரிவித்தார்கள். ஆனால் சமீப வருடங்களில் கனடியர்கள் பல்லின பண்பாடுகளை சுத்திகரித்து ஒதுக்கி விட்டு குடியேற்றம் மற்றும் அகதிகள் பற்றிய கொள்கைகளில் நேர்மையான கலந்தாய்வுகள் தேவை என்பதனை வரவேற்பது அதிகரித்துள்ளது.

இந்தப் போக்கு ஒருமுகப்பட்டது 2006ல் இஸ்ராயேல் தென் லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் மோதிய சமயத்தில் பல லெபனான் பிரஜைகள் கனடிய குடிமக்களாக மாறினார்கள். அவர்கள் தங்களைக் காப்பாற்றியதற்காக கனடா அரசை ஆர்ப்பரித்து புகழ்நதார்கள், உண்மையில் அவர்கள் பல வருடங்களாக கனடாவில் வசிப்பதில்லை. கனடிய குடியுரிமையை கேவலம் பேரழிவுகளின்போது பயன்படுத்தும் கடல்கடந்த காப்புறுதிப் பத்திரம் போல் இவர்கள் பயன் படுத்துவது கனடியர்களை சீற்றமடையச் செய்துள்ளது.

சமீப வருடங்களாக கனடியர்கள் நமது குடியேற்றம் மற்றும் அகதி முறைகளில் சந்தேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த மாதம் ஸ்ரீலங்காவினரால் அது இன்னும் ஊக்குவிக்கப் பட்டிருக்கும். ஆனால் ஏற்கனவே நாம் சந்தேகத்துக்கிடமான மெக்ஸிக்கோ மற்றும் ஐரொப்பிய ஒனறியம் ஏன் அமெரிக்காவிலிருந்து கூட விசேடமாக அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கள் இராணுவக் கடப்பாடுகளைச் சுருக்கிக் கொள்வதற்காக இங்கு வருவதில் உள்ள ஊழல்கள் பற்றி அறிந்திருக்கிறோம்.

ஹாப்பர் அரசாங்கம் ஏற்கனவே மறுசீரமைப்பை நோக்கி சில அடிகள் எடுத்துவைத்திருக்கிறது. ஜேசன் கெனியின் புதிய குடிவரவு வழிகாட்டி உட்பட. இவ்வழிகாட்டி முன்னைய பதிப்புகளைக் காட்டிலும் தெளிவாக குடிவரவுக் காரரும் அகதிகளும் அவருடையதோ அன்றி அவளுடையதோ தனிப்பட்ட நலன்களைச்சாராமல் கனடாவிற்கு ஆற்ற வேண்டிய கடப்பாடுகளை விரிவாகக் குறிபிபிட்டுள்ளது. ஆனால் அன்னும் அதிகம் செய்யவேண்டியுள்ளது. குறிப்பாக அகதிகளைத் தீர்மானம் செய்யும் விடயம் இன்னும் இறுக்கமாக்கப் படவேண்டும் அதனால் போலியான விண்ணப்பதாரிகளைத் தவிர்க்க முடியும். மேலும் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டவர்களை வருடக்கணக்கில் வைத்திருக்காமல் சில மாதங்களுக்குள் திருப்பியனுப்ப வேண்டும்.

அகதிகளோ, குடியேற்றவாசிகளோ புதிய கனடியர்கள் இந்த நாட்டை தங்கள் சொந்த நாடு போல் கட்டிக்காக்க உண்மையான விருப்பம் அற்றவர்களாகவோ அல்லது எங்கள் குடியேற்ற நடைமுறைகளை பழுதாக்கும் குறகிய நடைமுறையினைத் தேடுபவர்களாகவோ இருப்பார்களாயின் தங்கள் சுயலாபத்துக்காக எங்கள் நல்லெண்ணத்தைப் பயன்படுத்த அனுமதிக்கலாகாது.

- நஷனல் போஸ்ட்: ஆகஸ்ட் 24 2010

(தமிழாக்கம்: குமார்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com