Contact us at: sooddram@gmail.com

 

அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர் சிவமகாராசா

யாழ்ப்பாண மாவட்டத்தின் காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகாராசாவின் மறைவு குறித்த அஞ்சலிப் பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் ஆற்றிய உரையின் சுருக்கம்

ந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள்; இறக்கிறார்கள். அது உலக நியதி. இயற்கையை, இறைக் கட்டளையை யாரும் மறுதலிக்க முடியாது. ஆனால், இந்த உலகத்தில் இறக்கின்ற எல்லோரையும் பற்றி மக்கள் பேசுவதில்லை; உலகம் போற்றுவதில்லை. இறந்த பின்னரும் மக்கள் போற்றுகின்ற, உலகம் துதிபாடுகின்ற ஒருவர்தான் எங்கள் அன்புக்குரியவரும் மதிப்புக்குரியவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சிவமகாராசா அவர்கள்.

சிவ + மகா + ராசா என்ற மூன்று அற்புதமான பெயர்களைத் தன்னுடைய இயற்பெயராகக் கொண்டவர் சிவமகாராசா அவர்கள்.

இந்த இடத்திலே வன்செயலின் பயங்கரவாதத்தின் கொடூரத்தன்மையை நாங்கள் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம். சிவமகா ராஜாவை மாத்திரமல்ல, வன்செயலின் காரணமாக துப்பாக்கிக் கலாசாரத்தின் காரணமாக இந்த நாடு இழந்த அருந்தவத் தமிழ்த் தலைவர்களை ஞாபகமூட்டுவது பொருந்தும். இந்த இடத்தில் நான் ஏனையவர்களை விட்டுவிடுகின்றேன்.

தளபதி அமிர்த்தலிங்கம் ஐயா அவர்கள் இந்தச் சபையிலே எதிர்க்கட்சித் தலைமை ஆசனத்தை அலங்கரித்தவர்! கொடூர பயங்கரவாதிகள் அவரை இங்கே, கொழும்பிலே, பெளத்தாலோக மாவத்தையில்சுட்டுக் கொன்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்! இவர்களும் சிவனின் நாமத்தைத் தமது பெயரின் பகுதியாகக் கொண்டவர்கள். இப்படியாக இன்னும் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். நான் மதிப்பு வைத்திருக்கின்ற மாவை சேனாதிராஜா போன்ற ரி. என். ஏ. கட்சி உறுப்பினர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்த பாராளுமன்ற ஆசனத்தை அலங்கரித்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள்! அற்புதமான ஒரு தமிழ்த் தலைவர்; நல்ல விரிவுரையாளர்; ஆய்வாளர். சிங்கள சமூகமும் முஸ்லிம் சமூகமும் அவரை ஒரு சிந்தனையாளரென்று ஒத்துக் கொண்டன. சிவமகாராஜா அவர்களைப் போன்று அவரும் இந்த பயங்கரவாதத்துக்கு இலக்கானார். உலக நாடுகளுக்குச் சென்று இந்த நாட்டுக்குப் புகழ் ஈட்டித்தந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூட படுகொலை செய்யப்பட்டார்.

கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, இந்த நாட்டின் பிரதம அமைச்சராக லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் வரவேண்டுமென்று ஒரு காலகட்டத்தில் எதிர்த்தரப்பைச் சேர்ந்த சிங்களக் கட்சியினர் கூட சொன்னது எனக்கு நினைவுக்கு வருகின்றது. அந்தளவுக்கு அவர்களுடன் நெருக்கத்தினை ஏற்படுத்தினார்.

மனிதாபிமானம் அவருள் பூத்து மலர்ந்தது; மனிதத்துவம் அவருள் பிரகாசித்தது. நான் மிகவும் நெருக்கமாக நட்பு பூண்டிருந்த தர்மலிங்கம் ஐயா; மற்றும் இந்த சபையிலே எங்களோடு விவாதித்த நடராஜா ரவிராஜ் போன்றவர்களும் அதேபோன்றுதான் தங்களுடைய இன்னுயிரை நீக்க நேர்ந்தது. இன்று பாருங்கள்! இந்த நாட்டிலே நாம் எங்கும் சுதந்திரமாக நடமாட முடியும்.

இந்த நாட்டு மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத்தைப் பூண்டோடு அழித்து இன்று இந்த நாட்டிலே ஓர் அருமையான சமாதானமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலே ஒரு பெரும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலட்சக்கணக்கான சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று வருகின்றார்கள். கீரிமலைக்குச் சென்று நீராடி வருகின்றார்கள். நாகதீப என்று அழைக்கப்படுகின்ற நயினாதீவுக்குச் சென்று அங்குள்ள கோவிலை வழிபட்டு வருகின்றார்கள்.

நயீனாதீவிலே ஒரு முஸ்லிம் பள்ளிவாசலும் இருக்கின்றது என்பதை நான் நினைவூட்ட வேண்டும். அங்கும் நான் சென்று வந்தேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கட்டியெழுப்பிய ஒற்றுமையை, சமாதானத்தை ஐக்கிமான சூழ்நிலையைப் பேண நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த நாட்டிலே மீண்டும் ஒரு இரத்தக் களரி ஏற்படுவதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது: அத்தகையதொரு சூழ்நிலை உருவாகக் கூடாது. யாராவது அப்படிச் செய்வார்களாயின் அவர் மனிதத்துவத்திலிருந்து மனித இனத்திலிருந்தே நீங்கியவர் ஆவர்.

24 வயதுடைய எமது இளம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று அப்பியாசக் கொப்பிகளையும் புத்தகங்களையும் வழங்கியது மாத்திரமல்ல ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று பணமுடிச்சை வழங்கி வருகிறார். அன்று சிவமகாராசா அவர்களின் காலத்தில் அத்தகைய சூழ்நிலை இருக்கவில்லை. மேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வடக்கில் வசந்தம் உருவாகியிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பஸில் ராஜபக்ஷ அவர்களே அதனை முன்னெடுத்துச் செல்கின்றார். இந்த நாட்டில் யுத்தத்தை ஒழித்து பூரண பாதுகாப்பை ஏற்படுத்திய பெருமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களையே சேரும்.

திருக்குறளில்இன்னா செய்தல்என்னும் அதிகாரத்தில் நல்லன செய்தல் பற்றிப் பல குறள்கள் இருக் கின்றன. நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எமது கையால் பூமாலை சூட்ட முடியாவிட்டாலும் நாவினால், அல்லது குறைந்த பட்சம் மனதினாலேனும் நன்றிப் பூமாலையைச் சூட்ட வேண்டும். அதுவே மனிதத்தன்மை.

தமிழர் தேசிய கூட்டணித் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் எமது மேதகு ஜனாதிபதி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களுடன் எமது பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கின்றார்கள்.

எனவே, நாங்கள் இந்த நடபுக் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வோம். இது எங்களுடைய நாடு. நாம் பிறந்த நாடு நமது என்பது அறிவோம்எனப் பாரதியார் பாடினார். பாரதியார் இதனை அந்நாட்டுக்கு மட்டும் சொல்லவில்லை. எங்களுடைய நாட்டுக்கும் சேர்த்துதான் சொன்னார். இது எங்கள் நாடு, நாம் பிறந்த பொன்நாடு. எங்களுடைய நாட்டிலுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாங்கள் காவடியைத் தூக்கிக் கொண்டு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். எங்களுடைய தலைவிதியை நாங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இன்று மேதகு ஜனாதிபதி அவர்களும் இந்த அரசாங்கமும் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக அன்பு ஆறு ஓடுகின்றது! பெருக்கெடுக்கின்றது! பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கின்ற இராணுவ வீரர்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கலாம்! அதனையும் நாங்கள் தீர்த்துக் கொள்வோம்!

சிவமகாராசா அவர்கள் இன்று வாழ்ந்திருந்தால் உண்மையிலேயே மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய கரங்களைப் பற்றிப் பிடித்து நாட்டின் முன்னேற்றத்திற்காக அந்தப் பயணத்தை மீண்டும் துவங்கி யிருப்பார் ஐயா! அவர் நம்பிக்கைப்படி மீண்டும் ஜென்மம் எடுத்தால்கூட அவர் அதனைச் செய்வார் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் கிடையாது.

இறுதியாக அன்னாருடைய குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் அன்னாரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய வாக்காளப் பெரு மக்கள் அனைவருக்கும் எங்களுடைய அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்று தவிசாளர் அவர்களை வேண்டி என்னுரையை நிறைவு செய்து கொள்கின்றேன்.

நன்றி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com