Contact us at: sooddram@gmail.com

 

நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு ஊடகத்துறையின் பங்களிப்பு அவசியமாகும்

பயங்கரவாதம் மற்றும் ஜே.வி.பி. யினர் நாட்டில் மேற்கொண்ட அராஜ கங்கள் விஸ்வரூபம் எடுத்து, நம்நாட்டு மக்களை அச்சுறுத்தி வந்த கடந்த காலத்தில் வெகுஜன ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் தங்கள் கடமைகளை செய்து, அவை பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தன. நாட்டில் அதுபோன்ற அச்சுறுத்தல்கள் நீங்கி இன்று மீண்டும் அமைதி யும், சமாதானமும் மக்களிடையே பரஸ்பர நல்லுறவும், ஐக்கியமும் நிலைகொண்டிருப்பதனால் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போதைக்கு நாட்டில் அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிப்பது அவசியம் இல்லை என்ற பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு வலுவூட்டும் ஒரு நல்ல தீர்மானத்தை அறிவித்தார்.

முன்னர் ஜனாதிபதி பதவியில் இருந்தவர்கள் பாராளுமன்றத்தை உதா சீனம் செய்து, தாங்களே அதிகாரம் படைத்தவர்கள் என்ற இரு மாப்புடன் இருந்த போதிலும், இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தன்னை அரசியல் துறைக்கு அறிமுகப்படுத்திய பாராளு மன்றத்தை மறக்காமல் அதற்கு முக்கியத்துவம் வழங்குவதற்காக மாதம் ஒரு தடவையாவது பாராளுமன்றத்திற்கு சமுகமளித்து, அங்கு உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலை அளிக்கும் ஒரு பண்பாளராகவும் இருந்து வருவது இந்நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகம் அடைந்த பெரும் வெற்றியாகும்.

பொதுவாக, அவசரகால சட்டத்தை அமுலாக்குதல், அதனை நீக்குதல் போன்ற அறிவிப்புக்கள் அரசாங்க வர்த்தமானியின் மூலம் விடுக் கப்படும். இந்த தடவை ஜனாதிபதி அவர்களே, பாராளுமன்றத்திற்கு நேராக சென்று, அவசரகால சட்டத்தை நீக்கிவிடுவது என்ற அர சாங்கத்தின் தீர்மானத்தை அறிவித்து, உள்ளூரிலும், வெளிநாடுகளி லும் பெரும் பாராட்டை பெற்றுக்கொண்டார்.

ஒரு நாட்டில் ஜனநாயகம் தழைத் தோங்குவதற்கு அந்நாட்டின் வெகு ஜன ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. அந்த நாட்டில் அரசியல்வாதிகள், அரசாங்க உயரதிகாரிகள், தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மேற்கொள்ளும் ஊழல்கள், மோசடிகள் மற்றும் தேசத்துரோக செயற்பாடுகள் பற்றி தகவல் எட்டியவுடன், அவற்றை முதலில் இரகசியமான முறையில் விசாரணை செய்து, அவை உண்மையானவை என்று தெரிந்துகொண்ட பின்னர், ஊட கங்கள் அந்த செய்திகளை வெளியிட்டு அரசாங்கத்திற்கும் நீதிபரி பாலன துறையினருக்கும், நாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடப்பாட்டினை ஊடகங்கள் கொண்டுள்ளன.

இதனால்தான் எழுத்துருவில் நடைமுறைப்படுத்தாமல், சம்பிரதாயமாக இருந்து வரும் பிரிட்டனின் அரசியல் சாசனத்தில் வெகுஜன ஊட கங்களுக்கு முக்கியத்துவம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அளிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் அரசியல் சாசனத்தின் படி நான்கு பிரிவினர் அந்நாட்டின் நல்லாட்சிக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். முதலில் நாட்டின் மன்னர் அல்லது மகாராணியார், அடுத்து நீதித்துறை, மூன்றாவதாக பாராளுமன்றம், நாலாவது இடம் வெகுஜன ஊடகத் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வெகுஜன ஊடகத்துறையை பிரி ட்டிஷ் அரசியல் சாசனம் Fourth Estate அதாவது நாளாவது பலம் வாய்ந்த அமைப்பாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசியல் சாசனத்தின் சம்பிரதாயப்படி அந்நாட்டின் நல் லாட்சிக்கு ஆலோசனைகள் கூறும் பெரும் பங்களிப்பு ஊடகங் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் பிரிட்டனில் நடைபெறும் ஊழல்கள், மோசடிகள், அரசாங்கம் எடுக்கும் தவறான தீர்மானங் கள் போன்றவற்றை சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய பங்கை நிறை வேற்றிக் கொண்டிருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனிலும், ஏனைய உலக நாடுகளிலும் பத்திரிகைகளே பலம் வாய்ந்த வெகுஜன ஊடகமாக விளங்கின.

பத்திரிகைகளுடன் இலத்திரனியல் ஊடகங்களான வானொலி, தொலைக் காட்சி மற்றும் இணையத்தளங்களும் இன்றைய நவீன உலகில் இணைந்து கொண்டுள்ளன. இலங்கையில் இன்று ஊடகங்களின் பங்களிப்பு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஈடு இணையற் றது என்ற கருத்து அனைவர் மத்தியில் வலுப்பெற்று வருகின்றது.

ஊடகங்கள் ஏதாவது குறைபாட்டை எடுத்துக்காட்டினால் அவை குறி த்து ஜனாதிபதி அவர்களும் அவரது அமைச்சர்களும் உடனடி யாக விசாரணை செய்து அந்த செய்திகள் உண்மை என்று ஊர் ஜிதம் செய்யப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் சிறிதளவும் தயக்கம் காட்டுவது இல்லை.

அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் முக் கியத்துவத்தையும் அவை எவ்விதம் நாட்டிற்கும், மக்களுக்கும் எதிர் காலத்தில் நன்மை பயக்கும் என்பதை மக்களிடையே விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்தி, அறிவிக்கும் பொறுப்பும் ஊடகங்களிடம் இருக்கின்றது.

அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல்கள்,மோசடிகள் பற்றிய செய்தி களை அறிவிப்பதைப் போன்று, ஊடகங்கள் அரசாங்கத்தின் நற் பணிகளையும் பொதுமக்களுக்கு அதுபோன்று எடுத்துரைப்பது அவசியமாகும்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இலங்கையை ஆக்கிரமித்த பின்னர் எங்கள் நாட்டின் செல்வத்தை சூறையாடி விட்டு, வெளியேறி விட்டபோதி லும், அவர்கள் எங்கள் நாட்டின் கல்வித்துறையையும், நீதித்துறை யையும் ஜனநாயக பாராளுமன்ற அமைப்பையும் ஏற்படுத்துவதற்கு செய்த மகத்தான பணியை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஒரு வலுவான வெகுஜன ஊடகத்துறையை எங்கள் நாட்டில் ஏற்படுத் துவதற்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒரு வகையில் எங்களு க்கு உதவி செய்திருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பெரும் மதிப்புக்குரிய டி.ஆர் விஜயவர்தன போன்ற ஊடகத்துறை யின் முன்னோடிகளும் தமிழ் பத்திரிகை துறையில் பி. ஆர். சுப் பிரமணியம் செட்டியார் போன்றவர்கள் வீரகேசரி பத்திரிகையை யும், யாழ்ப்பாணத்தில் இன்னும் ஒரு பெரியவர் ஈழகேசரி பத்திரி கையையும் ஆரம்பிப்பதற்கும் அச்சு இயந்திரங்களையும் தருவிப் பதற்கு அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உதவி செய்ததை நாம் மறந்துவிட முடியாது.

அதி உன்னதமான ஊடக சுதந்திரத்தை பேணிப் பாதுகாத்து, இன்றைய ஊடகவியலாளர்கள் எங்கள் நாட்டில் நல்லாட்சிக்கும், அபிவிருத்தி பணிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com