Contact us at: sooddram@gmail.com

 

நாடும், இடதுசாரிகளும்

(எம்.ஏ.பேபி)

இன்றைய காலகட்டத்தில் மார்க்சியம் பொருந்துமா என்ற கேள்வியும், இடதுசாரிக ளின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது என்றே நான் கருதுகிறேன்.  இடது என்பதற்கு தத்துவார்த்த அடிப்ப டையிலான அர்த்தம் வேறு, பொதுவான வழக்கு மொழி அடிப்படையிலான அர்த்தம் வேறு. தத்துவார்த்த அடிப்படையிலான அர்த்தம் என்று எடுத்துக் கொள்ளும் போது, யாரெல்லாம் சுரண்டலுக்கு எதிராக, சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராக, முதலாளித்துவத்திற்கு எதிராக அணிதிரள்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இடதுசாரிகள். இன்றைய மொழியில் கூறுவதானால், தாராள சந்தைப் பொருளா தாரத்தை எதிர்த்து, எல்பிஜி எனப்படும் உலக மயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமய மாக்கல் கொள்கைகளை எதிர்த்து நிற்பவர் கள் இடதுசாரிச் சிந்தனை உடையவர்கள். இதற்கு மாறாக, இந்த கொள்கைகளை ஆதரிக் கக்கூடிய, சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதர வான சிந்தனை உடையவர்கள் வலதுசாரி சிந்தனாவாதிகள். எனவே, இடதுசாரி சிந்த னாவாதிகள் அல்லது இடதுசாரி தத்துவத்தி னை கடைப்பிடிப்பவர்கள், சுரண்டும் வர்க்கத்தை மாற்றியமைக்க, முதலாளித்துவ அமைப் பினை மாற்றியமைக்க முனைபவர்களே.

இங்கே நான் மதிப்பிற்குரிய மிகப் பிரபல மான மார்க்சியவாதியான எரிக் ஹாம்ஸ்வாம் அவர்களைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சமீபத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் ஜன வரி மாதம் அவர் எழுதி வெளிவந்துள்ளஉல கினை எப்படி மாற்றுவது? (ழடிற வடி உாயபேந வாந றடிசடன)” என்ற நூலைப் பற்றி இங்கே குறிப் பிட்டாக வேண்டும். அந்த புத்தகத்தில் எரிக் என்ன குறிப்பிடுகிறார் என்றால், “21ம் நூற் றாண்டிற்கான பிரச்சனைகளுக்குரிய தீர்வு களை நம்மால் முன்பே கண்டறிய முடியாது. பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண நாம் முனைவதாக இருந்தால், ஒருவருக்கு மார்க்ஸ் மற்றும் அவரது சீடர்களான ஏங்கெல்ஸ், லெனின் போன்றவர்களது தீர்வுகளில் உடன் பாடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர் கள் எழுப்பியுள்ள கேள்விகளை தூக்கி எறிந்து விட முடியாது என்பதுதான் உண்மை. தீர்விற்கான விடைகளை மார்க்ஸ் எழுப்பி யுள்ள கேள்விகளில் இருந்துதான் துவங்க வேண்டியிருக்கும்என்று குறிப்பிடுகிறார். இந்த இடத்தில்தான் இந்த நூற்றாண்டிற்கு மார்க்சியம் பொருந்துமா என்ற கேள்விக்கான விடை வருகிறது.

தற்போது இந்தியாவில் சமீபத்திய தேர் தல்களின் போது, இடதுசாரிகள் அடைந்த பின்னடைவு குறித்தும் சிறிது பேசியாக வேண்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 34 வருட ஆட்சிக்குப் பிறகு இடதுசாரிகள் சந் தித்துள்ள பின்னடைவு என்பதும், கேரளத் தில் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்டா லும், தோல்வியிலும் வெற்றி கண்டுள்ள நிலையைப் பற்றியும் நாம் சிறிது விவாதிக்க வேண்டியுள்ளது. கேரளத்தில் தோற்றுப் போன இடங்களில் கூட 140 ஓட்டுகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தான் தோல்விய டைந்துள்ளோம் என்பதும், ஒட்டுமொத்தமாக 3 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 1040 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத் தில்தான் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது என் பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் இடதுசாரிகளின் பின்ன டைவு என்பது வலதுசாரி சக்திகளுக்கும், பிற்போக்குச் சக்திகளுக்கும் ஒரு சந்தர்ப்பத் தினை ஏற்படுத்தித் தந்துள்ளது. தமிழகத்தில் இடதுசாரிகளின் பலம் என்பது குறைவானது அல்ல. 20 இடங்கள் (சிபிஎம் 10, சிபிஐ 9, பார் வர்டு பிளாக் 1) என்பது சாதாரண விஷயமல்ல.

5 மாநில தேர்தல்களை ஒப்பிடும்போது, முக்கிய பிற்போக்குக் கட்சிகளின் நிலை என்ன என்பதை நாம் பரிசீலிக்க வேண்டி யுள்ளது. மேற்குவங்கத்திலே கிட்டத்தட்ட 41.17 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர் இடதுசாரிகள். 40 இடங்களை மார்க்சிஸ்ட் கட்சி பெற்றுள்ளது. ஆனால், முன்பு பிஜேபியு டன் கூட்டு வைத்திருந்த மம்தா பானர்ஜிக்கு தாளம் போட்டுக்கொண்டு ஒரு சந்தர்ப்ப வாதக் கூட்டணியினை அமைத்துக்கொண்ட காங்கிரஸ் பெற்றுள்ள இடங்கள் 42 மட்டுமே. கேரளாவைப் பொறுத்தவரையில் கேரள சட்ட மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சிதான் ஆளும் கூட்டணியின் தலைமைக்கட்சியான காங்கி ரசை விட (காங்கிரஸ் 38 இடங்கள்) 9 இடங் கள் அதிகமாக, 47 இடங்களைப் பெற்று பெரும்பான்மை கட்சியாக விளங்குகிறோம். அதேபோன்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்க வெற்றியினையே எட்டியுள்ளது. அசாமில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியினை நாம் அங்கீகரிக்கிறோம். இத்தேர்தல்களில் மற் றொரு முக்கிய கட்சியும் எதிர்க்கட்சியுமான பாஜகவின் நிலை மிக மோசமடைந்துள்ளது. அசாமில் மட்டும்தான் 5 இடங்களைப் பெற்றுள்ளது. அதுவும் சென்ற முறை பெற்ற 10 இடங்களு டன் ஒப்பிடுகையில் குறைவே. எனவே, முக்கியமான பூர்ஷ்வா கட்சிகள் இரண்டுமே இந்த தேர்தல் வெற்றிகள் குறித்து களிப்படைய ஏதுமில்லை என்பதுதான் உண்மை. அதேபோன்று 2009 மக்களவைத் தேர்தலிலும் இந்த இரண்டு கட்சிகளுமே சேர்ந்து பெற்ற வாக்குகள் வெறும் 47.35 சதவீதம் தான். அதாவது, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத பிற கட்சிகள் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை, மக்களின் ஆதர வினைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவு.

தற்போது இடதுசாரிகளுக்கு ஏற்பட் டுள்ள பின்னடைவு குறித்து பல்வேறு வித மான கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஒரு சாரார், இடதுசாரிகளின் இருப்பு அவசியம் என்றும், அவர்கள் வளரவேண்டும் என்றும், நாங்கள் இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் கூறிக்கொள்பவர்கள். அவர் கள் இந்த பின்னடைவு குறித்துக் கூறும் போது, இடதுசாரிகளின் கொள்கைகள் குறித்து மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதிலும் இரண்டு வகையான விமர்சனங்கள் உள்ளன. ஒரு தரப் பின் விமர்சனம்இனிமேல் இடதுசாரிகள் மீண்டும் எழுவது என்பதற்கு சாத்தியமில் லை. அவர்களுடைய கொள்கைகள் முற்றி லும் தவறானவை. எனவே, இடதுசாரிகளுக்கு இனிமேல் நல்ல எதிர்காலம் இல்லை. எப் படியும் அவர்களது கொள்கைகளின் காரண மாக அவர்கள் சீக்கிரத்திலோ அல்லது சிறிது காலம் கழித்தோ வீழ்ந்தாக வேண்டும் என் பதைத்தான் தற்போதைய வீழ்ச்சி குறிப் பிடுகிறதுஎன்பதாகும்.

மற்றொரு தரப்பினர்சுதந்திரம் (குசுநுநு)” மற்றும் தாராளமயமாக்கல் குறித்த சிந்தனை யுடைய ராமச்சந்திர குகா போன்றவர்கள். அவ ரைப் பொறுத்தவரையில் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் கொள்கைகளை திரும்பிப்பார்த்து மிக அதிகமான மாறுதல்களை செய்ய வேண்டி யுள்ளது என்று கூறுகிறார். ரிவிசனிசம்அதாவது புரட்சிக்கு எதிரான சிந்தனாவாதத் தினை கம்யூனிஸ்டுகள் தங்கள் கொள்கை மாற்றமாகக் கொண்டுவரவேண்டும் என்று கூறுகிறார். கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில் ரிவிசனிசம் என்பது மிக மோச மான வார்த்தை. மேலும் இதற்கு எந்த கம்யூ னிசவாதி தயாராக முன்வந்து நமது நாட்டின் ஜனநாயகத் தன்மைக்கேற்ற நவீன இந்திய மார்க்சியத்தை உருவாக்கப் போகிறார் என்ற கேள்வியையும் எழுப்புகிறார். அதேபோன்று அவர், சந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்தும், பல கட்சி ஜனநாயகம் குறித்தும் பேசுகிறார். சுருக்கமாகச் சொல்வதென்றால், ராமச்சந்திர குகா போன்ற தாராளமயமாக் கலுக்கு ஆதரவான அறிவுஜீவிகள், இடதுசாரி களின் இந்த தேர்தல் பின்னடைவினை பயன்படுத்திக்கொண்டு, நாம் நமது அறிவி யல்பூர்வமான சோஷலிச தத்துவார்த்த தளத் திலிருந்து தடம்புரண்டு, விலகி, மார்க்சிய-லெனினிய தத்துவார்த்த சிந்தனைகளை கைவிட வேண்டும் என்று விரும்புகின்றனர்; வலியுறுத்துகின்றனர்.

இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். புரட்சிகர சக்திகளுக்கு, குறிப்பாக இடதுசாரிகளுக்கு பின்னடைவு என்பது புதிதல்ல. இதைவிடவும் பெரிய பின் னடைவுகளை சந்தித்துள்ளனர். வரலாற்றை திரும்பிப் பார்த்தோமானால், 1848ல் வெளி வந்த கம்யூனிஸ்ட் அறிக்கையின்படி, ஐரோப் பாவில் கிளம்பிய புரட்சியானது ஆட்சியாளர் களால் மிகக்கடுமையாக அடக்கப்பட்டது. மார்க்ஸ் நாடு விட்டு நாடு போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால்அப்படி அவர் சென்று இங்கிலாந்தில் இறுதியாக இருந்த போது எழுதிய புத்தகம்தான் தற்போது அனைவராலும் கொண்டாடப்படும்மூல தனம்”. இப்படி ஆங்காங்கே கிளர்ந்தெழுந்த புரட்சிகள்ஒடுக்கப்பட்டதன் காரணமாக, மார்க்சும் ஏங்கெல்சும் மனம் தளர்ந்துவிடவில் லை. மாறாக, அவர்கள் அந்த படிப்பினைக ளின் அடிப்படையில் மீண்டும் புரட்சிகரக் கருத்துக்களை உருவாக்கினர். அந்த நேரத் தில் வந்த பிரான்ஸ் தேசத்தியஆட்சி மாற் றம்என்பது இரண்டு மாதங்கள் 10 நாட்கள் மட்டுமே வெற்றிகரமாக இருந்தது. மீண்டும் அந்த கிளர்ச்சி தோல்வியடைந்தபோது மார்க் சும் ஏங்கெல்சும் அந்த கிளர்ச்சியின் போக்கு, வீச்சு மற்றும் இதர பல விஷயங்களை பரி சீலனை செய்து, அதிலிருந்து சில படிப் பினைகளை பெற்று, தங்களுடைய புரட்சிகர சிந்தனைகளை வளப்படுத்தி, 1872ல் ஜெர்மனியில் மீண்டும் ஒரு கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். அதில் அவர் கள் தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் கைகோர்க்கவேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியிருந்தனர். அதேபோன்று லெனி னும் இந்த பாரீஸ் ஆட்சி மாற்றத்தை படிப் பினையாகக் கொண்டு மார்க்சிய சித்தாந்தத் திற்கு வளம் சேர்த்துள்ளனர். எனினும், மார்க் ஸோ, ஏங்கெல்ஸோ புரட்சியை கை விடுவது குறித்து ஒருபோதும் யோசிக்க வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

(தொடர்ச்சி நாளை வெளியாகும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com