Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை இந்திய அரசுகள் மீண்டுமொரு ஒப்பந்தம் செய்யும் நிலைமை உருவாகுமா?

(சானக)

தற்போதைய இலங்கை அரசு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் இடம்பெற்ற துக்ககரமான தவறுகளை நோக்கி செல்வதாகவும் மீண்டும் இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தம் ஒன்றை செய்யலாம் எனவும் அவுஸ்திரேலியா சிட்னி மெக்யூரி பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு தொடர்பான பேராசிரியர் சானக பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இந்திய ஆதிக்கத்திலிருந்து வெளியேறி மாற்று வெளிநாட்டு கொள்கைகளையே ஜே.ஆர். கடைப்பிடித்தார். இந்தியா அணிசேரா நாடாக இருந்தாலும், ரஷ்யாவோடு நட்புறவு ஒப்பந்தம் மூலம் பிணைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் ஜே. ஆர்.ஜயவர்தனவை அமெரிக்காவுக்கு அழைத்து கௌரவித்தார். இதன் பின்னர் திருமலையிலுள்ள எண்ணெய் குதங்கள் மற்றும் வொயிஸ் ஒவ் அமெரிக்க ஒலிபரப்பு நிலையம் திறப்பது சம்பந்தமாகவும் அமெரிக்காவுடன் பேச்சு இடம் பெற்றது. அயல் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை. ஆனால், வெளிநாட்டவர் தலையிடுவதை சகிக்கவும் முடியாது என்ற இந்தியாவின் கோட்பாட்டு கொள்கையை ஜே.ஆர்.சரியாக புரிந்து கொள்ளவில்லை.

1987 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி இந்திய விமானப்படை விமானங்கள் உணவு பொட்டலங்களை இலங்கை வான் பரப்பு மீது வீசியபோது வடமராட்சி இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதுடன் இலங்கைக்கு மேற்குலகத்துடன் ஒரு ஒப்பந்தமும் இல்லையென்ற உண்மை நிலையும் தெரியவந்தது.

எந்த ஒரு வல்லரசும், இந்தியாவுடனான தனது வர்த்தக, பொருளாதார உறவுகளை ஒரு சிறிய நாடான இலங்கைக்காக இழக்க விரும்பாது. இதன் காரணமாக ஏற்பட்டது தான் இலங்கை இந்திய ஒப்பந்தம . ஈழ யுத்தமும், கேரள மும்மூர்த்திகளும் இலங்கை இந்தியாவுடனான, விவேகமான உறவுக்கு 2006 ஆம் ஆண்டு கொழும்பில் பதவி வகித்த நிருபமராவ் அடித்தளம் இட்டார். 3மாதத்திற்கு ஒரு முறை இலங்கை அரசில் செல்வாக்கு நிறைந்த மூவர் கேரள மும்மூர்த்திகளான எம்.கே. நாராயணன், சிவசங்கர் மேனன், நிருபமராவுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்திய பாதுகாப்பு செயலர் விஜே சிங்கும் இந்த சந்திப்பில் ஈடுபட்டார். இராணுவ நடவடிக்கை இந்தியாவின் ஈடுபாட்டை கவரவும் கவனம் செலுத்தப்பட்டது.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உண்ணாவிரதமும் விவேகமான ராஜதந்திர முயற்சியால் சமாளிக்கப்பட்டது. 13.05.2009 இந்திய பொது தேர்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் மீதான இறுதி இராணுவ நடவடிக்கையும். மே17 19 க்கு பிற் போடப்பட்டது.

யுத்தம் முடிவடைந்ததும் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்தேறின. மூவர் அடங்கிய குழுவினரின் புதுடெல்லி கூட்டங்களும் சடுதியாக நிறுத்தப்பட்டன. ஆனால் இலங்கை இந்திய உறவுகளில் இவர்கள் ஏற்படுத்திய உறவுகள் பின்னணியில் செயல்படுகின்றன.

பின்னர் வெளியுறவு செயலராக நிருபமராவ் நியமிக்கப்பட்டு எம்.கே. நாராயனணும் மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்தியா வட மாகாணத்திற்கு அதிகாரங்களை பகிரக்கூடிய அரசியல் தீர்வு திட்டத்தை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கோருகிறது.

இது ஜனாதிபதி ராஜபக்ஷ அடிக்கடி கூறிவரும் 13+ ஆக இருக்கலாம். எப்படி இருந்தாலும் பல ஆலோசனை கூட்டங்கள் இடம் பெற்று அனைத்து கட்சிகளின் வட்டமேசை மாநாடு, திஸ்ஸ வித்தாரன கூட்டம், இப்போது பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழு சம்பந்தமாக இந்தியா, இலங்கையுடன் தனது பொறுமையை இழந்து வருகிறது.

தமிழ் நாட்டில் ஒரு கட்சி ஆட்சி தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை இலங்கை அரசு உணரவில்லை. தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட ஊழல் காரணமாக தமிழ் நாட்டு அரசியல் களம் மாற்றமடைந்துள்ளது. 13.04.2011 நடந்தேறிய தேர்தலில் அ.இ.அ.தி.மு.க ஜெயலலிதா தலைமையில் 203 தொகுதிகளில் மாபெரும் வெற்றியீட்டியுள்ளது. ராஜீவ் காந்தி மே 1991 கொல்லப்பட்ட பின்னர். தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவு குறைந்த நிலையில் நெடுமாறன், வை.கோ., சீமான் போன்றோரே இலங்கை தமிழருக்காக குரல் கொடுத்து வந்தனர். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக தமிழ் நாடு மீண்டும் உயிர்த் தெழுகிறது. தமிழ் தேசியத்திற்கான முயற்சியில் கோரிக்கைகளை முன்னெடுத்து ஒருங்கிணைத்து தமிழ் நாட்டின் பெண் முஜிபூராக வர நினைக்கிறார் ஜெயலலிதா.

இந்தியா இலங்கை ஒப்பந்தம் 2 இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் பா.ஜ.கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாநில ஆட்சியாளரின் ஆதரவினை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக ஆட்சியாளர்கள் டில்லியிலுள்ள மத்திய அரசின் மீது அழுத்தங்களை பாவிக்க வாய்ப்புள்ளது. இலங்கை விவகாரம் குறித்து தமிழக அரசு பிரயோகிக்கும் அழுத்தங்கள் மத்தியில் அரசையும் பாதிக்கும்.

இன்று ஜெயலலிதாவின் கொள்கையில் இலங்கை விவகாரமே முன்னுரிமை வகிக்கிறது. இந்திய அரசு இலங்கையில் வெளிநாட்டு தலையீடு பற்றி கவலைப்படுவதாக தெரிகிறது. சர்வதேச மனித உரிமை மீறல் தொடர்பான அழுத்தங்களும் தமிழக அரசின் அழுத்தங்களும் மத்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஆகவே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் முட்டுக்கட்டை தொடர்ந்து இருக்குமானால் இலங்கை மீது இந்தியா நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்படும். ஆகவே தமிழர் பிரச்சினைக்கு ஒரு ஆக்கபூர்வமான தீர்வினை இலங்கை அரசு வழங்குவதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை. உரிய
தீர்வு வழங்கப்படாதவிடத்து ஒரு தீர்வினை இந்தியா திணிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படும் போலவே தெரிகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com