Contact us at: sooddram@gmail.com

 

மீன்வளம் பெருக கரையோர மீன்பிடித்தலுக்கு ஓய்வுகொடுக்க வேண்டும்

கடல் நீரை உப்பாக, மாற்றுவதிலிருந்து கடல் நீரை குடிநீராக, கடல் அலையின் சக்தியை மின் சக்தியாக, கடல் காற்றை மின்சக்தி தயாரிப்பு வளமாக மாற்றுவது என பட்டியல் நீண்டு செல்லும், கண்ணுக்கு எட்டாத நீண்ட தொலைவில் இருக்கும் ஆழ்கடலில் வாழும் எண்ணிலடங்காத ஜீவராசிகளும் செடி, கொடிகளும் மனித இனத்திற்கு எண்ணற்ற வளங்களையும், வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுக்கக் கூடியதாகும். இன்னும் இனங்காணப் படாத கனிய வளங்கள் ஆழ் கடலுக்குள் உறைந்து போயுள்ளன.

இத்தனை பயன்மிக்க இந்த கடல் வளத்தை மனித இனம் எப்படிப் பயன்படுத்துகிறது? நம் நாட்டைச் சூழ்ந்துள்ள இந்து மகா சமுத்திரத்தை எம்மால் பார்க்க முடியாதிருந்த காலம் கடந்து தற்போது இந்த வளங்களை வருங்கால வளர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக வடக்கு, கிழக்கு கரையோர வாழ் மக்களின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. கடந்த மூன்று தசாப்த காலமாக தமது தொழிலை எதுவித அச்சமும் இன்றி செய்ய முடியாதிருந்தது. போரினால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்த அந்த மக்களின் வாழ்க்கையில் இப்போது ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

போருக்குப் பின்னர் வடபகுதியில் ஏற்பட்டு வரும் சுமுக நிலை எதிர்கால நடவடிக்கைகள், மற்றும் கடல் வளம், தொடர்பாக யாழ். கடற்றொழில் சங்க சம்மேளனத்தின் தலைவர் வீ. தவரட்ணம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டோம்.

யாழ். கடற்றொழில் சங்க சம்மேளனத்தின் தலைவரான வீ. தவரட்ணம் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மீனவர் சமூகத்திற்காக குரல்கொடுத்து வருபவர். சம்மேளனத் தலைவராக இருந்த போதிலும் எந்தவொரு வருமானமும் இல்லாது தன் வாழ்நாள் முழுதும் அந்த மக்களுடனே இருந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கேற்ற விதத்தில் கடவுள் நல்லதொரு வாழ்க்கையை தந்திருக்கிறார் என்கிறார்.

கேள்வி: யாழ் நிலமைகள் எப்படியிருக்கின்றன?

பதில்: கடற்றொழில் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிய போர்ச்சூழல் காரணமாக பூரணமாக இயங்க முடியாமல் இருந்தது. போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்களைக் கடந்துவிட்ட போதிலும் நாம் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். பொருளாதார நிலைமைகளுடன் ஒப்பிட்டால் சற்று மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

கேள்வி: போர்ச்சூழலில் மீனவர்கள் கைது செய்யப்பட்டது போலவே தற்போதும் இரு நாட்டு கடற்படையினராலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?

பதில்: கடந்த காலங்களில் எமது கடல் பகுதியில் இருக்கும் கடல் வளத்தை இந்திய மீனவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். யுத்த காலத்தில் எமது மீனவர்கள் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியமையும் ஒரு காரணமாகும். எமது படையினர் எம்மவர்களை கைது செய்வதில்லை. இந்திய மீனவர்கள் எமது எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்வதும் எமது மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது இந்திய கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.

வடபகுதி கடலில் மீன் வளம் அழிவை எதிநோக்கியிருக்கிறது. அழிவிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்திய கடல் பகுதியில் அவர்கள் கடல் வளத்தை உரிய முறையில் பின்பற்றப்படாததால் மீன் வளம் அழிக்கப்பட்டிருக்கிறது. முறையற்ற விதத்தில் மீன் பிடிப்பதால் மீன் பெருகுவது தடுக்கப் பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மீனவர்கள் இதனையே செய்து கொண்டிருந்தார்கள். கடல்வளம் மற்றும் மீன் உற்பத்தி தொடர்பான ஆய்வுகளை நடத்துவதுடன் மீனவர்கள் மத்தியில் மீன் உற்பத்தி, மீன் பிடிப்பது தொடர்பான அறிவுரைகளை வழங்கினால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் கடல் வளம் நிறைந்த பகுதியாக மாற்ற முடியும்.

கடல் வளத்தை பாதுகாப்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் பண்பான மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் தமிழக மீனவர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளோம்.

மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக இரு நாட்டு பாதுகாப்பு உயரதிகாரிகள் மீனவர் சங்கத் தலைவர்கள், மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கேள்வி: அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. என்ன காரணம்.

பதில்: இலங்கை மீனவர்கள் தொடர்பாக இந்தியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நானும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். இறுதி நேரத்தில் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு செல்ல ஆயத்தமான போது இது போன்றதொரு நிலை ஏற்பட்டது. அப்போது நிலவிய யுத்த சூழ்நிலைகள் காரணமாக விசா மறுக்கப்பட்டதாக எண்ணினேன். என்னுடன் இந்தியா செல்லவிருந்த யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் சூசை ஆனந்தனுக்கும் விசா வழங்கப்படவில்லை.

தற்போது யுத்தம் முடிந்து முழுநாடும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. அண்மையில் இந்தியாவிற்கு சென்ற மீனவர் சங்கக் குழுவில் எனது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியா செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்தேன். கிடைக்கவில்லை. யாரும் எதிர்பார்க்கவில்லை. விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது பயணப் பொதிகளையும் விமான நிலையத்திற்கு அனுப்பி விட்டேன். அந்த லக்கேஜ்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது.

விசா வழங்காமைக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது எதுவும் சொல்லப்பட வில்லை. அதற்கு பொறுப்பானவரைச் சந்திக்க அனுமதி கேட்டபோது அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

22 ஆயிரம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சேவை யாற்றி வரும் எமது சம்மேளனம் கிளி நொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள மீனவ சங்கங்களுடன் நல்ல உறவைப் பேணி வந்திருக்கிறது.

கேள்வி: இந்தியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்?

பதில்: மீன்பிடித்துறை அமைச்சு இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இலங்கையிலிருந்து யாழ். மாவட்டத்திலுள்ள 117 மீன்பிடிக் கிராம சங்கங்களும் 10 செயலகப் பிரிவுகளின் சமாஜங்களின் மீனவர்களுடன் இலங்கை கரிட்டாஸ், மெவ்சோ பிரதிநிதிகளுமாக 25 பேர் கொண்ட குழு தமிழகம் சென்றிருந்தது. இந்தியாவில் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய மீனவர் சம்மேளன சங்க ஆலோசகர் கே. விவேகானந்தன் செய்திருந்தார்.

இக்குழு தமிழ் நாட்டிலுள்ள ராமேஸ்வரம், நாகபட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர் கோவில் பகுதி மீனவர்களைச் சந்தித்து கலந்துரையாடியது. இரு நாட்டு மீனவர்களும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கான நேரடி சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களை எதிர்வரும் காலங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்திய மீனவர்கள் இல. கடற்பரப்பில் வருடத்திற்கு 70 நாட்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கேள்வி: கடல் எல்லையில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடிப்பதென்பது இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான நீண்டகாலப் பிரச்சினையாகும் இதற்கு எப்படி தீர்வு காணப்போகின்றீர்கள்.

பதில்: கரையோரப் பகுதிகளில் மீன்வளங்கள் குறைந்து வருவதால் கரையோரத் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தொலை தூரத்தில் இருக்கும் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும். கடந்த காலங்களில் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக ஆழ்கடல் பகுதிக்கு செல்லாமல் இருந்தனர். தற்போது சுமுகமானதொரு சூழல் ஏற்பட்டு வருகிறது. அரசாங்கம், மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் உள் இணைப்பு இயந்திரங்களைப் பாவித்து மீன் பழுதடையாத வகையில் குளிரூட்டிகளைப் பொருத்தி இரண்டு கிழமைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மற்றும் எரிபொருட்களுடன் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

கடற்றொழில் அமைச்சர் அண்மையில் யாழ். வந்தபோது இழுவைப்படகுகளையும், தங்கூஸ் வலைகளையும் பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாம் எனவும் பண்பான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளுவதன் மூலம் யாழ். மாவட்டத்திலுள்ள மீன் வளத்தைப் பாதுகாக் கக்கூடியதாக இருக்கும் என்றார். மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கரு ணாரட்ன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். மத்திய வங்கியின் வடமாகாணத்திற்கு பொறுப்பான வங்கி ஆளுனர் சிறீதரன் இச்சந்திபிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். மீனவர்கள் தமது தொழில்களில் ஈடுபடுவதற்கு தேவையான படகுகள் இயந்திரங்கள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை கொள்வனவு செய் வதற்கு தேவையான கடன் உதவிகளை குறைந்த வட்டி வீதத்திற்கு வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வதாக இருந்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை எமது சங்கம் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறது. தனியொரு நபரால் பெருந்தொகைப் பணத்தை செலவிட முடியாது. ஒரு இயந்திரப் படகுக்கான செலவு 12 மில்லியன் ஆகும். சங்கங்களின் மூலமோ அல்லது குழுக்களாகவோ சேர்ந்து படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் கொள்வனவு செய்ய இலகுக்கடன் உதவிகளை வழங்க கடற்றொழில் அமைச்சு, மற்றும் தொண்டர் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றின் உதவிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: வடக்கின் பொருளாதாரத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. நீண்டகாலமாக பயிரிடப்படாமல் இருந்த காணிகளில் விவசாயிகள் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தேவைக்கேற்ற உற்பத்தியை இன்னும் அடையவில்லை. வடமாகாணம் படிப்படியாக சுமுக நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. கடல் உற்பத்திப் பொருட்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென் பகுதியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வட பகுதி நோக்கி வருகின்றனர். 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலைமைகள் எப்படியிருந்ததோ அதனைவிட பல மடங்கு நிலைமைகளில் பாரிய மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

முன்னர் வட பகுதியிலிருந்து பெருந்தொகையான மீன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டது. ஐஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கின. தற்போது லொறிகளில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்துப் பிரச்சினைகள் இல்லை. வடபகுதிப் பொருட் களுக்கு தென்பகுதி சந்தையில் சிறந்த வாய்ப்பு இருக்கிறது. பணம் பொருள் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

கேள்வி: எதிர்காலத்தில் மீன்பிடித் துறையில் எவ்வாறான மாற்றம் ஏற்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: நாட்டின் கரையோரப் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுவோரின் நலன்கருதி மீனவர் சங்கங்கள், சம்மேளனங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து இலங்கை கடற்றொழிலாளர் மகா சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். எதிர்வரும் காலங்களில் கடல் வளம் நிறைந்ததொரு நாடாகத் திகழ்வதற் கான அனைத்து நடவடிக்கைகளையும் கடற் றொழில் மகா சம்மேளனம் எடுக்கும். 83 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு தெற்கும் எப்படி இணைந்திருந்ததோ அதனைவிட பல மடங்கு உற்பத்தியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குவதுடன் மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சிறந்த சூழல் ஏற்படும்.

(பி. வீரசிங்கம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com