Contact us at: sooddram@gmail.com

 

இறைமையும், தன்னாதிக்கமும் உடைய இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டும்

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

(நேற்றைய தொடர்)

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டுத் தமிழர்களுடன் மொழி ரீதியிலான மற்றும் அரசியல் கலாசார தொடர்புகள் இருக்கின்ற காரணத்தினால் சிங்கள மக்கள் தங்கள் நாடு பிளவுபட்டுவிடும் என்று அஞ்சுகிறார்கள். இந்திய அரசாங்கம் தன்னுடைய தமிழ் பிரஜைகளின் அழுத்தங்கள் காரணமாக இதனை செய்யலாம் என்றும் சிங்களவர்கள் நினைக்கிறார்கள். இதனால் தான் அதிகாரப் பரவலாக்கல், சுயாதிபத்தியம் போன்ற தமிழர்களின் கோரிக்கைகளுக்கு சிங்களவர்கள் வெறுப்புடன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். சிங்களவர்களின் இந்த மனப்பான்மை குறித்து இந்தியா தொடர்ந்தும் அவதானமாக இருத்தல் அவசியம். தமிழ் சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளுக்கு நட்புறவுடன் குரல் கொடுக்கும் உரிமையை தியாகம் செய்யாத வகையில் இந்தியர்கள் நடந்து கொள்வது அவசியம்.

உண்மைதான் நவீன ஜனநாயகத்தில் ஆளுமை பற்றிய தீர்மானங்களை அதற்கு ஆதரவளித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே எடுக்கப்பட வேண்டும். இதன் மூலமே மக்களின் ஆளுமைத்திறனை பிரதிநிதித்துவப் படுத்தமுடியும். பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடே இதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இவ்விதம் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் பரஸ்பரம் பகைமை உணர்வுடன் தொடர்ந்தும் இருந்தால் அதன் தாக்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடிப்படை உரிமைகளை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஜனநாயகம் பெரும்பான்மை இனத்தவரின் ஆட்சியை ஏற்படுத்துவதாக இருந்தால் சிறுபான்மை மக்களுக்கு இடம்பெறும் அநீதிகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு பெரும்பான்மை இனத்தவரின் கருணை மூலம் நிவாரணம் பெறுவது சாத்தியப்படாது. இன்றைய நவீன அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மையோரின் உரிமைகளுக்கு சட்ட பூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு ஜனநாயக நாட்டில் மனித உரிமைகள் பிரிக்கமுடியாத நிலையில் இருக்கின்றது. மக்களின் இறைமையின் மூலம் பெரும்பான்மை வாக்குப் பலத்தைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் எந்தவொரு தனி மனிதனதும் மனித உரிமைகளை பறித்து விட முடியாது. இந்த ஜனநாயக ஆளுமை அமைப்பை இலங்கையின் ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள். குறிப்பாக 1979 முதல் இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் மறந்து விட்டார்கள்.

சிங்கள பெறும்பான்மை ஆட்சி முறையில் இனவாதம் சம்பந்தப்படவில்லை. இது உண்மையிலேயே கடந்த காலத்தில் இந்திய மத்திய அரசாங்கம் தமிழ் நாட்டை ஆதரித்ததில் இருந்து உருவெடுத்த அச்சத்தினால் ஏற்பட்ட வெறுப்புனர்வாகும். இத்தகைய அச்சங்களை இந்திய அரசாங்கம் படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இனங்களைப் பற்றிய விடயத்தைப் பொறுத்த மட்டில் இரண்டு வெவ்வேறு மொழிபேசும் சமூகங்களாக இருந்தாலும் இவ்விரு சாராரும் வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நான் முன்பு கூறியது போன்று இவ்விரு சாராரும் ஒரே ளினிதி மரபணுவைக் கொண்ட இந்தியர்களாக இருக்கிறார்கள்.

இந்து மற்றும் பெளத்த சமயங்களுக்கிடையில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பகைமை உணர்வு இருந்ததென்று எவரும் கூற முடியாது. குறைந்த பட்சம் 12 நூற்றாண்டுகளாக இவ்விரு மதங்களுக்கும் முரண்பாடுகள் இருக்கவில்லை. இந்தியர்களாகிய நாம் புத்த பெருமான் இந்துவாகவே பிறந்தார் என்று நம்புகிறோம்.

புத்த பெருமான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்து சமய கோட்பாடுகளுக்கு மாறாக செயற்பட்டதும் இல்லை. புத்த பெருமான் ஒரு சீர்திருத்தவாதியாகவும், மரபு நெறிசார் சம்பிரதாயங்களை எதிர்ப்பவராகவும் விளங்கினார். இன்று இந்துக்கள் புத்த பெருமானை தங்களுக்கு சொந்தமானவர் என்று நினைத்து வணங்கி வருகிறார்கள்.

இலங்கையின் சனத்தொகையில் 4இல் 3 சதவீதமானோர் சிங்களவர்களாவர். இவர்கள் பெளத்த மதத்தை சார்ந்தவர்களாவர். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் ஆகியோர் நாட்டின் சனத்தொகையில் 24 சதவீதத்ததை உள்ளடக்கி இருக்கிறார்கள். இதில் 12 சதவீதத்திற்கு அதிகமானோர் இலங்கைத் தமிழர்களாவர். இவர்களின் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே இலங்கையில் வாழ்ந்து வந்தார்கள். எஞ்சியவர்கள் பிரிடிஷ் ஆட்சியாளர்கள் இலங்கைக்கு பெருந்தோட்டங்களில் பணி புரிவதற்காக கொண்டு வந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களாவர்.

இலங்கையின் இன்றைய பிரச்சினைக்கு மேற்கத்தேய நாடுகள் எடுத்துரைப்பதைப் போன்று இன, மத பேதங்கள் காரணமல்ல. எனினும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இருக்கும் வித்தியாசம் சிங்கள, தமிழ் மக்களின் மனதில் பதிந்திருப்பதே இதற்கான காரணமாகும்.

மொழிரீதியிலான முரண்பாடும் ஒரு செயற்கையான நிலைப்பாடாகும். பிரிடிஷ் காலணித்துவ வாதிகளும் அவர்களைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களும் இந்த முரண்பாடு என்ற பிரச்சினைக்கு வலுவூட்டினார்கள். தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் சமஸ்கிருத மொழியுடனும் பிராமண வசன நடையுடனும் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தனர்.

சமீப கால வரலாற்றில் இரு சமூகங்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேறாமல் போனதும் இதற்கு இன்னுமொரு காரணமாகும். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் பெரும்பான்மை சிங்களவர்கள் கடைப்பிடித்த இரண்டு கொள்கைகள் தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதற்கு வழி வகுத்தது. (இதனால் பின்னர் வன்முறைகளும் ஏற்பட்டன) சிங்களம் மட்டும் என்று மொழிக்கொள்கை மற்றும் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுவதற்கான தரப்படுத்தற்கொள்ளை ஆகியனவே இவ்விரண்டு கொள்கைகளாகும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற போது சட்டமன்றத்தில் தமிழர்களுக்கு 32 சதவீத வாக்குப்பலம் இருந்தது. ஆயினும் தோட்டத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதையடுத்து (இவர்கள் பெருந்தோட்டங்களில் பணிபுரிந்தவர்கள்) இந்த விகிதாசாரம் 20 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. பொதுத் தேர்தலில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கு பாராளுமன்றத் தில் மூன்றில் இரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தன.

தையடுத்து 1972ம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டது. இது பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை சிங்களவர்களினால் நிறைவேற்றப்பட்டது. முன்னைய சோல்பரி அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டிருந்த 29ஆவது பிரிவு இந்தப் புதிய அரசியல் சாசனத்தில் நீக்கப்பட்டது.

இதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு அரசியல் சாசனத்தில் இருந்த பாதுகாப்பு பறிபோனதால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இவை தொடர்பாக ஒரு பிரச்சினை இன்னுமொரு பிரச்சினையாக மாறி 1970ம் ஆண்டு சகாப்தத்தின் இறுதியில் வன்முறைகள் ஏற்படுவதை எவரும் தவிர்க்க முடியாதிருந்தது.

1975ம் ஆண்டில் சிறுபான்மை உரிமை அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் வோல்டர் சுவாஸ் ஒரு தீர்க்க தரிசியைப் போன்று பின்வரும் கருத்தை வெளியிட்டார்.

இலங்கைக்கு இன ரீதியிலான வன்முறைகள் அல்லது பயங்கரவாத அனுபவங்களை எதிர்நோக்குவதற்கான சூழ்நிலை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் இதுவரையில் காண்பிக்கப்படாத புரிந்துணர்வும், சகிப்புத் தன்மையும், மிதவாதமும் கடைப்பிடிப்பது அவசியமாகும். தமிழர்களுக்கு எதிர்காலத்தில் நல்வாழ்வு கிடைக்குமென்ற மீள் உறுதிமொழியை இலங்கையின் தலைமைத்துவம் கொடுக்காமல் குண்டுகள் வெடிக்கும் வரையிலும் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் வரையிலும் காத்திருப்பது என்று தீர்மானிப்பது வேதனைக்குரிய விடயமாகும்

முரண்பாடுகள் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளும் மனப்போக்கு இல்லாத காரணத்தினால் 1981ம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் வன்முறைகள் ஏற்பட்டன.

அது மேலும் அதிர்ச்சியூட்டக்கூடிய மனிதப் படுகொலைகளாக 1983 ஜூலையில் ஏற்பட்டது. எல்.ரி.ரி.ஈயினர் மேற்கொண்ட படுகொலைகளை அடுத்து சிங்கள குண்டர்கள் இந்த 83 கலவரங்களை தோற்றுவித்தனர். இதையடுத்து இந்தியா நேரடியாக இங்கு தலையிட்டது. தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்ற நிலைப்பாட்டை அடுத்தே இந்த நிலை உருவெடுத்தது.

1983ம் ஆண்டை இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையின் திருப்பு முனையாக நாம் பார்க்க வேண்டும். இலங்கையின் வரலாற்றில் இந்த அடிப்படை பிரச்சினை வலுப்பெற்று விளங்கியது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு முன்வராதமை, கடந்த கால வரலாற்றைப் பார்த்து தவறுகளை திருத்திக் கொள்வதில் அக்கறையின்மை ஆகியனவே இலங்கை பிளவுபடுவதற்கு அடித்தளமாக அமைந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் நான் வால்டர் சுவாஸ் 1975ம் ஆண்டு தெரிவித்த தீர்க்கதரிசனமான கருத்தை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். தற்போது இலங்கையில் நிலவும் மந்த நிலையை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. தமிழர்களின் பேரினவாத மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்க்கும் என்போன்ற இந்தியர்கள் கூட ஜனநாயக உலகில் இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலை இன்று உருவாகியிருக்கிறது. இலங்கை தமிழர்களின் பிராந்திய அபிலாஷைகளுக்கு இலங்கை சாதகமாக பதிலளிக்க வேண்டுமென்று நினைக்கிறோம். அதையடுத்து இருசாராரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வழியில் நிலையான கால எல்லையை விதித்து நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். இதுவே இந்தியாவின் விருப்பமாகும். ஆயினும், இறைமையும், தன்னாதிக்கமும் உடைய இலங்கை அரசாங்கமே இப்பிரச்சினையை எவ்விதம் தீர்த்து வைக்க வேண்டுமென்ற முடிவை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இந்திய அரசாங்கம் இப்போது இருக்கின்ற நிலையற்ற நிலையில் இருக்காது என்ற நம்பிக்கையில் பார்ப்போமேயானால் இலங்கைக்கு அன்பையும் ஆதரவையும் அளித்து, ஐக்கியமான கலாசார பாரம்பரியங்களைக் கொண்ட இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்து இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள சில அவலட்சமான வன்முறைகளில் ஈடுபடுவதை தடுக்கக்கூடிய நிலையிலும் இருக்கும். எனவே, இலங்கை நல்லிணக்கப்பாட்டுடனான ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பி, எல்.ரி.ரி.ஈக்கு எதிராக 2009ல் அடைந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியின் பயனை அடைய வேண்டும்.

அதிகாரபரவலாக்கல் என்ற ஒரு சிறு செயற்பாட்டிலேயே தீர்வு தங்கியிருக்கிறது. அது சமஷ்டி செயற்பாடாகவோ அல்லது சமஷ்டியைப் போன்ற செயற்பாடாகவோ இருக்கலாம். சமஷ்டி ஆட்சி முறைக்கு அமெரிக்கா முன்மாதிரியாக இருக்கின்றது. ஏறத்தாழ சமஷ்டி ஆட்சி முறைக்கு இந்தியா முன்மாதிரியாக இருக்கிறது.

ஆயினும் அதிகாரபரவலாக்கலுக்கான எந்தவொரு யோசனையும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் உளவியல் ரீதியில் அச்சத்தை உருவாக்குவதாக அமைகின்றது. எனவே, இந்த அச்சத்தை போக்குவதற்கு அல்லது அச்சத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(நாளை தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com