Contact us at: sooddram@gmail.com

 

பண்டா - செல்வா, டட்லி - செல்வா ஒப்பந்தங்கள்

நிறைவேற்றப்படாதமையினால் இனப்பிரச்சினை வன்முறையாக மாற்றமடைந்தது

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

திகாரபரவலாக்கல் நாடு பிரிவடைவதற்கு முதற்கட்ட நடவடிக்கை என்றும் அதனால் இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள வளமான பிரதேசங்களை இந்தியா கைப்பற்றும் என்ற அச்சம் சிங்கள மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. தமிழர்கள் 13வது திருத்தத்தின் மூலம் அதிகாரபரவலாக்கல் அமுலாக்கப்படும் என்று சிங்களவர்கள் கூறி காலம் கடத்த எத்தனிக்கிறார்கள் என்று சந்தேக மனத்துடன் இருந்தார்கள்.

சிங்கள, தமிழ் தலைவர்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் இடை நடுவில் ரத்து செய்யப்பட்டதும் இதற்காகவே என்று தமிழர்கள் சந்தேகம் வெளியிட்டனர். 1957ம் ஆண்டில் இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை அதிகாரபரவலாக்கல் மூலம் தீர்த்து வைப்பதற்காக பண்டா, செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அன்றைய பிரதம மந்திரி எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்க, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் பரந்த அடிப்படையில் பிராந்திய சபைகளை ஏற்படுத்தி அதிகாரபரவலாக்கலை வடக்கு, கிழக்கு என்ற தமிழ் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இந்த பிராந்திய சபைகளுக்கு விவசாயம், கூட்டுறவு, காணி, காணி அபிவிருத்தி, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கடற்றொழில், வீடமைப்பு, சமூக சேவைகள், மின் விநியோகம், நீர்விநியோகம் மற்றும் வீதி அமைப்புகள் போன்றவற்றில் பரந்த அடிப்படையிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன் இந்த ஒப்பந்தம் தேசிய தமிழ் சிறுபான்மையோரின் மொழியாக தமிழை அங்கீகரிப்பதற்கும் தமிழ் மொழியே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக இருப்பதற்கும் வழி வகுத்தது. இத்துடன் கூடிய விரைவில் பெருந்தோட்ட தமிழர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் இவ் ஒப்பந்தம் வலியுறுத்தியது. பண்டாரநாயக்க, செல்வநாயகம் ஒப்பந்தம் அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடு இன்று பயங்கரவாத வன்முறைகளினால் சீர்குலைந்திருக்காது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பெளத்த பிக்குமாரும் இவ் ஒப்பந்தம் சிங்கள, பெளத்த மக்களுக்கு இழைத்திருக்கும் ஒரு பெரும் துரோகம் என்று கண்டனம் தெரிவித்து நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்தார்கள்.

1958ம் ஆண்டு ஏப்ரல் 9ம் திகதியன்று இலங்கையின் முன்னணி பெளத்த பிக்குமார் பெருமளவில் பிரதம மந்திரியின் இல்லத்தை முற்றுகையிட்டு, பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். பெளத்த பிக்குமார் இது ரத்து செய்யப்படும் என்பதை பிரதமமந்திரி தங்களுக்கு எழுத்து மூலம் கொடுக்க வேண்டுமென்று திட்டவட்டமாக அறிவித்தனர்.

அதனால் வேறு வழியின்றி பிரதம மந்திரி இந்த உறுதி மொழியை எழுத்து மூலம் கொடுத்தார். இத்துடன் பண்டாரநாயக்க -செல்வநாயகம் ஒப்பந்தம் செயல் இழந்தது.

1965ல் அன்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான டட்லி சேனநாயக்க, திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் இணைந்து புதிய கூட்டு அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தினார். அப்போது அவர் 1956ம் ஆண்டு பண்டா -செல்வா ஒப்பந்தத்தைப் போன்று இன்னுமொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தமிழ் மொழி விசேட விதிகள் சட்டப்பிரமாணம் ஒன்றை பாராளுமன் றத்தில் நிறைவேற்றினார். அப்போது எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்கவின் துணைவி சிறிமாவோ பண்டாரநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவியாக இருந்தார்.

திருமதி பண்டாரநாயக்காவும் பெளத்த பிக்குமாருடன் ஐக்கிய தேசியக் கட்சி 1958ல் இணைந்து செயற்பட்டது போன்று இந்தப் புதிய சட்டப்பிரமாணத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்தார்.

இந்த சட்டப் பிரமாணங்கள் தமிழர்களுக்கு நாட்டை விற்றுவிடுவதற்கு ஒப்பான செயல் என்று அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். தமிழ் மொழி விசேட விதிகள் சட்டப்பிரமாணம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும் அன்றைய அரசாங்கத்தினால் அதனை என்றுமே அமுலாக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக திரு. செல்வநாயகத்தின் இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டது. இதிலிருந்து தமிழர் பிரச்சினை மேலும் மோசமடைய ஆரம்பித்தது.

1970ம் ஆண்டு தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைவி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அந்த அரசாங்கம் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுவதற்காக பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான தரப்படுத்தல் கொள்கையை அறிமுகம் செய்தது.

இதனடிப்படையில் மற்ற மாணவர்களைவிட தமிழ் மாணவர் 25 சதவீதமான புள்ளிகளைப் பெற்றால்தான் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்ப டுவார்கள் என்ற விதி கடைப்பிடிக்கப் பட்டது. அத்துடன் தமிழர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக ளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

1972ம் ஆண்டில் குடியரசு அரசியல் சாசனம் பிரகடனம் செய்யப் பட்டதை அடுத்து தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிளவு மேலும் விரிவடைந்தது. 1948ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் அமுலாக்கப்பட்ட சோல்பரி அரசியல் சாசனத்தில் சிறுபான்மையோருக்கு பாதுகாப்பு அளிக்கும் 29வது பிரிவு இணைக்கப்பட்டிருந்தது.

சிறுபான்மையோருக்கு பாதுகாப்பு அளிக்கும் இன்னுமொரு விதியை சேர்த்துக் கொள்ளாமல் 29வது விதி குடியரசு அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கப்பட்டது. அத்துடன் இந்த அரசியல் சாசனம் சிங்கள மொழியே அரச கரும மொழி என்றும் அறிவித்தது. அத்துடன் பெளத்த மதத்திற்கு அரசாங்க மொழி என்ற முதலிடமும் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பெளத்த மதத்திற்கு அரசாங்கத்தின் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சி 1949ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

அன்றில் இருந்து அக்கட்சி சமஷ்டி ஆட்சி முறையிலான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென்று வாதாடியது. இரு சாரார் பேசும் இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டுமென்றும் வாதாடினார்கள். ஆயினும் அன்று நாட்டை பிளவுபடுத்துதல் அல்லது பிரிந்து செல்லும் யோசனைகளை அக்கட்சி கடைப்பிடிக்கவில்லை.

1970ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழ் மக்கள் நாட்டை இரு கூறாக்கும் அரசியல் இயக்கத்தை கடைப்பிடிக்கும் எந்தவொரு சாராருக்கும் ஆதரவளிக்கக் கூடாதென்று அறிவித்தது. தமிழ் மக்களும் இலங்கை தமிழரசுக் 8கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

1972ம் ஆண்டின் குடியரசு சாசனத்திற்கு பின்னர் நிலைமை பெருமளவில் மாற்றமடைந்தது. 1972ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ் மக்களிடையே என்றுமில்லாதவாறு ஒரு ஐக்கியம் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாகியது. பின்னர் அது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று பெயர் மாற்றப்பட்டு தமிழ் அரசியல் கட்சிகளின் முன்னணி அமைப்பாக விளங்கியது.

தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் பிரதேசங்களில் புதிய அரசியல் சாசனங்களுக்கு எதிரான பிரசாரங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டது. தமிழ் இளைஞர்கள் புதிய அரசியல் சாசனத்திற்கு எதிராக பிரசாரங்களை வலுவாக மேற்கொண்டனர். தமிழ் இளைஞர்களின் பெரும் எதிர்ப்பை பெற்ற தரப்படுத்தல் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அரசாங்கம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கடுமையாக முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்படாத நிலையில் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். இவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்ற வதந்திகளும் அப்போது எழுந்தன. இதனால் சில தமிழ் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இலங்கை அரசியலில் முதல் தடவையாக அரசியல் நோக்கங்களுக்காக வன்முறைகள் பயன்படுத்தப்பட்டன. முரண்பாடு அதிகரிக்கும் போது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

1976ம் ஆண்டு மே மாதத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் ஒரு பிரேரணையை நிறைவேற்றினர்.

இவர்கள் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தமிழர்கள் ஒரு புதிய தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு சுயாதிபத்திய உரிமை இருக்கிறதென்றும் வாதிட ஆரம்பித்தார்கள். இவர்கள் சுதந்திரமான இறைமையுடைய தமிழ் ஈழம் என்ற சோஷலிச நாட்டை மற்ற நாடுகள் அங்கீகரிக்கும் வகையில் சுயாதிபத்திய உரிமையுடன் ஏற்படுத்த வேண்டுமென்று அறிவித்தனர். 1976ம் ஆண்டு மே 14ம் திகதியன்று வட்டுக் கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்த தமிழ் தேச சித்தாந்தம் முன்வைக்கப்பட்டது.

இந்த பிரேரணையில் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் இளைஞர்கள் முன்வந்து உரிமைப் போராட்டத்தை மேற்கொண்டு, இறைமையுடைய சோஷலிச தமிbழ தேசத்தை ஏற்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளரான எம். சிவசிதம்பரம் பிரதம மந்திரிக்கு எழுதியிருந்த கடிதத்தில் நாம் வன்முறையற்ற சிவில் ஒத்துழையாமை இயக்கத்தையே கடைப்பிடிக்கிறோம். மகாத்மா காந்திஜீயின் அறிவுரைக்கு அமையவே நாம் இதனை கடைப்பிடிக்கிறோம்.

சிங்கள மக்கள் எங்கள் மீது விதிக்கும் எந்தவொரு துன்புறுத்தலையும் நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். இத்தகைய தியாகங்கள் இறுதியில் வெற்றியளிக்கும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கிறது என்று கூறினார்.

1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி என்றுமில்லாதவாறு மகத்தான தேர்தல் வெற்றியை அடைந்தது.

1977ம் ஆண்டு ஜூலை மாத தேர்தலில் பாராளுமன்றத்தில் உள்ள 168 ஆசனங்களில் ஐக்கிய தேசியக்கட்சி 141 ஆசனங்களை பெற்றுக் கொண்டது. இந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சிகளில் கூடுதல் ஆசனங்களை கொண்ட ஒரு கட்சியாக இருந்தது. அதனால் அதன் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இத னால் இலங்கையின் அரசியலில் பல அடிப்படை மாற்றங்களும், போட்டா போட்டிகளும் உருவெடுத்தன. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவ ரான ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்கான சாத்தியமில்லாதமையினால் அந்த மக்கள் ஒரு தனிநாட்டை உருவாக்கும் இயக்கத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இதை அடிப்படையாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அக்கட் சிக்கு பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com