Contact us at: sooddram@gmail.com

 

வால்மார்ட்டும் ஒபாமாவும்

இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதது சரியல்ல என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, மத்திய அரசைக் கட்டாயப்படுத்தியிருக் கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒபாமா, அமெரிக்க அரசு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை இதற்காக இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார். ஹிலாரியும் வந்து, மம்தா பானர்ஜி முதல் ஜெயலலிதா வரை சில மாநில முதலமைச்சர்களைச் சந்தித்துவிட்டுப் போனார். பாச்சா ஒன்றும் பலிக்காததால், ஒபாமாவே களத்தில் இறங்கியுள்ளார். அவர் ஏற்கெனவே, அமெரிக்கத் தேர்தல் களத்தில் திணறிக்கொண்டிருக்கிறார். வால் மார்ட்டுக்கு 120 கோடிப் பேர் கொண்ட பிரம்மாண்ட மார்க்கெட்டைத் திறந்துவிட் டால், தனக்குப் பாராட்டுக் கிடைக்கும். மேலும் தேர்தலுக்கும் பயன்படும் என்று கருது கிறார்.

அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் உரிமை பாராட்டத்தக்க மனிதர்கள் இருவர் உள்ளனர். ஒருவர், பிரதமர் மன்மோகன் சிங். மற்றொருவர் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா. இருவரும் உலக வங்கியின் முன்னாள் அதி காரிகள். ஓய்வூதியம் பெறுகிறவர்கள். ஹிலாரி கிளிண்டன் 1986 முதல் 1992வரை வால்மார்ட் நிறுவன இயக்குநராகப் பணியாற்றியவர். எனவே வால்மார்ட்டை நுழைக்க பலவித முயற்சிகள் தொடர்கின்றன.

இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் கடந்த எட்டாண்டுகளாக வால் மார்ட் நுழைய முடியவில்லை. இல்லையேல் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நால ரைக் கோடி குடும்பங்களை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முன்பே நடுத் தெருவில் நிறுத்தியிருக்கும். ராட்சத நிறுவனமான வால்மார்ட்டின் கடந்த ஆண்டு வரு மானம் ரூ.25 லட்சம் கோடியாகும். இவர்கள் செய்வது சில்லரை வியாபாரமாம். இவர் களை இந்தியாவில் அனுமதித்து, சில்லரை வியாபாரிகளையும் விவசாயிகளையும் காவு கொடுக்கவே ஐ.மு.கூட்டணி அரசு விரும்புகிறது. நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பலைகளால் தயங்குகிறது.

2005ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் ஒரு விவசாய ஒப்பந்தம் செய்தார். இந்தியாவில் விதைகள் சந்தையை மான்சான்ட்டோ நிறுவனத்திற்கும், தானியங்களின் சந்தையையும் சில்லரை வர்த்தகத் தையும் வால்மார்ட் நிறுவனத்திற்கும் வழங்க அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. அன்று இடதுசாரி எம்.பி.க்கள் 63 பேரின் தயவில் மத்திய ஆட்சி இருந்ததால், அந்த ஒப்பந்தம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அந்த ஒப்பந்தம் இந்தியாவின் அரசியல் சட்டப் பிரிவுகள் -14, 19, 21ஐ மீறியதாகும். வால்மார்ட்டின் நேரடி வருகை தடுக்கப்பட்டதும் அது பின்வாசல் வழியே பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவன பேனரில் நுழைய முயற் சித்தது.

வால்மார்ட் 27 நாடுகளில் 69 வேறுபட்ட பெயர்களில் இயங்கி வருகிறது. இருபது லட்சம் ஊழியர்கள் இவற்றில் பணிபுரிகிறார்கள். வால்மார்ட் வளாகத்தில் 60,000 வெவ் வேறு பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதில் சூப்பர் சென்டர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வால்மார்ட் நுழைந்தபின் உள்ளூர் வியாபாரிகளுக்கு வேலையோ, வியாபாரமோ இல்லை. இதனால் தானி யங்கள், காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வால்மார்ட்டின் பலி கடாக்களாய் மாறுகிறார்கள். அதிலும் சிறு விவசாயிகளுக்கு வால்மார்ட்டில் இடமே இல்லை. அவர்கள் கதி அதோ கதிதான்.

2008ம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்தது. அமெரிக்கா தூக்கிநிறுத்த முடியாமல் தத்தளிக்கிறது. யார் மீது விழுவோம் என்று திரிகிறது. ஐரோப் பிய நாடுகளும் கிரீஸ் முதல் ஸ்பெயின் வரை திவாலாகி வருகின்றன. இந்தியாகூட ஐரோப்பிய நாடுகளை திவால் நிலையிலிருந்து மீட்க ரூ.70 ஆயிரம் கோடி கடன் வழங்க முன்வந்துள்ளது என்றால், நிலைமை எவ்வளவு மோசம் என்பதை அறியமுடியும். அமெரிக்கா இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு குறைந்தது 25 ஆண்டுக ளாவது ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை தாக்குப்பிடிக்க வழிகள் எவை என்பதே அமெரிக்காவின் இன்றைய யோசனையாகும்.

அமெரிக்கா செல்வாக்கோடு இருந்தபோது, அவர்களது டாலரும் தங்கத்துக்கு அடுத்தபடியான செல்வாக்குடன் இருந்தது. அந்தக் காலத்தில் உலக நாடுகள் டாலர் கரன்சியை தங்கத்திற்குப் பதில் தங்கள் கையிருப்பாக வைத்துக்கொண்டன. இப்படி உலக நாடுகள் தங்கள் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் 500 லட்சம் கோடி டாலர் களை இருப்பாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க வங்கிகளையும் தொழில்களையும் தக்கவைப்பதற்கு டன் கணக்கில் டாலர் கரன்சியை அச்சிட்டுக் கொடுப்பதாகவும் தெரிகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா தங்கள் நாட்டு நிறுவனங்களின் பொருளா தார நிலை வலுவாக உள்ளது என்று உலகுக்குக் காட்ட வேண்டியுள்ளது. அதற்கு வால் மார்ட் போன்ற ராட்சத நிறுவனங்களுக்கு சந்தைப் பிடித்துத் தரவேண்டியுள்ளது. இவ் வாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு வியாபாரம் செய்யும் உரிமையை பெற்றுவிட்டால், அமெரிக்கப் பங்குச்சந்தைக்கு ஏறுமுகம் ஏற்படும் என்று கருதுகிறார்கள்.

வால்மார்ட்டை அனுமதித்தால் இந்திய விவசாயம் சீரழியும். இந்தியா வறுமைப்படு குழியில் தள்ளப்படும். பரந்து விரிந்த சந்தை அழிக்கப்படும். ஒரு ஏகபோகச் சில்லரை வணிகத்தின் கீழ் 120 கோடி மக்களும் விவசாயிகளும் வதைக்கப்படுவார்கள். மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் அனுமதிக் கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித் துள்ளதோடு, அமைச்சரை எச்சரிக்கவும் செய்துள்ளது.

(எஸ்.ஏ.பெருமாள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com