Contact us at: sooddram@gmail.com

 

பராகுவே அரசு கவிழ்ப்பு, ஏகாதிபத்திய அடாவடி

(பேரா.பெ.விஜயகுமார்)

அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தன்னுடைய அரசியல் தலையீடுகளை நடத்திவருகிறது. லத்தீன் அமெரிக்கப் பகுதி யினை தன்னுடைய கொல்லைப் புறமாகவே பாவிக்கும் போக்கு தொடருகிறது. கடந்த பத் தாண்டுகளாக பல தென்அமெரிக்க நாடு களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரி அரசு கள் அமைவதை அமெரிக்காவினால் சகித் துக் கொள்ள முடியவில்லை. இந்நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான அரசுகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படு கிறது. சமீபத்தில் பராகுவே நாட்டின் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலை வரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ள செயல் இதனை உறுதிப்படுத்துகிறது. 2009ல் ஹோண்டுராஸ் அரசையும், 2010ல் ஹைட்டி அரசையும் கவிழ்த்தது. ஈகுவடாரில் அதன் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது. வெனிசுலா, பொலிவியா நாடுகளிலும் பல முறை கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டது. இத்தகு அடாதடி நடவடிக்கைகளுக்குகவிழ்ப்பு எண் 2.0’ என்று பெயரிட்டுள்ளது.

கவிழ்ப்புகள் பலவிதம்

லத்தீன் அமெரிக்க நாடுகளில் விதவித மான வழிகளில் கவிழ்ப்பு நாடகத்தை நடத்து கிறது.
நேரடியான ராணுவ நடவடிக்கைகளில் மட்டுமின்றி, காவல் துறையைப் பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பது, நீதிமன்றங் களின் தீர்ப்பின் மூலம் தங்களின் விருப்பத் தை நிறைவேற்றிக் கொள்வது, அல்லது அரசியலமைப்புச் சட்ட விதிகளில் உள்ள அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்று பல வழிகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசுகளைக் கவிழ்க்கின்றது. பராகுவேயில் மிக எளிதான முறையில் அரசி யலமைப்புச் சட்ட விதிகளைப் பயன்படுத் தியே கவிழ்ப்பு முயற்சியில் வெற்றி கண்டுள் ளது. பராகுவே நாட்டின் காங்கிரஸூம் செனட் டும் சேர்ந்து குடியரசுத் தலைவரை, கடமை யைச் செய்ய தவறியவர் என்ற குற்றத்தைச் சுமத்தி பதவியிலிருந்து நீக்க முடியும். இந்த எளிய விதியைப் பயன்படுத்தியே அமெரிக்க ஏகாதிபத்தியம் சாதித்துள்ளது. வலதுசாரி எதிர்க்கட்சிகளை விலைக்கு வாங்கிக் கொண்டு, ஆளும் இடதுசாரி அரசைப் பதவி யிலிருந்து நீக்கியுள்ளது. மேலெழுந்தவாரி யாகப் பார்ப்பதற்கு எல்லாம் அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டே காரியங்கள் நடந் துள்ளதுபோல் தெரியும். ஆனால் திரைக்குப் பின்னால் பல ரகசியங்கள் பொதிந்துகிடக்கும்.

அவசர நடவடிக்கை

பராகுவே நாட்டின் வலதுசாரிக் கட்சிகள் அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தியே குடியரசுத் தலைவர் மீது குற்றம் சுமத்தி பதவியிலிருந்து நீக்கியுள்ளன.
அவருக்கு தன்னிலை விளக்கம் அளிக்கக் கூட போதிய அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்துக்குள் நாடகத்தை நடத்தி முடித் துள்ளனர். உலகமயமாக்கல் சூழலில் இன்ஸ் டண்ட் காபி தயாரிப்பதுபோல், ஒரு நாட்டின் அரசு கவிழ்ப்பும் இன்ஸ்டண்ட் நடவடிக்கை யாக இருக்கின்றது. குடியரசுத் தலைவர் லூகோ அவசர கதியில் பதவியிறக்கம் செய் யப்பட்டார் என்ற உண்மையை இந்த சதிக்குப் பின்னால் இருந்த நாட்டின் துணைத் தலை வர் ப்ராங்கோ ஒத்துக்கொண்டுள்ளார். இதற் குப் பரிசாக குடியரசுத் தலைவர் பதவியையும் பெற்றுள்ளார்.

அநியாயமான குற்றச்சாட்டுக்கள்

நாட்டில் விவசாயிகளுக்கும் காவல்துறை யினருக்கும் இடையே நடந்த மோதலைச் சரியாகக் கையாளவில்லை; இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்தை நாட்டின் ராணுவத் தளம் ஒன்றில் நடத்த அனுமதித்துள்ளார்; பராகுவே மக்கள் ராணுவம் எனப்படும் இடதுசாரி தீவிரவாதக் கட்சிகளுக்கு ஆதரவு தருகிறார்; நிலமற்ற 3000 ஏழை விவசாயிகள் அந்நிய முதலாளிகளுக்குச் சொந்தமான நிலத்தில் பயிர் செய்திடஅனுமதித்தார்; மெர்கோசர் கூட்டமைப்பில் பராகுவே இணைந்திட நடவடிக்கை எடுத்தார்; ஆகிய குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. நாட்டின் நலன் கருதி அவர் எடுத்த நடவடிக் கைகளையெல்லாம் குற்றமாகக் கருதி, ஏகாதிபத்திய அடிவருடி எதிர்க்கட்சிகள் குடி யரசுத் தலைவர் லூகோவை பதவியிறக்கம் செய்துள்ளன. மொத்தத்தில் லூகோ மேற் கொண்ட நிலச் சீர்திருத்த முயற்சிகளுக்கு எதிராகவே வலதுசாரி எதிர்க்கட்சிகள் இந்த அரசியல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

வறுமையில் உழலும் பராகுவே

உலகின் மிக ஏழை நாடுகளில் பராகுவே யும் ஒன்று.
நாட்டின் 85 சதவீத விளை நிலங் கள் 3 சதவீத நிலப்பிரபுக்களிடம் உள்ளது. இந் நிலக் குவிப்பு நாட்டின் வறுமைக்கு முக்கிய மான காரணமாகும். இதனால் நாட்டின் 60 சதவீத மக்கள் கொடிய வறுமையில் வாடு கின்றனர். மான்சாண்டோ, கார்கில் ஆகிய இரு பன் னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளும் பராகுவே யின் விவசாயத்தில் பெருமளவில் தலையீடு செய்து கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. பராகுவேயில் அறுபது ஆண்டுகள் ஆட்சியி லிருந்த கொலராடோ கட்சி இக்கம்பெனி களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்க அரசின் எடுபிடியாக இருந்த ஸ்டோரசனர் என்ற சர்வாதிகாரி, இக்கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கு வழி வகுத்துக் கொடுத்தார். பராகுவேயின் ஒரு பகுதியான குருகுவாட்டி என்ற இடத்தில் ஏழை விவசாயிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட 50,000 ஹெக்டேர் நிலத்தை ஒரு தனியா ருக்கு தாரை வார்த்தார். லூகோ ஆட்சிக்கு வந்ததும் ஏழை விவசாயிகளுக்கு இந்நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நடந்த கலவரத்தில் பதினெட்டு பேர் உயிரி ழந்தனர். இந்நிகழ்வையேக் காரணம் காட்டி லூகோ ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.

கவிழ்ப்பு சாத்தியமானது எப்படி?

தென் அமெரிக்காவில் இருக்கும் மற்ற இடதுசாரித் தலைவர்களைப்போல் லூகோ துணிச்சலுடன் செயல்படவில்லை. பரா குவே மக்கள், லூகோ நிலச்சீர்திருத்தத்தை நிறைவேற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்த் தனர். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதா அல்லது மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்று வதா என்ற குழப்பத்தில் சிக்கித் தவித்தார் லூகோ. இந்தத் தடுமாற்றமே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமானது. முதலாளித்துவத் துடன் கைகோர்த்துக் கொண்டு புரட்சியை நடத்த முடியாது என்ற உண்மையை அவர் உணர்ந்து கொள்ளவில்லை. கொள்கையை அமல்படுத்துவதில் உறுதியாக இல்லாததால் மக்களிடமிருந்து தனிமைப்பட்டார். வலது சாரிக் கட்சிகளுடன் ஆதரவோடு ஆட்சி நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால், இடதுசாரிப் பாதையில் காலெடுத்து வைக்க முடியவில்லை.

அமெரிக்காவின் கெடுபிடி

மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடு களைச் சுற்றி ஏகாதிபத்தியம் ராணுவ நட வடிக்கைகளை அதிகரித்துள்ளது.
வெனி சுலா கடற்கரையை ஒட்டியே அமெரிக்கக் கப்பல் படையின் நான்காம் பிரிவு போர்ப் பயிற்சியை நடத்தியுள்ளது. மேற்கு ஆசியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் கடுமையான போரில் ஈடுபட்டிருப்பதால் மற்ற பகுதிகளில் அமெரிக்கா கவனம் செலுத் தாது என்று கருதுவது தவறாகும். உலகின் பல பகுதிகளிலும் இராணுவ ரீதியாகத் தலை யீடு செய்வதற்கான பலமும், வசதியும் அதற் குள்ளது. தென் அமெரிக்கப் பகுதியில் தான் இழந்துள்ள செல்வாக்கை மீட்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்நாடுகளில் இருக்கும் வலதுசாரிக் கட்சிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு கொடுத்து, அமெரிக்க எதிர்ப்பு இடதுசாரி ஆட்சிகளைக் கவிழ்க்க முயலுகிறது. இச்சூழலில் பராகுவே நாட்டின் இந்த ஆட்சி மாற்றம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிகப்பு அலை பாதுகாக்கப்பட வேண்டும்

கடந்த பத்தாண்டுகளாக பல தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் எழுச்சியுடன் நல்ல அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இப்பகுதி திகழ்கிறது. இந்த சிகப்பு அலை பாதுகாக் கப்பட வேண்டும். இன்றும் பராகுவேயில் லூகோவிற்கு ஆதரவாக மக்கள் ஆர்ப்பாட் டங்கள் நடத்துகின்றனர். பராகுவே மக்களின் போராட்டம் வென்றிட உலகெங்கிலும் இடது சாரி, ஜனநாயக சக்திகள் ஆதரவு இயக்கங்கள் நடத்திட வேண்டும்

ஆதாரம : பீப்பிள்ஸ் டெமாக்ரசி

(ஜூலை 23-29) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com