Contact us at: sooddram@gmail.com

 

வீதிகளில் நாளாந்தம் வீணான உயிர்ப்பலிகள்

நாடெங்கும் வாகன விபத்துக்கள் மிக மோசமாக அதிகரித்து விட்டன. விபத்துக்களால் உயிரிழப்போரின தும் காயம் மற்றும் ஊனமடைவோரினதும் எண்ணிக்கை யும் அதிகமாகவே உள்ளது. முன்னரைப் போன்று இல்லாது தற்போது விபத்துக்களின் தன்மை மிகவும் கோரமாகக் காணப்படுகிறது.

மட்டக்களப்பில் வின்சன்ற் மகளிர் கல்லூரி மாணவியொருவர் அங்கு இடம் பெற்ற விபத்தொன்றில் கொல்லப்பட்ட சம்பவமும் இப் பரிதாப நிலைமைகளில் ஒன்றாகும். மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் முன்னரெல்லாம் இதுபோன்ற மோசமான விபத்துகள் இடம்பெற்றதில்லை. உயிர்ப்பலி ஏற்படும்படியாக அங்கு விபத்து ஏற்படுவதற்கு வாகனங்களின் அதிகரித்த வேகமே காரணமாகும்.

இம்மாணவியை மோதிக் கொன்ற வாகனத்தின் சாரதி கட்டுமீறிய வேகத்தில் அவ்வாகனத்தைச் செலுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி அவர் உரிய ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை. பாதுகாப்பு சோதனையிலிருந்து தப்பிச் செல்லும் நோக்குடன் வாகனத்தை தறிகெட்டுச் செலுத்தியதன் விளைவாகவே அச்சாரதி இம்மாணவியை மோதிக் கொன்றுள்ளார்.

மட்டக்களப்பு சம்பவம் மாத்திரமன்றி நாட்டில் இடம் பெறுகின்ற கூடுதலான வாகன விபத்துக்களை எடுத்து நோக்குவோமானால் சாரதிகளின் அலட்சியமே விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. வீதிப் போக்குவரத்துக் குற்றமிழைப்போரில் கூடுதலானோர் தனியார் பஸ் சாரதிகளென அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக முச்சக்கரவண்டி சாரதிகள் விளங்குகின்றனர்.

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியும் கட்டுங்கடங்காத வேகத்திலும் இவர்கள் வாகனத்தைச் செலுத்துவதன் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவர்கள் இழைக்கின்ற குற்றங்களுக்கு தொழில் போட்டியே முக்கிய காரணமாகும். முன்னால் செல்கின்ற வாகனத்தை முந்திச் சென்று கூடுதல் பயணிகளை ஏற்றிக் கொள்ள வேண்டுமென்ற அவசரத்தினால் தனியார் வாகனச் சாரதிகள் அசுர வேகத்தில் வாகனத்தைச் செலுத்துகின்றனர். நகரங்களுக் கிடையிலான சேவையில் ஈடுபடுகின்றஇன்டர்சிற்றிபஸ்களின் சாரதிகளும் இதுபோலவே வாகனங்களை தறிகெட்டுச் செலுத்துகின்றனர்.

வீதியில் செல்கின்ற ஏனைய வாகனங்களைப் பற்றியோ பாதசாரிகள் குறித்தோ இவர்கள் கவனம் கொள்வதில்லை. இத்தகைய சாரதிகளின் அலட்சியத்தினால் தினமும் சிலர் வீதியில் உயிரிழக்க வேண்டிய பரிதாபம் ஏற்படுகிறது.

தனியார் பஸ் சாரதிகள் தொடர்பாக பொது மக்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ் சாரதிகள் பலர் போதைப் பொருளுக்கு அடிமை யானவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது. குற்றச் செயல்கள் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டு பிணையில் வெளிவரும் சிலரும் தனியார் பஸ் சாரதிகளாகத் தொழில் புரிவதாகத் தெரியவந்துள்ளது. இதே சமயம் மதுபானம் அருந்திய நிலையில் மினிபஸ் செலுத்திய சிலரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். வாகன விபத்துகள் இடம்பெறுவதற்கு இவர்களைப் போன்றோரே காரணமாகின்றனர்.

போக்குவரத்துக் குற்றங்களைப் பொறுத்தவரை பொலிஸாருக்கு பாரிய கடமைப் பொறுப்புகள் உள்ளன. போக்குவரத்துப் பொலிஸாரின் கண்டிப்பான நடவடிக்கைகள் உரிய இடங்களில் உரிய சந்தர்ப்பங் களில் பிரயோகிக்கப்படுமாக இருப்பின் வாகன விபத்துகள் பெருமளவில் குறைவதற்கு வாய்ப்புண்டு. போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

வெறிச்சோடிக் கிடக்கின்ற வீதியொன்றின் மறைவில் நின்றபடி மோட்டார் சைக்கிளில் வருகின்ற ஒருவரின் சாதாரண சிறு குற்றங்களுக்கு அபராதம் விதிப்பதைப் பார்க்கிலும், பலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் விதத்தில் வாகனப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்படுகின்ற தனியார் பஸ் சாரதிகளைக் கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பதே பிரதானமான தாகும். மக்கள் மத்தியிலுள்ள ஆதங்கமும் இதுதான். குற்றமிழைக்கின்ற தனியார் பஸ் சாரதிகள் குறித்து போதிய கண்காணிப்பு செலுத்தப்படுவதில்லையென்ற கவலை மக்கள் மத்தியில் உண்டு.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க வீதிப் போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பாக எமது நாட்டில் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்ற கருத்து மக்கள் மத்தியில் நீண்ட காலமாகவே நிலவுகிறது. பலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்ட சாரதியொருவர் விரைவில் பிணையில் வெளியே வந்து விடுகிறார்.

விபத்து மரணங்கள் கொலைக் குற்றங்களல்ல என்பதாலும் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறென்பதனாலும் சம்பந்தப்பட்ட வாகன சாரதி குறைந்த பட்ச தண்டனையுடன் விடுதலையாகி வந்து விடும் நிலைமையே காணப்படுகிறது. இதன் காரணமாக சட்டம் மீதான பயம் சாரதிகள் மத்தியில் கிடையாது. அவர்கள் தொடர்ந்தும் அலட்சியப் போக்கிலேயே செயற்படுகின்றனர்.

நாட்டில் விபத்துகளும் விபத்து மரணங்களும் அதிகரிப்பதனால் இத்தகைய போக்கு இனிமேலும் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது. காத்திரமான ஏற்பாடுகள் அவசியமும் அவசரமும் ஆகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com