Contact us at: sooddram@gmail.com

 

'நீலக்குழந்தை' குறைபாடு உருவாகும் ஆபத்து

யாழ்ப்பாண குடிநீரில் அதிகரிக்கும் நைத்திரேற்றுச் செறிவு

(காவலூர் ஞானி)

யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. இதற்கான முக்கிய காரணமாக இருப்பது குடாநாட்டில் இரசாயனப் பசளைகளின் பாவனையும், உயிராபத்து விளைவிக்கும் பயிர் பீடை நாசினிகளின் அதிக பிரயோகமும் என நீரியல் சம்பந்தமான கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இயற்கை அனர்த்தங்களால் நீர் மாசடைவதைவிட மனித இடையூறுகளால் ஏற்படும் விளைவு மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென சுட்டிக்காட்டி வருகின்றனர்.

யாழ்ப்பாண தோட்டங்களில் காணப்படும் கிணறுகளின் குடிநீரை இலங்கை தரநிர்ணய நிறுவகம் ஆய்வுக்குட்படுத்திய போது இந்நீரில் நைத்திரேற்று மட்டங்கள் குடிநீரின் எல்லையிலும் கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பொதுக்கிணறுகளிலும், வீட்டுக் கிணறுகளிலும் காணப்படும் நைத்திரேற்றளவு 50 ppசீ மில்லியன் பகுதிகளுக்கு கூடுதலாக இருப்பின் இரசாயனப் பொருட்களால் ஏற்படும் நோய்களை உருவாக்கும்.

அதிக நைத்திரேற்று மட்டங்களைக் கொண்ட குடிநீரின் பாவனையானது சில நோய்களான மெதமோ குளோபினேமியா அல்லது நீலக்குழந்தை குறைபாடு உடன் தொடர்புடையது. நைத்திரேற்று நஞ்சானதல்ல. ஆனால் சிறு குடலிலுள்ள பக்ரீறியாக்களினால் நைத்திரேற்று நைத்திரைற்று ஆகத்தாழ்த்தப்பட்டு பின் உறிஞ்சப்பட்டு குருதிச்சுற்றோட்டத்தைச் சென்றடைகின்றது. நைத்திரேற்று மட்டம் அதிகளவு கொண்ட நீரை அருந்தும் குழந்தைகள் கடுமையாக நோய்வாய்படும் அச்ச நிலை குடாநாட்டில் உருவாகி வருகின்றது.

உலக நாடுகளில் எல்லாம் நைத்திரேற்று அளவு மட்டம் கூடிய குடிநீரை கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் குடிப்பதைத் தவிர்க்குமாறு சுற்றுப்புற சூழல் தரநிர்ணயம் அறிவுரை வழங்கி வருகின்றபோதும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடமோ, சுகாதாரத் திணைக்களமோ மெளனித்திருப்பது சமூகவியலாளரை கவலைகொள்ள வைத்துள்ளது.

உலகில் விவசாய மேம்பாட்டுக்கு பசுமைப்புரட்சிக் கொள்கை அறிமுகமாகியதால் விளைச்சல் அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால், அதிகளவு பசளைப் பிரயோகமும், பயிர் கொல்லிப் பீடைநாசினிகளின் பாவனையும் கட்டுப்படுத்த முடியாமல், பொன் கொழிக்கும் பூமியாகிய எமது சொந்தமண் நஞ்சாகி, நிலத்தடி நீர் மாசடைந்து வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் விவசாய நிலங்களுக்குள் குடிமனையும் அமைந்திருப்பதும், அங்குள்ள கிணற்று நீரில், நைத்திரெற்றுச் செறிவு அதிகரித்து வருவதும் சர்வசாதாரண நிகழ்வாகவுள்ளது.

இன்றைக்கு உலகம் முழுவதும் நீர்மாசடைவதற்கு நீண்டபட்டியலையே உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. மலக்கழிவுகள், நீர் வாழ் உயிரினங்கள், தீமை பயக்கும் வாயுக்கள், அமிலத்தன்மை, உவர்த்தன்மை நைதரசன், பொசுபரசு, ஆசனிக்கு கல்சியம், குரோமியம், ஈயம், பாதரசம், நிக்கல், யுரேனியம், குளோறின், சயனைட்டுகள், கதிர்வீச்சுப் பொருட்கள், பெற்றோலிய ஐதரோசயன்கள் பீடைக் கொல்லிகளின் எச்சங்களும் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

குடாநாட்டைப் பொறு த்தவரை, தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீருடன் சேர்வது இன்று இல்லாவிட்டாலும் குறிப்பாக மலக்கழிவுகளால் ஏற்படும் நீர் மாசு அதிகமாகவுள்ளது. மலக்குழிகள் கிணறுகளின் அருகில் அமைந்திருப்பது பெரும்பாலும் நீர் மாசடைவதற்கு பிரதான காரணியாகும். சுகாதாரப் பகுதியினர் இருபத்தைந்து அடிகளுக்கு கிணற்றில் இருந்து மலக்குழிகள் அமைக்கப்படுவது கட்டாயமாக கவனிக்கப்பட வேண்டுமென அறிவித்த போதும் குடிப்பரம்பல் காரணமாக இது நகரின் பல பகுதிகளிலும் பேணப்படவில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாண நகரின் குடிநீரில் நோய்களை தோற்றுவிக்கும் கிருமிகள் அதிகமிருப்பதாக சுகாதார திணைக்களம் பரிசோதனைக்குட்படுத்திய போது கண்டறியப்பட்டது. இந்த நீரைப் பயன்படுத்த தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் மனித உடலுக்கு பாதகமானதென தெரிவித்தும் சில ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

நீர் மாசடைவதால் மனிதகுலத்துக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்து வருகின்றது. மாசடைந்த நீரில் காணப்படும் பக்ரீ றியாக்களினால் தைபோயிட்டுக் காய்ச்சல், இரப்பை குடல் அழற்சி, இரத்த இழப்புடன் கூடிய வயிற்றுப்போக்கு, கொலறா, காசநோயை உருவாக்கும் வைரசினால் இளம் பிள்ளைவாதம் தொற்றத்தக்க ஈரல் அழற்சி, சுவாசம் சம்பந்தமான நோய்கள், வயிற்றோட்டம், அழற்சியை ஏற்படுத்தும்.

பூச்சிக் கொல்லி நஞ்சுகள் நிலத்தடி நீரில் செறிவை ஏற்படுத்தினால் அந்நீரை அருந்துபவர்க்கு சிறு நீரக நோய், பார்வைக்குறைவு, ஞாபக இழப்பு, தோல் புற்று நோய் உருவாகும். புளோரைட் செறிவு கூடினால் பற்கள் உடைதலும், வெடித்தலும், எலும்பு சம்பந்தமான பாதிப்புக்கள், பற்கள் மஞ்சலாதல் குறைபாடுகள் வரும். ஐதரசன் சல்பேற்று இருக்குமானால் சுவை மற்றும் துர்நாற்றப் பிரச்சிணை உருவாகும்.

குடாநாட்டில் வாகன பாவனை அதிகரிப்பினால், பெற்றோலிய பொருட்களின் நச்சுப் பொருட்கள் பெருமளவு நீரை மாசுபடுத்தி வருகின்றன. இதன் காரணமாக எதிர்காலத்தில், நரம்புத் தொகுதி, சிறுநீரகம், மூளை பாதிப்பு ஆகிய குறைபாடுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் அநேகமான பகுதிகளில் குடைவுகள் நிறைந்த சுண்ணக்கற்பீடத்தில் தேங்கி நிற்கும் நீராகும். ஆனால் குடைவுகள் வெடிப்புக்கள் மற்றும் பிளவுகளின் அடர்த்தியான வலையமைப்பு காரணமாக முழுக்குடாநாட்டிலும் கடல்நீர் ஊடுருவல் உள்ளது. ஆனால் நில அலகுகளின் மத்திய பகுதிகளில் நன்னீர் தேங்கிநிற்கும் நிலையுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாடு வானம் பார்த்த பூமியானாலும் காரைநகர், புங்குடுதீவு, நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் உவர் நீரையே பெற முடியும். பொதுவாக புத்தூர், புன்னாலைக்கட்டுவன், ஊரெழு, பகுதியில் ஆகக்கூடிய நிலத்தடி நன்னீர் அடர்த்தி 20 - 30 மீட்டர் ஆகவுள்ளது. மற்றைய இடங்களில் 10 - 25 மீட்டராகவேயுள்ளது. குறிப்பாக நிலாவரை நன்னீர் கிணற்றின் ஆழம் சுமாராக 162 அடி ஆழம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் இதுவரை அதன் ஆழம் கணக்கிடப்படவில்லை. இன்று குடாநாட்டைப் பொறுத்தவரை சுத்தமான குடிநீரை வழங்குவது எப்படியென்பதே பிரச்சினையாகவுள்ளது. 1981 ஜப்பானிய அரசாங்கத்தின் பாரிய நிதியுதவித்திட்டத்தில் நிலாவரைக் கிணற்றிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு சுத்தமான குடிநீரை வழங்க திட்டமிட்டு முழுவீச்சில் பணி நடைபெற்றது. துர்அதிஸ்டவசமாக தமிழ்ப் பகுதிகளில் போர் அபாயம் உருவாகியமையால் திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது.

இப்போது உலக வங்கியின் நிதியுதவியுடன் நூறு கோடி ரூபா செலவில் கட்டுக்கரைக்குளத்தில் இருந்து நீரை எடுத்துவந்து பூநகரி உட்பட குடாநாட்டின் பல பகுதிகளுக்கும் வழங்கலாமென செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட நீர்வழங்கல் வடிகால் அமைப்புச்சபை அதிகாரிகளோ கட்டுக்கரைக்குளநீர் ஆணையிறவு வரை விவசாய மேம்பாட்டுக்கே போதுமானதல்ல. இத்திட்டம் பயன்தராது என திட்டவட்டமாக கூறிவருகின்றனர்.

ஜனாதிபதி உட்பட சகல அமைச்சர்களும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதிமொழி வழங்கி வருகின்றனர். குடாநாடு வானம் பார்த்த பூமியாகையால் மழைபெய்யும் காலத்தில் நீரைச் சேமித்து பரந்த பிதேசத்துக்கு நீரை வழங்குவது சாத்தியமானதல்ல. வரண்ட நிலப்பரப்பில் இருக்கும் நீர்ப்பாசன குளத்தினால் கூடியளவு நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மைக்கு மட்டும் நீரை பங்கீடு செய்ய முடியும்.

குடாநாட்டில் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில்தான் அதிக மக்கள் வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் குடிப்பரம்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதாலும், தொழில்சார் நிறுவனங்களின் புதியவருகையாலும், எதிர்காலத்தில் திருநெல்வேலி குடிநீர் திட்டத்தை நம்பி போதிய குடிநீரை வழங்க முடியாமல் போகும். இவற்றையெல்லாம் நோக்கும் போது எதிர்காலத்தில் குடாநாட்டு மக்கள் சுத்தமான நீருக்காக அலைய வேண்டியிருக்கும். இன்றைக்கு யாழ்ப்பாணம் வருபவர்கள் எவரும் குடாநாட்டு நீரை அருந்துவதில்லை. இதனால் போத்தல் தண்ணீருக்கு யாழ்ப்பாணத்தில் உச்ச கிராக்கியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com