Contact us at: sooddram@gmail.com

 

வடஇலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது

ஆனையிறவு உப்பளத்தின் பணிகளை துரிதகதியில் ஆரம் பிப்பதற்கான நடவடிக்கைகளை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, இப் போது எடுத்து வருவதாக அவ்வமைச்சின் செயலாளர் வி. சிவ ஞானசோதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆனையிறவு உப்பளத்தின் பணிகளை கூடியவிரைவில் ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விடுத்த உத்தரவை அடுத்தே இப்பணிகள் இப் போது வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத யுத்தம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த காலகட்டத்தில் ஆனையிறவு உப்பளத்தின் வேலைகள் கைவிடப்பட்டு செயலிழ ந்து இருந்தன. ஆனையிறவு உப்பளம் அமைந்துள்ள பிரதேசத்தில் நிலக்கண்ணிவெடிகள் பெருமளவில் புதைக்கப்பட்டிருந்த காரணத்தி னால், அவை முற்றாக அகற்றப்படும் வரையில் உப்பளத்தின் உற் பத்தி பணிகளை ஆரம்பிக்க முடியாத ஒரு சிக்கல் முன்பு தோன் றியிருந்தது.

இப்போது இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவினர் உப் பளத்தை சார்ந்த சகல பிரதேசங்களிலும் புதையுண்டு இருந்த கண் ணிவெடிகளை அகற்றும் பணிகளை வெற்றிகரமான முறையில் நிறை வேற்றி இருப்பதனால், உப்பளத்தின் பணிகளை ஆரம்பிப்பதற்கான பச்சை கொடி காண்பிக்கப்பட்டுள்ளது. 1800 ஏக்கருக்கும் கூடுத லான நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஆனையிறவு உப்பளங்களிலி ருந்து வருடாந்தம் பல்லாயிரக்கணக்கான தொன் உப்பை தயாரிக்க முடியும் என்று மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த உப்பளம் செயற்பட ஆரம்பிக்கும் போது அதனால், தேசிய பொருளாதாரம் வளம்பெறுவதுடன் வடபகுதியின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வடபகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க ஆரம்பித்திரு ந்த காலகட்டத்தில் 1980 ஆம் ஆண்டு தசாப்தத்தின் நடுப்பகுதியில் ஆனையிறவு உப்பளத்தின் உற்பத்தி பணிகள் முற்றாக கைவிடப் பட்டன. அன்று, இந்த உப்பளம் சிறப்புற செயற்பட்டுக் கொண் டிருந்த காலகட்டத்தில் அங்கிருந்து வருடாந்தம் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் தொன் வரையிலான உப்பு அறுவடை செய்யப்பட்டது.

இது நாட்டின் உப்புத்தேவையின் 40 சதவீதத்தை ஈடுசெய்வதாக அமை ந்திருந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி பயங்கரவாதிகளினால் முற்றாக அழிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்திற்கு ஜனாதிபதி அவ ர்களின் பணிப்புரையின் கீழும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வின் ஆலோசனைக்கு அமையவும் இப்போது புத்துயிரூட்டும் நட வடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது என்றும் இதற்கு எதிர் காலத்தில் வட மாகாண சபையின் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் கூறினார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது தொடர்பாக நடந்த வைபவமொன் றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், ஆனையிறவு உப்பளம் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் பங்களிப்பை வழங்கி வந்தது என்று கூறினார். அத்தகைய வளமான இந்த உப்ப ளம் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக 1990 ஆம் ஆண்டு முதல் செயலிழந்து இருக்கிறது என்று கவலை தெரிவித்திருக்கிறார்.

இந்த உப்பளத்தின் உற்பத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்ட காரணத்தி னால், அங்கு பணியாற்றிய சுமார் 4,000 ஊழியர்கள் கடந்த காலத் தில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வந்தார்கள் என்று தெரிவி த்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவர்களின் வேண்டுகோளை ஏற்று இவ்வாண்டு ஆரம்பம் முதல் இந்த ஊழியர்களுக்கு கடந்த காலத்தில் செலுத்தப்படாத சம்பளத் தொகையுடன் நஷ்டஈடுகளை யும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித் தார்.

ஆனையிறவு உப்பளத்தைப் போன்று வடபகுதியில் பொருளாதாரத்தி ற்கு உறுதுணை புரிந்து வந்த மேலும் பல பாரிய தொழில் முயற்சி கள் பயங்கரவாதிகளினால் செயலிழக்கச் செய்யப்பட்டன. அரசாங் கம் இப்போது அவை அனைத்தையும் ஆரம்பித்து வடபகுதி மக்க ளின் வாழ்க்கையையும், அவர்களின் பொருளாதாரத்தையும் வளம் பெற வைக்கும் நல்ல பல திட்டங்களை மஹிந்த சிந்தனை எண் ணக்கருவுக்கு ஏற்புடைய வகையில் நிறைவேற்றி வருவது பாராட் டுக்குரிய செயலாகும்.

வடபகுதியின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமா யின், தென்னிலங்கையை வட இலங்கையுடன் இணைக்கும் பாரிய வீதிகளை திருத்தி அமைத்தல் அவசியம் என்பதனால், இன்று வட பகுதிக்கான பிரதான வீதிகள் மட்டுமல்ல, கிராமங்களை இணைக் கும் சிறிய வீதிகளும் வேகமாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், வடபகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சார இணை ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், தரைக்கண்ணிவெடிகளை முற்றாக அகற்றி விளைச்சல் நிலங்களில் மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப் பதற்கான உரப்பசளை, உழவு இயந்திரங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதிகளையும் அரசாங்கம் இப்போது துரித கதியில் பெற்றுக் கொடுத்து வருகிறது.

இப்பணியை பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களும், அம்பாந்தோட்டை தொகுதியின் இளம் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவும் நெறியான முறை யில் இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com