Contact us at: sooddram@gmail.com

 

சவூதியிலிருந்து ஆணிகளுடன் வந்த ஆரியவதி

நாகரிகம் வளர்ச்சியடைந்து மனிதன் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளான். மனிதப் பண்புகள் மேலோங்கி விட்டதாக பெருமையாகக் கூறப்படுகிறது. இதனால் பிராணிகளை வதைப்பதைத் தடுக்கவும் கூட பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றின் மீது கைவைத்தால் மிருகவதை எதிர்ப்பு அமைப்புகள் புரட்டி எடுத்து விடுகின்றன. ஆனால் மிருகங்களை விடக் கேவலமாக மனிதர்கள் நடத்தப்படும் அவலம் மற்றொரு பக்கமாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதி சிறந்த உதாரணமாகும்.

49 வயதான எல். ஜி. ஆரியவதி மூன்று பிள்ளைகளின் தாய். வயல் வேலை, கூலி வேலை என அவர்களின் குடும்ப வண்டி ஆமை வேகத்தில் நகர்ந்தது. என்னதான் வசதி இல்லாவிட்டாலும் தாங்கள் வசிக்கும் குடிசை வீடு, சிறிய செங்கல் வீடாக மாற வேண்டும் என்பது ஆரியவதியின் கனவாக இருந்தது.

தனது கனவை நனவாக்கும் பொருட்டு வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் செல்ல அவர் முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தவர் யாரும் அதனை விரும்பவில்லை. ஆனால் தனது கனவை நனவாக்கும் இலட்சியத்துடன் சுயவிருப்பின் பேரில் ஆரியவதி சவூதி அரேபியாவுக்கு சென்றார்.

கடந்த மார்ச் 15 ஆம் திகதி பாரிய எதிர்பார்ப்புகளுடன் அவர் ரியாத் நகரை சென்றடைந்தார். மூன்று மாடிகளைக் கொண்ட பெரிய வீடொன்றில் தான் அவருக்கு வேலை கிடைத்திருந்தது. 60 வயதுடைய எஜமான், அவரின் மனைவிக்கு 55 வயதிருக்கும். இவர்களுக்கு 7 பிள்ளைகள். அதில் மூவர் பாடசாலை செல்பவர்கள். ஒரு மகன் பொலிஸ் உத்தியோகத்தில் இருப்பவர்.

வீட்டையும் மலசல கூடத்தையும் சுத்தம் செய்வதுதான் ஆரியவதிக்கு வழங்கப்பட்டிருந்த பணி. ஒரு வாரம் வரை அவருக்கு அந்த வீட்டில் நல்ல கவனிப்பு கிடைத்தது. தனது கனவு நனவாகும் என நம்பிக்கையுடன் ஆரியவதி வீட்டு வேலைகளில் மூழ்கினார். ஆனால் ஒரு வாரத் தின் பின் தனது எதிர்காலம் தலைகீழாக மாறப் போவதை அவர் அறிந் திருக்கவில்லை.

ஒரு வாரம் கடந்த பின் வீட்டார் தமது சுயரூபத்தை காட்டத் தொடங்கினர். கிராமத்துப் பெண்ணான ஆரியவதிக்கு சிங்களம் மட்டுமே தெரிந்திருந்தது. வீட்டார் அரபு மொழியில் ஏதாவது சொன்னால் திரு திரு என்று முழிக்க மட்டுமே அவரால் முடிந்தது. குளிர்சாதனப் பெட்டியில் உள்ள பொருளொன்றைக் கேட்டால் ஏதாவதொன்றை எடுத்துச் சென்று கொடுப்பாராம். கோபத்தில் எஜமானி கையில் கிடைத்த பொருளால் அடித்து உதைப்பார். ஆரியவதி தினமும் சாப்பிடுகிறாரோ இல்லையோ நாள் தவறாமல் அடி உடை மட்டுமே கிடைத்து வந்திருக்கிறது.

அவரை பந்தாடியது சலித்துப் போனதாலோ என்னவோ எஜமானரும் மனைவியும் ஆரியவதியை சித்திர வரை செய்ய ஆரம்பித்தனர். கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு நரக வேதனை அனுபவிக்க நேரிட்டது.

சுமார் இரண்டரை அங்குலம் நீளமான ஆணிகளை நெருப்பில் சுட்டெடுத்து கதறக்கதற ஆரியவதியின் உடம்பில் ஏற்றுமளவுக்கு அந்த கணவனும் மனைவியும் குரூர மனம் படைத்த வர்களாக இருந்தனர். மனைவி ஆணியை நெருப்பில் சூடாக்கி எடுத்து வருவாராம்.

கணவர் அவற்றை ஆரியவதியின் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலும் அடித்து ஏற்றுவாராம்.

மாட்டுக்கு லாடம் அடிப்பதை கூட மிருகவதை எதிர்ப்பு அமைப்புகள் கண்டிக்கும் காலத்தில் நாகரிக உலகில் மனிதனுக்கு ஆணி அடிக்கும் அவலம் சவூதியில் நடந்தேறியிருக்கிறது. இந்த வேதனை தாங்க முடியாமல் அழக்கூட அவருக்கு அனுமதியில்லை. வேதனையில் அழுதால் அந்த வீட்டுக் குட்டிச் சாத்தான்கள் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்வதாக மிரட்டுமாம்.

கை, கால், தலை, என உடம்பில் பல பாகங்களிலும் ஆணி, குண்டூசி, இரும்புக் கம்பிகள் என்பன ஏற்றப்பட்டன. குதிகால்களில் ஆணி ஏறியதால் நடக்க முடியாமல் ஆரியவதி மிகவும் கஷ்டப்பட்டார். நடைப்பிணமாக உலா வந்த போதும் வீட்டு வேலைகள் குறையின்றி நடந்தாக வேண்டும் இல்லா விட்டால் அதற்கும் அடி தான் மருந்து.

ஆசைக் கனவுகளுடன் வந்த ஆரியவதி நரகத்தில் சிக்கி சித்தரவதைப்படுவது தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்து தப்பிச் செல்லவும் முடியாத நிலை.

சவூதிக்கு வந்து பல மாதங்கள் கடந்த போதும் அவருக்கு ஒரே ஒரு கடிதம் மட்டுமே வீட்டுக்கு அனுப்ப முடிந்தது. கணவனும் பிள்ளைகளும் அவருக்கு அனுப்பிய கடிதங்கள் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவை இலங்கைக்கே திரும்பிச் சென்றன. தனது சோகத்தை பகிர்ந்து கொள்ள யாரும் இன்றி தனிமையில் அழ மட்டுமே அவரால் முடிந்தது.

ஆரியவதி பற்றிய எதுவித தகவலும் கிடைக்காததால் அவரின் குடும்பத்தவர்கள் மாத்தறை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அலுவலகத்தில் முறையிட்டனர். இதன் பயனாக 2 நிமிடங்கள் வீட்டாருடன் பேச அவருக்கு அவகாசம் கிடைத்தது. அந்த சொற்ப நேரத்தில் அவரால் தனது சோகக் கதையை கூற முடியாமல் போனது.

நாட்கள் செல்லச் செல்ல ஆணி அடித்த இடங்களில் இருந்து சலம் வடியத் தொடங்கியது. ஈக்கள் காயத்தை மொய்த்தன. துர்நாற்றம் வேறு. இது அந்த வீட்டாருக்கு பெரும் தலையிடியாகி விட்டது. வேறு வழியின்றி ஆரியவதியை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப அவர்கள் முடிவு செய்தனர்.

ஒருநாள் அவருக்கு கறுப்பு உடையொன்றை கொடுத்து வெளியில் அழைத்துச் சென்றனர். காயத்துக்கு மருந்து போடுவதற்குத்தான் அழைத்துச் செல்வதாக ஆரியவதி நினைத்தார். தனக்கு நரக விடுதலை கிடைக்கப் போவதை அவர் அறிந்திருக்கவில்லை.

முகவர் நிலையமொன்றினூடாக டிக்கெட் பெறப்பட்டது. ஆரியவதியின் 5 மாத சம்பளத்தில் 3 மாத சம்பளம் டிக்கெட்டுக்காக கழித்து கொள்ளப்பட்டு 2 மாத சம்பளத்தை மட்டுமே கையில் திணித்தார்கள். அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர் ஆரியவதியின் எஜமானர்கள். ஆகஸ்ட் 21ம் திகதியே அவருக்கே விடுதலை கிடைத்த தினம்.

மிகவும் சிரமப்பட்டு வேதனையுடன் நடக்கும் ஆரியவதியிடம் விமான நிலைய அதிகாரிகள் என்ன என்று விசாரித்தனர். ஆனால் அவர் உண்மையை மறைத்தார். நரகத்தில் இருந்து விடுதலை கிடைத்த நிம்மதியில் உடல் வலி அவளுக்கு பெரிதாகத் தெரியவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தை விமானம் நெருங்க நெருங்க அவளின் இதயத் துடிப்பு வேகமாக அடிக்கத் தொடங்கியது. மீண்டும் சுவர்க்கத்துக்கு திரும்பி விட்டது போல் அவர் உணர்ந்தார்.

தன்னை வரவேற்கக் காத்திருந்த கணவனையும் பிள்ளைகளையும் கண்டதும் ஆரியவதியின் கண்கள் மாலை மாலையாக கண்ணீர் வடிகத் தொடங்கின. மகிழ்ச்சியில் அவருக்கு தலைகால் புரியவில்லை.

மாத்தறை, திஹகொடயில் உள்ள தனது வீட்டை வந்தடைந்த ஆரியவதியின் கண் முன்னால் அதே ஓட்டைக் குடிசை பரிதாபமாக காட்சியளித்தது. ஒருபக்கச் சுவர் இடிந்து வீழ்ந்திருந்தது. தனது கனவு கனவாகவே முடிந்ததை நினைத்து அவரால் பெருமூச்சு விடுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

தனது சோகக் கதை வீட்டாருக்குத் தெரிந்தால் அவர்களும் வேதனைப்படுவர் என்பதால் தான் பட்ட சித்திரவதைகளை ஆரியவதி யாரிடமும் கூறாமல் மறைத்தார். உண்மையை அவர் மறைத்த போதும் எஜமானர்கள் ஊதியமாகத் தந்த ஆணிகள் உடம்புக்குள் இருந்து அவரை ஆட்டி வைத்தன. வேதனை தாங்க முடியாமல் ஆரியவதி புழுவாய் துடித்தார். ஆனால் ஆணி விவகாரத்தை மட்டும் அவர் வெளியில் விடவேயில்லை.

ஆரியவதி படும் வேதனையை கண்டு அவரின் வீட்டார் அவரை மறுநாள் (22ம் திகதி) ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மருத்துவரிடம் நோயை மறைக்க முடியுமா என்ன? வேறு வழியில்லாமல் உண்மையை கொட்ட நேரிட்டது. எக்ஸ்ரே பரிசோதனை நடத்தப்பட்டது. உடம்பின் ஒவ்வொரு பாகத்திலும் செருகப்பட்டிருந்த ஆணிகள், குண்டூசிகள் இதன் மூலம் பார்வைக்கு வந்தன. மொத்தமாக 23 ஆணிகள் காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஈவிரக்கமற்ற கொடுமை இதன் பின்னரே முழு நாட்டுக்கும் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் மத்திய கிழக்கிற்கு பெருமளவு பெண்கள் பணிப்பெண்களாக சென்று வருகின்றனர். இவர்களில் பலர் எஜமானர்களால் துன்புறுத்தப்படுவதோடு சம்பளம் கொடுக்காமல் வேலைவாங்குவதுமுண்டு. மேல் மாடிகளில் இருந்து தள்ளிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் கூட கடந்த காலங்களில் நடந்துள்ளன. கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கவே செய்கின்றனர். சித்திரவதை தாங்காமல் தப்பி வருபவர்கள் தூதரகங்களில் மாதக் கணக்கில் தங்கி பின்னர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதுமுண்டு.

ஆனால் இவ்வளவு கொடூரமான சித்திரவதையொன்று அரங்கேறியுள்ளது இதுவே முதல் தடவை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க சகல நடவடிக்கையும் எடுப்பதாக வெளிநாட்டுப் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க உறுதியளித்துள்ளார்.

இந்த கொடூரம் குறித்து மனித உரிமை அமைப்பை அறிவூட்ட உள்ளோம். ஆரியவதியின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதனை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சினூடாக சவூதி அதிகாரிகளுக்கு அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

இவரின் உடம்பிலுள்ள ஆணிகளை அகற்றும் சத்திர சிசிச்சை வெள்ளியன்று நடைபெற்றது. சில ஆணிகளை அகற்றினால் அவரின் நரம்பு மண்டலம், இரத்த ஓட்டம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். அத்தகைய ஆணிகள் அகற்றப்படவில்லை. இந்த அறுவை சிகிச்சையின் போது மொத்தமாக 17 ஆணிகள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றில் 13 ஆணிகள், நான்கு ஊசிகள்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காப்புறுதி மற்றும் நஷ்டஈடு என்பன பெற்றுக் கொடுக்கவும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை உடம்பில் இரும்பு ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் பயணி ஒருவர் எவ்வாறு விமான நிலையத்தினூடாக வந்தார் என்பது குறித்தும் தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது. விமான நிலையங்களில் உள்ள ஸ்கேன் இயந்திரங்கள் இவரின் உடம்பிலுள்ள ஆணிகளை ஏன் கண்டு கொள்ளவில்லை இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

ஆரியவதிக்கு ஏற்பட்ட அவலம் குறித்து இன்னும் சில நாட்களுக்கு பரவலாக பேசப்படும். பின்னர் அனைவருக்கும் மறந்துவிடும். மீண்டும் இன்னொரு ஆரியவதியோ! விமலா வதியோ, விமலாவோ மத்திய கிழக்கில் சித்திரவதை செய்யப்பட்டு வெறுங் கையுடன் நாடு திரும்புவார். பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் அலவத்திற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இதற்குபிளாஸ்டர்தீர்வுகள் பயணளிக்காது. அதிகாரிகள் இனியாவது கண் திறப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

(எம். எஸ். பாஹிம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com