Contact us at: sooddram@gmail.com

 

நவீன வசதிகளைக் கொண்டதாக நெடுந்தீவு மாற்றமடைந்து வருகிறது

சமீபத்தில் நடந்து முடிந்த நெடுந்தீவு பிரதேச சபை தேர்தல் பிர சாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நெடு ந்தீவை நான் சகல வசதிகளைக் கொண்ட ஒரு நவீன தீவாக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். சொல்வதைச் செய் வேன், செய்வதை சொல்வேன் என்ற யதார்த்தத்தில் அசையாத நம்பிக்கையுடைய நம்நாட்டு ஜனாதிபதி இப்போது நெடுந்தீவின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கு மாறு அத்தீவின் மேம்பாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபி விருத்தி குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தமக்கு அறிவித்திருப்பதாக கூறினார்.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நெடுந்தீவில் அரசாங்க கட்சி அதிக வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றியீட்டியது. அம்பாந் தோட்டை மாவட்டத்தில் அரசாங்க கட்சி அடைந்த வெற்றியின் போது கிடைத்த விகிதாசார வாக்குகளை விட நெடுந்தீவில் அரசா ங்க கட்சிக்கு கூடுதலான விகிதாசார வாக்குகள் கிடைத்திருப்பது இங்கு பாராட்டுக்குரிய விடயமாகும்.

நெடுந்தீவின் சகல பிரதான வீதிகளும், அங்குள்ள மக்களின் பூரண பங்களிப்புடன் நவீன பாதைகளாக திருத்தி அமைக்கப்படவுள் ளன. நெடுந்தீவுக்கும் யாழ். குடாநாட்டிற்கும் இடையிலான கப்பல் சேவையை மேலும் சிறந்த முறையில் நடத்துவதற்கும் அமைச்சர் தேவானந்தா இப்போது நடவடிக்கை எடுத்திருப்பதனால், ‘நோர் தன் ஸ்ரார்’, ‘குமுதினிஆகிய இரண்டு கப்பல் சேவைகளை நாளொன்றுக்கு கூடுதலாக நடத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட் டுள்ளன. அதுபோன்று இலங்கை போக்குவரத்து சபையும் நெடுந் தீவின் பஸ் சேவையை இப்போது சிறப்பாக நடத்தி வருகிறது.

நெடுந்தீவு மாவட்ட ஆஸ்பத்திரிக்கு ஒரு வைத்தியரும், இரண்டு தாதி மாரும் அங்குள்ள கழிவறைகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற் கான தொழிலாளர்களும், நெடுந்தீவு ஆஸ்பத்திரிக்கு இருக்கும் அம் புலன்ஸ் வண்டிக்கான சாரதியும் இப்போது நியமிக்கப்பட்டுள்ள னர்.

நெடுந்தீவு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் பெறும் கிணறுகளை புனரமைப்பு செய்வதற்கும் அரசாங்கம் ஒரு லட்ச ரூபாவை வழங்கியுள்ளது. இதனைவிட, அங்குள்ள மூன்று நீர்த் தேக்கங்களையும், 53 சிறிய குளங்களையும் புனரமைப்பு செய்வது டன், நெடுந்தீவிலுள்ள கால்நடைகள், குறிப்பாக கோவேரி கழுதை களின் நல்வாழ்வுக்கும் இப்போது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவில் கடற்படையின் உதவியுடன் 329 நவீன வீடுகளை அமைக்கும் திட்டமும் இப்போது வெற்றிகரமான முறையில் நடை பெற்று வருகின்றது. அங்குள்ள வீடுகளற்ற குடும்பங்களுக்கு மாதா ந்தம் இத்திட்டத்தின் அடிப்படையில் 10 வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படுகின்றன. நெடுந்தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணை புரிவதற்காக அவர்கள் காய்கறிகளை வளர்ப்பதற்காக வும், 3 ஏக்கர் காணியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நெடுந்தீவின் மேம்பாட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த பல்லாண்டு காலமாக மேற்கொண்டு வரும் சேவை பாராட்டுக்குரி யதாகும். அமைச்சரின் முயற்சியினால் இலங்கையிலிருந்து பல மைல் தூரத்தில் இருக்கும் நெடுந்தீவு மீண்டும் எங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதக் கூடியளவுக்கு பொருளாதாரத் துறையிலும் முன்னேற்றம் அடைந்திருப்பதுடன், நவீன வசதிகளையும் உடைய ஒரு தீவாக அது மாற்றமடைந்து வருகிறது.

கடல் பிரயாணத்தில் ஆர்வமிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல் லாசப் பயணிகளை ஈர்ந்தெடுக்கக் கூடிய வகையில் நெடுந்தீவின் இயற்கை சுற்றாடல் அமைந்திருப்பதனால், கூடிய விரைவில் நெடு ந்தீவு உல்லாசப் பயணிகளின் ஒரு சொர்க்கப் பூமியாக மாறுவதற் கான வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

வட பகுதியின் அபிவிருத்தியில் அதிக ஆர்வத்துடன் பணிகளை மேற்கொண்டு வரும் பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களும், நெடுந்தீவின் அபிவிருத்திக்காக இப்போது 50 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

நான் நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் ஆகிய சகல பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு, சாதி, மத, இன பேதங்களி ன்றி சேவை செய்யும் ஜனாதிபதியாக இருக்கின்றேன். நான் எல்லா மக்களுக்கும் நாட்டின் எல்லாப் பிரதேசங்களுக்கும் ஒரே அகப்பையின் மூலமே எனது பணிகளை சரிசமமாக பகிர்ந்து கொடுக்கிறேன். அதன் ஒரு அங்கமாகவே நெடுந்தீவின் அபிவி ருத்தியில் நான் இந்த அளவுக்கு ஆர்வத்தை காட்டி வருகிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் தெரிவித்த கரு த்தை நாம் ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com