Contact us at: sooddram@gmail.com

 

சுரேஷ் பிரேமச்சந்திரனும் வருடாந்த மாநாடும்கற்றவை குறித்த குறிப்புக்கள்

(சபா நாவலன்)

80 களில் இந்திய அரசு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதற்கு சற்று முற்பட்ட காலப்பகுதியில் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் நம்பிக்கை தரும் ஆரம்ப நிலை வளர்ச்சி அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தியது. சிறு குழுக்கள் மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்கின. எழுச்சி மிக்க மாணவர் போராட்டங்கள், ஆரோக்கியமான கருத்து மோதல்கள், கிராமப் புறங்களில் உருவான வெகுஜன அமைப்புக்கள் என்பன எல்லாம் சமூகத்தில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கங்களாக அமைந்தன. இவற்றில் குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F) சமூக இயக்கத்தில் குறித்துக்காட்டத்தக்க பாத்திரத்தை வகித்திருந்ததை யாரும் மறுக்க முடியாது.

ஈழ விடுதலை இயக்கங்களைச் செயற்பாட்டுத் தளத்தில் ஆராய முற்படும் ஒவ்வொருவருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்று அறியப்பட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகாலச் செயற்பாடுகள் நம்பிக்கை தருவனவாகவே அமைந்தன. அவர்களால் உருவாக்கப்படு பல கிராமங்களில் விரவியிருந்த கிராமியத் தொழிலாளர் சங்கம் பல கூலிப் போராட்டங்களையும், சாதியத்திற்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்தது. ஈழப் பெண்கள்விடுதலை முன்னணியில் போர்க்குண ம்மிக்க பல பெண்கள் இணைந்து கொண்டனர். வடக்கில் ஈழ மாணவர் பொது மன்றத்தின் கிளைகள் இல்லாத பாடசாலைகளைக் கண்டிருக்க முடியாது. இலங்கை ஆசிரியர் சங்கத்தில் கூட இவர்களின் கருத்தாதிக்கத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

தேசிய விடுதலை இயக்கம் என்ற அடிப்படையில் ஈ.பி.ஆர்.எல்.எபின் மத்திய குழு வரைக்கும் பல்வேறு வர்க்க சார்பு அணிகள் இணைந்து கொண்டனர். மத்திய குழுவிலிருந்து கீழணிகள் வரைக்கும் பல தத்துவார்த்த விவாதங்களும், முரண்பாடுகளும், மோதல்களும் தோன்றி மறைந்தன.

வெகுஜன அமைப்புக்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் நேரடியான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டுமா அன்றி சுயாதீனமாக அமைய வேண்டுமா என்பது 80களில் இயக்கத்தினுள் நடைபெற்ற தத்துவார்த்தப் போராட்டங்களில் பிரதானமானது.

சரி, தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் அவர்கள் மக்கள் போராட்டங்களை நிறுவன மயப்படுத்திய முறைமையும், இயக்கத்தின் ஜனநாயக மத்தியத்துவமும், தத்துவார்த்த மோதல்களும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு நம்பிக்கை தரும் ஆரம்பமாக அமைந்திருந்தது.

83 இன் ஆரம்பத்தில் தமிழ்ப் பேசும்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கோடு இந்திய அரசு ஆயுதப் பயிற்சி வழங்குவதற்குவதற்கு நான்கு பிரதான இயக்கங்களைத் தெரிவு செய்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள(LTTE), தமிழீழ விடுதலை இயக்கம்(PLOTE), ஈழப் புரட்சிகர அமைப்பு(EROS), ஈழமக்கள் விடுதலை முன்னணி (EPRLF)என்ற நான்கு அமைப்புக்களும் தமது பலத்தை நிரூபித்துக் காட்டுமாறு இந்திய உளவுத்துறை அழைப்பு விடுத்திருந்தது.

இராணுவப் பயிற்சிக்கான அறிகுறிகள் தென்பட்டதுமே தமிழீழ விடுதலை இயக்கத்தோடு செயற்பட்ட பிரபாகரன் மீண்டும் தனது விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழுங்கமைத்துக் கொண்டார். அதன் பலத்தை இந்திய அரசிற்கு நிறுவிக் காட்டும் வகையில் 83ம் ஆண்டு ஜூலை மாதத்தில் டுவுவுநு இயக்கதினர் இராணுவத் தொடரணி ஒன்றைத் தாக்கியழித்தது 13 இராணுவத்தினரைக் கொன்றனர்.

இதன் எதிரொலியாக யாழ்ப்பாணப் பகுதிகளில் இலங்கை இராணுவம் அப்பாவிப் பொதுமக்கள் பலரைக் கொன்றுபோட்டது. தெற்கில் இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஜூலை மாதம் முழுவதும் இலங்கையில் இரத்த ஆறு ஓடிற்று. வெலிக்கடைச் சிறையில் ரெலோ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் உட்பட பல அரசியல் கைதிகள் கோரமாகக் கொலைசெய்யபட்ட்டனர்.

இதே வேளை ஈ.பி.ஆர்.எல்.எப் தனது நிறுவன பலத்தைப் பிரச்சாரப்படுத்தும் நோக்கோடு, வெளிப்படையாகச் செயற்பட்ட வெகுஜன அமைப்புக்கள் அனைத்தும் தனது உப அமைப்புக்களாகப் பிரகடனப்படுத்தியது. தமது நிறுனவன பலத்தை இந்திய அரசிற்கு நிறுவிக்காட்டுவதற்கான வழிமுறையாக இவ்வியக்கம் இதனைப் பயன்படுத்திக்கொண்டது. சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், வெளியீடுகள் ஊடாக இப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய அரசின் இராணுவப் பயிற்சியையும் ஆயுதங்களையும் விடுதலைப் போராட்டத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறிக்கொண்டு வெகுஜன அமைப்புக்களைக் காட்டிக்கொடுத்தது ஈ.பி.ஆர்.எல்.எப். போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களும், பெண்களும், உழைக்கும் மக்களும் தலை மறைவாக வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது. அத்தோழு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அனைத்துக் கட்டமைப்புக்களும் அழிந்து போய், எஞ்சியிருந்தவை அவ்வியக்கத்தின் தொங்குதசையாக மாற்றமடைந்தது.

அதன் பின்னதாக முழுமையான தலைமறைவு இயக்கமாக, மக்கள் சாராத ஆயுதக் குழுவாக அழிந்து சிதைந்து போனது.

ஈ.பி.ஆர்.எல் எப் இந்தியா வழங்கிய இராணுவத் தளபாடங்களுக்காகவும், பயிற்சிக்காகவும் தன்னை அழித்துக்கொண்ட பின்னர், வட கிழக்கில் மக்கள் திரள் அமைப்புக்களிலும் மக்கள் போராட்டத்திலும் நம்பிக்கை கொண்ட, செயற்பாட்டுத்தளத்தில் எந்தப் பிரதான குழுக்களும் உருவாகவில்ல. என்.எல்.எப்.ரீ போன்ற சிறிய அமைப்புக்கள் தமது அரசியல் வேலைத் திட்டம் குறித்த எந்தத் தெளிவான கருத்தையும் கொண்டிருக்கவில்லை. மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்குவது என்பது தமக்கு ஆட்சேர்த்துக்கொள்வது என்பதே அவர்களின் புரிதலாக அமைந்திருந்தது.

ஏனைய அமைப்புக்களைப் போன்றே அப்பட்டமான குழுவாதப் போக்கைக் கொண்டிருந்த என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புக்கள் ஏனைய அமைப்புக்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்கொள்ளவே மார்க்சியஇடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்தனர்.

இவற்றிற்கு மத்தியில் பாசறை என்ற சிறிய மார்க்சியக் குழுவின் அரசியல் இந்த இடைவெளியை நிரப்புவதாக அமைந்திருந்தாலும் அதன் செயற்பாடு குறித்த எல்லைகு மேல் நகர முடியாத நிலையே காணப்பட்டது.

இந்திய இராணுவப் பயிற்சித் தலையீட்டுக்கு முன்னதாகவே தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ போன்ற அமைப்புக்கள் தீவிர வலதுசாரி சிந்தனைகொண்ட இராணுவக் குழுக்களாக காணப்பட்டன. இந்த நிலையில் இந்தியத் தலையீடு ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அது முன்வைத்த அரசியலையும் சிதைத்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியா தலையிட்ட மறுகணமே அழிக்கப்பட்டுவிட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப் 83ம் ஆண்டில் அரசியல்ரீதியாகச் சிதைவடைந்த பின்னரும், இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், மக்கள் அமைப்புக்களின் சிதைவிற்கு எதிராகவும் அவ்வியக்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உட்கட்சிப் போராட்டங்கள் எழுந்ததன. இப் போராட்டங்களில் ஜனநாயக முற்போக்கு சக்திகளிற்கு பாசறை போன்ற சிறிய குழுக்கள் ஆதரவு வழங்கின.

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தை அதன் தளபதியாகவிருந்த டக்ள்ஸ் தேவானந்தா கையகப்படுத்திக் கொள்ள முற்பட்ட போது, அதன் செயலளாரராவிருந்த  பத்மநாபாவுடனான முரண்பாடு உருவாகிறது. தெளிவான அரசியல் புரிதலற்ற 'நேர்மையான மனிதனாக' கருதப்பட்ட பத்மநாபாவின் பின்னணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் செயற்படுகிறார். இந்த முரண்பாட்டைப் பயன்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவின் முழுமையான ஆசியுடன், 86ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப்இராணுவரீதியாக அழித்து தமது தன்னாதிக்கத்தை நிறுவிக்கொள்கின்றனர்.

அதன் பின்னர் மக்கள் விடுதலை குறித்துப் பேசிய இடதுசாரி அமைப்பான ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியாவின் துணை இராணுவக் குழுவாகச் செயற்பட ஆரம்பிக்கிறது.இந்திய இராணுவ பயங்கரவாதம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட போது ஈ.பி.ஆர்.எல்.எப் உம் அதற்குத் துணை போனது. இடதுசாரி இயக்கமாக தன்னை அடையாளப்படுத்திய அமைப்பு பயங்கரவாதிகளாக உருமாறிய தலைகீழ் மாற்றம் இது. இந்திய இராணுவத்தோடு இணைந்து புலி சார் சந்தேக நபர்களைக் கொலை செய்வதற்காக சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் ஒரு கொலைகாரக் குழுவே இயங்கியது. இளைஞர்களைக் கட்டாய இராணுவ சேவைக்கு அணிதிரடிய ஈ.பி.ஆர்.எல்.எப் இறுதியில் புலிகளுக்கு அவர்களை இரையாக்கியது.

அழகான ஆரம்பமும் அருவருப்பான அழிவையும் வரலாறாகக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன்று மூன்று குழுக்களாக சிதைந்துள்ளது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வருடாந்த மாநாடு நடைபெற்றது.

இவ்வேளையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பம் முதல் 83 ஆம் ஆண்டு இந்தியத் தலையீடு வரையான செயற்பாடுகளை மீளாய்விற்கு உடபடுத்தினால் இன்றைய தேவையை இலகுவாகப் புரிந்துகொள்லலாம். தேசிய இன முரண்பாடு புதிய அரசியல் தலைமையைக் கோரி நிற்கின்றது. தோற்றவற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அரசியல் வழிமுறையை உறுதியாக முன்வைக்க விரும்பும் புதிய தலைமுறைக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அழிவு நிறையக் கற்றுத் தரும்.

 

P,V.Sri Rangan

1.         நாவலன் மிக விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டுரை இது.,.பி.ஆர்.எல்.எப் குறித்து இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.அந்த அமைப்பு அரசியல் ரீதியாகச் சநிதைவுற்ற காலம் 83 என்பதில் மட்டும் முரண்படுகிறேன்.அதனது காலம் 85 ஆரம்ப காலமென்பதே சரியானது.அப்போதுதாம் அதைவிட்டு பலர் வெளியேறியது.அந்த ஓட்டையை அடைக்கப் பாமர இளைஞர்களை அவர்களது பிரத்தியேகமான ஒடுக்குழுறையிலிருந்து(உள்ளகக் காலனித்துவம்) உன்வாங்கப் பட்டது.அப்போது அவர்கள் பல்லாண்டு ஒடுக்கு முறைகளுக்குப் பதிலாகத் தமது எதிர்ப்பை அராஜகமாக வெளிப்படுத்தும் வாய்ப்பை இந்த அமைப்பு ஏர்ப்படுத்தியது.நாம் கிராமந் தோறும் விரிவாக்கிய அனைத்தும் சிதைந்து வெறும் சாதிய எதிர்ப்புக்குள் கொலைகளை நடாத்தக் கூடிய வாய்ப்பில் சமூகத்தின் கீழ்தட்ட இளைஞர்கள் செயற்பட்டார்கள்.இந்த இயக்கத்தைக் குறித்தச் சில பக்கத்தில் எழுத முடியாது.அதன் உறுப்பினதர்களது சமூக உளவியலை ஆற்வுக்குட்படுத்துவதிலிருந்தூம் மதிப்பீடுகள் ஆரம்பமாகவேண்டும்.இந்திய அரசுக்குக்குக் குடைபிடிக்க வெளிக்கிட்ட தலைமையையும்,சமூக மட்டத்தில் நிகழ்ந்த அராஜகத்தையும் ஒரு தட்டில் வைத்து மதிப்பீடு செய்ய முடியாது.என் நிலையில் அவ்வமைப்புக்குக் குறித்து பெரிய ஆய்வுகள் அவசியம்.அந்த அமைப்பு மட்டுமேதாம் நமது மக்களிடம் வேலை செய்யும் பாரிய செயற் திட்டத்தை முன் தள்ளியது.எனவே,விரிவாகத் தகவல்களை மட்டுமல்ல,ஆய்வையும் செய்தாகவேண்டும்.இதன் காலம் கனிந்தே வருகிறது.அதைச் செய்யக் கூடிய தகமையை உருவாக்க முனைவதில் எனது போதாமைகளே இதைப் பின்போடுகிறது....

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com