Contact us at: sooddram@gmail.com

 

மக்களுக்குப் பிரயோசனமான அரசியல் பற்றி இனியாவது சிந்திக்க வேண்டாமா?

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு விசாரணை தொடர்ந்து நடை பெறுகின்றது. இங்கு இதுவரை அளிக்கப்பட்ட சாட்சியங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகின. இவையெல்லாம் ஒரே மாதிரியான கருத்துகளல்ல. முரண்பாடான அபிப்பிராயங்களும் முன் வைக்கப்பட்டன. ஆணைக் குழுவின் விசாரணையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்பதும் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட முடியும் என்பதும் இதிலிருந்து தெரிகின்றது.

இந்த ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதா இல்லையா என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடையே மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சாட்சியம் அளிக்க வேண்டும் என்பது சிலரின் நிலைப்பாடு. அளிக்கக் கூடாது என்று வேறு சிலர் கூறுகின்றார்கள். பத்திரிகைகளிலும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அனுப்பப்படும் மகஜர்களிலும் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏராளம் விஷயங்களைக் கூறுகின்றார்கள். அவற்றை ஆணைக்குழு முன்னிலையில் கூறலாமே.

மக்களின் பிரதிநிதிகள் அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்த அரங்கிலும் பேசுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவ தற்குக் கிடைக்கும் எந்தச் சந் தர்ப்பத்தையும் தவறவிடக் கூடாது. தமிழ் மக்களின் தனிப் பிரதிநிதிகள் என்று உரிமை கோரும் கூட்டமைப்புத் தலைவர்கள் அம்மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக் குழுவில் பேசுவதற்குத் தயங்குவது வேடிக்கையாக இருக்கின்றது.

சாட்சியம் அளிக்கக் கூடாது என்போர் கூறும் காரணம் விசித்திரமானது. ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லையாம். கூட்டமைப்புத் தலைவர்கள் செய்வதெல்லாம் பிரயோசனம் தரும் காரியங்களா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. பிரயோசனம் தரும் காரியங்களை மாத்திரம் இவர்கள் செய்திருந்தால் தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவிக்க நேர்ந்திருக்காது.

சிங்கள அரசியல் கட்சிகளிடமிருந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற முடியாது என்று கூறுவது இந்தத் தலைவர்களின் நீண்டகால வழக்கம். ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல் காலத்திலும் மேடைகளில் இதைக் கூறுவார்கள். ஆனால் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிப்பதற்குத் தங்களுக்குள் சண்டை போடுவார்கள். சிங்களத் தலைவர்கள் தீர்வுக்குச் சம்மதிக்க மாட்டார்களென்றால் பாராளுமன்றத்துக்குச் சென்று எதைச் சாதிப்பது? சாதிக்க முடியாவிட்டாலும் குறைகளை எடுத்துக் கூறுவதற்காகப் பாராளுமன்றத்துக்குச் செல்கின்றோம் என்று இவர்கள் கூறுவார்களேயானால், அதே காரணத்துக்காக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக் கலாமே.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதால் பிரயோசனம் உண்டா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை இதுவரை நடத்திய அரசியல் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலாவது பிரயோசனமானதாக இருந்ததா என்றால் இல்லை என்பதே பதில். இல்லை எனக் கூறுவதிலும் பார்க்க இவர்களின் அரசியலால் தமிழ் மக்களுக்குத் துன்பங்களும் பின்னடைவுகளும் மாத்திரமே ஏற்பட்டன எனக் கூறுவதுதான் பொருத்தமானது. இத் துன்பங்களையும் பின்னடைவுகளையும் விலாவாரியாகப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. அவை நாடறிந்த சங்கதிகள்.

சொந்த இடங்களில் நிம்மதியாக வாழ்ந்த மக்கள் இன்று அந்த இடங்களுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டதற்கும் கூடுதலான சமஷ்டித் தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் தீர்வு கைதவறிப் போய் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே கேள்விக்குறி ஆகியிருக்கும் நிலைக்கு நாம் வந்திருப்பதற்கும் தாங்கள் காரணமல்ல என்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூற முடியாது.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் முதல் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்த நாள் வரையுமான காலப் பகுதியே ஆணைக்குழுவின் விசாரணைக்குரிய காலம். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்க ளின் அரசியல் தலைமையை முற்று முழுதாகப் புலிகளுக்குக் கையளித்த காலமாகும். அதே நேரம், இதுவே தமிழ் மக்கள் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகிய காலப் பகுதியுமாகும். இப் பாதிப்புகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான முடிவுகளே பிரதான காரணம்.

இந்த நிலையில் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது சங்கடமான நிலைக்கு உள்ளாக நேரிடும் என்பதாலேயே கூட்டமைப்புத் தலைவர்கள் தயங்குவது போல் தெரிகின்றது.

ஐ.தே.கவுக்குள் நெருக்கடி

ஐக்கிய தேசியக் கட்சி இப்போது புதிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கின்றது. தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்ஹவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவிழந்துவிட்டது எனக் கூறலாம். ரணில் எதிர்ப்பாளர்கள் தலைமைப் பதவிக்குச் சிபார்சு செய்த சஜித் பிரேமதாசவும் ரணிலும் சந்தித்துப் பேசிச் சமரசத்துக்கு வந்ததுடன் அந்த அலை ஏறக்குறைய ஓய்ந்துவிட்டது.

இன்றைய நெருக்கடியில் கரு ஜயசூரிய சம்பந்தப்படுகின்றார். ரணிலின் நிலைப்பாட்டுக்கு எதிராகக் கரு ஜயசூரிய காய் நகர்த்துகின்றார். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பொதுவான எதிரணியை உருவாக்க வேண்டும் என்று கரு அண்மையில் விடுத்த வேண்டு கோளுடன் முரண்பாடு பகிரங்கமாக வெளிப்பட்டது.

ரணில் அடிக்கடி ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியிருக்கின்றார். அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரமுகர்கள் சிலரையும் தன்னுடன் அழைத்துச் சென்று ஜனாதிபதியுடன் பேசியிருக்கின்றார்.

இதே நேரம் பொதுவான எதிரணியை உருவாக்கி அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு அணி திரளுமாறு எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார். சரத் பொன்சேகவின் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான எதிரணி அமையுமேயானால் அது கொள்கை நிலைக்கு அப்பால் அரசாங்கத்தைத் தீவிரமாக எதிர்க்கும் அணியாகவே அமையும். ரணில் விக்கிரமசிங்ஹ ஜனாதிபதியுடன் பேசுவது தவறு என்று கரு ஜயசூரிய தனது அறிக்கையில் வெளிப்படையாகக் கூறாத போதிலும் அந்த அர்த்தம் அதில் தொனிக்கின்றது. ரணிலுக்கும் கரு ஜயசூரியவுக்கு மிடையே பனிப்போர் ஆரம்பமாகியிருப்பதையே இது வெளிப்படுத்துகின்றது.

கரு ஜயசூரியவின் அறிக்கையும் எதிர்க் கட்சிகளுக்கு விடுத்த அழைப்பும் ரணிலுக்கு எதிரான காய்நகர்த்தல் என்றால், ரணிலுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையும் சஜித்துக்குப் பிரதித் தலைவர் பதவி வழங்குவதாக ரணில் கூறியதும் ஜயசூரியவுக்கு எதிரான காய்நகர்த்தல். சஜித்தைப் பிரதித் தலைவராக நியமிப்பதன் மூலம் தனது தலைமையைப் பாதுகாக்கும் அதேவேளை கருவின்பல்லையும்பிடுங்கலாம் என்று ரணில் நினைக்கிறார். முந்த நாள்பாராளுமன்றத்துக்கு வந்த சஜித்தைப் பிரதித் தலைவராக்குவதா என்ற ஆத ங்கம்சீனியர்களுக்கு இருக்கவே செய்யும். எப்படியென்றாலும் ரணிலுக்குத் தொடர்ந்து பிரச்சினைதான்.

ஹக்கீமுக்கு அழுத்தம்

அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது அழுத்தம் பிரயோகிப்பதாகத் தெரிகின்றது. கட்சியின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத் துடன் இணைய வேண்டும் என் பதில் தீவிரமாக இருக்கின்றனர். இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்காவது இன்றைய அரசாங்கம் பதவியில் இருக்கும் என்றும் எதிர்க் கட்சி வரிசையில் தொடர்ந்து இருந்தால் தங்களைத் தெரிவு செய்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது போய்விடும் என்றும் இவர்கள் கூறுவதில் உண்மை உண்டு.

ரவூப் ஹக்கீமுக்கு இது மிகவும் சங்கடமான நிலை. அவர் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பானவர். அந்தக் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வது ஹக்கீமுக்கு உடன் பாடானதல்ல. ஆனால் இன்று அவர் தனது விருப்பத்துக்கேற்ற முடிவை எடுக்க இயலாதவராக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையைத் தனது கட்சி சகாக்களுக்கு அவரால் கொடுக்க முடியாது. ஏனெனில் அது நடக்கக் கூடிய காரியமல்ல.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்க ளுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள். தாங்கள் தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருப்பது நியாயமானதே. பாராளுமன்ற உறுப்பினர்களால் எதிரணி வரிசையில் இருந்துகொண்டு அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது. அதனாலேயே அரசாங்கத்தில் காங்கிரஸ் இணைய வேண்டும் என்று அவர்கள் கேட்கின்றார்கள்.

இப்படியான அனுபவம் முன்னரும் ஹக்கீமுக்கு ஏற்பட்டது. அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதைப் பொருட்படுத்தாமல் இருந்ததால் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்தார்கள். அந்த நிலை இப்போதும் ஏற்படும் போல் தெரிகின்றது. ஒருபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி விசுவாசம். மறுபுறத்தில் கட்சி பிளவுபடுவதைத் தவிர்க்க வேண்டிய தேவை. சங்கடமான நிலையில் ரவூப் ஹக்கீம்.

(ஜீவகன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com