Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர்கள், அடுத்து என்ன?

போர்க் காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக, மன்னார்ப் பகுதி கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. கத்தோலிக்கக் கிறி ஸ்துவர்கள் அதிகம் உள்ள மன்னாரில் ஆயர் ராயப்பு யோசேப்புக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணை முதலானவற்றுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுப்பதிலும் ஆயருக்கு முக்கியப் பங்கு உண்டு. 

தங்களுக்கு உரிய நிலங்களில் மீள் குடியேறுவதற்கும், மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கும் ஆயர் தடையாக இருக்கிறார் என்பது முஸ்லிம் தரப்பு வாதம். முஸ்லிம்களின் பாரம்பரிய நிலங்களில் அல்லாமல் அரசாங்கக் காணிகளில் குடியேற்றப்படுகிறார்கள் என்பது ஆயர் தரப்பு வாதம். ராஜபக்‌ஷேவின் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக உள்ளவரும், வன்னி, மன்னார் பகுதிகளில் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர்ந்து வருபவருமான ரிஷாட் பத்யுதீன், முஸ்லிம்களை அரசியல் லாபத்துக்காகத் தூண்டிவிடுகிறார் என்று கிறிஸ்துவர் தரப்பில் கூறுகிறார்கள். முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின்போது மட்டும் ஏன் ஆயர் தடையாக இருக்கிறார் என்று முஸ்லிம்கள் திருப்பிக் கேட்கிறார்கள். இரு தரப்பிலும் ஆதரவுக் கூட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. இந்தப் பிளவு கீழ் மட்டம் வரை புரையோடி இருப்பதை உணர முடிந்தது.

இப்போது, கிழக்கு மாகாணத் தேர்தல் நடக்க உள்ளது. தமிழர்களின் தேசிய உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்படும் 'தமிழ் தேசியக் கூட்டமைப்புஇந்த முறை தேர்தலில் பங்கேற்கிறது. கடைசிப்போர் நேரத்தில் நடைபெற்ற சென்ற தேர்தலைக் கூட்டமைப்பு புறக்கணித்தது. எனினும், போருக்குப் பின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்று ஐந்து இடங்களைக் கைப்பற்றியது. இம்முறை ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அது தேர்தலில் பங்கேற்கிறது. ஆனால், கிழக்கு மாகாணத்தில், போருக்குப் பிந்திய இன்றைய சூழலில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தும் உள்ளது. எனவே, முஸ்லிம்களின் ஆதரவை கூட்டமைப்பு வெளிப்படையாக வேண்டுகிறது.

இன்னொரு பக்கம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் வலுப்பெற்றுள்ள ராஜபக்‌ஷேவின் சுதந்திராக் கட்சி, தனது 'கிழக்கின் உதயம்முதலான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தனக்குச் சாதகமாக உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்கக் கனவு காண்கிறது. அப்படி வென்றால் வடக்கு கிழக்கு இணைப்புக்கும், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் என்ற கோரிக்கைக்கும் கிழக்குப் பகுதி மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை என்று, அது உலகத்துக்குக் காட்ட நினைக்கிறது. மருத முனையில் முஸ்லிம் இலக்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்ற விவாதம் ஒன்றின்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையேயான ஒற்றுமை குறித்துப் பேசினேன். தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது ஒரு நண்பர் சற்றுக் கோபமாக, 'கூட்டமைப்பு இதுவரை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து வாய் திறந்தது இல்லை. அரசியல் தீர்வு குறித்து அது அரசாங்கத்திடம் நடத்திய பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களுக்கு இடம் இல்லாததையும் அது கண்டிக்கவில்லை. இன்று தனித்து நின்று வெற்றி பெற இயலாததால்தான் எங்களிடம் வருகிறார்கள். எப்படி நாங்கள் அவர்களை நம்புவது?' என்றார்.

ஆனாலும் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பழைய கசப்பான அனுபவங்கள் மறந்து, பேரினவாத அரசியலுக்கு எதிரான தமிழ் முஸ்லிம் ஒற்றுமை என்ற உணர்வு மேலோங்கி வருவதையும் உணர்ந்தேன். இந்த ஒற்றுமை கீழிருந்து உருவாக வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். முஸ்லிம்கள் மத்தியில் மாற்றங்கள் வேண்டும் என்ற நோக்குடன் சில இளைஞர் அமைப் புகள் கிழக்கில் உருவாகி உள்ளன. அமைச்சர் ஹிஸ் புல்லா போன்றவர்கள் காத்தாங்குடி முதலான முஸ்லிம் கிராமங்களின் வழியே செல்லும் நெடுஞ்சாலைகளில் பேரீச்சை மரங்களை நட்டு இலங்கை முஸ்லிம்களை அரபுலகுடன் தொடர்புபடுத்துவதில் ஆர்வம் காட்டும் சூழலில், இவர்கள் இலங்கைச் சோனகர்களின் உள்நாட்டு வேர்களை, ஒரு வகையில் சொல்லப்போனால் தமிழ் வேர்களைத் தேடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

'நமக்கு அருகில் உள்ள எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் மட்டும் மாறாமல் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியை முஸ்லிம் சமூகத்துக்குள் எழுப்பும் இந்த இளைஞர்கள், ஈழத் தமிழ் இலக்கியவாதிகளுடன் நல்ல உறவைப் பேணுகின்றனர். மட்டகளப்பில் கவிஞர் மலர்ச் செல்வன் ஏற்பாடு செய்திருந்த இலக்கியக் கூட்டத்தில் இரு தரப்பு இலக்கியக்காரர்களும் வெகு நாட்களுக்குப் பின் ஒன்றாகக் கூடியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார் பேராசிரியர் மௌனகுரு. ஆனால், இலக்கியத் தளத்தில் ஏற்படும் இந்த ஒற்றுமையை வரும் தேர்தல் குலைத்துவிடக் கூடாது என்றார் பேராசிரியர் சித்ரலேகா.

மதம், மொழி, சாதி அடிப்படைகளில் மக்களைத் திரட்டும் அரசியல் செயல்பாடுகளை இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்டவர்களின் அரசியல் இருப்பை உணர்த்தும் முயற்சி என எல்லோரும் பாராட்டினோம். ஆனால், அடையாள அரசியல் இரு பக்கங்களும் கூரானக் கத்தியைப் போன்றது என அமர்த்தியா சென் போன்றோர் எச்சரித்தும் வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் மக்களைத் திரட்டும்போது அந்த அடையாளத்தைத் தாண்டி வேறு யாரும் தம்மிடம் வர மாட்டார்கள் என்பது உறுதியாகி விடுகிறது. இந்த நிலையில், தம்மிடம் வருபவர்களை அதிகபட்சமாக உறுதிப்படுத்தும் பொருட்டு மற்றவர்களிடம் இருந்து அவர்கள்பிரித்து நிறுத்தப்படுகின்றனர். ஆக, அரசியல் என்பது'மற்றவர்களுடன் வாழும் கலை’ (polity) என்பது போக, மற்றவர்களை வெறுக்கும் செயல்பாடாக மாறிவிடுகிறது.

அரசியலின் இந்தப் பிரிக்கும் வேலைக்கு மாறாக இலக்கியமாவது நம்மை ஒன்றிணைக்கட்டும் என்றேன். அந்த வகையில் சமீபத்தில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற தமிழ் இலக்கிய மாநாடுகள் சாதி, மதம், பிரதேசம் இவற்றுக்கு அப்பால் தமிழ்பேசும் இலக்கியவாதிகளுக்கு இடையே உரையாடலை ஏற்படுத்துவதற்கு உதவியது எனவும், இதற்குத் தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு வருந்தத்தக்கது எனவும் பலர் குறிப்பிட்டனர்.

ஈழத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும், தமிழகத்தில் இருந்து எழும் ஆதரவுக் குரல்களுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய இடைவெளியைக் கிட்டத்தட்ட எல்லோரும் சுட்டிக் காட்டினர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் அதுவே முக்கியக் கேள்வியாக இருந்தது. 'நீங்கள் சொல்கிற இடைவெளி இருப்பது உண்மைதான். ஆனால், உங்கள் பிரச்னைகளில் தமிழக மக்களும் கட்சிகளும் கொண்டுள்ள அக்கறைகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆதரவுக் குரல்களை எல்லாம் ஒரே மாதிரியானவை எனக் கருத வேண்டாம்என்று சொன்னேன்.

30 ஆண்டுப் போர் அங்கு மிகப்பெரிய அவலங்களை மட்டுமல்ல, பெரும் குழப்பங்களையும் சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. ''இன்றும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மாதந்தோறும் ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்வதாகச் சொல்லி கிறிஸ்துமஸ் தீவில் இறக்கி விடுகிறார்கள் என்பதையும், அங்கே ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக நிற்கின்றனர் என்பதையும் இங்கு யாரும் சொல்வதில்லை. ராணுவத்தின் ஒத்துழைப்புடன் இது நடக்கிறது. ஒருவரைக் கடத்துவதற்கு இலங்கைப் பணம் ஒரு லட்சத்தை ராணுவ அதிகாரிகளுக்குக் கொடுக்க வேண்டும். ஊடகங்களும் இதுகுறித்து எழுதுவது இல்லை. அதேபோல, ரெடிமேட் ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு எனச் சொல்லி சில நிறுவனங்கள் விளம்பரம் செய்து பெண்களை அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். ராணுவத்தினர், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினர், புதிய முதலீடுகளைச் செய்துள்ள தொழில் முனைவோர் ஆகியோருக்கு இரையாகிறார்கள்' என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் தொண்டு நிறுவன ஊழியர். இப்படிப் பாதிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு உதவுவது இந்த நிறுவனத்தின் பணி.

இவர்களும் கூட உதவத்தான் முடியும். இதை அரசியலாக்க முடியாது. ராணுவம், அரசதிகாரம் எல்லாவற்றின் ஒப்புதலுடனும் நடப்பவை இவை. அரசியல் கட்சிகளும் இதுபோன்ற பிரச்னைகளைப் பேச முடிவது இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கதம்பக் கூட்டணியாக உள்ளது. அவர்களுக்குள் நடைபெறும் ஆதிக்கப் போட்டி, சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களில் வெளிப்பட்டது. உறுப்புக் கட்சிகள் சில அவற்றில் பங்கு பெறவில்லை. இந்திய அரசின் வழிகாட்டலில் செயல்படுகிறது என்ற விமர்சனமும் இதன் மீது உண்டு. தவிரவும், வடக்கில் கணிசமாக உள்ள தலித்துகள், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் கூட்டமைப்பு பெற இயலவில்லை. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் ராஜபக்‌ஷே கூட்டணியில் உள்ள டக்ளஸ் கட்சி வடக்கில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது இந்தப் பின்னணியில்தான். 'தமிழர்என்ற பெரிய அடையாளத்தின் கீழ் தமிழர்களுக்குள் உள்ள வேறுபாடுகளைக் கண்டுகொண்டு, அதற்குரிய மதிப்பளிக்காத அதே தவறைப் பழைய தமிழ்க் கட்சிகளைப் போலவே கூட்டமைப்பும் தொடர்ந்து செய்து வருகிறது.

இத்தனை அவலங்கள், சிக்கல்கள், நம்பிக்கையின்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில்தான் தமிழர்கள் வாழ்வு உள்ளது. கொழும்பில் வாழும் தமிழ் மேட்டுக்குடியினரும் நடுத்தர வர்க்கத்தினரும் இதை வெளிப்படையாகவே சொல்கின்றனர். கௌரவமான அரசியல் தீர்வு ஒன்று மட்டுமே எமது கோரிக்கை என்கின்றனர். இத்தனைச் சிக்கல்களுடன்தான் ஈழத் தமிழர்களின் இன்றைய சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

(அ. மாக்ஸ், நன்றி: விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com